Wednesday, March 11, 2015

மத்தேயு – 13

மத்தேயு – 13
1. இயேசு அன்றையதினமே எங்கிருந்து புறப்பட்டுப்போனார்? வீட்டிலிருந்து புறப்பட்டுப்போனார். இயேசு வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய் எங்கே உட்கார்ந் தார்? கடலோரத்திலே உட்கார்ந்தார்.
2. அவரிடத்தில் கூடிவந்தவர்கள் யார்? திரளான ஜனங்கள். திரளான ஜனங் கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் எங்கே உட்கார்ந்தார்? படவில் ஏறி உட்கார்ந்தார். ஜனங்களெல்லாரும் எங்கே நின்றார்கள்? கரையிலே நின்றார் கள்.
3. அவர் அநேக விசேஷங்களை எப்படி அவர்களுக்குச் சொன்னார்? உவமைக ளாக அவர்களுக்குச் சொன்னார். யார் ஒருவன் புறப்பட்டான்? விதைக்கிறவன் ஒருவன் புறப்பட்டான். விதைக்கிறவன் ஒருவன் எதற்குப் புறப்பட்டான்? விதைக்கப் புறப்பட்டான்.
4. அவன் விதைக்கையில் சில விதை எங்கே விழுந்தது? வழியருகே விழுந் தது. வழியருகே விழுந்த விதைகள் என்ன ஆயின? பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
5. சிலவிதை எங்கே விழுந்தது? அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது. அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்த விதைகள் என்ன ஆயின? மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. 
6. வெயில் ஏறினபோது அந்த விதை என்ன ஆனது? தீய்ந்து போய், வேரில்லா மையால் உலர்ந்து போயிற்று.
7. சில விதைகள் எங்கே விழுந்தது? முள்ளுள்ள இடங்களில் விழுந்தது. முள்ளுள்ள இடங்களில் விழுந்த விதைகள் என்ன ஆயின? முள் வளர்ந்து அதை நொறுக்கிப் போட்டது.
8. சில விதைகள் எங்கே விழுந்தது? நல்ல நிலத்தில் விழுந்தது. நல்ல நிலத் தில் விழுந்த விதைகள் என்ன ஆயின? சிலது நூறாகவும், சிலது அறுபதாக வும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.
9. யார் கேட்கக்கடவன் என்றார்? கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கட வன் என்றார்.
10. அப்பொழுது சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து கேட்டது என்ன? ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
11. பரலோகத்தின் ரகசியங்களை அறியும்படி யாருக்கு அருளப்பட்டது? உங்க ளுக்கு (சீஷர்களுக்கு). பரலோகத்தின் ரகசியங்களை அறியும்படி யாருக்கு அருளப்படவில்லை? அவர்களுக்கு (ஜனங்களுக்கு).
12. யாருக்குக் கொடுக்கப்படும்? உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப் படும். பரிபூரணம் அடைபவன் யார்? உள்ளவன். எவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்? இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
13. எதனால் அவர்களோடே நான் உவமைகளாக பேசுகிறேன் என்று இயேசு சொல்லுகிறார்? அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர் களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் அவர்க ளோடே உவமைகளாக பேசுகிறேன் என்று இயேசு சொல்லுகிறார்.
14. இவர்கள் காதாரக்கேட்டும் எப்படியிருப்பார்கள்? உணராதிருப்பீர்கள். இவர் கள் கண்ணாறக்கண்டும் எப்படியிருப்பார்கள்? அறியாதிருப்பீர்கள். 
15. ஏசாயாவின் தீர்க்கதரிசனம் என்ன? காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாறக்கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த ஜனங்கள் கண்களினால் காணா மலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும் பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர் கள் இருதயம் கொழுத்திருக்கிறது, காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண் களை மூடிக்கொண்டார்கள் என்பதே.
16. எவைகள் பாக்கியமுள்ளவைகள்? உங்கள் கண்களும், உங்கள் காதுகளும் பாக்கியமுள்ளவைகள். உங்கள் கண்களும் உங்கள் காதுகளும் எதனால் பாக்கி யமுள்ளவைகள்? உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கி றதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.
17. யார் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய் யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்? அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவை களைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்.
18. யாரைப்பற்றிய உவமையைக் கேளுங்கள் என்கிறார்? விதைக்கிறவனைப் பற்றிய உவமையைக் கேளுங்கள் என்கிறார்.
19. ஒருவன் எதைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வருகி றான்? ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வருகிறான். ராஜ்யத்தின் வசனம் எதில் விதைக்கப்படுகிறது? ஒருவனுடைய இருதயத்தில். ஒருவனுடைய இருதயத்தில் விதைக்கப்பட்ட ராஜ்யத்தின் வசனத்தைப் பறித்துக்கொள்ளுகிறவன் யார்? பொல்லாங்கன். வழியருகே விதைக்கப்பட்டவன் யார்? ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கிறவன் வழியருகே விதைக்கப்பட்டவன்.
20. கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன் யார்? வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்.
21. தனக்குள்ளே வேரில்லாதவன் யார்? கற்பாறை இடங்களில் விதைக்கப்பட் டவன். கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன் எதனால் கொஞ்சக்காலம் மாத்திரம் நிலைத்திருப்பான்? தனக்குள்ளே வேரில்லாததனால். கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன் எப்பொழுது இடறலடைகிறான்? வசனத்தினி மித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறான்.
22. முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன் யார்? வசனத்தைக் கேட்கிற வனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், பலனற்றுப் போகிறவன் முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன் ஆவான்.
23. நல்ல நிலத்தில விதைக்கப்பட்டவன் யார்? வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருகிறவன் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவன் ஆவான்.
24. பரலோகராஜ்யம் யாருக்கு ஒப்பாயிருக்கிறது? பரலோகராஜ்யம் தன் நிலத் தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.
25. சத்துரு எப்போது வந்தான்? மனுஷன் நித்திரைபண்ணுகையில் அவனு டைய சத்துரு வந்தான். சத்துரு வந்து என்ன செயதான்? கோதுமைக்குள் களை களை விதைத்துவிட்டுப் போனான்.
26. பயிரானது வளர்ந்து கதிர்விட்ட போது எதுவும் காணப்பட்டது? களைகளும் காணப்பட்டது.
27. வீட்டெஜமானிடத்தில் வந்தது யார்? வேலைக்காரர். வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து சொன்னது என்ன? ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.
28. அதற்கு வீட்டெஜமான் சொன்னது என்ன? சத்துரு அதைச் செய்தான் என் றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் எவைகளைப் பிடுங்கிப் போட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்? களைகளை.
29. அதற்கு வீட்டெஜமான் என்ன சொன்னார்? வேண்டாம் என்று சொன்னார். ஏன் இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள் என்றார்? களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள் என்றார்.
30. களைகளைப் பிடுங்கி என்ன செய்யுங்கள் என்பேன் என்றார்? களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள் என்பேன் என்றார். கோதுமையை என்ன செய்யுங்கள் என்பேன் என்றார்? கோதுமை யையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்றார்.
31. பரலோகராஜ்யம் எதற்கு ஒப்பாயிருக்கிறது? பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது. எதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்? கடுகு விதை.
32. எது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளி லும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத் தக்க மரமாகும் என்றார்? கடுகு விதை.
33. பரலோகராஜ்யம் எதற்கு ஒப்பாயிருக்கிறது? புளித்தமாவுக்கு ஒப்பாயிருக் கிறது. புளித்தமாவை எடுத்தது யார்? ஒரு ஸ்திரீ. ஒரு ஸ்திரீ புளித்தமாவை எடுத்து என்ன செய்தாள் என்றார்? ஒரு ஸ்திரீ புளித்தமாவை எடுத்து, முழுவ தும் புளிக்கும் வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கி வைத்தாள் என்றார்.
34. எவைகளைப்பற்றி இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்? பரலோகராஜ்யத்தைப்பற்றி. எவைகளினாலேயன்றி இயேசு ஜனங்களோடே பேசவில்லை? உவமைகளினாலேயன்றி இயேசு ஜனங்களோடே பேச வில்லை.
35. எதை உவமைகளினால் திறப்பேன்? என் வாயை. உலகத்தோற்றமுதல் எவைகளை வெளிப்படுததுவேன்? மறைபொருளானவைகளை. தீர்க்கதரி சியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது என்ற வார்த்தை என்ன? என் வாயை உவமைகளினால் திறப்பேன், உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன்.
36. அப்பொழுது இயேசு யாரை அனுப்பிவிட்டு வீட்டுக்குப்போனார்? ஜனங் களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப்போனார். இயேசுவினிடத்தில் வந்தது யார்? அவருடைய சீஷர்கள். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து எதைப் பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள்? நிலத்தில் களைகளைப் பற்றிய உவமையை.
37. நல்ல விதையை விதைக்கிறவன் யார்? மனுஷகுமாரன்.
38. நிலம் எது? உலகம். நல்ல விதை யார்? ராஜ்யத்தின் புத்திரர். களைகள் யார்? பொல்லாங்கனுடைய புத்திரர்.
39. களைகளை விதைக்கிற சத்துரு யார்? பிசாசு. அறுப்பு எது? உலகத்தின் முடிவு. அறுக்கிறவர்கள் யார்? தேவதூதர்கள்.
40. களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல எப்போது நடக்கும்? இவ்வுலகத்தின் முடிவில் நடக்கும்.
41. இவ்வுலகத்தின் முடிவில் தம்முடைய தூதர்களை அனுப்புவது யார்? மனுஷகுமாரன். மனுஷகுமாரன் அனுப்புகிற தூதர்கள் என்ன செய்வார்கள்? தூதர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிர மஞ் செய்கிறவர்களையும் சேர்ப்பார்கள்.
42. சேர்த்து அவர்களை எதிலே போடுவார்கள்? அக்கினிச் சூளையிலே போடு வார்கள். எங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்? அக்கினிச் சூளை யில்.
43. அப்பொழுது, நீதிமான்கள் எப்படி இருப்பார்கள்? தங்கள் பிதாவின் ராஜ்யத் திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். யார் கேட்கக்கடவன்? கேட்கிறதற் குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். 
44. அன்றியும், பரலோகராஜ்யம் எதற்கு ஒப்பாயிருக்கிறது? நிலத்தில் புதைத் திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது. ஒரு மனுஷன் எதைக் கண் டான்? நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்தைக் கண்டான். ஒரு மனுஷன் எதைக் கண்டு மறைத்தான்? நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்தைக் கண்டு மறைத்தான். எதைப் பற்றிய சந்தோஷத்தினால் போனான்? நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்தைப் பற்றிய சந்தோஷத்தினால் போனான். தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, எந்த நிலத்தைக் கொள்ளுகி றான்? பொக்கிஷம் நிறைந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.
45. பரலோகராஜ்யம் எதற்கு ஒப்பாயிருக்கிறது? பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.
46. யார் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லா வற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்? வியாபாரி.
47. பரலோகராஜ்யம் எதற்கு ஒப்பாயிருக்கிறது? பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.
48. எது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுக்கிறான்? வலை. எவைகளைக் கூடைகளில் சேர்க்கிறான்? நல்ல மீன்களை. ஆகாத கெட்ட மீன்களை என்ன செய்கிறான்? எறிந்து போடுகிறான். 
49. இப்படியே நடப்பது எப்போது? உலகத்தின் முடிவில். நீதிமான்களின் நடு வில் இருப்பது யார்? பொல்லாதவர்கள். உலகத்தின் முடிவில் நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரிப்பது யார்? தேவதூதர்கள்.
50. நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து அவர்களை எதிலே போடுவார்கள்? அக்கினிச் சூளையில் போடுவார்கள். அக்கினிச் சூளை யில் என்ன உண்டாயிருக்கும்? அழுகையும் பற்கடிப்பும். 
51. இயேசு அவர்களை (சீஷர்களை) நோக்கி சொன்னது என்ன? இவைகளை எல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள் (சீஷர்கள்) சொன்னது என்ன? ஆம், அறிந்துகொண்டோம், ஆண்டவரே, என்றார்கள்.
52. பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபா ரகன் யாருக்கு ஒப்பாயிருக்கிறான்? தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளை யும் பழையவைகளையும் எடுத்துக் கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷ னுக்கு ஒப்பாயிருக்கிறான்.
53. இயேசு இந்த உவமைகளைச் சொல்லி முடித்தபின்பு, என்ன செய்தார்? அவ்விடம் விட்டுப் போனார்.
54. இயேசு தாம் வளர்ந்த ஊருக்கு வந்து என்ன செய்தார்? அவர்களுடைய ஜெபஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம் பண்ணினார். ஜெபஆலயத்திலே அவர்கள் ஆச்சரியப்பட்டு சொன்னது என்ன? இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?
55. இவன் யாருடைய குமாரன் அல்லவா என்றார்கள்? இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா என்றார்கள். இவன் தாய் யார் அல்லவா என்றார்கள்? மரியாள் அல்லவா என்றார்கள். யாரெல்லாம் இவனுக்கு சகோதரர் அல்லவா என்றார்கள்? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்கு சகோதரர் அல்லவா என்றார்கள்.
56. இவன் சகோதரிகளெல்லாம் எங்கு இருக்கிறார்கள் அல்லவா என்றார்கள்? நம்மிடத்தில். இப்படியிருக்க, இதெல்லாம் யாருக்கு எப்படி வந்தது? என்று சொன்னார்கள்? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு (இயேசுவுக்கு) எப்படி வந்தது? என்று சொன்னார்கள்.
57. இயேசுவைக்குறித்து என்ன ஆனார்கள்? இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி சொன்னது என்ன? தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
58. எதினால் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை? அவர்க ளுடைய அவிசுவாசத்தினால்.

No comments:

Post a Comment