Saturday, February 20, 2016

யோவான் - 4

யோவான் - 4
1. யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்       நானங் கொடுக்கிறாரென்று யார் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தார்?பரிசேயர். 
2. யூதேயாவைவிட்டு மறுபடியும் எங்கு போனார்? கலிலேயாவுக்குப் போனார்.
3. இயேசு தாமே என்ன கொடுக்கவில்லை? ஞானஸ்நானங்கொடுக்கவில்லை. யார் ஞானஸ்நானங்கொடுத்தார்கள்? அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள். 
4. அவர் எந்த நாட்டின் வழியாய்ப் போகவேண்டியதாயிருந்தது? சமாரியா. 
5. இயேசு எந்த ஊருக்கு வந்தார்? யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார். 
6. அங்கே என்ன இருந்தது? யாக்கோபுடைய கிணறு இருந்தது. இயேசு பிரயா ணத்தினால் இளைப்படைந்தவராய் என்ன செய்தார்? அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார். அப்பொழுது நேரம் என்ன? ஏறக்குறைய ஆறாம்மணி வேளை யாயிருந்தது.
7. அவருடைய சீஷர்கள் ஏன் ஊருக்குள்ளே போயிருந்தார்கள்? போஜனபதார்த் தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள். 
8. அப்பொழுது சமாரிய நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ என்ன செய்தாள்? தண்ணீர் மொள்ளவந்தாள். இயேசு அவளை நோக்கி என்ன கேட்டார்? தாகத்துக்குத்தா என்றார்.
9. யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா  ஸ்திரீ அவரை நோக்கி கேட்டது என்ன? நீர் யூதனாயிருக்க, சமாரியா  ஸ்திரீ யாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.
10. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக் குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தா யானால், நீ என்ன செய்திருப்பாய் என்றார்? நீயே  அவரிடத்தில் கேட்டிருப்பாய் என்றார். அவர் உனக்கு எதைக் கொடுத்திருப்பார் என்றார்? ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார்  என்றார்.
11. அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் என்ன இல்லையே என்றாள்? பாத்திரமில்லையே என்றாள். எதுவும் ஆழமாயிருக்கி றதே என்றாள்? கிணறும் ஆழமாயிருக்கிறதே என்றாள். பின்னை எங்கேயிரு ந்து உமக்கு என்ன உண்டாகும் என்றாள்? ஜீவத்தண்ணீர் உண்டாகும் என்றாள்.
12. இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த யாரைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ? நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப்பார்க்கிலும் நீர் பெரியவரோ. அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருகஜீவன்களும் இதிலே என்ன செய்ததுண்டே என்றாள்? குடித்ததுண்டே என்றாள்.
13. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் என்ன உண்டாகும் என்றார்? தாகமுண்டாகும் என்றார்.
14. யாருக்கு ஒருக்காலும் தாகமுண்டாகாது? நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது. நான் அவனுக்குக்கொடுக் கும் தண்ணீர் அவனுக்குள்ளே எப்படிப்பட்ட நீரூற்றாயிருக்கும் என்றார்?நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.
15. அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எதற்காக எனக்கு அந்தத் தண் ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்? எனக்குத் தாகமுண்டாகாமலும், நான்  இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி.
16. இயேசு அவளை நோக்கி: நீ போய், யாரை இங்கே அழைத்துக் கொண்டுவா என்றார்? உன் புருஷனை.
17. அதற்கு அந்த ஸ்திரீ: எனக்கு யார் இல்லை என்றாள்? புருஷன் இல்லை என் றாள். இயேசு அவளை நோக்கி: என்னவென்று நீ சொன்னது சரிதான்? எனக்குப் புருஷன் இல்லையென்று சொன்னது.
18. எப்படியெனில், எத்தனை புருஷர் உனக்கிருந்தார்கள்? ஜந்து புருஷர். இப் பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு யாரல்ல? புருஷனல்ல. இதை எப்படி சொன்னாய் என்றார்? இதை உள்ளபடி சொன்னாய் என்றார்.
19. அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் யார் என்று காண்கிறேன்? தீர்க்கதரிசி.
20. எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே என்ன செய்துகொண்டு வந்தார்கள்? தொழுதுகொண்டு வந்தார்கள். நீங்கள் எங்கே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள்? எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே.
21. அதற்கு இயேசு: ஸ்திரீயே, எதை நம்பு? நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் எங்கு மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகி றது? இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல.
22. நீங்கள் எதைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்? அறியாததை. நாங்கள் எதைத் தொழுதுகொள்ளுகிறோம்? அறிந்திருக்கிறதை. ஏனென்றால் எது  யூதர்கள்  வழியாய் வருகிறது? இரட்சிப்பு.
23. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை எப்படி தொழுது கொள்ளும் காலம் வரும்? ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள் ளுங்காலம் வரும். அது எப்பொழுது வந்திருக்கிறது? இப்பொழுதே வந்திருக்கி றது. யாரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்? தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள்.
24. யார் ஆவியாயிருக்கிறார்? தேவன். அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்? ஆவியோடும் உண்மை யோடும்.
25. அந்த ஸ்திரீ அவரை நோக்கி: யார் வருகிறார் என்று அறிவேன்? கிறிஸ்து என்னப்படுகிற மேசியா. அவர் வரும்போது எல்லாவற்றையும் என்ன செய் வார் என்றாள்? நமக்கு அறிவிப்பார் என்றாள்.
26. அதற்கு இயேசு: அவர் யார் என்றார்? உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.
27. அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, எதைப்பற்றி ஆச்சரியப்பட் டார்கள்? அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி. ஆகிலும் என்னவென்று ஒருவனும் கேட்கவில்லை? என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை.
28. அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, என்ன செய்தாள்? ஊருக்குள்ளே போனாள். ஜனங்களை நோக்கி சொன்னது என்ன? 
29. நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்.
30. அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு யாரிடத்தில் வந்தார்கள்? இயேசுவிடத்தில் வந்தார்கள்.
31. இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி என்ன என்று வேண்டிக் கொண்டார்கள்? ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
32. அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு என்ன எனக்கு உண்டு என்றார்? நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார்.
33. அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து என்னவென்று சொன் னார்கள்? யாராவது அவருக்குப் போஜனம் கொண்டுவந்திருப்பானோ என்றார் கள்.
34. இயேசு அவர்களை நோக்கி எது என்னுடைய போஜனமாயிருக்கிறது என் றார்? நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின் படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. 
35. எது வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகி றதில்லையா? அறுப்புக்காலம். இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப் புக்கு விளைந்திருக்கிறதென்று எதை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்க ளுக்குச் சொல்லுகிறேன்? உங்கள் கண்களை.
36. விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப் படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, எதுக்காகப் பலனைச் சேர்த்துக் கொள்ளுகிறான்? நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக் கொள்ளுகிறான்.
37. விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற எது இதினாலே விளங்குகிறது? மெய்யான வழக்கச்சொல்.
38. நீங்கள் எதை அறுக்க நான் உங்களை அனுப்பினேன்? பிரயாசப்பட்டுப் பயிரி டாததை. யார் பிரயாசப்பட்டார்கள்? மற்றவர்கள். அவர்களுடைய பிரயாசத் தின் பலனை நீங்கள் என்ன செய்தீர்கள் என்றார்? பெற்றீர்கள் என்றார். 
39. எதினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர் மேல் விசுவாச முள்ளவர்களானார்கள்? நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம்.
40. சமாரியர் அவரிடத்தில் வந்து, என்னவென்று அவரை வேண்டிக்கொண்டார் கள்? தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று. அவர் எத்தனை நாள் அங்கே தங்கி னார்? இரண்டு நாள்.
41. அப்பொழுது எதினிமித்தம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்தார்கள்? அவ ருடைய உபதேசத்தினிமித்தம்.
42. அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உப தேசத்தை நாங்களே, கேட்டு, யார் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார் கள்? அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர்.
43. இரண்டுநாளைக்குப்பின்பு அவர் அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, எங்கே போனார்? கலிலேயாவுக்குப் போனார்.
44. ஒரு தீர்க்கதரிசிக்கு எந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல் லியிருந்தார்? தன் சொந்த ஊரிலே.
45. அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த யார் அவரை ஏற்றுக்கொண்டார்கள்? கலிலேயர். அவர்களும் எங்கு போயிருந்தார்கள்? பண்டிகைக்குப் போயிருந் தார்கள்.
46. பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின எந்த ஊருக்கு  மறுபடி யும் வந்தார்? கலிலேயாவிலுள்ள கானா. அப்பொழுது கப்பர்நகூமிலே யார் வியாதியாயிருந்தான்? ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியா தியாயிருந்தான்.
47. இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவிற்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், என்னவென்று அவரை வேண் டிக்கொண்டான்? தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண் டான்.
48. அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் எவைகளைக் காணாவிட் டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார்? அடையாளங்களையும் அற்புதங்களை யும் காணாவிட்டால்.
49. அதற்கு ராஜாவின் மனுஷன்: ஆண்டவரே, எதற்குமுன்னே வரவேண்டும் என்றான்? என் பிள்ளை சாகிறதற்குமுன்னே.
50. இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் என்ன ஆனான் என் றார்? பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், எதை நம்பிப்போனான்? இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப்போனான்.
51. அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டு வந்து, என்னவென்று அறிவித்தான்? உம்முடைய குமாரன் பிழைத்திருக்கி றான் என்று அறிவித்தார்கள். 
52. அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தபோது அவர்கள் சொன்னது என்ன? நேற்று ஏழா மணிநேரத்தில் ஜூரம் அவனை விட்டது என்றார்கள்.
53. எதை அறிந்து அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள்? உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து.
54. இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குத்  திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த எத்தனையாவது அற்புதம்? இரண்டாம் அற்புதம்.

Tuesday, February 16, 2016

யோவான் - 3

யோவான் - 3
1. யாருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்? யூதருக்குள்ளே.
2. அவன் இராக்காலத்திலே யாரிடத்தில் வந்தான்? இயேசுவினிடத்தில். நிக்கொதேமு இயேசுவிடம், ரபீ, நீர் யார் என்று அறிந்திருக்கிறோம் என்றான்? தேவனிடத்திலிருந்து வந்த போதகர். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே யார் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்? தேவன்.
3. இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் என்ன செய்யாவிட்டால் தேவ னுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்? மறுபடியும் பிறவாவிட்டால். 
4. அதற்கு நிக்கொதேமு கேட்ட கேள்வி என்ன? ஒரு மனுஷன் முதிர்வயதாயி ருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இராண்டாந்த ரம் பிரவேசித்துப் பிறக்கக் கூடுமோ?
5. இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவா விட்டால் எதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்? தேவனுடைய ராஜ்யத்தில்.
6. மாமிசத்தினால் பிறப்பது எதுவாயிருக்கும்? மாம்சமாயிருக்கும்.  ஆவியி னால் பிறப்பது எதுவாயிருக்கும்? ஆவியாயிருக்கும்.
7. நீங்கள் எதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்? மறுபடியும் பிறக்கவேண் டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து.
8. காற்றானது எங்கே வீசுகிறது? தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. எதைக் கேட்கிறாய்? அதின் சத்தத்தைக் கேட்கிறாய். ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக் குத் தெரியாது; அப்படியே இருக்கிறவன் யார்? ஆவியினாலும் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
9. அதற்கு நிக்கொதேமு கேட்டது என்ன? இவைகள் எப்படி ஆகும் என்றான்.
10. இயேசு அவனை நோக்கி: நீ யாராயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கி றாயா? இஸ்ரவேலில் போதகனாயிருந்தும்.
11. மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந் திருக்கிறதைச் சொல்லி, எதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்? நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம். நீங்களோ எதை ஏற்றுக்கொள்ளு கிறதில்லை? எங்கள் சாட்சியை.
12. எந்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்க வில்லையே? பூமிக்கடுத்த காரியங்களை. எந்த காரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? பரமகாரியங்களை.
13. யாரையல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை? பரலோ கத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனே யல்லாமல் . 
14. எது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது? சர்ப்பம். அதைப் போல யார் உயர்த்தப்பட வேண்டும்? மனுஷகுமாரன்.
15. மனுஷகுமாரன் ஏன் உயர்த்தப்பட வேண்டும்? தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த் தப்பட வேண்டும்.
16. தேவன், யார் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவ ரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்? தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்.
17. எதற்காக தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பவில்லை? உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி. எதற்காக தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பினார்? அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற் காகவே அவரை அனுப்பினார்.
18. யாரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்? இயேசு கிறிஸ்துவை. விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனு டைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் எதற்கு உட் பட்டாயிற்று? ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
19. அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது எது? ஒளியானது உல கத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக் கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. 
20. யார் ஒளியைப் பகைக்கிறான்? பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான். அவன் ஏன் ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்? தன் கிரியை கள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
21. யார் ஒளியினிடத்தில் வருகிறான்? சத்தியத்தின்படி செய்கிறவன். அவன் ஏன் ஒளியினிடத்தில் வருகிறான்? தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய் யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்.
22. இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் எங்கு வந்தார்கள்?  யூதேயா தேசத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் அவாகளோடே சஞ்சரித்து, எந்ந செய்தார்? ஞானஸ்நானங் கொடுத்துவந்தார்.
23. எந்த இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தது? சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே. அந்த இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்த படியினால், யார் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்? யோவான். ஜனங்கள் யாரிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்? யோவானிடத்தில்.
24. அக்காலத்தில் யோவான் எதில் வைக்கப்பட்டிருக்கவில்லை? காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை. 
25. அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் என்ன  உண் டாயிற்று? வாக்குவாதம். எதைக்குறித்து? சுத்திகரிப்பைக்குறித்து. 
26. அவர்கள் யோவானிடத்தில் வந்து இயேசுவைக் குறித்து சொன்னது என்ன? ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக் குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங் கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.
27. யோவான் பிரதியுத்தரமாக: எங்கிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டா லொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்? பரலோகத்திலி ருந்து. 
28. நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே யார்? சாட்சிகள். 
29. மணவாளன் யார்? மணவாட்டியை உடையவனே மணவாளன். மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, என்ன செய்கிறவனாய் இருக்கிறான்? அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான். எது இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று? இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமா யிற்று.
30. அவர் என்ன செய்யப்பட வேண்டும்? பெருக வேண்டும். நான் என்ன செய்யப் பட வேண்டும்? சிறுக வேண்டும்.
31. எங்கிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்? உன்னதத்திலிருந்து வருகிறவர். எதிலிருந்து உண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்? பூமியிலிருந்துண்டானவன். பரலோ கத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் எப்படிப்பட்டவர்? மேலானவர்.
32. தாம் எதைச் சாட்சியாகச் சொல்லுகிறார்? கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார். அவருடைய சாட்சியை யார் ஏற்றுக்கொள்ளுகிற தில்லை? ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
33. அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னவென்று முத்திரை போட்டு நிச்சயப்படுத்துகிறான்? தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரை போட்டு நிச்சயப்படுத்துகிறான்.
34. யார் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்? தேவனால் அனுப்பப்பட்ட வர். தேவன் அவருக்கு எதை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்? தமது ஆவியை. 
35. யார் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக் கொடுத்திருக்கிறார்? பிதா.
36. யார் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்? குமாரனிடத்தில் விசுவா சமாயிருக்கிறவன். யார் ஜீவனைக் காண்பதில்லை? குமாரனை விசுவாசியாத வன்.  தேவனுடைய கோபம் யார்மேல் நிலைநிற்கும்? குமாரனை விசுவாசியா தவன் மேல்.

Saturday, February 13, 2016

யோவான் - 2

யோவான் - 2
1. மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே என்ன நடந்தது? ஒரு கலியாணம் நடந்தது. இயேசுவின் தாய் எங்கேயிருந்தாள்? கலியாணவீட்டிலே.
2. இயேசுவும் அவருடைய சீஷரும் எதுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்? அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
3. திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் யாரை நோக்கி, அவர்க ளுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்? இயேசுவை நோக்கி.
4. இயேசு யாரிடம் ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என்வேளை இன்னும் வரவில்லை என்றார்? தன் தாயிடம்.
5. அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கிச் சொன்னது என்ன? அவர் உங்க ளுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள்.
6. அங்கே எப்படிப்பட்ட கற்சாடிகள் வைத்திருந்தது? யூதர்கள் தங்களைச் சுத்திக ரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது.
7. இயேசு வேலைக்காரரை நோக்கி எதிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்? ஜாடி களிலே. அவர்கள் அவைகளை என்ன செய்தார்கள்? தண்ணீரால் நிறைய நிரப் பினார்கள்.
8. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, யாரிடத்தில் கொண்டு போங்கள் என்றார்? பந்திவிசாரிப்புக்காரனிடத்தில். அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோனார்கள்.
9. அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று யாருக்குத் தெரியும்? தண் ணீரை மொண்ட வேலைக்காரருக்கு. யாருக்குத் தெரியாது? பந்திவிசாரிப்புக் காரனுக்கு. அந்தத் திராட்சரசம் தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட் சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, யாரை அழைத்தான்? மணவா ளனை அழைத்தான். 
10. மணவாளனை அழைத்துச் என்ன சொன்னான்? எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை  இதுவரைக்கும் வைத்திருந் தீரே என்றான்.
11. இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, எதை வெளிப்படுத்தினார்? தம்முடைய மகிமையை. யார் அவர்டத்தில் விசுவாசம் வைத்தார்கள்? அவருடைய சீஷர்கள்.
12. அதன் பின்பு அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவ ருடைய சீஷரும் எங்கேபோய், அங்கே சில நாள் தங்கினார்கள்? கப்பர்நகூமுக் குப்போய்.
13. பின்பு எது சமீபமாயிருந்தது? யூதருடைய பஸ்காபண்டிகை. அப்பொழுது இயேசு எங்கே போனார்? எருசலேமுக்குப் போனார்.
14. தேவாலயத்திலே யாரைக் கண்டார்? ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டார்.
15. கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, என்ன செய்தார்? அவர்கள் யாவ ரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக் காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டார்.
16. புறாவிற்கிறவர்களை நோக்கி என்ன சொன்னார்? இவைகளை இவ்விடத்தி லிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக் காதிருங்கள் என்றார்.
17. அப்பொழுது என்ன என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினை வுகூர்ந்தார்கள்? உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான  பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது.
18. அப்பொழுது யூதர்கள் யாரை நோக்கி: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு  என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள்? இயேசுவை நோக்கி.
19. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், எத்தனை நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்? மூன்று நாளைக்குள்ளே.
20. அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட எத்தனை வருஷம் சென் றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்? நாற்பத்தாறு வருஷம்.
21. அவரோ எதைக்குறித்துப் பேசினார்? தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக் குறித்துப் பேசினார்.
22. அவர் இப்படிச் சொன்னதை எப்போது அவருடைய சீஷர்கள் நினைவு கூர்ந்து,  வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித் தார்கள்? அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு.
23. பஸ்காபண்டிகையிலே அவர் எருசலேமிலிருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, எதில் விசுவாசம் வைத்தார்கள்? அவருடைய நாமத்தில்.
24. அப்படியிருந்தும், இயேசு எதனால் அவர்களை நம்பி இணங்கவில்லை? எல்லாரையும் அறிந்திருந்தபடியால்.
25. எதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக் குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை? மனுஷருள்ளத்திலிருப் பதை அவர் அறிந்தபடியால்.

Tuesday, February 2, 2016

யோவான் - 1

யோவான் - 1
1. ஆதியிலே என்ன இருந்தது? வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை யாரிடத் தில் இருந்தது? தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை யாராய் இருந்தது? தேவனாய் இருந்தது.
2. அவர் ஆதியிலே யாரோடிருந்தார்? தேவனோடிருந்தார்.
3. சகலமும் யார் மூலமாய் உண்டாயிற்று? தேவன் மூலமாய் உண்டாயிற்று. உண்டானதொன்றும் யாராலேயல்லாமல் உண்டாகவில்லை? தேவனேயல் லாமல் உண்டாகவில்லை.
4. அவருக்குள் என்ன இருந்தது? ஜீவன். அந்த ஜீவன் யாருக்கு ஒளியாயிருந்     தது? மனுஷருக்கு.
5. அந்த ஒளி எதிலே பிரகாசிக்கிறது? இருளிலே. இருளானது எதைப் பற்றிக் கொள்ளவில்லை? ஒளியைப் பற்றிக்கொள்ளவில்லை.
6. யாரால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான்? தேவனால். அவன் பெயர் என்ன? யோவான்.
7. அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி எதைக் குறித்துச் சாட்சிகொ டுக்க வந்தான்? அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந் தான்.
8. அவன் எதையல்ல, எதைக்குறித்துச் சாட்சிக்கொடுக்க வந்தான்? அந்த ஒளி யல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.
9. யாரைப் பிரகாசிப்பிக்கிற ஒளி அந்த மெய்யான ஒளி? உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
10. அவர் எதில் இருந்தார்? உலகத்தில் இருந்தார். எது அவர் மூலமாய் உண்டா யிற்று? உலகம். எது அவரை அறியவில்லை? உலகம்.
11. அவர் எதிலே வந்தார்? தமக்குச் சொந்தமானதிலே வந்தார். அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை என்ன செய்தார்கள்? அவரை ஏற்றுக்கொள்ள வில்லை.
12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களுக்கும் தேவன் கொடுத்த அதிகாரம் என்ன? அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளா கும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
13. அவர்கள் எதினால் பிறவாதவர்கள்? அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாதவர்கள். அவர் கள் யாராலே பிறந்தவர்கள்? தேவனாலே பிறந்தவர்கள்.
14. அந்த வார்த்தை என்னவாகியது? மாம்சமாகியது. அந்த வார்த்தை மாம்ச மாகி எதினால் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்? கிருபையி னாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார். எதைக் கண்டோம்? அவருடைய மகிமையைக் கண்டோம். அந்த மகிமை எதுக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது? அது பிதாவுக்கு ஒரேபேறானவரு டைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
15. யோவான் அவரைக்குறித்துச் கொடுத்த சாட்சி என்ன? எனக்குப் பின்வருகிற வர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறி னான்.
16. எதினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்? அவரு டைய பரிபூரணத்தினால்.
17. எப்படியெனில் நியாயப்பிரமாணம் யார் மூலமாய்க் கொடுக்கப்பட்டது? மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது. கிருபையும் சத்தியமும் யார் மூல மாய் உண்டாயின? இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
18. யாரை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை? தேவனை. தேவனை யார் வெளிப்படுத்தினார்? பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
19. எருசலேமிலிருந்து யூதர்கள் யாரை யோவானிடத்தில் அனுப்பினார்கள்?  ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பினார்கள். அவர் கள் யோவானிடத்தில் என்ன கேட்டார்கள்? நீர் யார் என்று கேட்டார்கள்.
20. அவன் என்னவென்று அறிக்கையிட்டான்? அவன் மறுதலியாமல் அறிக்கை யிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான்.
21. அப்பொழுது அவர்கள் என்ன கேட்டார்கள்? பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு யோவான் சொன்னது என்ன? நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று யார் கேட்டார்கள்? ஆசாரியரும் லேவியரும். அதற்கும் யோவான் சொன்னது என்ன? அல்ல என்றான்.
22. அவர்கள் பின்னும் அவனை நோக்கி கேட்டது என்ன? நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.
23. அதற்கு யோவான் சொன்னது என்ன? அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ் வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத் திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.
24. அனுப்பப்பட்டவர்கள் யாராயிருந்தார்கள்? பரிசேயராயிருந்தார்கள்.
25. அவர்கள் அவனை நோக்கி நீர் யாரும் அல்லவென்றால் ஏன் ஞானஸ்நா னங் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்? நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், என் ஞானஸ்நானங் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.
26. யோவான் அவர்களுக்கு பிரதியுத்தரமாக: நான் எதினாலே ஞானஸ்நானங் கொடுக்கிறேன்? ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன். நீங்கள் அறி யாதிருக்கிற ஒருவர் எங்கே நிற்கிறார்? உங்கள் நடுவிலே நிற்கிறார்.
27. அவர் எனக்குப் பின்வந்தும் எப்படிப்பட்டவர்? என்னிலும் மேன்மையுள்ள வர். எதற்கு நான் பாத்திரனல்ல என்றான்? அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான்.
28. இவைகள் எங்கே நடந்தன? யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன.
29. மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு சொன்னது என்ன? இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
30. இயேசுவை யார் என்று யோவான் சொன்னான்? எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவ ரென்று நான் சொன்னேனே, அவர் இவர் தான்.
31. நானும் யாரை அறியாதிருந்தேன்? இயேசுவை. இவர் யாருக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்கவந்தேன் என் றான்? இஸ்ரவேலுக்கு.
32. பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: யார் புறாவைப்போல வானத் திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்? ஆவியானவர்.
33. நானும் யாரை அறியாதிருந்தேன்? இயேசுவை. ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர் என்னவென்று எனக் குச் சொல்லியிருந்தார்? ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்.
34. அந்தப்படியே நான் கண்டு, இவரே யார் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான்? தேவனுடைய குமாரன் என்று.
35. மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும் போது,
36. இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு சொன்னது என்ன? இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
37. அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, என்ன செய்தார் கள்? இயேசுவுக்குப் பின்சென்றார்கள்.
38. இயேசு திரும்பி, அவர்கள் பின்செல்லுகிறதைக் கண்டு என்ன கேட்டார்? என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்? ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள். ரபீ என்பதற்குப் என்ன அர்த்த மாம்? போதகரே என்று அர்த்தமாம்.
39. இயேசு சொன்னது என்ன? வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, என்ன செய்தார்கள்? அன்றையத்தினம் அவரி டத்தில் தங்கினார்கள். அப்பொழுது நேரம் என்ன? ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.
40. யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் யார்? சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்.
41. அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு என்ன சொன் னான்? மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான். மேசியா என்பதற்கு என் னவென்று அர்த்தமாம்? கிறிஸ்து என்று அர்த்தமாம்.
42. பின்பு, யாரை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான்? சீமோன். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ என்ன என் னப்படுவாய் என்றார்? நீ கேபா என்னப்படுவாய் என்றார். கேபா என்பதற்கு என்னவென்று அர்த்தமாம்? பேதுரு என்று அர்த்தமாம்.
43. மறுநாளிலே இயேசு எங்கு போக மனதாயிருந்தார்? கலிலேயாவுக்குப் போக. யாரைக் கண்டு நீ எனக்குப் பின்சென்றுவா என்றார்? பிலிப்புவைக் கண்டு.
44. பிலிப்பென்பவன் யார்? அந்திரோயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான்.
45. பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு சொன்னது என்ன? நியாயப்பிரமாணத் திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.
46. அதற்கு நாத்தான்வேல்: எங்கிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான்? நாசரேத்திலிருந்து. அதற்குப் பிலிப்பு என்ன சொன்னான்? வந்து பார் என்றான்.
47. இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து சொன்னது என்ன? இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.
48. அதற்கு நாத்தான்வேல் என்ன கேட்டான்? நீர் என்னை எப்படி அறிவீர் என் றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ எங்கே இருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார்? அத்திமரத்தின் கீழிருக் கும்போது.
49. அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் யார் என்றான்? நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.
50. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக என்ன என்று நான் உனக்குச் சொன்ன தினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்? அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன்.
51. பின்னும் அவர் அவனை நோக்கி எதை நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.