Thursday, November 19, 2015

லூக்கா – 20

லூக்கா – 20
1. அந்நாட்களில் ஒன்றில், அவர் எதிலே ஜனங்களுக்கு உபதேசித்து, சுவிசே ஷத்தைப் பிரசங்கித்தார்? தேவாலயத்தில். அப்போது, யார் அவரிடத்தில் கூடி வந்தார்கள்? பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்தார்கள்.
2. அவர்கள் இயேசுவிடம் என்ன கேள்வி கேட்டார்கள்? நீர் எந்த அதிகாரத்தி னால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.
3. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? நானும் உங்களிடத் தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுங்கள்.
4. இயேசு அவர்களிடம் கேட்ட கேள்வி என்ன? யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? என்று கேட்டார்.
5. அவர்கள் தங்களுக்குள்ளே என்னவென்று யோசனைபண்ணி பண்ணினார் கள்? தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.
6. மனுஷரால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், ஜனங்களெல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறி வார்கள் என்று. 
7. அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணி சொன்னது என்ன? அது யாரால் உண்டாயிற்றோ, எங்களுக்குத் தெரியாது என்று பிரதியுத்தரம் சொன் னார்கள்.
8. அப்பொழுது இயேசு: நானும் எதை உங்களுக்குச் சொல்லேன் என்றார்? இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று.
9. பின்பு அவர் ஜனங்களுக்குச் சொல்லத்தொடங்கினது என்ன? உவமை. ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதை என்ன செய்தான்? தோட்டக்காரருக்குக் குத்தகையாக விட்டு, நெடுநாளாகப் புறத்தேசத்துக்குப் போயிருந்தான்.
10. அந்தத் தோட்டக்காரர் திராட்சத் தோட்டத்தின் கனிகளில் தன் பாகத்தைக் கொடுத்தனுப்பும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் யாரை அனுப்பி னான்? ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அந்தத் தோட்டக்காரர் அவனை என்ன செய்தார்கள்? அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
11. பின்பு அவன் என்ன செய்தான்? வேறொரு ஊழியக்காரனை அனுப்பினான். அவனையும் அவர்கள் என்ன செய்தார்கள்? அடித்து, அவமானப்படுத்தி, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
12. அவன் மூன்றாந்தரமும் என்ன செய்தான்? ஒரு ஊழியக்காரனை அனுப்பி னான். அவனையும் அவர்கள் என்ன செய்தார்கள்? காயப்படுத்தி, துரத்திவிட் டார்கள்.
13. அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான் என்ன செய்தான்? நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான்.
14. தோட்டக்காரர் அவனைக் கண்டபோது என்னவென்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்? இவன் சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும் படிக்கு இவனைக் கொல்லுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
15. அவனை என்ன செய்தார்கள்? அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்னசெய்வான்?
16. என்ன செய்வான் என்று சொல்லி அதற்கு இயேசு சொன்ன பதில் என்ன? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, என்ன சொன்னார்கள்? அப்படியாகாதிருப்பதாக என்றார்கள்.
17. அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, என்ன என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத் தென்ன? மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.
18. அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் என்ன ஆவான்? அவன் நொறுங்கிப் போவான், அது எவன்மேல் விழுமோ அவனை என்ன செய்யும்? நசுக்கிப் போடும் என்றார்.
19. பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் யாரைக்குறித்து இந்த உவமையைச் சொன்னாரென்று அறிந்தார்கள்? தங்களைக்குறித்து. அந்நேரத்திலே அவரைப் பிடிக்க வகைதேடியும் யாருக்குப் பயந்திருந்தார்கள்? ஜனங்களுக்கு.
20. அவர்கள் சமயம்பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றங்கண்டுபிடிக்கலா மென்று, யாரை அவரிடத்தில் அனுப்பினார்கள்? தங்களை உண்மையுள்ளவர் களாய்க் காண்பிக்கிற வேவுகாரரை.
21. அவர்கள் வந்து: போதகரே, எதை அறிந்திருக்கிறோம் என்றார்கள்? நீர் நிதா னமாய்ப் பேசி உபதேசிக்கிறீரென்றும், முகதாட்சணியமில்லாமல் தேவனு டைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம்.
22. எது நியாயமோ அல்லவோ, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்? இராயனுக்கு வரிகொடுக்கிறது.
23. எதை அவர் அறிந்து, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள் என்றார்? அவர்க ளுடைய தந்திரத்தை அறிந்து.
24. எதை எனக்குக் காண்பியுங்கள் என்றார்? ஒரு பணத்தை. எது யாருடையது என்று கேட்டார்? இதிலிருக்கிற சொரூபமும் மேலெழுத்தும். அதற்கு அவர்கள்: யாருடையது என்றார்கள்? இராயனுடையது.
25. அதற்கு அவர்: அப்படியானால், எதை இராயனுக்கும், எதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்? இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடைய தைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
26. அவர்கள் அவரை ஜனங்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக் கூடாமல், எதைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாயிருந்தார்கள்? அவர் சொன்ன உத்தரவைக்குறித்து.
27. உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிறவர்கள் யார்? சதுசேயர். சதுசே யரில் சிலர் அவரிடத்தில் வந்து 
28. போதகரே, ஒருவன் மனைவியையுடையவனாயிருந்து பிள்ளையில்லா மல் இறந்துபோனால், யார் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானமுண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே என்றனர்? அவனுடைய சகோதரன்.
29. சகோதரர் எத்தனை பேரிருந்தார்கள்? ஏழுபேரிருந்தார்கள். அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, என்ன ஆனான்? பிள்ளையில் லாமல் இறந்துபோனான்.
30. பின்பு இரண்டாஞ்சகோதரன் அவளை விவாகம்பண்ணி, என்ன ஆனான்? அவனும் பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.
31. மூன்றாஞ்சகோதரனும் அவளை என்ன செய்தான்? விவாகம்பண்ணினான். அப்படியே ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, என்ன ஆனார்கள்? பிள்ளை யில்லாமல் இறந்துபோனார்கள்.
32. எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் என்ன ஆனாள்? இறந்துபோனாள்.
33. இவ்விதமாய் ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணியிருக்க, எப்போது அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள் என்று கேட்டார்கள்? உயிர்த்தெழுதலில்.
34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: யார் பெண்கொண்டும் பெண்கொ டுத்தும் வருகிறார்கள்? இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள்.
35. யார் பெண்கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை? மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படு கிறவர்கள்.
36. அவர்கள் இனி என்ன செய்யமாட்டார்கள்? மரிக்கவுமாட்டார்கள். அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் யாருக்கு ஒப்பானவர்களுமாய் இருப்பார்கள்? தேவதூதருக்கு. யாருக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்? தேவனுக்கு.
37. அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் எதில் காண் பித்திருக்கிறார்? முட்செடியைப்பற்றிய வாசகத்தில். எப்படியெனில், கர்த்தரை யாருடைய தேவனென்று சொல்லியிருக்கிறார்? ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார்.
38. அவர் மரித்தோரின் தேவனாயிராமல், யாருடைய தேவனாயிருக்கிறார்? ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார். எல்லாரும் யாருக்குப் பிழைத்திருக் கிறார்களே என்றார்? அவருக்கு.
39. அப்பொழுது வேதபாரகரில் சிலர் அதைக் கேட்டு சொன்னது என்ன? போத கரே, நன்றாய்ச் சொன்னீர் என்றார்கள்.
40. அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் எதற்குத் துணியவில்லை? வேறொன் றுங்கேட்க.
41. அவர் அவர்களை நோக்கி: யார் தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகி றார்கள் என்றார்? கிறிஸ்து.
42. நான் யாரை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,
43. கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புஸ்த கத்தில் சொல்லுகிறானே? உம்முடைய சத்துருக்களை.
44. தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் யாரா யிருப்பது எப்படி என்றார்? குமாரனாயிருப்பது.
45. பின்பு ஜனங்களெல்லாரும் கேட்கையில் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: யாருக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றார்?
46. நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தை வெளிகளில் வந்த னங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
47. விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் எதை அடைவார் கள் என்றார்? அதிக ஆக்கினையை.


No comments:

Post a Comment