Sunday, December 20, 2015

லூக்கா – 22

லூக்கா – 22
1. எது சமீபமாயிற்று? பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை.
2. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் என்ன செய்தார்கள்? இயே சுவைக் கொலைசெய்யும்படி யோசித்து, ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால், எவ்விதமாய் அப்படிச்செய்யலாமென்று வகைதேடினார்கள்.
3. அப்பொழுது யாருக்குள் சாத்தான் புகுந்தான்? பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர் கொண்ட யூதாசுக்குள்.
4. அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் சேனைத்தலைவர்களிடத்திலும் போய், என்ன செய்தான்? இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் வகையைக்குறித்து அவர்களோடே ஆலோசனை பண்ணினான்.
5. அவர்கள் என்ன செய்தார்கள்? சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள்.
6. அதற்கு அவன் சம்மதித்து, எப்பொழுது அவரை அவர்களுக்குக் காட்டிக் கொடுக்கும்படி சமயந்தேடினான்? ஜனக்கூட்டமில்லாத வேளையில்.
7. என்ன நாள் வந்தது? பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப் பண்டிகை நாள் வந்தது.
8. அப்பொழுது இயேசு யாரை அழைத்து: நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம்பண்ணுங்கள் என்றார்? பேதுருவையும் யோவானையும்.
9. அதற்கு அவர்கள் என்ன கேட்டார்கள்? நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண் ணும்படி சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.
10. அதற்கு அவர்: நீங்கள் நகரத்தில் பிரவேசிக்கும்போது, யார் உங்களுக்கு எதிர் படுவான்? தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்ப டுவான். நீங்கள் அவனுக்குப் பின்சென்று, என்ன செய்யுங்கள்? அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும்போங்கள்.
11. அந்த வீட்டெஜமானை நோக்கி என்ன என்று சொல்லுங்கள் என்றார்? நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச் சொன்னார் என்று சொல்லுங்கள்.
12. அவன் எதைக் காண்பிப்பான்? கம்பளமுதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான். அங்கே என்ன செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பினார்? ஆயத்தம்பண்ணுங்கள்.
13. அவர்கள் போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, எதை ஆயத் தம்பண்ணினார்கள்? பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
14. வேளைவந்தபோது, அவரும் அவருடனேகூட யாரெல்லாம் பந்தியிருந்தார் கள்? பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள்.
15. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் எப்போது உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்? பாடுபடுகிறதற்கு முன்னே.
16. எதிலே இது நிறைவேறுமளவும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொன்னார்? தேவனுடைய ராஜ்யத்திலே.
17. அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி சொன்னது என்ன? நீங்கள் இதைவாங்கி உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்;
18. தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம்பண் ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
19. பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்க ளுக்குக் கொடுத்து சொன்னது என்ன? இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங் கள் என்றார்.
20. போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து சொன்னது என்ன? இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.
21. பின்பு: இதோ, யாருடை கை என்னுடனேகூடப் பந்தியிலிருக்கிறது?என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை.
22. எப்படி மனுஷகுமாரன் போகிறார்? தீர்மானிக்கப்பட்டபடியே. ஆனாலும் யாருக்கு ஐயோ என்றார்? அவரைக் காட்டிக்கொடுக்கிற மனுஷனுக்கு.
23. அப்பொழுது அவர்கள் என்ன என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கி னார்கள்? நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று.
24. அன்றியும் என்ன என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று? தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று.
25. அவர் அவர்களை நோக்கி: புறஜாதியாரின் ராஜாக்கள் அவர்களை என்ன செய்கிறார்கள்? ஆளுகிறார்கள். அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்க ளும் யார் என்னப்படுகிறார்கள்? உபகாரிகள் என்னப்படுகிறார்கள்.
26. யாருக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது? உங்களுக்குள்ளே. உங்களில் பெரி யவன் யாரைப்போல இருக்கக்கடவன்? சிறியவனைப்போல. தலைவன் யாரைப்போல இருக்கக்கடவன்? பணிவிடைக்காரனைப்போல.
27. பந்தியிருக்கிறவனோ, பணிவிடை செய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன். அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே யாரைப்போல் இருக்கிறேன்? பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன்.
28. மேலும் எதில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே? எனக்கு நேரிட்ட சோதனைகளில்.
29. ஆகையால், என் பிதா எனக்கு எதை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்க ளுக்கு ஏற்படுத்துகிறேன்? ஒரு ராஜ்யத்தை.
30. நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, எப்படி இருப்பீர்கள் என்றார்? இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியா யந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள் என்றார்.
31. பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, எதைப்போல சாத்தான் உங்க ளைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்? கோதுமையைச் சுளகி னால் புடைக்கிறதுபோல.
32. நானோ எது ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்? உன் விசுவாசம். நீ குணப்பட்டபின்பு யாரை ஸ்திரப்படுத்து என்றார்? உன் சகோத ரரை.
33. அதற்கு அவன்: ஆண்டவரே, எதிலே உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயி ருக்கிறேன் என்றான்? காவலிலும் சாவிலும்.
34. அவர் அவனை நோக்கி: பேதுருவே, எதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக் கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்? இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே.
35. பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களை எவைகள் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார்? பணப் பையும் சாமான்பையும் பாதரட்சைகளும். அவர்கள் என்ன சொன்னார்கள்? ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.
36. அதற்கு அவர்: இப்பொழுதோ எவைகளை உடையவன் அவைகளை எடுத் துக்கொள்ளக்கடவன்? பணப்பையும் சாமான்பையும். எது இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்? பட்டயம் இல்லாதவன்.
37. என்ன என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டி யதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? அக்கிரமக்காரரில் ஒருவனாக எண் ணப்பட்டார். என்ன காலம் வந்திருக்கிறது என்றார்? என்னைப்பற்றிய காரியங் கள் முடிவுபெறுங்காலம்.
38. அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே எத்தனை பட்டயம் இருக்கி றது என்றார்கள்? இரண்டு பட்டயம். அவர் என்ன என்றார்? போதும் என்றார்.
39. பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே என்ன செய்தார்? ஒலிவமலைக் குப் போனார். அவருடைய சீஷர் என்ன செய்தார்கள்? அவரோடேகூடப் போனார்கள்.
40. அவ்விடத்தில் சேர்ந்தபொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் எதற்கு உட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள் என்று சொன்னார்? சோதனைக்குட்படாத படிக்கு ஜெபம்பண்ணுங்கள் என்றார்.
41. அவர்களை விட்டு எங்கேபோய் முழங்கால்படியிட்டு ஜெபித்தார்? கல்லெறி தூரம் அப்புறம்போய்.
42. என்ன என்று ஜெபம் செய்தார்? பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத் திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்ப டியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று  ஜெபம்பண்ணி னார்.
43. அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, என்ன செய்தான்? அவரைப் பலப்படுத்தினான்.
44. அவர் மிகவும் வியாகுலப்பட்டு, என்ன செய்தார்? அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். எது இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந் தது? அவருடைய வேர்வை.
45. அவர் ஜெபம்பண்ணி முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீஷரிடத்தில் வந்து, என்ன கண்டார்? அவர்கள் துக்கத்தினாலே நித்திரை பண்ணுகிறதைக் கண்டார்.
46. நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? எதற்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றார்? சோதனைக்குட்படாதபடிக்கு,.
47. அவர் அப்படிப் பேசுகையில் என்ன நடந்தது? ஜனங்கள் கூட்டமாய் வந்தார் கள். அவர்களுக்கு முன்னே யாரும் வந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான்? பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும்
48. இயேசு அவனை நோக்கி: யூதாசே எதினாலே மனுஷகுமாரனைக்  காட்டிக் கொடுக்கிறாய் என்றார்? முத்தத்தினாலேயா.
49. அவரைச் சூழநின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு சொன்னது என்ன? ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள்.
50. அந்தப்படியே அவர்களில் ஒருவன் என்ன செய்தான்? பிரதான ஆசாரியனு டைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்.
51. அப்பொழுது இயேசு: இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி, என்ன செய் தார்? அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார்.
52. பின்பு இயேசு தமக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்துச் சேனைத்தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி சொன் னது என்ன? ஒரு கள்ளனைப் பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்ட யங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டுவந்தீர்களே.
53. நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களுடனேகூட இருக்கையில் நீங் கள் என்னைப் பிடிக்கக் கைநீட்டவில்லை; இதுவோ உங்களுடையவேளையும் அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது என்றார்.
54. அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, என்ன செய்தார்கள்? பிரதான ஆசாரியனு டைய வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள். யாரும் தூரத்திலே பின்சென் றான்? பேதுருவும்.
55. அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்த போது, யாரும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான்? பேதுருவும்.
56. அப்பொழுது யார் அவனை நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடிருந்தான் என்றாள்? ஒரு வேலைக்காரி.
57. அதற்கு அவன் சொன்னது என்ன? ஸ்திரீயே, அவனை அறியேன் என்று மறுதலித்தான்.
58. சற்றுநேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைக் கண்டு என்ன சொன் னான்?  நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு சொன்னது என்ன? மனுஷனே, நான் அல்ல என்றான்.
59. ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைப்பார்த்து என்ன என்று சொன்னான்? மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன் தான் என்று சாதித்தான்.
60. அதற்குப் பேதுரு சொன்னது என்ன? மனுஷனே, நீ சொல்லுகிறதை அறி யேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே என்ன ஆயிற்று? சேவல் கூவிற்று.
61. அப்பொழுது கர்த்தர் என்ன செய்தார்? திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த் தார். உடனே பேதுரு எதை நினைவுகூர்ந்தான்? சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைவுகூர்ந்தான்.
62. பேதுரு நினைவுகூர்ந்து என்ன செய்தான்? வெளியே போய், மனங்கசந்து அழுதான்.
63. இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் என்ன செய்தார்? அவரைப் பரியா சம்பண்ணி, அடித்து,
64. அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை ஞானதிருஷ்டியினால் சொல் என்று அவரைக் கேட்ட துமன்றி,
65. மற்றும் அநேக தூஷணவார்த்தைகளையும் அவருக்கு விரோதமாகச் சொன் னார்கள்.
66. விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேத பாரகரும் கூடிவந்து, என்ன செய்தார்கள்? தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
67. அவர்கள் என்ன கேட்டார்கள்? நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர் என்ன சொன்னார்கள்? நான் உங்களுக்குச் சொன்னா லும் நம்பமாட்டீர்கள்.
68. நான் உங்களிடத்தில் வினாவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர் கள், என்னை விடுதலைபண்ணவுமாட்டீர்கள்.
69. இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரி சத்தில் வீற்றிருப்பார் என்றார்.
70. அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ யார் என்று கேட்டார்கள்? நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர் என்ன சொன்னார்? நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார்.
71. அப்பொழுது அவர்கள் சொன்னது என்ன? இனி வேறு சாட்சி நமக்கு வேண்டு வதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.

Friday, November 20, 2015

லூக்கா 21

லூக்கா - 21
1. அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, யார் காணிக்கைப்பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்? ஐசுவரியவான்கள்.
2. ஒரு ஏழை விதவை அதிலே எத்தனை காசைப் போடுகிறதையும் கண்டார்? இரண்டு.
3. யார் மற்றெல்லாரைப்பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யா கவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? இந்த ஏழை விதவை.
4. அவர்களெல்லாரும் எதிலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்? தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்து. இவளோ எதையெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்? தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டா யிருந்ததெல்லாம்.
5. பின்பு, எதைக்குறித்துச் சிலர் சொன்னார்கள்? சிறந்த கற்களினாலும் காணிக் கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக்குறித்து. 
6. அப்பொழுது அவர் சொன்னது என்ன? நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.
7. அவர்கள் அவரை நோக்கி என்ன கேட்டார்கள்? போதகரே, இவைகள் எப்பொ ழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.
8. அதற்கு அவர்: நீங்கள் எதற்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றார்? வஞ்சிக்கப் படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் அநேகர் வந்து என் நாமத் தைத் தரித்துக்கொண்டு என்னவென்று சொல்லுவார்கள்? நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள். அவர்களை என்ன செய் யாதிருங்கள்? பின்பற்றாதிருங்கள்.
9. எதைக் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்? யுத்தங்க ளையும் கலகங்களையுங் குறித்து. இவைகள் எப்பொழுது சம்பவிக்க வேண்டி யதே? முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே. ஆனாலும் எது உடனே வராது என்றார்? முடிவு.
10. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் எழும்பு வது எது? ஜனம். ராஜ்யத்துக்கு விரோதமாய் எழும்புவது எது? ராஜ்யம்.
11. பல இடங்களில் எவைகள் உண்டாகும்? மகா பூமியதிர்ச்சிகளும்,  பஞ்சங்க ளும், கொள்ளைநோய்களும் உண்டாகும். வானத்திலிருந்து எவைகள் உண்டா கும்? பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.
12. இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களை என்ன செய்வார்கள்? பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலை களுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.
13. ஆனாலும் அது உங்களுக்கு எதற்கு ஏதுவாயிருக்கும்? சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும்.
14. ஆகையால் என்ன உத்தரவு சொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும் படி உங்கள் மனதிலே என்ன செய்யுங்கள்? நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள்.
15. யார் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத் தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்? உங்களை விரோதிக்கிறவர்கள்.
16. யாரால் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்? பெற்றாராலும், சகோதரராலும், பந்து ஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள். உங்களில்   சிலரை என்ன செய்வார்கள்? கொலைசெய்வார்கள்.
17. எதினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்? என் நாமத்தினிமித்தம்.
18. ஆனாலும் எதில் ஒன்றாகிலும் அழியாது? உங்கள் தலைமயிரில்.
19. எதினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்? உங்கள் பொறுமையினால்.
20. எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, எது சமீபமாயிற்றென்று அறியுங்கள்? அதின் அழிவு.
21. அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் என்ன செய்யக்கடவர்கள்?  மலை களுக்கு ஓடிப்போகக்கடவர்கள். எருசலேமிலிருக்கிறவர்கள் என்ன செய்யக் கடவர்கள்? வெளியே புறப்படக்கடவர்கள். நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் என்ன செய்யக்கடவர்கள்? நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்.
22. எது நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே? எழுதியி ருக்கிற யாவும்.
23. அந்நாட்களில் யாருக்கு ஐயோ? கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்க ளுக்கும் ஐயோ. பூமியின்மேல் என்ன உண்டாகும்? மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும்.
24. எதினாலே விழுவார்கள்? பட்டயக்கருக்கினாலே விழுவார்கள். சகல புற ஜாதிகளுக்குள்ளும் என்ன செய்யப்படுவார்கள்? சிறைப்பட்டுப்போவார்கள். புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் யாரால் மிதிக்கப் படும்? புற ஜாதியாரால் மிதிக்கப்படும்.
25. சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் என்ன தோன்றும்? அடையா ளங்கள்.  பூமியின்மேலுள்ள ஜனங்களுக்கு என்ன உண்டாகும்? தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும். சமுத்திரமும் அலைகளும் எப்படியிருக்கும்? முழக் கமாயிருக்கும்.
26. எவைகள் அசைக்கப்படும்? வானத்தின் சத்துவங்கள். ஆதலால்  பூமியின் மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷரு டைய இருதயம் என்னவாகும்? சோர்ந்துபோம்.
27. அப்பொழுது மனுஷகுமாரன் எப்படி வருகிறதை மேகத்தின்மேல் வருகிற தைக் காண்பார்கள்? மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும்.
28. இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்ப தால், நீங்கள் என்ன செய்யுங்கள் என்றார்? நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.
29. அன்றியும் அவர்களுக்கு எதைச் சொன்னார்? ஒரு உவமையைச்சொன்னார். எதைப் பாருங்கள்? அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள்.
30. அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது எது சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்? வசந்தகாலம்.
31. அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, எது சமீபமா யிற்றென்று அறியுங்கள்? தேவனுடைய ராஜ்யம்.
32. இவையெல்லாம் சம்பவிக்குமுன் எது ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? இந்தச் சந்ததி.
33. வானமும் பூமியும் என்னவாகும்? ஒழிந்துபோம். என் வார்த்தைகளோ என்ன ஆவதில்லை? ஒழிந்து போவதில்லை.
34. எதற்கு எச்சரிக்கையாயிருங்கள்? உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினா லும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங் கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கை யாயிருங்கள்.
35. பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது எதைப்போல வரும்?  ஒரு கண்ணியைப்போல வரும்.
36. ஆகையால் எதற்கு எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்? இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமார னுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
37. அவர் பகற்காலங்களில் என்ன செய்து கொண்டிருந்தார்? தேவாலயத்திலே உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தார். இராக்காலங்களில் என்ன செய்தார்? வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.
38. ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி என்ன செய் தார்கள்? அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள்.

Thursday, November 19, 2015

லூக்கா – 20

லூக்கா – 20
1. அந்நாட்களில் ஒன்றில், அவர் எதிலே ஜனங்களுக்கு உபதேசித்து, சுவிசே ஷத்தைப் பிரசங்கித்தார்? தேவாலயத்தில். அப்போது, யார் அவரிடத்தில் கூடி வந்தார்கள்? பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்தார்கள்.
2. அவர்கள் இயேசுவிடம் என்ன கேள்வி கேட்டார்கள்? நீர் எந்த அதிகாரத்தி னால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.
3. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? நானும் உங்களிடத் தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுங்கள்.
4. இயேசு அவர்களிடம் கேட்ட கேள்வி என்ன? யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? என்று கேட்டார்.
5. அவர்கள் தங்களுக்குள்ளே என்னவென்று யோசனைபண்ணி பண்ணினார் கள்? தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.
6. மனுஷரால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், ஜனங்களெல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறி வார்கள் என்று. 
7. அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணி சொன்னது என்ன? அது யாரால் உண்டாயிற்றோ, எங்களுக்குத் தெரியாது என்று பிரதியுத்தரம் சொன் னார்கள்.
8. அப்பொழுது இயேசு: நானும் எதை உங்களுக்குச் சொல்லேன் என்றார்? இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று.
9. பின்பு அவர் ஜனங்களுக்குச் சொல்லத்தொடங்கினது என்ன? உவமை. ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதை என்ன செய்தான்? தோட்டக்காரருக்குக் குத்தகையாக விட்டு, நெடுநாளாகப் புறத்தேசத்துக்குப் போயிருந்தான்.
10. அந்தத் தோட்டக்காரர் திராட்சத் தோட்டத்தின் கனிகளில் தன் பாகத்தைக் கொடுத்தனுப்பும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் யாரை அனுப்பி னான்? ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அந்தத் தோட்டக்காரர் அவனை என்ன செய்தார்கள்? அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
11. பின்பு அவன் என்ன செய்தான்? வேறொரு ஊழியக்காரனை அனுப்பினான். அவனையும் அவர்கள் என்ன செய்தார்கள்? அடித்து, அவமானப்படுத்தி, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
12. அவன் மூன்றாந்தரமும் என்ன செய்தான்? ஒரு ஊழியக்காரனை அனுப்பி னான். அவனையும் அவர்கள் என்ன செய்தார்கள்? காயப்படுத்தி, துரத்திவிட் டார்கள்.
13. அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான் என்ன செய்தான்? நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான்.
14. தோட்டக்காரர் அவனைக் கண்டபோது என்னவென்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்? இவன் சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும் படிக்கு இவனைக் கொல்லுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
15. அவனை என்ன செய்தார்கள்? அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்னசெய்வான்?
16. என்ன செய்வான் என்று சொல்லி அதற்கு இயேசு சொன்ன பதில் என்ன? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, என்ன சொன்னார்கள்? அப்படியாகாதிருப்பதாக என்றார்கள்.
17. அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, என்ன என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத் தென்ன? மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.
18. அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் என்ன ஆவான்? அவன் நொறுங்கிப் போவான், அது எவன்மேல் விழுமோ அவனை என்ன செய்யும்? நசுக்கிப் போடும் என்றார்.
19. பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் யாரைக்குறித்து இந்த உவமையைச் சொன்னாரென்று அறிந்தார்கள்? தங்களைக்குறித்து. அந்நேரத்திலே அவரைப் பிடிக்க வகைதேடியும் யாருக்குப் பயந்திருந்தார்கள்? ஜனங்களுக்கு.
20. அவர்கள் சமயம்பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றங்கண்டுபிடிக்கலா மென்று, யாரை அவரிடத்தில் அனுப்பினார்கள்? தங்களை உண்மையுள்ளவர் களாய்க் காண்பிக்கிற வேவுகாரரை.
21. அவர்கள் வந்து: போதகரே, எதை அறிந்திருக்கிறோம் என்றார்கள்? நீர் நிதா னமாய்ப் பேசி உபதேசிக்கிறீரென்றும், முகதாட்சணியமில்லாமல் தேவனு டைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம்.
22. எது நியாயமோ அல்லவோ, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்? இராயனுக்கு வரிகொடுக்கிறது.
23. எதை அவர் அறிந்து, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள் என்றார்? அவர்க ளுடைய தந்திரத்தை அறிந்து.
24. எதை எனக்குக் காண்பியுங்கள் என்றார்? ஒரு பணத்தை. எது யாருடையது என்று கேட்டார்? இதிலிருக்கிற சொரூபமும் மேலெழுத்தும். அதற்கு அவர்கள்: யாருடையது என்றார்கள்? இராயனுடையது.
25. அதற்கு அவர்: அப்படியானால், எதை இராயனுக்கும், எதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்? இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடைய தைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
26. அவர்கள் அவரை ஜனங்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக் கூடாமல், எதைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாயிருந்தார்கள்? அவர் சொன்ன உத்தரவைக்குறித்து.
27. உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிறவர்கள் யார்? சதுசேயர். சதுசே யரில் சிலர் அவரிடத்தில் வந்து 
28. போதகரே, ஒருவன் மனைவியையுடையவனாயிருந்து பிள்ளையில்லா மல் இறந்துபோனால், யார் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானமுண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே என்றனர்? அவனுடைய சகோதரன்.
29. சகோதரர் எத்தனை பேரிருந்தார்கள்? ஏழுபேரிருந்தார்கள். அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, என்ன ஆனான்? பிள்ளையில் லாமல் இறந்துபோனான்.
30. பின்பு இரண்டாஞ்சகோதரன் அவளை விவாகம்பண்ணி, என்ன ஆனான்? அவனும் பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.
31. மூன்றாஞ்சகோதரனும் அவளை என்ன செய்தான்? விவாகம்பண்ணினான். அப்படியே ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, என்ன ஆனார்கள்? பிள்ளை யில்லாமல் இறந்துபோனார்கள்.
32. எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் என்ன ஆனாள்? இறந்துபோனாள்.
33. இவ்விதமாய் ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணியிருக்க, எப்போது அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள் என்று கேட்டார்கள்? உயிர்த்தெழுதலில்.
34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: யார் பெண்கொண்டும் பெண்கொ டுத்தும் வருகிறார்கள்? இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள்.
35. யார் பெண்கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை? மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படு கிறவர்கள்.
36. அவர்கள் இனி என்ன செய்யமாட்டார்கள்? மரிக்கவுமாட்டார்கள். அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் யாருக்கு ஒப்பானவர்களுமாய் இருப்பார்கள்? தேவதூதருக்கு. யாருக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்? தேவனுக்கு.
37. அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் எதில் காண் பித்திருக்கிறார்? முட்செடியைப்பற்றிய வாசகத்தில். எப்படியெனில், கர்த்தரை யாருடைய தேவனென்று சொல்லியிருக்கிறார்? ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார்.
38. அவர் மரித்தோரின் தேவனாயிராமல், யாருடைய தேவனாயிருக்கிறார்? ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார். எல்லாரும் யாருக்குப் பிழைத்திருக் கிறார்களே என்றார்? அவருக்கு.
39. அப்பொழுது வேதபாரகரில் சிலர் அதைக் கேட்டு சொன்னது என்ன? போத கரே, நன்றாய்ச் சொன்னீர் என்றார்கள்.
40. அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் எதற்குத் துணியவில்லை? வேறொன் றுங்கேட்க.
41. அவர் அவர்களை நோக்கி: யார் தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகி றார்கள் என்றார்? கிறிஸ்து.
42. நான் யாரை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,
43. கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புஸ்த கத்தில் சொல்லுகிறானே? உம்முடைய சத்துருக்களை.
44. தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் யாரா யிருப்பது எப்படி என்றார்? குமாரனாயிருப்பது.
45. பின்பு ஜனங்களெல்லாரும் கேட்கையில் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: யாருக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றார்?
46. நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தை வெளிகளில் வந்த னங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
47. விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் எதை அடைவார் கள் என்றார்? அதிக ஆக்கினையை.


Wednesday, November 11, 2015

லூக்கா – 19

லூக்கா – 19
1. இயேசு எதில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோனார்? எரிகோவில்.
2. ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்தவன் யார்? சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்.
3. யார் இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான்? ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவனுமாயிருந்த சகோயு என்னப்பட்ட ஒரு மனுஷன். அவன் எப்படி இருந்தபடியால் ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடவில்லை? குள்ளனானபடியால்.
4. இயேசு போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி எதில் ஏறினான்? ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
5. இயேசு அந்த இடத்தில் வந்தபோது, என்ன செய்தார்? அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டம் என்றார்.
6. சகேயு என்ன செய்தான்? சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான்.
7. அதைக் கண்ட யாவரும் என்ன என்று முறுமுறுத்தார்கள்? இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்.
8. சகேயு நின்று, கர்த்தரை நோக்கி சொன்னது என்ன? ஆண்டவரே, என் ஆஸ்தி களில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதை யாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.
9. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு எது வந்தது? இரட்சிப்பு. இவனும் யாருக்குக் குமாரனாயிருக்கிறானே? ஆபிரகாமுக்கு.
10. எதற்கு மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்? இழந்துபோனதைத் தேட வும் இரட்சிக்கவும்.
11. அவர்கள் இவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் எருசலேமுக் குச் சமீபித்திருந்தபடியினாலும், எது சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்? தேவனுடைய ராஜ்யம்.
12. பிரபுவாகிய ஒருவன் எதைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத் துக்குப் போகப் புறப்பட்டான்? ஒரு ராஜ்யத்தை.
13. புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் எத்தனை பேரை அழைத்தார்? பத்துபேரை. அவர்களிடத்தில் எத்தனை ராத்தல் திரவியங்கொடுத்தார்? பத்து ராத்தல். நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு என்ன செய்யுங்கள் என்று சொன்னான்? வியாபாரம்பண்ணுங்கள்.
14. அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் என்னவாயி ருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்? ராஜாவாயிருக்கிறது.
15. அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது,யாரை எதற்காக அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்? தன்னிடத்தில் திரவி யம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி.
16. அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் எத்தனை ராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்? பத்துராத்தல்.
17. எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே,நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் எத்தனை பட்டணங்களுக்கு அதிகாரியா யிரு என்றான்? பத்துப் பட்டணங்களுக்கு.
18. அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் எத்தனை ராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்? ஐந்துராத்தல்.
19. அவனையும் அவன் நோக்கி: நீயும் எத்தனை பட்டணங்களுக்கு அதிகாரியா யிரு என்றான்? ஐந்து பட்டணங்களுக்கு.
20. பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடையராத்தல், இதை எதிலே வைத்திருந்தேன்? ஒரு சீலையிலே.
21. நீர் யார் என்று அறிந்து உமக்குப்பயந்திருந்தேன் என்றான்?நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷ னென்று அறிந்து.
22. அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, எதைக் கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன்? உன் வாய்ச்சொல்லைக்கொண்டே. நான் யாரென்று அறிந்தாய்? நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவ னுமான கடினமுள்ள மனுஷனென்று.
23. பின்னை ஏன் நீ என் திரவியத்தைக் எங்கே வைக்கவில்லை? காசுக்கடை யிலே. வைத்திருந்தால் நான் வரும்போது, அதை எப்படிப் பற்றிகொண்வேனே என்று சொன்னான்?வட்டியோடே வரப்பற்றிக்கொள்வேனே என்றுசொன்னான்.
24. சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெ டுத்து, யாருக்குக் கொடுங்கள் என்றான்? பத்துராத்தல் உள்ளவனுக்கு
25. அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்கு எத்தனை ராத்தல் இருக்கிறதே என்றார்கள்? பத்துராத்தல்.
26. அதற்கு அவன்: யாருக்குக் கொடுக்கப்படும்? உள்ளவன் எவனுக்கும். இல்லா தவனிடத்தில் உள்ளதும் என்ன செய்யப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகி றேன்? எடுத்துக்கொள்ளப்படும்.
27. அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களா கிய யாரை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்? என்னுடைய சத்துருக்களை.
28. இவைகளை அவர் சொன்னபின்பு எங்கே போனார்? எருசலேமுக்குப் புறப் பட்டு, முந்திநடந்துபோனார்.
29. அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகான எந்த ஊர்களுக்குச் சமீபித்தார்? பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு. தம்முடைய சீஷரில் எத்தனை பேரை நோக்கி சொன்னார்? இரண்டுபேரை.
30. எங்கே போங்கள்? உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்கு. அதிலே பிரவேசிக்கும்போது எதைக் காண்பீர்கள்? மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள். அதை என்ன செய்யுங்கள்? அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.
31. அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், என்னவென்று சொல்லுங்கள் என்றார்? அது ஆண்டவருக்கு வேண்டுமென்று. 
32. அனுப்பப்பட்டவர்கள் போய், என்ன கண்டார்கள்? தங்களுக்கு அவர் சொன்ன படியே கண்டார்கள்.
33. கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள் என்ன கேட்டார்கள்? குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
34. அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்? அது ஆண்டவருக்கு வேண்டு மென்று சொன்னார்கள்.
35. அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, என்ன செய்தார்கள்? தங்கள் வஸ்திரங்களை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.
36. அவர் போகையில், அவர்கள் என்ன செய்தார்கள்? தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்.
37. அவர் எங்கு வருகையில் திரளான கூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித்துச் சந்தோஷப்பட்டார்கள்? ஒலிவமலை யின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில்.
38. அவர்கள் சந்தோஷப்பட்டு என்ன செய்தார்கள்? கர்த்தருடைய நாமத்தி னாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதான மும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.
39. அப்பொழுது யார் அவரை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட் டும் என்றார்கள்? கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர்.
40. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் எது கூப் பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? கல்லுகளே கூப்பிடும்.
41. அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காக என்ன செய்தார்? கண்ணீர் விட்டழுதார்.
42. உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் எவைகளை நீ அறிந்திருந்தாயா னால் நலமாயிருக்கும்? உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை. இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு எப்படியிருக்கிறது? மறைவாயிருக்கிறது.
43. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், எது உனக்கு வரும் என்றார்? உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,
44. உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார்.
45. பின்பு அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, என்ன செய்தார்? அதிலே விற்கி றவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்தத் தொடங்கினார்.
46. என்னுடைய வீடு என்னவென்று எழுதியிருக்கிறது? ஜெபவீடாயிருக்கிற தென்று. நீங்களோ அதை என்னவாக ஆக்கினீர்கள் என்றார்? கள்ளர்குகையாக் கினீர்கள்; என்றார்.
47. அவர் நாடோறும் தேவாலயத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்? உபதே சம் பண்ணிக்கொண்டிருந்தார். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும் அவரை என்ன செய்ய வகைதேடினார்கள்? கொலைசெய்ய வகை தேடினார்கள்.
48. எதனால் அதை இன்னபடி செய்யலாமென்று வகைகாணாதிருந்தார்கள்? ஜனங்களெல்லாரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை அண்டிக்கொண்டி ருந்தபடியால்.


Tuesday, October 13, 2015

லூக்கா – 18

லூக்கா – 18
1. பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: எது வராமல்போவது கூடாத காரியம்? இடறல்கள். ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு என்ன? ஐயோ!
2. அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கி லும், எது அவனுக்கு நலமாயிருக்கும்? அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது.
3. யாரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்? உங்களைக்குறித்து. உன் சகோத ரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனை என்ன செய்? கடிந்து கொள். அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு என்ன செய்? மன்னிப்பாயாக.
4. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதர மும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு என்ன செய்வாயாக என்றார்? மன்னிப்பாயாக என்றார்.
5. அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எதை வர்த்திக்கப்பண்ண வேண்டும் என்றார்கள்? எங்கள் விசுவாசத்தை.
6. அதற்குக் கர்த்தர்: எந்த அளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்? கடுகுவிதை யளவு.
7. உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தைமேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: என்ன என்று அவனுக் குச் சொல்வானோ? நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று.
8. எது வரை எனக்கு ஊழியஞ்செய் என்பான்? நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம் பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும். அதற்குப் பின் என்ன என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா? நீ புசித்துக் குடிக்கலாம் என்று.
9. தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவ னுக்கு என்ன செய்வானோ? உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்வானா? செய்யமாட்டானே.
10. அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு:  நீங்கள் என்ன என்று சொல்லுங்கள் என்றார்? நாங்கள் அப்பிர யோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று.
11. பின்பு அவர் எருசலேமுக்குப்  பிரயாணம்பண்ணுகையில், அவர் எந்த நாடு களின் வழியாக நடந்துபோனார்? சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக.
12. அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் எத்தனை பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்றார்கள்? பத்துப்பேர்.
13. அவர்கள் என்ன என்று சத்தமிட்டார்கள்? இயேசு ஐயரே, எங்களுக்கு இரங் கும்.
14. அவர்களை அவர் பார்த்து என்ன என்று சொன்னார்? நீங்கள் போய், ஆசாரி யர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகை யில் என்ன ஆனார்கள்? சுத்தமானார்கள்.
15. அவர்களில் எத்தனை பேர் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி,
16. அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ் செலுத்தினான்? ஒருவன். அவன் யாராயிருந்தான்? சமாரியனாயிருந்தான்.
17. அப்பொழுது இயேசு என்ன கேட்டார்? சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?
18. தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, யாரை ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொன்னார்? இந்த அந்நியனே ஒழிய.
19. அவனை நோக்கி: நீ எழுந்துபோ, எது உன்னை இரட்சித்தது என்றார்? உன் விசுவாசம்.
20. எது எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டார்கள்? தேவனு டைய ராஜ்யம். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் எப்படி வராது? பிரத்தியட்சமாய்.
21. என்ன என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது? இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும். இதோ, தேவனுடைய ராஜ்யம் எங்கே இருக்கிறதே என்றார்? உங்களுக்குள்.
22. பின்பு அவர் சீஷர்களை நோக்கி: எதைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்? மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றை. ஆனா லும் எதைக் காணமாட்டீர்கள்? மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றை.
23. என்ன என்றும் சிலர் உங்களிடத்தில் சொல்லுவார்கள்? இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும். நீங்களோ என்ன செய்யாமல் இருங்கள்? போகாமலும் பின்தொடராமலும் இருங்கள்.
24. எதைப்போல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்? மின் னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறது போல.
25. அதற்கு முன்பு அவர் எப்படி தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது? அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று.
26. யாருடைய நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்? நோவாவின் நாட்களில்.
27. எதுவரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத் தார்கள்? நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும். ஜலப்பிரளயம் வந்து என்ன செய்தது? எல்லாரையும் அழித்துப்போட்டது.
28. யாருடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்? லோத்தினுடைய நாட் களில். ஜனங்கள் என்ன செய்தார்கள்? புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார் கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.
29. லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே என்ன நடந்தது? வானத்தி லிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட் டது.
30. யார் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்? மனுஷகுமாரன்.
31. அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் என்ன செய்யக்கடவன்? வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன். அப்படியே வயலிலிருக்கிறவன் என்ன செய்யக்கடவன்? பின்னிட்டுத் திரும்பா மலும் இருக்கக்கடவன்.
32. யாரை நினைத்துக்கொள்ளுங்கள்? லோத்தின் மனைவியை.
33. யார் ஜீவனை இழந்துபோவான்? தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிற வன். யார் தன் ஜீவனை உயிர்ப்பித்துக்கொள்ளுவான்? தன் ஜீவனை இழந்து போகிறவன்.
34. அந்த இராத்திரியில் என்ன செய்துகொண்டிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான்; மற்றவன் கைவிடப்படுவான்? ஒரே படுக்கையில் படுத்திருக்கிற.
35. என்ன செய்கின்ற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்? திரிகை திரிக்கிற.
36. எங்கிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? வயலிலி ருக்கிற.
37. அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? எங்கே, ஆண்ட வரே, என்றார்கள். அதற்கு அவர்: எங்கே கழுகு வந்து கூடும் என்றார்? பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்.

Saturday, September 26, 2015

லூக்கா – 17

லூக்கா – 17
1. பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: எது வராமல்போவது கூடாத காரியம்? இடறல்கள். ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு என்ன? ஐயோ!
2. அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கி லும், எது அவனுக்கு நலமாயிருக்கும்? அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது.
3. யாரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்? உங்களைக்குறித்து. உன் சகோத ரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனை என்ன செய்? கடிந்து கொள்.  அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு என்ன செய்வாயாக? மன்னிப் பாயாக.
4. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதர மும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு என்ன செய்வாயாக என்றார்? மன்னிப்பாயாக என்றார்.
5. அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எதை வர்த்திக்கப்பண்ண வேண்டும் என்றார்கள்? எங்கள் விசுவாசத்தை.
6. அதற்குக் கர்த்தர்: எந்த அளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்? கடுகுவிதையளவு.
7. உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தைமேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: என்ன என்று அவனுக் குச் சொல்வானோ? நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று.
8. எதற்குப்பின் நீ புசித்துக் குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல் லவா? நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம் பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின்.
9. தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவ னுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே.
10. அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் யார் எதை மாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார்? அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையை மாத்திரம் செய்தோம்.
11. பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் வழியாக நடந்துபோனார்? சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின்.
12. அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, யார் எத்தனை பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்றார்கள்? குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப் பேர்.
13. அவர்கள் என்ன என்று சத்தமிட்டார்கள்? இயேசு ஐயரே, எங்களுக்கு இரங் கும் என்று சத்தமிட்டார்கள்.
14. அவர்களை அவர் பார்த்து என்ன சொன்னார்? நீங்கள் போய், ஆசாரியர்க ளுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் என்ன ஆனார்கள்? சுத்தமானார்கள்.
15. அவர்களில் எத்தனை பேர் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தினான்? ஒருவன்.
16. அவன் என்ன செய்தான்? அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான். அவன் யாராயிருந்தான்? சமாரியனா யிருந்தான்.
17. அப்பொழுது இயேசு: யார் பத்துப்பேர் அல்லவா? சுத்தமானவர்கள். யார் எங்கே? மற்ற ஒன்பதுபேர்.
18. யாரை மகிமைப்படுத்துவதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொன்னார்? தேவனை மகிமைப்படுத்துகிற தற்கு.
19. அவனை நோக்கி: நீ எழுந்துபோ, எது உன்னை இரட்சித்தது என்றார்? உன் விசுவாசம்.
20. எது எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டார்கள்? தேவனு டைய ராஜ்யம். அப்பொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.
21. என்ன என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது? இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும். இதோ, தேவனுடைய ராஜ்யம் எங்கே இருக்கிறதே என்றார்? உங்களுக்குள்.
22. பின்பு அவர் சீஷர்களை நோக்கி: எதைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்? மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றை. ஆனாலும் அதை என்ன செய்யமாட்டீர்கள்? காணமாட்டீர்கள்.
23. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், யார் உங்களிடத்தில் சொல் லுவார்கள்? சிலர். நீங்களோ என்ன செய்யுங்கள்? போகாமலும் பின்தொடராம லும் இருங்கள்.
24. எதைப்போல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்? மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக் கிறதுபோல.
25. அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, என்ன செய்யப்பட வேண்டியதாயி ருக்கிறது? இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்பட வேண்டியதாயி ருக்கிறது.
26. யாருடைய நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்? நோவாவின் நாட்களில்.
27. நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் என்ன செய்தார் கள்? புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள். எது வந்து எல்லா ரையும் அழித்துப்போட்டது? ஜலப்பிரளயம்.
28. யாருடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்? லோத்தினுடைய நாட் களில். ஜனங்கள் என்ன செய்தார்கள்? புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார் கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.
29. லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே என்ன நடந்தது? வானத்தி லிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப் போட் டது.
30. யார் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்? மனுஷகுமாரன்.
31. அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் என்ன செய்யாமல் இருக்கக்கடவன்? வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக் கடவன். அப்படியே வயலிலிருக்கிறவன் என்ன செய்யாமல் இருக்கக்கடவன்? பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன்.
32. யாரை நினைத்துக்கொள்ளுங்கள்? லோத்தின் மனைவியை.
33. எதை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான்? தன் ஜீவனை. தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை என்ன செய்வான்? உயிர்ப்பித்துக் கொள்ளுவான்.
34. அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் என்ன செய்யப்படுவான்? ஏற்றுக்கொள்ளப்படுவான். மற்றவன் என்ன செய்யப்படுவான்? கைவிடப்படுவான்.
35. திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி என்ன செய்யப்படுவாள்? ஏற்றுக்கொள்ளப்படுவாள். மற்றவள் என்ன செய்யப்படுவாள்? கைவிடப்படு வாள்.
36. வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் என்ன செய்யப்படுவான்? ஏற்றுக் கொள்ளப்படுவான். மற்றவன் என்ன செய்யப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? கைவிடப்படுவான்.
37. அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக என்ன சொன்னார்கள்? எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: எங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்? பிணம் எங்கேயோ அங்கே.

Thursday, September 17, 2015

லூக்கா – 16

லூக்கா – 16
1. பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: யாருக்கு ஒரு உக்கிராணக் காரன் இருந்தான்? ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு. என்ன என்று எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது? அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக.
2. அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ யாராயிருக்கக் கூடாது என்றான்? உக்கிராணக்காரனாயிருக்கக் கூடாது என்றான்.
3. அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் எதிலி ருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே? உக்கிராண விசாரிப்பிலிருந்து. எதுக்கு எனக்குப் பெலனில்லை? கொத்துகிறதற்கு. எதுக்கு வெட்கப்படுகிறேன்? இரக்க வும் வெட்கப்படுகிறேன்.
4. உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்ன என்று எனக் குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்? என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று.
5. தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி கேட்டது என்ன? நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான்.
6. அவன் சொன்னது என்ன? நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, என்ன என்று சீக்கிரமாய் எழுது என்றான்? ஐம்பது.
7. பின்பு அவன் வேறொருவனை நோக்கி கேட்டது என்ன? நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன் சொன்னது என்ன? நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, என்ன என்று எழுது என்றான்? எண்பது.
8. அநீதியுள்ள உக்கிராணக்காரன் எப்படிச் செய்தான் என்று எஜமான் கண்டான்? புத்தியாய்ச் செய்தான். அவனை என்ன செய்தான்? மெச்சிக்கொண்டான். இவ் விதமாய் யாரைப் பார்க்கிலும் யார் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயி ருக்கிறார்கள்? ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள்.
9. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, எதினாலே உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்? அநீதியான உலகப்பொருளால்.
10. யார் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான்? கொஞ்சத்திலே உண்மையுள்ளவன். யார் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்? கொஞ்சத்திலே அநீதியுள்ளவன்.
11. எதைப் பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்க ளிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்? அநீதியான உலகப்பொரு ளைப்பற்றி.
12. யாருடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்? வேறொருவனு டைய காரியத்தில்.
13. யார் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது? எந்த ஊழியக்கார னும். ஒருவனைப் பகைத்து மற்றவனை என்ன செய்வான்? சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை என்ன செய்வான்?அசட் டை பண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய யாராலே கூடாது என்றார்? உங்களாலே கூடாது என்றார்.
14. இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய யாரும் கேட்டு, அவரைப் பரியாசம்பண்ணினார்கள்? பரிசேயரும்.
15. அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை யாராகக் காட்டுகிறீர்கள்? நீதிமான்களாக. தேவனோ எதை அறிந்திருக்கிறார்? உங்கள் இருதயங்களை. மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக எப்படிப்பட்டதாயிருக்கிறது? அருவருப்பாயிருக்கிறது.
16. நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யார் வரைக்கும் வழங்கிவந்தது? யோவான்வரைக்கும். அதுமுதல் எது சுவிசேஷமாய் அறிவிக் கப்பட்டு வருகிறது? தேவனுடைய ராஜ்யம். யாவரும் எப்படி அதில் பிரவேசிக் கிறார்கள்? பலவந்தமாய்.
17. வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், எது ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்? வானமும் பூமியும்.
18. தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிற வன் என்ன செய்கிறான்? விபசாரஞ்செய்கிறான். புருஷனாலே தள்ளப்பட்ட வளை விவாகம்பண்ணுகிறவனும் என்ன செய்கிறான்? விபசாரஞ்செய்கிறான்.
19. எப்படிப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான்? ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன். அவன் எப்படி வாழ்ந்து கொண்டிருந்தான்? இரத்தாம்பரமும் விலையேறப் பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்து கொண்டிருந் தான்.
20. லாசரு என்னும் பேர்கொண்ட யாரும் இருந்தான்? ஒரு தரித்திரனும் இருந் தான். அவன் எது நிறைந்தவனாய், எங்கே கிடந்தான்? பருக்கள் நிறைந்தவ னாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்தான்.
21. லாசரு எதினாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்? அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே. எவைகள் வந்து அவன் பருக் களை நக்கிற்று? நாய்கள்.
22. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, எங்கே கொண்டுபோய் விடப்பட்டான்? தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே. ஐசுவரியவானும் மரித்து என்ன ஆனான்? அடக்கம்பண்ணப்பட்டான்.
23. பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே யாரைக் கண்டான்? ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவை யும் கண்டான்.
24. அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, யார் தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்? லாசரு. எதில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்? இந்த அக்கினிஜுவாலையில்.
25. அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் எதை அனுபவித்தாய்? உன் நன்மைகளை. லாசருவும் அப்படியே எதை அநுப வித்தான்? தீமைகளை. அதை என்ன செய்? நினைத்துக்கொள். இப்பொழுது அவன் என்ன செய்யப்படுகிறான்? தேற்றப்படுகிறான். நீயோ என்ன செய்கி றாய்? வேதனைப்படுகிறாய்.
26. அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து  உங்களிடத்திற்குக் கடந்துபோக வும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்க ளுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே என்ன உண்டாக்கப் பட்டிருக்கிறது என்றான்? பெரும்பிளப்பு.
27. அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு எத்தனை சகோதர ருண்டு? ஐந்துபேர். அவர்களும் எங்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்பொருட்டு,
28. நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள் ளுகிறேன் என்றான்? வேதனையுள்ள இந்த இடத்துக்கு.
29. ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு யார் உண்டு? மோசேயும் தீர்க்க தரிசிகளும்.  அவர்களுக்கு அவர்கள் என்ன செய்யட்டும் என்றான்? செவி கொடுக்கட்டும் என்றான்.
30. அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, எங்கிருந்து ஒரு வன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்? மரித்தோ ரிலிருந்து.
31. அதற்கு அவன்: அவர்கள் யாருக்கு செவிகொடாவிட்டால், மரித்தோரிலி ருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்? மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும்.

Saturday, September 12, 2015

லூக்கா – 15

லூக்கா – 15
1. யார் இயேசுவுடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந் தார்கள்? சகல ஆயக்காரரும் பாவிகளும்.
2. அப்பொழுது முறுமுறுத்தது யார்? பரிசேயரும் வேதபாரகரும். பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து சொன்னது என்ன? இவர் பாவிகளை ஏற்றுக் கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.
3. அவர்களுக்கு அவர் எப்படிச் சொன்னார்? உவமையாக.
4. உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைக ளில் எத்தனை காணாமல் போனால், மற்றவைகளை வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டு பிடிக்குமளவும் தேடித்திரியானோ என்றார்? ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும்.
5. கண்டுபிடித்தபின்பு, அவன் அதை என்ன செய்வான்? சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு,
6. வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் என்னோடுகூடச் சந்தோஷப் படுங்கள் என்பான். 
7. அதுபோல, யாரைக்குறித்து சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் யாரைக்குறித்து பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற் றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரேபாவியினிமித்தம்.
8. அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், என்ன செய்யாமலிருப்பாளோ? விளக் கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக் கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ?
9. கண்டுபிடித்தபின்பு, தன் சிநேகிதிகளையும் அயல்வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து என்ன செய்வாள்? காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டு பிடித்தேன், என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா?
10. அதுபோல யாரிநிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷ முண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? மனந் திரும்புகிற ஒரே பாவியினிமித்தம்.
11. பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு எத்தனை இருந்தார்கள்? இரண்டு குமாரர்.
12. அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி என்ன கேட்டான்? தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்கு என்ன செய்தான்? தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத் தான்.
13. சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும்சேர்த்துக்கொண்டு, என்ன செய்தான்? தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.
14. எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, என்ன ஆயிற்று? அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத் தொடங்கி, என்ன செய்தான்?
15. அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனை என்ன செய்தான்? தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.
16. அப்பொழுது அவன் எதற்கு ஆசையாயிருந்தான்? பன்றிகள் தின்கிற தவிட்டி னாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான். ஆனால் என்ன ஆனது? ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
17. அவனுக்கு எது தெளிந்தது? புத்தி. அவன் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்கு என்ன இருக்கிறது?  பூர்த்தி யான சாப்பாடு இருக்கிறது. நானோ எதினால் சாகிறேன்? புசியினால்.
18. நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோத மாகவும் உமக்கு முன்பாகவும் என்ன செய்தேன்? பாவஞ்செய்தேன்.
19. இனிமேல் நான் யார் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல? உம் முடைய குமாரன். யாரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
20. எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான்? உம்முடைய கூலிக்கார ரில் ஒருவன். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு என்ன செய்தான்? மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.
21. குமாரன் தகப்பனை நோக்கி சொன்னது என்ன? தகப்பனே, பரத்துக்கு விரோ தமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்றுசொன்னான்.
22. அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி சொன்னது என்ன? நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
23. கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமா யிருப்போம்.
24. என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற் போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் என்ன செய்தார்கள்? சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.
25. அவனுடைய மூத்தகுமாரன் எங்கு இருந்தான்? வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, என்ன கேட்டான்? கீதவாத்தியத் தையும் நடனக்களிப்பையும் கேட்டான்.
26. ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து என்ன கேட்டான்? இதென்ன என்று விசாரித்தான்.
27. அதற்கு அவன் சொன்னது என்ன? உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியி னாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.
28. அப்பொழுது அவன் என்ன செய்தான்? கோபமடைந்து, உள்ளே போக மன தில்லாதிருந்தான். தகப்பனோ என்ன செய்தான்? வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.
29. அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதி ருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு எதை கொடுக்கவில்லை? ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்க வில்லை.
30. வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே என்ன செய்தீரே என்றான்? கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.
31. அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ள தெல்லாம் யாருடையதாயிருக்கிறது? உன்னுடையதாயிருக்கிறது.
32. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணா மற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் என்ன செய்ய வேண்டும் என்றார்? நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண் டுமே என்று சொன்னான் என்றார்.

Wednesday, September 9, 2015

லூக்கா – 14

லூக்கா – 14

1. ஒரு ஓய்வுநாளிலே யார் வீட்டிலே இயேசு போஜனம் பண்ணம்படிக்குப்  போயிருந்தார்? பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே.
2. அப்பொழுது யார் அவருக்கு முன்பாக இருந்தான்? நீர்க்கோவை வியாதி யுள்ள ஒரு மனுஷன். என்ன செய்வாரோவென்று யார் அவர்மேல் நோக்கமா யிருந்தார்கள்? ஜனங்கள்.
3. இயேசு யாரைப் பார்த்து: ஓய்வுநாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்? நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து.
4. அதற்கு அவர்கள் என்ன செய்தார்கள்? பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, என்ன செய்தார்? சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டார். 
5. அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை என்ன செய்வான் என்றார்? உடனே தூக்கிவிடானோ என்றார். 
6. எதற்கு அவர்களால் கூடாமற்போயிற்று? அதற்கு உத்தரவுசொல்ல.
7. எதைப் பார்த்து அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்? விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்து கொண்டதை அவர் பார்த்து.
8. ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் எந்த இடத்தில் உட்காராதே? முதன்மையான இடத்தில். யார் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான்? உன்னிலும் கனமுள்ளவன்.
9. அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து என்ன என்று சொல்லுவான்? இவருக்கு இடங்கொடு என்பான். அப்பொழுது நீ என்ன செய்ய வேண்டியதாயிருக்கும்? வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும்.
10. நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், எந்த இடத்தில் உட்காரு? தாழ்ந்த இடத்தில். அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து என்ன என்று சொல்லும் போது, உன்னுடனே கூடப்பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்கு கனமுண்டாகும்? சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும்.
11. தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் என்ன செய்யப்படுவான் என்றார்? தாழ்த்தப்படுவான். தன்னைத்தான் தாழ்த்துகிறவன் என்ன செய்யப்படுவான் என்றார்? உயர்த்தப்படுவான்.
12. அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல் விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, யாரை அழைக்கவேண்டாம் என்றார்? உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்க வேண்டாம் என்றார். அழைத்தால் அவர்களும் உன்னை என்ன செய்வார்கள்? அழைப்பார்கள். அப்பொழுது உனக்கு என்ன செய்ததாகும்? பதிலுக்குப் பதில் செய்ததாகும்.
13. நீ விருந்துபண்ணும்போது யாரை அழைப்பாயாக? ஏழைகளையும் ஊனரை யும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக.
14. எப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்? நீ விருந்துபண்ணும்போது ஏழைக ளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைக்கும்போது. அவர்கள் உனக்கு என்ன செய்மாட்டார்கள்? பதில் செய்யமாட்டார்கள். எதில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார்? நீதிமான்களின் உயிர்த்தெழுதலில்.
15. அவரோடேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்ட பொழுது, அவரை நோக்கி: யார் பாக்கியவான் என்றான்? தேவனுடைய ராஜ்யத் தில் போஜனம்பண்ணுகிறவன்.
16. அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, யாரை அழைப்பித்தான்? அநேகரை அழைப்பித்தான்.
17. விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி என்ன சொல்லி அனுப் பினான்? நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கி றது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.
18. அவர்களெல்லாரும் என்ன சொல்லத் தொடங்கினார்கள்? போக்குச்சொல் லத் தொடங்கினார்கள். ஒருவன் என்ன சொன்னான்? ஒரு வயலைக்கொண் டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக் கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
19. வேறொருவன் என்ன சொன்னான்? ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளு கிறேன் என்றான்.
20. வேறொருவன் என்ன சொன்னான்? பெண்ணை விவாகம் பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான்.
21. அந்த ஊழியக்காரன் வந்து, என்ன செய்தான்? இவைகளைத் தன் எஜமானுக் குத் அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்கா ரனை நோக்கி யாரை இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்? நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான்.
22. ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய் தாயிற்று, இன்னும் என்ன இருக்கிறது என்றான்? இடம்.
23. அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி நீ எங்கே என் வீடு நிறையும் படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா என் றான்?  பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய்.
24. யார் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை யென்று உங்களுக்குச் சொல்லுகி றேன் என்றான் என்று சொன்னார்? அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும்.
25. பின்பு அநேக ஜனங்கள் அவரோடேகூடப் பிரயாணமாய்ப் போகையில், அவர்களிடமாய் அவர் திரும்பிப்பார்த்து யார் எனக்குச் சீஷனாயிருக்கமாட் டான் என்றார்? 
26. யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனை வியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவ னையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
27. தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் யாராயி ருக்கமாட்டான்? எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
28. உங்களில் ஒருவன் எதைக் கட்ட மனதாயிருந்தான்? ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்தான். 
29. அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கி றவர்களெல்லாரும்:
30. என்ன என்று சொல்லித் தன்னைப் பரியாசம் பண்ணாதபடிக்கு, அதைக்     கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ என்றார்? இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற் போனான் என்று சொல்லி.
31. அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிற போது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதி னாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக்கூடுமோ கூடாதோ என்று முன்பு உட் கார்ந்து என்ன செய்யாதிருப்பானோ? ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?
32. கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, என்ன செய்வானே? ஸ்தானாபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவை களைக் கேட்டுக்கொள்வானே. 
33. அப்படியே உங்களில் எவனாகிலும் என்ன செய்யாவிட்டால் அவன் எனக் குச் சீஷனாயிருக்கமாட்டான்? தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத் துவிடாவிட்டால்.
34. எது நல்லதுதான்? உப்பு. எது சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்ப டும்? உப்பு.
35. எது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது? உப்பு. எதை வெளியே கொட்டிப் போடுவார்கள்? உப்பை. கேட்கிறதற்குக் காதுள்ளவன் என்ன செய்யக் கடவன் என்றார்? கேட்கக்கடவன் என்றார்.

Saturday, September 5, 2015

லூக்கா – 13

லூக்கா – 13
1. யார் சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந் திருந்தான்? பிலாத்து. அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச் செய்தியை யாருக்கு அறிவித்தார்கள்? இயேசுவுக்கு.
2. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? அந்தக் கலிலேய ருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
3. அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பா மற்போனால் எல்லாரும் என்ன ஆவார்கள்? அப்படியே கெட்டுப்போவீர்கள்.
4. சீலோவாமிலே கோபுரம் விழுந்து எத்தனைபேரைக் கொன்றது? பதினெட்டுப் பேரைக் கொன்றது. எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர் கள் யாராயிருந்தார்கள் என்று நினைக்கிறீர்களோ? குற்றவாளிகளாயிருந்தார் கள் என்று.
5. அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பா மற்போனால் எல்லாரும் என்ன ஆவீர்கள் என்றார்? அப்படியே கெட்டுப்போவீர் கள் என்றார்.
6. அப்பொழுது அவர் என்ன சொன்னார்? ஒரு உவமையையும் சொன்னார். ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் எதை நட்டிருந்தான்? ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான். அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது என்ன கண்டான்? ஒன்றுங் காணவில்லை. 
7. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, எத்தனை வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்? மூன்று வருஷமாய். எதை காணவில்லை? ஒன்றையுங் காணவில்லை. இதை என்ன செய்? வெட்டிப் போடு. இது எதையும் ஏன் கெடுக்கிறது என்றான்? நிலத்தையும்.
8. அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் என்ன செய் வேன் என்றான்? இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன்.
9. கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை என்ன செய்யலாம் என்று சொன்னான் என்றார்? வெட்டிப்போடலாம்.
10. ஒரு ஓய்வுநாளில் அவர் என்ன செய்துகொண்டிருந்தார்? ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.
11. அப்பொழுது யார் அங்கேயிருந்தாள்? பதினெட்டு வருஷமாய்க் பலவீனப்ப டுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ. அவள் எப்படிப்பட்டவளாய் இருந் தாள்? எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.
12. இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து என்ன சொன்னார்? ஸ்தி ரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொன்னார்.
13. அவள்மேல் எதை வைத்தார்? தமது கைகளை. உடனே அவள் என்ன செய் தாள்? நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.
14. ஏன் ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்தான்? இயேசு ஓய்வுநாளிலே சொஸ்தமாக்கினபடியால். ஜெப ஆலயத்தலைவன் ஜனங்களை நோக்கி சொன்னது என்ன? வேலைசெய்கிறதற்கு ஆறுநாள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்ய லாகாது என்றான்.
15. கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலி ருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், என்ன செய்கிறதில்லையா? அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா? 
16. யாரை ஓய்வுநாளில் இந்தக்கட்டிலிருந்து அவிழ்த்துவிட வேண்டியதில் லையா என்றார்? இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை.
17. அவர் அப்படிச் சொன்னபோது, யார் வெட்கப்பட்டார்கள்? அவரை விரோதித் திருந்த அனைவரும். ஜனங்களெல்லாரும் எதைக்குறித்து சந்தோஷப்பட்டார் கள்? அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்.
18. அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன் என்றார்?
19. அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து என்னவாயிற்று? பெரிய மரமா யிற்று. எவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார்? ஆகாயத்துப் பறவைகள்.
20. மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன் என்றார்?
21. அது புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒரு ஸ்திரீ எடுத்து முழுவ தும் புளிக்கும்வரைக்கும் எதிலே அடக்கிவைத்தாள் என்றார்? மூன்றுபடிமா விலே.
22. அவர் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகும்போது, பட்டணங்கள் தோறும் கிராமங்கள்தோறும் என்ன செய்துகொண்டு போனார்? உபதேசம் பண்ணிக்கொண்டு.
23. அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யார் சிலபேர்தானோ என்று கேட்டான்? இரட்சிக்கப்படுகிறவர்கள். அதற்கு அவர்:
24. எதின்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்? இடுக்கமான வாசல் வழியாய். அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் என்ன ஆகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? அவர்களாலே கூடாமற்போகும்.
25. வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று என்ன செய்வீர்கள்? ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டு மென்று சொல்லிக் கதவைத் தட்டுவீர்கள். அப்போது அவர் பிரதியுத்தரமாக சொல்லுவது என்ன? நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.
26. அப்பொழுது நீங்கள் என்ன என்று சொல்லுவீர்கள்? உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.
27. ஆனாலும் அவர் என்ன என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகி றேன்? நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்.
28. நீங்கள் யாரைக் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்? ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய  ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்க ளையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது.
29. கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, எதில் பந்தியிருப்பார்கள்? தேவனுடைய ராஜ்யத்தில்.
30. அப்பொழுது முந்தினோர் யாராவார்கள் என்றார்? பிந்தினோராவார்கள். பிந்தினோர் யாராவார்கள் என்றார்? முந்தினோராவார்கள்.
31. அந்த நாளிலே சில பரிசேயர் இயேசுவிடத்தில் வந்து: நீர் இவ்விடத்தை விட்டு என்ன செய்யும்? போய்விடும். யார் உம்மைக் கொலைசெய்ய மனதாய் இருக்கிறான் என்றார்கள்? ஏரோது.
32. அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் என்ன செய்து மூன்றாம் நாளில் நிறைவடைவேன்? பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்கி.
33. இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் என்ன செய்ய வேண்டும்? நடமாடவேண்டும். எங்கே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லை? எருசலேமுக்குப் புறம்பே. என்று நான் சொன்னதாக நீங்கள் போய் யாருக்குச் சொல்லுங்கள்? அந்த நரிக்கு.
34. எருசலேமே, எருசலேமே, யாரைக் கொலைசெய்கிறவளே? தீர்க்கதரிசி களை. யாரைக் கல்லெறிகிறவளே? உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களை. எந்தவண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த் துக்கொள்ள மனதாயிருந்தேன்? கோழி தன் குஞ்சுகளைத் தன்சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக. உங்களுக்கோ என்ன இல்லா மற்போயிற்று? மனதில்லாமற்போயிற்று.
35. இதோ, எது உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்? உங்கள் வீடு. கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் யார் என்று நீங்கள் சொல்லுங்காலம் வருமளவும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகி றேன் என்றார்? ஸ்தோத்திரிக்கப்பட்டவர்.