லூக்கா – 19
1. இயேசு எதில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோனார்? எரிகோவில்.
2. ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்தவன் யார்? சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்.
3. யார் இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான்? ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவனுமாயிருந்த சகோயு என்னப்பட்ட ஒரு மனுஷன். அவன் எப்படி இருந்தபடியால் ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடவில்லை? குள்ளனானபடியால்.
4. இயேசு போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி எதில் ஏறினான்? ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
5. இயேசு அந்த இடத்தில் வந்தபோது, என்ன செய்தார்? அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டம் என்றார்.
6. சகேயு என்ன செய்தான்? சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான்.
7. அதைக் கண்ட யாவரும் என்ன என்று முறுமுறுத்தார்கள்? இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்.
8. சகேயு நின்று, கர்த்தரை நோக்கி சொன்னது என்ன? ஆண்டவரே, என் ஆஸ்தி களில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதை யாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.
9. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு எது வந்தது? இரட்சிப்பு. இவனும் யாருக்குக் குமாரனாயிருக்கிறானே? ஆபிரகாமுக்கு.
10. எதற்கு மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்? இழந்துபோனதைத் தேட வும் இரட்சிக்கவும்.
11. அவர்கள் இவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் எருசலேமுக் குச் சமீபித்திருந்தபடியினாலும், எது சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்? தேவனுடைய ராஜ்யம்.
12. பிரபுவாகிய ஒருவன் எதைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத் துக்குப் போகப் புறப்பட்டான்? ஒரு ராஜ்யத்தை.
13. புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் எத்தனை பேரை அழைத்தார்? பத்துபேரை. அவர்களிடத்தில் எத்தனை ராத்தல் திரவியங்கொடுத்தார்? பத்து ராத்தல். நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு என்ன செய்யுங்கள் என்று சொன்னான்? வியாபாரம்பண்ணுங்கள்.
14. அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் என்னவாயி ருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்? ராஜாவாயிருக்கிறது.
15. அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது,யாரை எதற்காக அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்? தன்னிடத்தில் திரவி யம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி.
16. அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் எத்தனை ராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்? பத்துராத்தல்.
17. எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே,நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் எத்தனை பட்டணங்களுக்கு அதிகாரியா யிரு என்றான்? பத்துப் பட்டணங்களுக்கு.
18. அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் எத்தனை ராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்? ஐந்துராத்தல்.
19. அவனையும் அவன் நோக்கி: நீயும் எத்தனை பட்டணங்களுக்கு அதிகாரியா யிரு என்றான்? ஐந்து பட்டணங்களுக்கு.
20. பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடையராத்தல், இதை எதிலே வைத்திருந்தேன்? ஒரு சீலையிலே.
21. நீர் யார் என்று அறிந்து உமக்குப்பயந்திருந்தேன் என்றான்?நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷ னென்று அறிந்து.
22. அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, எதைக் கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன்? உன் வாய்ச்சொல்லைக்கொண்டே. நான் யாரென்று அறிந்தாய்? நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவ னுமான கடினமுள்ள மனுஷனென்று.
23. பின்னை ஏன் நீ என் திரவியத்தைக் எங்கே வைக்கவில்லை? காசுக்கடை யிலே. வைத்திருந்தால் நான் வரும்போது, அதை எப்படிப் பற்றிகொண்வேனே என்று சொன்னான்?வட்டியோடே வரப்பற்றிக்கொள்வேனே என்றுசொன்னான்.
24. சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெ டுத்து, யாருக்குக் கொடுங்கள் என்றான்? பத்துராத்தல் உள்ளவனுக்கு
25. அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்கு எத்தனை ராத்தல் இருக்கிறதே என்றார்கள்? பத்துராத்தல்.
26. அதற்கு அவன்: யாருக்குக் கொடுக்கப்படும்? உள்ளவன் எவனுக்கும். இல்லா தவனிடத்தில் உள்ளதும் என்ன செய்யப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகி றேன்? எடுத்துக்கொள்ளப்படும்.
27. அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களா கிய யாரை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்? என்னுடைய சத்துருக்களை.
28. இவைகளை அவர் சொன்னபின்பு எங்கே போனார்? எருசலேமுக்குப் புறப் பட்டு, முந்திநடந்துபோனார்.
29. அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகான எந்த ஊர்களுக்குச் சமீபித்தார்? பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு. தம்முடைய சீஷரில் எத்தனை பேரை நோக்கி சொன்னார்? இரண்டுபேரை.
30. எங்கே போங்கள்? உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்கு. அதிலே பிரவேசிக்கும்போது எதைக் காண்பீர்கள்? மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள். அதை என்ன செய்யுங்கள்? அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.
31. அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், என்னவென்று சொல்லுங்கள் என்றார்? அது ஆண்டவருக்கு வேண்டுமென்று.
32. அனுப்பப்பட்டவர்கள் போய், என்ன கண்டார்கள்? தங்களுக்கு அவர் சொன்ன படியே கண்டார்கள்.
33. கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள் என்ன கேட்டார்கள்? குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
34. அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்? அது ஆண்டவருக்கு வேண்டு மென்று சொன்னார்கள்.
35. அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, என்ன செய்தார்கள்? தங்கள் வஸ்திரங்களை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.
36. அவர் போகையில், அவர்கள் என்ன செய்தார்கள்? தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்.
37. அவர் எங்கு வருகையில் திரளான கூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித்துச் சந்தோஷப்பட்டார்கள்? ஒலிவமலை யின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில்.
38. அவர்கள் சந்தோஷப்பட்டு என்ன செய்தார்கள்? கர்த்தருடைய நாமத்தி னாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதான மும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.
39. அப்பொழுது யார் அவரை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட் டும் என்றார்கள்? கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர்.
40. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் எது கூப் பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? கல்லுகளே கூப்பிடும்.
41. அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காக என்ன செய்தார்? கண்ணீர் விட்டழுதார்.
42. உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் எவைகளை நீ அறிந்திருந்தாயா னால் நலமாயிருக்கும்? உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை. இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு எப்படியிருக்கிறது? மறைவாயிருக்கிறது.
43. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், எது உனக்கு வரும் என்றார்? உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,
44. உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார்.
45. பின்பு அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, என்ன செய்தார்? அதிலே விற்கி றவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்தத் தொடங்கினார்.
46. என்னுடைய வீடு என்னவென்று எழுதியிருக்கிறது? ஜெபவீடாயிருக்கிற தென்று. நீங்களோ அதை என்னவாக ஆக்கினீர்கள் என்றார்? கள்ளர்குகையாக் கினீர்கள்; என்றார்.
47. அவர் நாடோறும் தேவாலயத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்? உபதே சம் பண்ணிக்கொண்டிருந்தார். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும் அவரை என்ன செய்ய வகைதேடினார்கள்? கொலைசெய்ய வகை தேடினார்கள்.
48. எதனால் அதை இன்னபடி செய்யலாமென்று வகைகாணாதிருந்தார்கள்? ஜனங்களெல்லாரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை அண்டிக்கொண்டி ருந்தபடியால்.
No comments:
Post a Comment