Friday, November 20, 2015

லூக்கா 21

லூக்கா - 21
1. அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, யார் காணிக்கைப்பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்? ஐசுவரியவான்கள்.
2. ஒரு ஏழை விதவை அதிலே எத்தனை காசைப் போடுகிறதையும் கண்டார்? இரண்டு.
3. யார் மற்றெல்லாரைப்பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யா கவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? இந்த ஏழை விதவை.
4. அவர்களெல்லாரும் எதிலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்? தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்து. இவளோ எதையெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்? தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டா யிருந்ததெல்லாம்.
5. பின்பு, எதைக்குறித்துச் சிலர் சொன்னார்கள்? சிறந்த கற்களினாலும் காணிக் கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக்குறித்து. 
6. அப்பொழுது அவர் சொன்னது என்ன? நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.
7. அவர்கள் அவரை நோக்கி என்ன கேட்டார்கள்? போதகரே, இவைகள் எப்பொ ழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.
8. அதற்கு அவர்: நீங்கள் எதற்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றார்? வஞ்சிக்கப் படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் அநேகர் வந்து என் நாமத் தைத் தரித்துக்கொண்டு என்னவென்று சொல்லுவார்கள்? நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள். அவர்களை என்ன செய் யாதிருங்கள்? பின்பற்றாதிருங்கள்.
9. எதைக் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்? யுத்தங்க ளையும் கலகங்களையுங் குறித்து. இவைகள் எப்பொழுது சம்பவிக்க வேண்டி யதே? முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே. ஆனாலும் எது உடனே வராது என்றார்? முடிவு.
10. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் எழும்பு வது எது? ஜனம். ராஜ்யத்துக்கு விரோதமாய் எழும்புவது எது? ராஜ்யம்.
11. பல இடங்களில் எவைகள் உண்டாகும்? மகா பூமியதிர்ச்சிகளும்,  பஞ்சங்க ளும், கொள்ளைநோய்களும் உண்டாகும். வானத்திலிருந்து எவைகள் உண்டா கும்? பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.
12. இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களை என்ன செய்வார்கள்? பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலை களுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.
13. ஆனாலும் அது உங்களுக்கு எதற்கு ஏதுவாயிருக்கும்? சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும்.
14. ஆகையால் என்ன உத்தரவு சொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும் படி உங்கள் மனதிலே என்ன செய்யுங்கள்? நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள்.
15. யார் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத் தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்? உங்களை விரோதிக்கிறவர்கள்.
16. யாரால் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்? பெற்றாராலும், சகோதரராலும், பந்து ஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள். உங்களில்   சிலரை என்ன செய்வார்கள்? கொலைசெய்வார்கள்.
17. எதினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்? என் நாமத்தினிமித்தம்.
18. ஆனாலும் எதில் ஒன்றாகிலும் அழியாது? உங்கள் தலைமயிரில்.
19. எதினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்? உங்கள் பொறுமையினால்.
20. எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, எது சமீபமாயிற்றென்று அறியுங்கள்? அதின் அழிவு.
21. அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் என்ன செய்யக்கடவர்கள்?  மலை களுக்கு ஓடிப்போகக்கடவர்கள். எருசலேமிலிருக்கிறவர்கள் என்ன செய்யக் கடவர்கள்? வெளியே புறப்படக்கடவர்கள். நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் என்ன செய்யக்கடவர்கள்? நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்.
22. எது நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே? எழுதியி ருக்கிற யாவும்.
23. அந்நாட்களில் யாருக்கு ஐயோ? கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்க ளுக்கும் ஐயோ. பூமியின்மேல் என்ன உண்டாகும்? மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும்.
24. எதினாலே விழுவார்கள்? பட்டயக்கருக்கினாலே விழுவார்கள். சகல புற ஜாதிகளுக்குள்ளும் என்ன செய்யப்படுவார்கள்? சிறைப்பட்டுப்போவார்கள். புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் யாரால் மிதிக்கப் படும்? புற ஜாதியாரால் மிதிக்கப்படும்.
25. சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் என்ன தோன்றும்? அடையா ளங்கள்.  பூமியின்மேலுள்ள ஜனங்களுக்கு என்ன உண்டாகும்? தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும். சமுத்திரமும் அலைகளும் எப்படியிருக்கும்? முழக் கமாயிருக்கும்.
26. எவைகள் அசைக்கப்படும்? வானத்தின் சத்துவங்கள். ஆதலால்  பூமியின் மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷரு டைய இருதயம் என்னவாகும்? சோர்ந்துபோம்.
27. அப்பொழுது மனுஷகுமாரன் எப்படி வருகிறதை மேகத்தின்மேல் வருகிற தைக் காண்பார்கள்? மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும்.
28. இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்ப தால், நீங்கள் என்ன செய்யுங்கள் என்றார்? நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.
29. அன்றியும் அவர்களுக்கு எதைச் சொன்னார்? ஒரு உவமையைச்சொன்னார். எதைப் பாருங்கள்? அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள்.
30. அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது எது சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்? வசந்தகாலம்.
31. அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, எது சமீபமா யிற்றென்று அறியுங்கள்? தேவனுடைய ராஜ்யம்.
32. இவையெல்லாம் சம்பவிக்குமுன் எது ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? இந்தச் சந்ததி.
33. வானமும் பூமியும் என்னவாகும்? ஒழிந்துபோம். என் வார்த்தைகளோ என்ன ஆவதில்லை? ஒழிந்து போவதில்லை.
34. எதற்கு எச்சரிக்கையாயிருங்கள்? உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினா லும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங் கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கை யாயிருங்கள்.
35. பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது எதைப்போல வரும்?  ஒரு கண்ணியைப்போல வரும்.
36. ஆகையால் எதற்கு எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்? இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமார னுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
37. அவர் பகற்காலங்களில் என்ன செய்து கொண்டிருந்தார்? தேவாலயத்திலே உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தார். இராக்காலங்களில் என்ன செய்தார்? வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.
38. ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி என்ன செய் தார்கள்? அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள்.

Thursday, November 19, 2015

லூக்கா – 20

லூக்கா – 20
1. அந்நாட்களில் ஒன்றில், அவர் எதிலே ஜனங்களுக்கு உபதேசித்து, சுவிசே ஷத்தைப் பிரசங்கித்தார்? தேவாலயத்தில். அப்போது, யார் அவரிடத்தில் கூடி வந்தார்கள்? பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்தார்கள்.
2. அவர்கள் இயேசுவிடம் என்ன கேள்வி கேட்டார்கள்? நீர் எந்த அதிகாரத்தி னால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.
3. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? நானும் உங்களிடத் தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுங்கள்.
4. இயேசு அவர்களிடம் கேட்ட கேள்வி என்ன? யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? என்று கேட்டார்.
5. அவர்கள் தங்களுக்குள்ளே என்னவென்று யோசனைபண்ணி பண்ணினார் கள்? தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.
6. மனுஷரால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், ஜனங்களெல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறி வார்கள் என்று. 
7. அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணி சொன்னது என்ன? அது யாரால் உண்டாயிற்றோ, எங்களுக்குத் தெரியாது என்று பிரதியுத்தரம் சொன் னார்கள்.
8. அப்பொழுது இயேசு: நானும் எதை உங்களுக்குச் சொல்லேன் என்றார்? இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று.
9. பின்பு அவர் ஜனங்களுக்குச் சொல்லத்தொடங்கினது என்ன? உவமை. ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதை என்ன செய்தான்? தோட்டக்காரருக்குக் குத்தகையாக விட்டு, நெடுநாளாகப் புறத்தேசத்துக்குப் போயிருந்தான்.
10. அந்தத் தோட்டக்காரர் திராட்சத் தோட்டத்தின் கனிகளில் தன் பாகத்தைக் கொடுத்தனுப்பும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் யாரை அனுப்பி னான்? ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அந்தத் தோட்டக்காரர் அவனை என்ன செய்தார்கள்? அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
11. பின்பு அவன் என்ன செய்தான்? வேறொரு ஊழியக்காரனை அனுப்பினான். அவனையும் அவர்கள் என்ன செய்தார்கள்? அடித்து, அவமானப்படுத்தி, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
12. அவன் மூன்றாந்தரமும் என்ன செய்தான்? ஒரு ஊழியக்காரனை அனுப்பி னான். அவனையும் அவர்கள் என்ன செய்தார்கள்? காயப்படுத்தி, துரத்திவிட் டார்கள்.
13. அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான் என்ன செய்தான்? நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான்.
14. தோட்டக்காரர் அவனைக் கண்டபோது என்னவென்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்? இவன் சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும் படிக்கு இவனைக் கொல்லுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
15. அவனை என்ன செய்தார்கள்? அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்னசெய்வான்?
16. என்ன செய்வான் என்று சொல்லி அதற்கு இயேசு சொன்ன பதில் என்ன? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, என்ன சொன்னார்கள்? அப்படியாகாதிருப்பதாக என்றார்கள்.
17. அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, என்ன என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத் தென்ன? மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.
18. அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் என்ன ஆவான்? அவன் நொறுங்கிப் போவான், அது எவன்மேல் விழுமோ அவனை என்ன செய்யும்? நசுக்கிப் போடும் என்றார்.
19. பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் யாரைக்குறித்து இந்த உவமையைச் சொன்னாரென்று அறிந்தார்கள்? தங்களைக்குறித்து. அந்நேரத்திலே அவரைப் பிடிக்க வகைதேடியும் யாருக்குப் பயந்திருந்தார்கள்? ஜனங்களுக்கு.
20. அவர்கள் சமயம்பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றங்கண்டுபிடிக்கலா மென்று, யாரை அவரிடத்தில் அனுப்பினார்கள்? தங்களை உண்மையுள்ளவர் களாய்க் காண்பிக்கிற வேவுகாரரை.
21. அவர்கள் வந்து: போதகரே, எதை அறிந்திருக்கிறோம் என்றார்கள்? நீர் நிதா னமாய்ப் பேசி உபதேசிக்கிறீரென்றும், முகதாட்சணியமில்லாமல் தேவனு டைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம்.
22. எது நியாயமோ அல்லவோ, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்? இராயனுக்கு வரிகொடுக்கிறது.
23. எதை அவர் அறிந்து, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள் என்றார்? அவர்க ளுடைய தந்திரத்தை அறிந்து.
24. எதை எனக்குக் காண்பியுங்கள் என்றார்? ஒரு பணத்தை. எது யாருடையது என்று கேட்டார்? இதிலிருக்கிற சொரூபமும் மேலெழுத்தும். அதற்கு அவர்கள்: யாருடையது என்றார்கள்? இராயனுடையது.
25. அதற்கு அவர்: அப்படியானால், எதை இராயனுக்கும், எதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்? இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடைய தைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
26. அவர்கள் அவரை ஜனங்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக் கூடாமல், எதைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாயிருந்தார்கள்? அவர் சொன்ன உத்தரவைக்குறித்து.
27. உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிறவர்கள் யார்? சதுசேயர். சதுசே யரில் சிலர் அவரிடத்தில் வந்து 
28. போதகரே, ஒருவன் மனைவியையுடையவனாயிருந்து பிள்ளையில்லா மல் இறந்துபோனால், யார் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானமுண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே என்றனர்? அவனுடைய சகோதரன்.
29. சகோதரர் எத்தனை பேரிருந்தார்கள்? ஏழுபேரிருந்தார்கள். அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, என்ன ஆனான்? பிள்ளையில் லாமல் இறந்துபோனான்.
30. பின்பு இரண்டாஞ்சகோதரன் அவளை விவாகம்பண்ணி, என்ன ஆனான்? அவனும் பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.
31. மூன்றாஞ்சகோதரனும் அவளை என்ன செய்தான்? விவாகம்பண்ணினான். அப்படியே ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, என்ன ஆனார்கள்? பிள்ளை யில்லாமல் இறந்துபோனார்கள்.
32. எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் என்ன ஆனாள்? இறந்துபோனாள்.
33. இவ்விதமாய் ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணியிருக்க, எப்போது அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள் என்று கேட்டார்கள்? உயிர்த்தெழுதலில்.
34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: யார் பெண்கொண்டும் பெண்கொ டுத்தும் வருகிறார்கள்? இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள்.
35. யார் பெண்கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை? மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படு கிறவர்கள்.
36. அவர்கள் இனி என்ன செய்யமாட்டார்கள்? மரிக்கவுமாட்டார்கள். அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் யாருக்கு ஒப்பானவர்களுமாய் இருப்பார்கள்? தேவதூதருக்கு. யாருக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்? தேவனுக்கு.
37. அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் எதில் காண் பித்திருக்கிறார்? முட்செடியைப்பற்றிய வாசகத்தில். எப்படியெனில், கர்த்தரை யாருடைய தேவனென்று சொல்லியிருக்கிறார்? ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார்.
38. அவர் மரித்தோரின் தேவனாயிராமல், யாருடைய தேவனாயிருக்கிறார்? ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார். எல்லாரும் யாருக்குப் பிழைத்திருக் கிறார்களே என்றார்? அவருக்கு.
39. அப்பொழுது வேதபாரகரில் சிலர் அதைக் கேட்டு சொன்னது என்ன? போத கரே, நன்றாய்ச் சொன்னீர் என்றார்கள்.
40. அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் எதற்குத் துணியவில்லை? வேறொன் றுங்கேட்க.
41. அவர் அவர்களை நோக்கி: யார் தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகி றார்கள் என்றார்? கிறிஸ்து.
42. நான் யாரை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,
43. கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புஸ்த கத்தில் சொல்லுகிறானே? உம்முடைய சத்துருக்களை.
44. தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் யாரா யிருப்பது எப்படி என்றார்? குமாரனாயிருப்பது.
45. பின்பு ஜனங்களெல்லாரும் கேட்கையில் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: யாருக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றார்?
46. நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தை வெளிகளில் வந்த னங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
47. விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் எதை அடைவார் கள் என்றார்? அதிக ஆக்கினையை.


Wednesday, November 11, 2015

லூக்கா – 19

லூக்கா – 19
1. இயேசு எதில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோனார்? எரிகோவில்.
2. ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்தவன் யார்? சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்.
3. யார் இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான்? ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவனுமாயிருந்த சகோயு என்னப்பட்ட ஒரு மனுஷன். அவன் எப்படி இருந்தபடியால் ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடவில்லை? குள்ளனானபடியால்.
4. இயேசு போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி எதில் ஏறினான்? ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
5. இயேசு அந்த இடத்தில் வந்தபோது, என்ன செய்தார்? அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டம் என்றார்.
6. சகேயு என்ன செய்தான்? சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான்.
7. அதைக் கண்ட யாவரும் என்ன என்று முறுமுறுத்தார்கள்? இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்.
8. சகேயு நின்று, கர்த்தரை நோக்கி சொன்னது என்ன? ஆண்டவரே, என் ஆஸ்தி களில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதை யாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.
9. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு எது வந்தது? இரட்சிப்பு. இவனும் யாருக்குக் குமாரனாயிருக்கிறானே? ஆபிரகாமுக்கு.
10. எதற்கு மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்? இழந்துபோனதைத் தேட வும் இரட்சிக்கவும்.
11. அவர்கள் இவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் எருசலேமுக் குச் சமீபித்திருந்தபடியினாலும், எது சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்? தேவனுடைய ராஜ்யம்.
12. பிரபுவாகிய ஒருவன் எதைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத் துக்குப் போகப் புறப்பட்டான்? ஒரு ராஜ்யத்தை.
13. புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் எத்தனை பேரை அழைத்தார்? பத்துபேரை. அவர்களிடத்தில் எத்தனை ராத்தல் திரவியங்கொடுத்தார்? பத்து ராத்தல். நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு என்ன செய்யுங்கள் என்று சொன்னான்? வியாபாரம்பண்ணுங்கள்.
14. அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் என்னவாயி ருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்? ராஜாவாயிருக்கிறது.
15. அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது,யாரை எதற்காக அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்? தன்னிடத்தில் திரவி யம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி.
16. அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் எத்தனை ராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்? பத்துராத்தல்.
17. எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே,நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் எத்தனை பட்டணங்களுக்கு அதிகாரியா யிரு என்றான்? பத்துப் பட்டணங்களுக்கு.
18. அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் எத்தனை ராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்? ஐந்துராத்தல்.
19. அவனையும் அவன் நோக்கி: நீயும் எத்தனை பட்டணங்களுக்கு அதிகாரியா யிரு என்றான்? ஐந்து பட்டணங்களுக்கு.
20. பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடையராத்தல், இதை எதிலே வைத்திருந்தேன்? ஒரு சீலையிலே.
21. நீர் யார் என்று அறிந்து உமக்குப்பயந்திருந்தேன் என்றான்?நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷ னென்று அறிந்து.
22. அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, எதைக் கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன்? உன் வாய்ச்சொல்லைக்கொண்டே. நான் யாரென்று அறிந்தாய்? நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவ னுமான கடினமுள்ள மனுஷனென்று.
23. பின்னை ஏன் நீ என் திரவியத்தைக் எங்கே வைக்கவில்லை? காசுக்கடை யிலே. வைத்திருந்தால் நான் வரும்போது, அதை எப்படிப் பற்றிகொண்வேனே என்று சொன்னான்?வட்டியோடே வரப்பற்றிக்கொள்வேனே என்றுசொன்னான்.
24. சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெ டுத்து, யாருக்குக் கொடுங்கள் என்றான்? பத்துராத்தல் உள்ளவனுக்கு
25. அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்கு எத்தனை ராத்தல் இருக்கிறதே என்றார்கள்? பத்துராத்தல்.
26. அதற்கு அவன்: யாருக்குக் கொடுக்கப்படும்? உள்ளவன் எவனுக்கும். இல்லா தவனிடத்தில் உள்ளதும் என்ன செய்யப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகி றேன்? எடுத்துக்கொள்ளப்படும்.
27. அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களா கிய யாரை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்? என்னுடைய சத்துருக்களை.
28. இவைகளை அவர் சொன்னபின்பு எங்கே போனார்? எருசலேமுக்குப் புறப் பட்டு, முந்திநடந்துபோனார்.
29. அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகான எந்த ஊர்களுக்குச் சமீபித்தார்? பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு. தம்முடைய சீஷரில் எத்தனை பேரை நோக்கி சொன்னார்? இரண்டுபேரை.
30. எங்கே போங்கள்? உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்கு. அதிலே பிரவேசிக்கும்போது எதைக் காண்பீர்கள்? மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள். அதை என்ன செய்யுங்கள்? அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.
31. அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், என்னவென்று சொல்லுங்கள் என்றார்? அது ஆண்டவருக்கு வேண்டுமென்று. 
32. அனுப்பப்பட்டவர்கள் போய், என்ன கண்டார்கள்? தங்களுக்கு அவர் சொன்ன படியே கண்டார்கள்.
33. கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள் என்ன கேட்டார்கள்? குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
34. அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்? அது ஆண்டவருக்கு வேண்டு மென்று சொன்னார்கள்.
35. அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, என்ன செய்தார்கள்? தங்கள் வஸ்திரங்களை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.
36. அவர் போகையில், அவர்கள் என்ன செய்தார்கள்? தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்.
37. அவர் எங்கு வருகையில் திரளான கூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித்துச் சந்தோஷப்பட்டார்கள்? ஒலிவமலை யின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில்.
38. அவர்கள் சந்தோஷப்பட்டு என்ன செய்தார்கள்? கர்த்தருடைய நாமத்தி னாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதான மும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.
39. அப்பொழுது யார் அவரை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட் டும் என்றார்கள்? கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர்.
40. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் எது கூப் பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? கல்லுகளே கூப்பிடும்.
41. அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காக என்ன செய்தார்? கண்ணீர் விட்டழுதார்.
42. உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் எவைகளை நீ அறிந்திருந்தாயா னால் நலமாயிருக்கும்? உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை. இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு எப்படியிருக்கிறது? மறைவாயிருக்கிறது.
43. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், எது உனக்கு வரும் என்றார்? உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,
44. உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார்.
45. பின்பு அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, என்ன செய்தார்? அதிலே விற்கி றவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்தத் தொடங்கினார்.
46. என்னுடைய வீடு என்னவென்று எழுதியிருக்கிறது? ஜெபவீடாயிருக்கிற தென்று. நீங்களோ அதை என்னவாக ஆக்கினீர்கள் என்றார்? கள்ளர்குகையாக் கினீர்கள்; என்றார்.
47. அவர் நாடோறும் தேவாலயத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்? உபதே சம் பண்ணிக்கொண்டிருந்தார். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும் அவரை என்ன செய்ய வகைதேடினார்கள்? கொலைசெய்ய வகை தேடினார்கள்.
48. எதனால் அதை இன்னபடி செய்யலாமென்று வகைகாணாதிருந்தார்கள்? ஜனங்களெல்லாரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை அண்டிக்கொண்டி ருந்தபடியால்.