லூக்கா – 24
1. வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே என்ன செய்தார்கள்? தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்.
2. கல்லறையை அடைத்திருந்த என்ன கண்டார்கள்? கல்புரட்டித் தள்ளப்பட்டி ருக்கிறதைக்கண்டார்கள்.
3. உள்ளே பிரவேசித்து, எதைக் காணவில்லை? கர்த்தராகிய இயேசுவின் சரீரத் தைக் காணவில்லை.
4. அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், அவர்கள் அருகே நின்ற வர்கள் யார்? பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர்.
5. அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி: நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி சொன்னது என்ன? உயிரோடிருக்கிற வரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
6. அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
7. எதை நினைவுகூருங்கள் என்று சொன்னார்கள்? மனுஷகுமாரன் பாவிக ளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்பட வும், மூன்றாம்நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயா விலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார் கள்.
8. அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து, என்ன செய்தார்கள்?
9. கல்லறையை விட்டுத் திரும்பிப்போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள்.
10. இவைகளை அப்போஸ்தலருக்குச் சொன்னவர்கள் யார்? மகதலேனா மரி யாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனே கூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே.
11. அவர்கள் இவர்களை ஏன் நம்பவில்லை? இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்ப வில்லை.
12. பேதுருரு என்ன செய்தான்? பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத் திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத் திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக் கொண் டுபோனான்.
13. அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எங்கே போனார்கள்? எருசலே முக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.
14. போகையில் எவைகளைக் குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டார்கள்? இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து.
15. இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், யார் தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்துபோனார்? இயேசு தாமே சேர்ந்து அவர்களு டனேகூட நடந்துபோனார்கள்.
16. ஆனாலும் அவரை அறியாதபடிக்கு எது மறைக்கப்பட்டிருந்தது? அவர்களு டைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது.
17. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி எது என்னவென்று கேட்டார்? நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள் ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார்.
18. அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக சொன் னது என்ன? இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான்.
19. இயேசு என்ன சொன்னார்? அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள் சொன்னது என்ன? நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவ னுக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசி யாயிருந்தார்.
20. நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கி னைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள்.
21. அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது.
22. ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்ல றையினிடத்திற்குப்போய்,
23. அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக் கிறார் என்று சொன்ன தேவதூதரைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களை பிரமிக்கப்பண்ணினார்கள்.
24. அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப் போய், ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள்.
25. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி சொன்னது என்ன? தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ள வர்களே,
26. கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி,
27. மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல் லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித் துக் காண்பித்தார்.
28. அத்தருணத்தில் அவர்கள் எதுக்குச் சமீபமானார்கள்? தாங்கள் போகிற கிரா மத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் எதைப் போலக் காண்பித்தார்? அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார்.
29. அவர்கள் அவரை நோக்கி சொன்னது என்ன? நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரைவருந்திக் கேட்டுக் கொண்டார்கள். அப்பொழுது அவர் என்ன செய்தார்? அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்.
30. அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் என்ன செய்தார்? அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.
31. அப்பொழுது நடந்தது என்ன? அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் என்ன செய்தார்? அவர்களுக்கு மறைந்து போனார்.
32. அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி என்ன என்று சொல்லிக் கொண்டார்கள்? வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டார்கள்.
33. அந்நேரமே எழுந்திருந்து, என்ன செய்தார்கள்? எருசலேமுக்குத் திரும்பிப் போய், பதினொருவரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு:
34. கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானார் என்று அவர்கள் சொல்லக் கேட்டு,
35. வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கையில் தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள்.
36. இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு என்ன செய்தார்? இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
37. அவர்கள் கலங்கி, பயந்து, எதைக் காண்கிறதாக நினைத்தார்கள்? ஒரு ஆவி யைக் காண்கிறதாக நினைத்தார்கள்.
38. அவர் அவர்களை நோக்கி கேட்டது என்ன? நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
39. நான்தான் என்று அறியும்படி, என்ன செய்யுங்கள் என்றார்? என்கைகளை யும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள். நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல எதுக்கு இராதே என்றார்? ஒரு ஆவிக்கு இராதே என்று சொன்னார்.
40. எவைகளை அவர்களுக்குக் காண்பித்தார்? தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
41. ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரி யப்படுகையில்: எது உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்? புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.
42. அப்பொழுது எவைகளை அவருக்குக் கொடுத்தார்கள்? பொரித்த மீன்கண் டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.
43. அவைகளை அவர் வாங்கி என்ன செய்தார்? அவர்களுக்கு முன்பாகப் புசித்தார்.
44. அவர்களை நோக்கி என்ன சொன்னார்? மோசேயின் நியாயப்பிரமாணத்தி லும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்க ளோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.
45. அப்பொழுது எவைகளை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்தார்? வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி. அவர்களை நோக்கி:
46. எழுதியிருக்கிறபடி, யார் பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந் தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது? கிறிஸ்து.
47. அன்றியும் எவைகள் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவரு டைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது? மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும்.
48. நீங்கள் இவைகளுக்கு என்னவாக இருப்பீகள்? சாட்சிகளாயிருக்கிறீர்கள்.
49. எதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்? என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை. நீங்களோ எது வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்? உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும்.
50. பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டு போய், என்ன செய்தார்? தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வ தித்தார்.
51. அவர்களை ஆசீர்வதிக்கையில், என்ன ஆனார்? அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
52. அவர்கள் அவரைப் பணிந்து கொண்டு, என்ன செய்துகொண்டிருந்தார்கள்? மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பிவந்து,
53. நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந் தார்கள். ஆமென்.