Friday, May 20, 2016

யோவான் - 5

யோவான் - 5
1. இவைகளுக்குப்பின்பு யாருடைய பண்டிகை ஒன்று வந்தது? யூதருடைய பண்டிகை. அப்பொழுது இயேசு எங்கே போனார்? எருசலேமுக்குப் போனார்.
2. எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் எங்கே இருக்கிறது? ஆட்டுவாசலினருகே இருக்கிறது. அதற்கு எத்தனை மண்டபங்களுண்டு? ஜந்து மண்டபங்களுண்டு. 
3. அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, என்ன என்று காத்துக்கொண்டிருப்பார் கள்? தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். 
4. ஏன்? ஏனெனில் சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்திலே இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கின பின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான்.
5. எத்தனை வருஷம் வியாதி கொண்டிருந்த ஓரு மனுஷன் அங்கே இருந் தான்? முப்பத்தெட்டு வருஷம். 
6. படுத்திருந்த அவனை கண்டது யார்? இயேசு. இயேசு அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி என்ன கேட்டார்? சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?
7. அதற்கு வியாதிஸ்தன் சொன்னது என்ன? ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்ப டும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவரு மில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடு கிறான் என்றான். 
8. இயேசு அவனை நோக்கிச் சொன்னது என்ன? எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
9. உடனே அந்த மனுஷன் என்ன செய்தான்? அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் என்ன நாளாயி ருந்தது? ஓய்வு நாளாயிருந்தது. 
10. ஆதலால் யார் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கி றதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார் கள்? யூதர்கள்.
11. அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைச் சொஸ்தமாக்கினவர் என்ன சொன்னார் என்றான்? உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான்.
12. அதற்கு அவர்கள்: என்னவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள்? உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று.
13. சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னார்ரென்று அறிந்திருந்தானா? அறிய வில்லை. அவ்விடத்தில் எதனால் இயேசு விலகியிருந்தார்? ஜனங்கள் கூட்ட மாயிருந்தபடியினால்.
14. அதற்குப்பின்பு இயேசு அவனை எங்கே கண்டார்? தேவாலயத்திலே கண்டார். இயேசு அவனைத் தேவாலயத்தில் கண்டு என்ன சொன்னார்? இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ் செய்யாதே என்றார்.
15. அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் யார் என்று யூதர்க ளுக்கு அறிவித்தான்? இயேசு.
16. யூதர்கள் இயேசுவை ஏன் துன்பப்படுத்தி, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்? இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால்.
17. இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் என்ன செய்து வருகி றார்? கிரியைசெய்து வருகிறார். நானும் என்ன செய்துவருகிறேன் என்றார்? கிரியைசெய்து வருகிறேன் என்றார்.
18. யூதர்கள் இயேசுவை ஏன் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார் கள்? அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்மு டைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கின படியினாலே.
19. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: எப்படி நான் உங்களுக்குச் சொல்லு கிறேன் என்றார்? மெய்யாகவே மெய்யாகவே. எதையேயன்றி, வேறொன்றை யும் பிதா தாமாகச் செய்யமாட்டார்? பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிற தெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார். பிதா எவைகளைச் செய்கிறாரோ, அவைகளை யார் அந்தப்படியே செய்கிறார்? குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.
20. பிதாவானவர் யாரிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல் லாம் அவருக்குக் காண்பிக்கிறார்? குமாரனிடத்தில். நீங்கள் ஆச்சரியப்படத்தக் கதாக இவைகளைப் பார்க்கிலும் எதையும் அவருக்குக் காண்பிப்பார்? பெரி தான கிரியைகளையும்.
21. பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் யாரை உயிர்ப்பிக்கிறார்? தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.
22. அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் யாருக்கு கொடுத்திருக்கிறார்? குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
23. குமாரனைக் கனம்பண்ணாதவன் யாரை கனம் பண்ணாதவனாயிருக்கி றான்? குமாரனை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்.
24. யாருக்கு நித்திய ஜீவன் உண்டு? என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பி னவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. யார் ஆக்கினைத் தீர்ப் புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவன்.
25. யார் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்? மரித்தோர். அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் என்ன ஆவார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? பிழைப்பார் கள்.
26. ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, யார் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக் கிறார்? குமாரனும்.
27. அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், என்ன செய்யும்படிக்கு அதிகாரத் தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்? நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு.
28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழி களிலுள்ள அனைவரும் எதைக் கேட்குங்காலம் வரும்? அவருடைய சத்தத் தைக் கேட்குங்காலம் வரும்;
29. அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் எதை அடையும்படி எழுந்திருக்கிறவர்க ளாக புறப்படுவார்கள்? ஜீவனை அடையும்படி. தீமைசெய்தவர்கள் எதை அடை யும்படி எழுந்திருக்கிறவர்களாக புறப்படுவார்கள்? ஆக்கினையை அடையும் படி.
30. நான் என் சுயமாய் என்ன செய்கிறதில்லை? ஒன்றுஞ் செய்கிறதில்லை. நான் எப்படி நியாயந்தீர்க்கிறேன்? கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக் குச் சித்தமானதை நான் தேடாமல், யாருக்குச் சித்தமானதையே நான் தேடுகிற படியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது? என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்த மானதையே.
31. என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி எப்படியிராது? மெய்யாயிராது. 
32. என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி என்ன சாட்சியென்று அறிந்திருக்கி றேன்? மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன்.
33. நீங்கள் யாரிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள்? யோவானிடத்தில். அவன் எதற்குச் சாட்சி கொடுத்தான்? சத்தியத்திற்குச் சாட்சி கொடுத்தான்.
34. நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி யாருடைய சாட்சியல்ல? மனுஷருடைய சாட்சியல்ல. நான் எதற்காக இவைகளைச் சொல்லுகிறேன்? நீங்கள் இரட்சிக் கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன்.
35. அவன் எப்படிப்பட்ட விளக்காயிருந்தான்? எரிந்து பிரகாசிக்கிற. நீங்களும் சிலகாலம் எதிலே களிகூர மனதாயிருந்தீர்கள்? அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்.
36. யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் எப்படிப்பட்ட சாட்சி எனக்கு உண்டு? மேன்மையான சாட்சி. அது ஏன்? அதென்னவெனில், நான் நிறைவேற் றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும்  நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று எனனைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது.
37. யார் என்னைக்குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்? என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சிகொடுத்திருக்கிறார். நீங்கள் ஒருக்கா லும் எதைக் கேட்டதுமில்லை? அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை. எதைக் கண்டதுமில்லை? அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.
38. எதனால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை? அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால்.
39. எவைகளை ஆராய்ந்து பாருங்கள்? வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங் கள். அவைகளால் உங்களுக்கு என்ன உண்டென்று எண்ணுகிறீர்கள்? நித்திய ஜீவன். என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் எவைகளே? வேதவாக் கியங்கள்.
40. அப்படியிருந்தும் உங்களுக்கு என்ன உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை? ஜீவன். 
41. நான் யாரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை? மனுஷரால். 
42. உங்களில் என்ன அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன்? தேவ அன்பு.
43. நான் யார் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ள வில்லை? என் பிதாவின் நாமத்தினாலே. வேறொருவன் யாருடைய நாமத்தி னாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்? தன் சுயநாமத்தினாலே.
44. யாரால் மாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? தேவனாலே மாத்திரம்.
45. யாரிடத்தல் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங் கள்? பிதாவினிடத்தில். யாரே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான்? நீங்கள் நம்பு கிற மோசேயே.
46. நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், யாரையும் விசுவாசிப்பீர்கள்? என்னையும்  விசுவாசிப்பீர்கள். யார் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே? மோசே.
47. அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் யார் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்? நான் (இயேசு).

Saturday, February 20, 2016

யோவான் - 4

யோவான் - 4
1. யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்       நானங் கொடுக்கிறாரென்று யார் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தார்?பரிசேயர். 
2. யூதேயாவைவிட்டு மறுபடியும் எங்கு போனார்? கலிலேயாவுக்குப் போனார்.
3. இயேசு தாமே என்ன கொடுக்கவில்லை? ஞானஸ்நானங்கொடுக்கவில்லை. யார் ஞானஸ்நானங்கொடுத்தார்கள்? அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள். 
4. அவர் எந்த நாட்டின் வழியாய்ப் போகவேண்டியதாயிருந்தது? சமாரியா. 
5. இயேசு எந்த ஊருக்கு வந்தார்? யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார். 
6. அங்கே என்ன இருந்தது? யாக்கோபுடைய கிணறு இருந்தது. இயேசு பிரயா ணத்தினால் இளைப்படைந்தவராய் என்ன செய்தார்? அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார். அப்பொழுது நேரம் என்ன? ஏறக்குறைய ஆறாம்மணி வேளை யாயிருந்தது.
7. அவருடைய சீஷர்கள் ஏன் ஊருக்குள்ளே போயிருந்தார்கள்? போஜனபதார்த் தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள். 
8. அப்பொழுது சமாரிய நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ என்ன செய்தாள்? தண்ணீர் மொள்ளவந்தாள். இயேசு அவளை நோக்கி என்ன கேட்டார்? தாகத்துக்குத்தா என்றார்.
9. யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா  ஸ்திரீ அவரை நோக்கி கேட்டது என்ன? நீர் யூதனாயிருக்க, சமாரியா  ஸ்திரீ யாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.
10. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக் குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தா யானால், நீ என்ன செய்திருப்பாய் என்றார்? நீயே  அவரிடத்தில் கேட்டிருப்பாய் என்றார். அவர் உனக்கு எதைக் கொடுத்திருப்பார் என்றார்? ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார்  என்றார்.
11. அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் என்ன இல்லையே என்றாள்? பாத்திரமில்லையே என்றாள். எதுவும் ஆழமாயிருக்கி றதே என்றாள்? கிணறும் ஆழமாயிருக்கிறதே என்றாள். பின்னை எங்கேயிரு ந்து உமக்கு என்ன உண்டாகும் என்றாள்? ஜீவத்தண்ணீர் உண்டாகும் என்றாள்.
12. இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த யாரைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ? நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப்பார்க்கிலும் நீர் பெரியவரோ. அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருகஜீவன்களும் இதிலே என்ன செய்ததுண்டே என்றாள்? குடித்ததுண்டே என்றாள்.
13. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் என்ன உண்டாகும் என்றார்? தாகமுண்டாகும் என்றார்.
14. யாருக்கு ஒருக்காலும் தாகமுண்டாகாது? நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது. நான் அவனுக்குக்கொடுக் கும் தண்ணீர் அவனுக்குள்ளே எப்படிப்பட்ட நீரூற்றாயிருக்கும் என்றார்?நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.
15. அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எதற்காக எனக்கு அந்தத் தண் ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்? எனக்குத் தாகமுண்டாகாமலும், நான்  இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி.
16. இயேசு அவளை நோக்கி: நீ போய், யாரை இங்கே அழைத்துக் கொண்டுவா என்றார்? உன் புருஷனை.
17. அதற்கு அந்த ஸ்திரீ: எனக்கு யார் இல்லை என்றாள்? புருஷன் இல்லை என் றாள். இயேசு அவளை நோக்கி: என்னவென்று நீ சொன்னது சரிதான்? எனக்குப் புருஷன் இல்லையென்று சொன்னது.
18. எப்படியெனில், எத்தனை புருஷர் உனக்கிருந்தார்கள்? ஜந்து புருஷர். இப் பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு யாரல்ல? புருஷனல்ல. இதை எப்படி சொன்னாய் என்றார்? இதை உள்ளபடி சொன்னாய் என்றார்.
19. அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் யார் என்று காண்கிறேன்? தீர்க்கதரிசி.
20. எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே என்ன செய்துகொண்டு வந்தார்கள்? தொழுதுகொண்டு வந்தார்கள். நீங்கள் எங்கே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள்? எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே.
21. அதற்கு இயேசு: ஸ்திரீயே, எதை நம்பு? நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் எங்கு மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகி றது? இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல.
22. நீங்கள் எதைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்? அறியாததை. நாங்கள் எதைத் தொழுதுகொள்ளுகிறோம்? அறிந்திருக்கிறதை. ஏனென்றால் எது  யூதர்கள்  வழியாய் வருகிறது? இரட்சிப்பு.
23. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை எப்படி தொழுது கொள்ளும் காலம் வரும்? ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள் ளுங்காலம் வரும். அது எப்பொழுது வந்திருக்கிறது? இப்பொழுதே வந்திருக்கி றது. யாரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்? தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள்.
24. யார் ஆவியாயிருக்கிறார்? தேவன். அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்? ஆவியோடும் உண்மை யோடும்.
25. அந்த ஸ்திரீ அவரை நோக்கி: யார் வருகிறார் என்று அறிவேன்? கிறிஸ்து என்னப்படுகிற மேசியா. அவர் வரும்போது எல்லாவற்றையும் என்ன செய் வார் என்றாள்? நமக்கு அறிவிப்பார் என்றாள்.
26. அதற்கு இயேசு: அவர் யார் என்றார்? உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்.
27. அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, எதைப்பற்றி ஆச்சரியப்பட் டார்கள்? அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி. ஆகிலும் என்னவென்று ஒருவனும் கேட்கவில்லை? என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை.
28. அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, என்ன செய்தாள்? ஊருக்குள்ளே போனாள். ஜனங்களை நோக்கி சொன்னது என்ன? 
29. நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்.
30. அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு யாரிடத்தில் வந்தார்கள்? இயேசுவிடத்தில் வந்தார்கள்.
31. இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி என்ன என்று வேண்டிக் கொண்டார்கள்? ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
32. அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு என்ன எனக்கு உண்டு என்றார்? நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார்.
33. அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து என்னவென்று சொன் னார்கள்? யாராவது அவருக்குப் போஜனம் கொண்டுவந்திருப்பானோ என்றார் கள்.
34. இயேசு அவர்களை நோக்கி எது என்னுடைய போஜனமாயிருக்கிறது என் றார்? நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின் படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. 
35. எது வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகி றதில்லையா? அறுப்புக்காலம். இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப் புக்கு விளைந்திருக்கிறதென்று எதை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்க ளுக்குச் சொல்லுகிறேன்? உங்கள் கண்களை.
36. விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப் படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, எதுக்காகப் பலனைச் சேர்த்துக் கொள்ளுகிறான்? நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக் கொள்ளுகிறான்.
37. விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற எது இதினாலே விளங்குகிறது? மெய்யான வழக்கச்சொல்.
38. நீங்கள் எதை அறுக்க நான் உங்களை அனுப்பினேன்? பிரயாசப்பட்டுப் பயிரி டாததை. யார் பிரயாசப்பட்டார்கள்? மற்றவர்கள். அவர்களுடைய பிரயாசத் தின் பலனை நீங்கள் என்ன செய்தீர்கள் என்றார்? பெற்றீர்கள் என்றார். 
39. எதினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர் மேல் விசுவாச முள்ளவர்களானார்கள்? நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம்.
40. சமாரியர் அவரிடத்தில் வந்து, என்னவென்று அவரை வேண்டிக்கொண்டார் கள்? தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று. அவர் எத்தனை நாள் அங்கே தங்கி னார்? இரண்டு நாள்.
41. அப்பொழுது எதினிமித்தம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்தார்கள்? அவ ருடைய உபதேசத்தினிமித்தம்.
42. அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உப தேசத்தை நாங்களே, கேட்டு, யார் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார் கள்? அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர்.
43. இரண்டுநாளைக்குப்பின்பு அவர் அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, எங்கே போனார்? கலிலேயாவுக்குப் போனார்.
44. ஒரு தீர்க்கதரிசிக்கு எந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல் லியிருந்தார்? தன் சொந்த ஊரிலே.
45. அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த யார் அவரை ஏற்றுக்கொண்டார்கள்? கலிலேயர். அவர்களும் எங்கு போயிருந்தார்கள்? பண்டிகைக்குப் போயிருந் தார்கள்.
46. பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின எந்த ஊருக்கு  மறுபடி யும் வந்தார்? கலிலேயாவிலுள்ள கானா. அப்பொழுது கப்பர்நகூமிலே யார் வியாதியாயிருந்தான்? ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியா தியாயிருந்தான்.
47. இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவிற்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், என்னவென்று அவரை வேண் டிக்கொண்டான்? தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண் டான்.
48. அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் எவைகளைக் காணாவிட் டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார்? அடையாளங்களையும் அற்புதங்களை யும் காணாவிட்டால்.
49. அதற்கு ராஜாவின் மனுஷன்: ஆண்டவரே, எதற்குமுன்னே வரவேண்டும் என்றான்? என் பிள்ளை சாகிறதற்குமுன்னே.
50. இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் என்ன ஆனான் என் றார்? பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், எதை நம்பிப்போனான்? இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப்போனான்.
51. அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டு வந்து, என்னவென்று அறிவித்தான்? உம்முடைய குமாரன் பிழைத்திருக்கி றான் என்று அறிவித்தார்கள். 
52. அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தபோது அவர்கள் சொன்னது என்ன? நேற்று ஏழா மணிநேரத்தில் ஜூரம் அவனை விட்டது என்றார்கள்.
53. எதை அறிந்து அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள்? உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து.
54. இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குத்  திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த எத்தனையாவது அற்புதம்? இரண்டாம் அற்புதம்.

Tuesday, February 16, 2016

யோவான் - 3

யோவான் - 3
1. யாருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்? யூதருக்குள்ளே.
2. அவன் இராக்காலத்திலே யாரிடத்தில் வந்தான்? இயேசுவினிடத்தில். நிக்கொதேமு இயேசுவிடம், ரபீ, நீர் யார் என்று அறிந்திருக்கிறோம் என்றான்? தேவனிடத்திலிருந்து வந்த போதகர். ஏனெனில் ஒருவனும் தன்னுடனே யார் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்? தேவன்.
3. இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் என்ன செய்யாவிட்டால் தேவ னுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்? மறுபடியும் பிறவாவிட்டால். 
4. அதற்கு நிக்கொதேமு கேட்ட கேள்வி என்ன? ஒரு மனுஷன் முதிர்வயதாயி ருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இராண்டாந்த ரம் பிரவேசித்துப் பிறக்கக் கூடுமோ?
5. இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவா விட்டால் எதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்? தேவனுடைய ராஜ்யத்தில்.
6. மாமிசத்தினால் பிறப்பது எதுவாயிருக்கும்? மாம்சமாயிருக்கும்.  ஆவியி னால் பிறப்பது எதுவாயிருக்கும்? ஆவியாயிருக்கும்.
7. நீங்கள் எதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்? மறுபடியும் பிறக்கவேண் டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து.
8. காற்றானது எங்கே வீசுகிறது? தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. எதைக் கேட்கிறாய்? அதின் சத்தத்தைக் கேட்கிறாய். ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக் குத் தெரியாது; அப்படியே இருக்கிறவன் யார்? ஆவியினாலும் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
9. அதற்கு நிக்கொதேமு கேட்டது என்ன? இவைகள் எப்படி ஆகும் என்றான்.
10. இயேசு அவனை நோக்கி: நீ யாராயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கி றாயா? இஸ்ரவேலில் போதகனாயிருந்தும்.
11. மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந் திருக்கிறதைச் சொல்லி, எதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்? நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம். நீங்களோ எதை ஏற்றுக்கொள்ளு கிறதில்லை? எங்கள் சாட்சியை.
12. எந்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்க வில்லையே? பூமிக்கடுத்த காரியங்களை. எந்த காரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? பரமகாரியங்களை.
13. யாரையல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை? பரலோ கத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனே யல்லாமல் . 
14. எது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது? சர்ப்பம். அதைப் போல யார் உயர்த்தப்பட வேண்டும்? மனுஷகுமாரன்.
15. மனுஷகுமாரன் ஏன் உயர்த்தப்பட வேண்டும்? தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த் தப்பட வேண்டும்.
16. தேவன், யார் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவ ரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்? தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்.
17. எதற்காக தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பவில்லை? உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி. எதற்காக தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பினார்? அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற் காகவே அவரை அனுப்பினார்.
18. யாரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்? இயேசு கிறிஸ்துவை. விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனு டைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் எதற்கு உட் பட்டாயிற்று? ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
19. அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது எது? ஒளியானது உல கத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக் கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. 
20. யார் ஒளியைப் பகைக்கிறான்? பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான். அவன் ஏன் ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்? தன் கிரியை கள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
21. யார் ஒளியினிடத்தில் வருகிறான்? சத்தியத்தின்படி செய்கிறவன். அவன் ஏன் ஒளியினிடத்தில் வருகிறான்? தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய் யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்.
22. இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் எங்கு வந்தார்கள்?  யூதேயா தேசத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் அவாகளோடே சஞ்சரித்து, எந்ந செய்தார்? ஞானஸ்நானங் கொடுத்துவந்தார்.
23. எந்த இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தது? சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே. அந்த இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்த படியினால், யார் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்? யோவான். ஜனங்கள் யாரிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்? யோவானிடத்தில்.
24. அக்காலத்தில் யோவான் எதில் வைக்கப்பட்டிருக்கவில்லை? காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை. 
25. அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் என்ன  உண் டாயிற்று? வாக்குவாதம். எதைக்குறித்து? சுத்திகரிப்பைக்குறித்து. 
26. அவர்கள் யோவானிடத்தில் வந்து இயேசுவைக் குறித்து சொன்னது என்ன? ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக் குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங் கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.
27. யோவான் பிரதியுத்தரமாக: எங்கிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டா லொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்? பரலோகத்திலி ருந்து. 
28. நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே யார்? சாட்சிகள். 
29. மணவாளன் யார்? மணவாட்டியை உடையவனே மணவாளன். மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, என்ன செய்கிறவனாய் இருக்கிறான்? அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான். எது இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று? இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமா யிற்று.
30. அவர் என்ன செய்யப்பட வேண்டும்? பெருக வேண்டும். நான் என்ன செய்யப் பட வேண்டும்? சிறுக வேண்டும்.
31. எங்கிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்? உன்னதத்திலிருந்து வருகிறவர். எதிலிருந்து உண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்? பூமியிலிருந்துண்டானவன். பரலோ கத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் எப்படிப்பட்டவர்? மேலானவர்.
32. தாம் எதைச் சாட்சியாகச் சொல்லுகிறார்? கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார். அவருடைய சாட்சியை யார் ஏற்றுக்கொள்ளுகிற தில்லை? ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
33. அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னவென்று முத்திரை போட்டு நிச்சயப்படுத்துகிறான்? தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரை போட்டு நிச்சயப்படுத்துகிறான்.
34. யார் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்? தேவனால் அனுப்பப்பட்ட வர். தேவன் அவருக்கு எதை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்? தமது ஆவியை. 
35. யார் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக் கொடுத்திருக்கிறார்? பிதா.
36. யார் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்? குமாரனிடத்தில் விசுவா சமாயிருக்கிறவன். யார் ஜீவனைக் காண்பதில்லை? குமாரனை விசுவாசியாத வன்.  தேவனுடைய கோபம் யார்மேல் நிலைநிற்கும்? குமாரனை விசுவாசியா தவன் மேல்.

Saturday, February 13, 2016

யோவான் - 2

யோவான் - 2
1. மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே என்ன நடந்தது? ஒரு கலியாணம் நடந்தது. இயேசுவின் தாய் எங்கேயிருந்தாள்? கலியாணவீட்டிலே.
2. இயேசுவும் அவருடைய சீஷரும் எதுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்? அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
3. திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் யாரை நோக்கி, அவர்க ளுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்? இயேசுவை நோக்கி.
4. இயேசு யாரிடம் ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என்வேளை இன்னும் வரவில்லை என்றார்? தன் தாயிடம்.
5. அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கிச் சொன்னது என்ன? அவர் உங்க ளுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள்.
6. அங்கே எப்படிப்பட்ட கற்சாடிகள் வைத்திருந்தது? யூதர்கள் தங்களைச் சுத்திக ரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது.
7. இயேசு வேலைக்காரரை நோக்கி எதிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்? ஜாடி களிலே. அவர்கள் அவைகளை என்ன செய்தார்கள்? தண்ணீரால் நிறைய நிரப் பினார்கள்.
8. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, யாரிடத்தில் கொண்டு போங்கள் என்றார்? பந்திவிசாரிப்புக்காரனிடத்தில். அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோனார்கள்.
9. அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று யாருக்குத் தெரியும்? தண் ணீரை மொண்ட வேலைக்காரருக்கு. யாருக்குத் தெரியாது? பந்திவிசாரிப்புக் காரனுக்கு. அந்தத் திராட்சரசம் தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட் சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, யாரை அழைத்தான்? மணவா ளனை அழைத்தான். 
10. மணவாளனை அழைத்துச் என்ன சொன்னான்? எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை  இதுவரைக்கும் வைத்திருந் தீரே என்றான்.
11. இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, எதை வெளிப்படுத்தினார்? தம்முடைய மகிமையை. யார் அவர்டத்தில் விசுவாசம் வைத்தார்கள்? அவருடைய சீஷர்கள்.
12. அதன் பின்பு அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவ ருடைய சீஷரும் எங்கேபோய், அங்கே சில நாள் தங்கினார்கள்? கப்பர்நகூமுக் குப்போய்.
13. பின்பு எது சமீபமாயிருந்தது? யூதருடைய பஸ்காபண்டிகை. அப்பொழுது இயேசு எங்கே போனார்? எருசலேமுக்குப் போனார்.
14. தேவாலயத்திலே யாரைக் கண்டார்? ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டார்.
15. கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, என்ன செய்தார்? அவர்கள் யாவ ரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக் காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டார்.
16. புறாவிற்கிறவர்களை நோக்கி என்ன சொன்னார்? இவைகளை இவ்விடத்தி லிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக் காதிருங்கள் என்றார்.
17. அப்பொழுது என்ன என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினை வுகூர்ந்தார்கள்? உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான  பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது.
18. அப்பொழுது யூதர்கள் யாரை நோக்கி: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு  என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள்? இயேசுவை நோக்கி.
19. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், எத்தனை நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்? மூன்று நாளைக்குள்ளே.
20. அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட எத்தனை வருஷம் சென் றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்? நாற்பத்தாறு வருஷம்.
21. அவரோ எதைக்குறித்துப் பேசினார்? தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக் குறித்துப் பேசினார்.
22. அவர் இப்படிச் சொன்னதை எப்போது அவருடைய சீஷர்கள் நினைவு கூர்ந்து,  வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித் தார்கள்? அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு.
23. பஸ்காபண்டிகையிலே அவர் எருசலேமிலிருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, எதில் விசுவாசம் வைத்தார்கள்? அவருடைய நாமத்தில்.
24. அப்படியிருந்தும், இயேசு எதனால் அவர்களை நம்பி இணங்கவில்லை? எல்லாரையும் அறிந்திருந்தபடியால்.
25. எதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக் குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை? மனுஷருள்ளத்திலிருப் பதை அவர் அறிந்தபடியால்.

Tuesday, February 2, 2016

யோவான் - 1

யோவான் - 1
1. ஆதியிலே என்ன இருந்தது? வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை யாரிடத் தில் இருந்தது? தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை யாராய் இருந்தது? தேவனாய் இருந்தது.
2. அவர் ஆதியிலே யாரோடிருந்தார்? தேவனோடிருந்தார்.
3. சகலமும் யார் மூலமாய் உண்டாயிற்று? தேவன் மூலமாய் உண்டாயிற்று. உண்டானதொன்றும் யாராலேயல்லாமல் உண்டாகவில்லை? தேவனேயல் லாமல் உண்டாகவில்லை.
4. அவருக்குள் என்ன இருந்தது? ஜீவன். அந்த ஜீவன் யாருக்கு ஒளியாயிருந்     தது? மனுஷருக்கு.
5. அந்த ஒளி எதிலே பிரகாசிக்கிறது? இருளிலே. இருளானது எதைப் பற்றிக் கொள்ளவில்லை? ஒளியைப் பற்றிக்கொள்ளவில்லை.
6. யாரால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான்? தேவனால். அவன் பெயர் என்ன? யோவான்.
7. அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி எதைக் குறித்துச் சாட்சிகொ டுக்க வந்தான்? அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந் தான்.
8. அவன் எதையல்ல, எதைக்குறித்துச் சாட்சிக்கொடுக்க வந்தான்? அந்த ஒளி யல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.
9. யாரைப் பிரகாசிப்பிக்கிற ஒளி அந்த மெய்யான ஒளி? உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
10. அவர் எதில் இருந்தார்? உலகத்தில் இருந்தார். எது அவர் மூலமாய் உண்டா யிற்று? உலகம். எது அவரை அறியவில்லை? உலகம்.
11. அவர் எதிலே வந்தார்? தமக்குச் சொந்தமானதிலே வந்தார். அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை என்ன செய்தார்கள்? அவரை ஏற்றுக்கொள்ள வில்லை.
12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களுக்கும் தேவன் கொடுத்த அதிகாரம் என்ன? அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளா கும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
13. அவர்கள் எதினால் பிறவாதவர்கள்? அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாதவர்கள். அவர் கள் யாராலே பிறந்தவர்கள்? தேவனாலே பிறந்தவர்கள்.
14. அந்த வார்த்தை என்னவாகியது? மாம்சமாகியது. அந்த வார்த்தை மாம்ச மாகி எதினால் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்? கிருபையி னாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார். எதைக் கண்டோம்? அவருடைய மகிமையைக் கண்டோம். அந்த மகிமை எதுக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது? அது பிதாவுக்கு ஒரேபேறானவரு டைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
15. யோவான் அவரைக்குறித்துச் கொடுத்த சாட்சி என்ன? எனக்குப் பின்வருகிற வர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறி னான்.
16. எதினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்? அவரு டைய பரிபூரணத்தினால்.
17. எப்படியெனில் நியாயப்பிரமாணம் யார் மூலமாய்க் கொடுக்கப்பட்டது? மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது. கிருபையும் சத்தியமும் யார் மூல மாய் உண்டாயின? இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
18. யாரை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை? தேவனை. தேவனை யார் வெளிப்படுத்தினார்? பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
19. எருசலேமிலிருந்து யூதர்கள் யாரை யோவானிடத்தில் அனுப்பினார்கள்?  ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பினார்கள். அவர் கள் யோவானிடத்தில் என்ன கேட்டார்கள்? நீர் யார் என்று கேட்டார்கள்.
20. அவன் என்னவென்று அறிக்கையிட்டான்? அவன் மறுதலியாமல் அறிக்கை யிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான்.
21. அப்பொழுது அவர்கள் என்ன கேட்டார்கள்? பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு யோவான் சொன்னது என்ன? நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று யார் கேட்டார்கள்? ஆசாரியரும் லேவியரும். அதற்கும் யோவான் சொன்னது என்ன? அல்ல என்றான்.
22. அவர்கள் பின்னும் அவனை நோக்கி கேட்டது என்ன? நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.
23. அதற்கு யோவான் சொன்னது என்ன? அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ் வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத் திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.
24. அனுப்பப்பட்டவர்கள் யாராயிருந்தார்கள்? பரிசேயராயிருந்தார்கள்.
25. அவர்கள் அவனை நோக்கி நீர் யாரும் அல்லவென்றால் ஏன் ஞானஸ்நா னங் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்? நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், என் ஞானஸ்நானங் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.
26. யோவான் அவர்களுக்கு பிரதியுத்தரமாக: நான் எதினாலே ஞானஸ்நானங் கொடுக்கிறேன்? ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன். நீங்கள் அறி யாதிருக்கிற ஒருவர் எங்கே நிற்கிறார்? உங்கள் நடுவிலே நிற்கிறார்.
27. அவர் எனக்குப் பின்வந்தும் எப்படிப்பட்டவர்? என்னிலும் மேன்மையுள்ள வர். எதற்கு நான் பாத்திரனல்ல என்றான்? அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான்.
28. இவைகள் எங்கே நடந்தன? யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன.
29. மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு சொன்னது என்ன? இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
30. இயேசுவை யார் என்று யோவான் சொன்னான்? எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவ ரென்று நான் சொன்னேனே, அவர் இவர் தான்.
31. நானும் யாரை அறியாதிருந்தேன்? இயேசுவை. இவர் யாருக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்கவந்தேன் என் றான்? இஸ்ரவேலுக்கு.
32. பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: யார் புறாவைப்போல வானத் திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்? ஆவியானவர்.
33. நானும் யாரை அறியாதிருந்தேன்? இயேசுவை. ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர் என்னவென்று எனக் குச் சொல்லியிருந்தார்? ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்.
34. அந்தப்படியே நான் கண்டு, இவரே யார் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான்? தேவனுடைய குமாரன் என்று.
35. மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும் போது,
36. இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு சொன்னது என்ன? இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
37. அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, என்ன செய்தார் கள்? இயேசுவுக்குப் பின்சென்றார்கள்.
38. இயேசு திரும்பி, அவர்கள் பின்செல்லுகிறதைக் கண்டு என்ன கேட்டார்? என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்? ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள். ரபீ என்பதற்குப் என்ன அர்த்த மாம்? போதகரே என்று அர்த்தமாம்.
39. இயேசு சொன்னது என்ன? வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, என்ன செய்தார்கள்? அன்றையத்தினம் அவரி டத்தில் தங்கினார்கள். அப்பொழுது நேரம் என்ன? ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.
40. யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் யார்? சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்.
41. அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு என்ன சொன் னான்? மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான். மேசியா என்பதற்கு என் னவென்று அர்த்தமாம்? கிறிஸ்து என்று அர்த்தமாம்.
42. பின்பு, யாரை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான்? சீமோன். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ என்ன என் னப்படுவாய் என்றார்? நீ கேபா என்னப்படுவாய் என்றார். கேபா என்பதற்கு என்னவென்று அர்த்தமாம்? பேதுரு என்று அர்த்தமாம்.
43. மறுநாளிலே இயேசு எங்கு போக மனதாயிருந்தார்? கலிலேயாவுக்குப் போக. யாரைக் கண்டு நீ எனக்குப் பின்சென்றுவா என்றார்? பிலிப்புவைக் கண்டு.
44. பிலிப்பென்பவன் யார்? அந்திரோயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான்.
45. பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு சொன்னது என்ன? நியாயப்பிரமாணத் திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.
46. அதற்கு நாத்தான்வேல்: எங்கிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான்? நாசரேத்திலிருந்து. அதற்குப் பிலிப்பு என்ன சொன்னான்? வந்து பார் என்றான்.
47. இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து சொன்னது என்ன? இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.
48. அதற்கு நாத்தான்வேல் என்ன கேட்டான்? நீர் என்னை எப்படி அறிவீர் என் றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ எங்கே இருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார்? அத்திமரத்தின் கீழிருக் கும்போது.
49. அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் யார் என்றான்? நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.
50. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக என்ன என்று நான் உனக்குச் சொன்ன தினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்? அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன்.
51. பின்னும் அவர் அவனை நோக்கி எதை நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Sunday, January 31, 2016

லூக்கா – 24

லூக்கா – 24
1. வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே என்ன செய்தார்கள்? தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்.
2. கல்லறையை அடைத்திருந்த என்ன கண்டார்கள்? கல்புரட்டித் தள்ளப்பட்டி ருக்கிறதைக்கண்டார்கள்.
3. உள்ளே பிரவேசித்து, எதைக் காணவில்லை? கர்த்தராகிய இயேசுவின் சரீரத் தைக் காணவில்லை.
4. அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், அவர்கள் அருகே நின்ற வர்கள் யார்? பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர்.
5. அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி: நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி சொன்னது என்ன? உயிரோடிருக்கிற வரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?
6. அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
7. எதை நினைவுகூருங்கள் என்று சொன்னார்கள்? மனுஷகுமாரன் பாவிக ளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்பட வும், மூன்றாம்நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயா விலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார் கள்.
8. அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து, என்ன செய்தார்கள்?
9. கல்லறையை விட்டுத் திரும்பிப்போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள்.
10. இவைகளை அப்போஸ்தலருக்குச் சொன்னவர்கள் யார்? மகதலேனா மரி யாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனே கூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே.
11. அவர்கள் இவர்களை ஏன் நம்பவில்லை? இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்ப வில்லை.
12. பேதுருரு என்ன செய்தான்? பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத் திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத் திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக் கொண் டுபோனான்.
13. அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எங்கே போனார்கள்? எருசலே முக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.
14. போகையில் எவைகளைக் குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டார்கள்? இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து.
15. இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், யார் தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்துபோனார்? இயேசு தாமே சேர்ந்து அவர்களு டனேகூட நடந்துபோனார்கள்.
16. ஆனாலும் அவரை அறியாதபடிக்கு எது மறைக்கப்பட்டிருந்தது? அவர்களு டைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது.
17. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி எது என்னவென்று கேட்டார்? நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள் ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார்.
18. அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக சொன் னது என்ன? இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான்.
19. இயேசு என்ன சொன்னார்? அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள் சொன்னது என்ன? நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவ னுக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசி யாயிருந்தார்.
20. நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கி னைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள்.
21. அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது.
22. ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்ல றையினிடத்திற்குப்போய்,
23. அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக் கிறார் என்று சொன்ன தேவதூதரைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களை பிரமிக்கப்பண்ணினார்கள்.
24. அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப் போய், ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள்.
25. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி சொன்னது என்ன? தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ள வர்களே,
26. கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி,
27. மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல் லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித் துக் காண்பித்தார்.
28. அத்தருணத்தில் அவர்கள் எதுக்குச் சமீபமானார்கள்? தாங்கள் போகிற கிரா மத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் எதைப் போலக் காண்பித்தார்? அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார்.
29. அவர்கள் அவரை நோக்கி சொன்னது என்ன? நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரைவருந்திக் கேட்டுக் கொண்டார்கள். அப்பொழுது அவர் என்ன செய்தார்? அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்.
30. அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் என்ன செய்தார்? அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்.
31. அப்பொழுது நடந்தது என்ன? அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை  அறிந்தார்கள். உடனே அவர் என்ன செய்தார்? அவர்களுக்கு மறைந்து போனார்.
32. அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி என்ன என்று சொல்லிக் கொண்டார்கள்? வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டார்கள்.
33. அந்நேரமே எழுந்திருந்து, என்ன செய்தார்கள்? எருசலேமுக்குத் திரும்பிப் போய், பதினொருவரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு:
34. கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானார் என்று அவர்கள் சொல்லக் கேட்டு,
35. வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கையில் தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள்.
36. இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு என்ன செய்தார்? இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
37. அவர்கள் கலங்கி, பயந்து, எதைக் காண்கிறதாக நினைத்தார்கள்? ஒரு ஆவி யைக் காண்கிறதாக நினைத்தார்கள்.
38. அவர் அவர்களை நோக்கி கேட்டது என்ன? நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
39. நான்தான் என்று அறியும்படி, என்ன செய்யுங்கள் என்றார்? என்கைகளை யும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள். நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல எதுக்கு இராதே என்றார்? ஒரு ஆவிக்கு இராதே என்று சொன்னார்.
40. எவைகளை அவர்களுக்குக் காண்பித்தார்? தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
41. ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரி யப்படுகையில்: எது உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்? புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.
42. அப்பொழுது எவைகளை அவருக்குக் கொடுத்தார்கள்? பொரித்த மீன்கண் டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.
43. அவைகளை அவர் வாங்கி என்ன செய்தார்? அவர்களுக்கு முன்பாகப் புசித்தார்.
44. அவர்களை நோக்கி என்ன சொன்னார்? மோசேயின் நியாயப்பிரமாணத்தி லும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்க ளோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.
45. அப்பொழுது எவைகளை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்தார்? வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி. அவர்களை நோக்கி:
46. எழுதியிருக்கிறபடி, யார் பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந் தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது? கிறிஸ்து.
47. அன்றியும் எவைகள் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவரு டைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது? மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும்.
48. நீங்கள் இவைகளுக்கு என்னவாக இருப்பீகள்? சாட்சிகளாயிருக்கிறீர்கள்.
49. எதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்? என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை. நீங்களோ எது வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்? உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும்.
50. பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டு போய், என்ன செய்தார்? தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வ தித்தார்.
51. அவர்களை ஆசீர்வதிக்கையில், என்ன ஆனார்? அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
52. அவர்கள் அவரைப் பணிந்து கொண்டு, என்ன செய்துகொண்டிருந்தார்கள்? மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பிவந்து,
53. நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந் தார்கள். ஆமென்.

Wednesday, January 6, 2016

லூக்கா – 23

லூக்கா – 23
1. அவர்களுடைய கூட்டத்தாரெல்லாரும் எழுந்திருந்து, அவரை யாரிடத்திற் குக் கொண்டுபோனார்கள்? பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்.
2. என்ன என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள்? இவன் தன்னை கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டுவதில் லையென்றும் சொல்லி, ஜனங்களைக் கலகப்படுத்தக் கண் டோம் என்று அவர் மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள்.
3. பிலாத்து அவரை நோக்கி என்ன கேட்டான்? நீ யூதருடைய ராஜாவா என்று  கேட்டான். அவர் அவனுக்குப் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? நீர் சொல்லு கிறபடிதான் என்றார்.
4. அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி சொன்னது என்ன? இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காண வில்லை என்றான்.
5. அதற்கு அவர்கள் என்ன என்று வைராக்கியத்தோடே சொன்னார்கள்? இவன் கலிலேயா நாடுதொடங்கி இவ்விடம்வரைக்கும்  யூதேயாதேசமெங்கும்  உப தேசம்பண்ணி, ஜனங்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத் தோடே  சொன்னார்கள்.
6. கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, என்ன செய்தான்? இந்த மனுஷன் கலிலேயனா என்று விசாரித்து,
7. அவர் ஏரோதின் அதிகாரத்துக்குள்ளானவர் என்றறிந்து, அந்நாட்களில் எருச லேமிலே வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு அவரை அனுப்பினான்.
8. ஏரோது ஏன் இயேசுவைக் காணும்படி வெகுநாய் ஆசைகொண்டிருந்தான்? ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினா லும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும் பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசைகொண்டிருந் தான். அந்தப்படி அவரைக் கண்டபோது, என்ன செய்தான்? மிகவும் சந்தோஷப் பட்டு,
9. அநேக காரியங்களைக்குறித்து அவரிடத்தில் வினாவினான். அவர் மறுமொ ழியாக என்ன சொன்னார்? அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
10. பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் என்ன செய்தார்கள்? அவர்மேல் பிடி வாதமாய்க் குற்றஞ்சாட்டிக்கொண்டே நின்றார்கள்.
11. அப்பொழுது ஏரோது என்ன செய்தான்? ஏரோது தன் போர்ச்சேவகரோடுகூட அவரை நிந்தித்துப் பரியாசம்பண்ணி, மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தி, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான்.
12. முன்னே ஒருவருக்கொருவர் பகைவராயிருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையத்தினம் என்ன ஆனார்கள்? சிநேகிதரானார்கள்.
13. பிலாத்து யாரைக் கூடிவரச் செய்தான்? பிரதான ஆசாரியர்களையும் அதிகா ரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்தான்.
14. பிலாத்து அவர்களை நோக்கி சொன்னது என்ன? ஜனங்களைக் கலகத்துக் குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர் கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டு கிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.
15. உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற் றம் காணவில்லை; மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே.
16. ஆனபடியால் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
17. பிலாத்து ஏன் அப்படிச் சொன்னான்? பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது அவசியமாயிருந்தபடியால் அப்படிச் சொன்னான்.
18. ஜனங்களெல்லாரும் அதைக் கேட்டு என்ன என்று சத்தமிட்டுக் கேட்டார் கள்? இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்த மிட்டுக் கேட்டார்கள்.
19. அந்தப் பரபாசென்பவன் யார்? நகரத்தில் நடந்த ஒரு கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.
20. பிலாத்து எதற்காக மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்? இயேசுவை விடுதலையாக்கமனதாய், மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.
21. அவர்களோ என்ன என்று கூக்குரலிட்டார்கள்? அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள்.
22. அவன் மூன்றாந்தரம் அவர்களை நோக்கி சொன்னது என்ன? ஏன் இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவானகுற்றம் ஒன்றும் இவ னிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
23. அப்படியிருந்தும் என்ன என்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக் கொண்டேயிருந்தார்கள்? அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று. எது மேற்கொண்டது? அவர்களும் பிரதான ஆசாரியரும் இட்ட சத்தம் மேற் கொண்டது.
24. அப்பொழுது பிலாத்து என்ன என்று தீர்ப்பு செய்தான்? அவர்கள் கேட்டுக் கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்தான்.
25. பிலாத்துவின் தீர்ப்பு என்ன? கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித் தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத் தான்.
26. அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, யாரைப் பிடித்து, சிலு வையை அவர்பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத் தார்கள்? நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனை.
27. யாரெல்லாம் அவருக்குப் பின்சென்றார்கள்? திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள்.
28. இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி யாருக்காக அழுங்கள் என்றார்? எருச லேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங் கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்றார்.
29. இதோ, யார் பாக்கியவதிகளென்றும், எவைகள் பாக்கியமுள்ளவைகளென் றும் சொல்லப்படும் நாட்கள் வரும்? இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவை களென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும்.
30. அப்பொழுது மலைகளை நோக்கி என்ன என்று சொல்லத்தொடங்குவார் கள்? எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத் துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
31. பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், எதுக்கு என்ன செய்யமாட்டார் கள் என்றார்? பட்டமரத்துக்கு.
32. வேறே யார் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோ கப்பட்டார்கள்? குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேர்.
33. கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே என்ன செய்தார்கள்? அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியை யும் சிலுவைகளில் அறைந்தார்கள்.
34. அப்பொழுது இயேசு என்ன சொன்னார்? பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவரு டைய வஸ்திரங்களை அவர்கள் என்ன செய்தார்கள்? பங்கிட்டுச் சீட்டுப்போட் டார்கள்.
35. யார் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்? ஜனங்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து, என்ன சொன்னார்கள்? இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.
36. போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, என்ன செய்தான்? அவருக்குக் காடியைக் கொடுத்தான். காடியைக் கொடுத்து என்ன செய்தான்?
37. நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப்  பரி யாசம்பண்ணினார்கள்.
38. என்ன என்று எழுதி அவருக்கு மேலாக வைக்கப்பட்டது? இவன் யூதருடைய  ராஜா என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
39. அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன் என்ன சொல்லி அவரை இகழ்ந்தான்? நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்க ளையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.
40. மற்றவன் அவனை நோக்கி என்ன என்ன கடிந்துகொண்டான்? நீ இந்த ஆக்கி னைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
41. நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில் லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
42. இயேசுவை நோக்கி என்ன என்று விண்ணப்பம் செய்தான்? ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
43. இயேசு அவனை நோக்கி என்ன என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகி றேன் என்றார்? இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
44. அப்பொழுது என்ன ஆயிற்று? ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று.
45. சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டா கக்கிழிந்தது.
46. இயேசு பிதாவை நோக்கி என்ன என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன் னார்? பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார். இப்படிச் சொல்லி, என்ன செய்தார்? ஜீவனை விட்டார்.
47. நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக்கண்டு என்ன சொல்லி தேவனை மகிமைப்படுத்தினான்? மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
48. இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்ப வித்தவைகளைப் பார்த்தபொழுது, என்ன செய்தார்கள்? தங்கள் மார்பில் அடித் துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
49. யாரெல்லாம் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார் கள்? அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவ ருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த் துக்கொண்டிருந்தார்கள்.
50. யோசேப்பு எப்படிப்பட்டவனாய் இருந்தான்? யோசேப்பு என்னும் பேர் கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானு மாயிருந்தான்.
51. அவன் யூதருடைய பட்டணங்களிலொன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்துக்குக் காத்திருந்தவனும்,  யூதர்களு டைய  ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதியாதவனுமாயிருந்தான்.
52. அவன் பிலாத்துவினிடத்தில் போய், என்ன கேட்டான்? இயேசுவின் சரீரத் தைக் கேட்டான்.
53. இயேசுவின் சரீரத்தை என்ன செய்தான்? அதை இறக்கி, மெல்லிய துப்பட்டி யிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.
54. அந்த நாள் எது? ஆயத்தநாளாயிருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று.
55. கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின் சென்று,  என்ன செய்தார்கள்? கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப் பட்ட விதத்தையும் பார்த்து,
56. திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம் பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.