Thursday, March 26, 2015

மத்தேயு – 15

மத்தேயு – 15
1. அப்பொழுது, வேதபாரகரும் பரிசேயரும் எங்கிருந்து இயேசுவினிடத்தில் வந்தார்கள்? எருசலேமிலிருந்து வந்தார்கள்.
2. சீஷர்கள் எதை மீறி நடக்கிறார்கள்? சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரி யத்தை மீறி நடக்கிறார்கள். சீஷர்கள் எதைக்கழுவாமல் போஜனம் பண்ணுகி றார்கள்? சீஷர்கள் கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்கள். வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் என்ன கேட்டார்கள்? உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே என்றார்கள்.
3. வேதபாரகரும் பரிசேயரும் தங்கள் பாரம்பரியத்தினாலே எதைமீறி நடக்கிறார்கள்? தேவனுடைய கற்பனையை மீறி நடக்கிறார்கள். இயேசு அவர் களுக்கு பிரதியுத்தரமாக சொன்னது என்ன? நீங்கள் உங்கள் பாரம்பரியத்தி னாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்? என்றார்.
4. தகப்பனையும் தாயையும் என்ன செய்யவேண்டும்? கனம்பண்ண வேண் டும். யார் கொல்லப்படவேண்டும்? தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிற வன் கொல்லப்படவேண்டும். தேவன் கற்பித்தது என்ன? உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையா வது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக் கிறார்.
5. நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி என்ன சொன்னது உண்டோ என்றார்? உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொன்னது உண்டோ என்றார். இயேசு எப்பொழுது ஒருவனுடைய கடமை தீர்ந்ததென்று போதித்தார்? எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கி றேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது கனம்பண் ணாமற்போனாலும், அவனுடைய கடமை தீர்ந்ததென்று போதித்தார்.
6. நீங்கள் எதனாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள் என்றார்? நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கி வருகிறீர்கள் என்றார்.
7. இயேசு யாரை மாயக்காரரே என்கிறார்? இயேசு வேதபாரகரையும் பரிசேய ரையும் மாயக்காரரே என்கிறார்.
8. இந்த ஜனங்கள் எதினால் என்னிடத்தில் சேர்ந்தார்கள் என்கிறார்? தங்கள் வாயினால். இந்த ஜனங்கள் எதினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்? தங்கள் உதடுகளினால். எது எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றார்? அவர்கள் இருதயம்.
9. மனுஷருடைய கற்பனைகளை எப்படி போதித்தார்கள்? மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்தார்கள். எனக்கு எப்படி ஆராதனை செய்கிறார்கள்? வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள். ஏசாயா தீர்க்கதரிசி எதை நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்று இயேசு சொன்னார்? மனுஷரு டைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆரா தனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக் கிறான் என்றார்.
10. பின்பு இயேசு யாரை வரவழைத்தார்? பின்பு இயேசு ஜனங்களை வரவ ழைத்தார். நீங்கள் கேட்டு என்ன செய்ய வேண்டும்? நீங்கள் கேட்டு உணர வேண்டும்.
11. எது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது? வாய்க்குள்ளே போகிறது மனுஷ னைத் தீட்டுப்படுத்தாது. எது மனுஷனைத் தீட்டுப்படுத்தும்? வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். இயேசு ஜனங்களை வரவ ழைத்து அவர்களை நோக்கி சொன்னதென்ன? வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
12. அப்பொழுது சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து சொன்னது என்ன? பரிசே யர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார் கள்.
13. இயேசு எது வேரோடே பிடுங்கப்படும் என்றார்? என் பரமபிதா நடாத நாற் றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும் என்றார்.
14. இயேசு யாரை விட்டுவிடுங்கள் என்றார்? பரிசேயரை விட்டுவிடுங்கள் என்றார். யார் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்? பரிசேயர். குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் என்ன ஆகும் என்றார்? குருடனுக்கு குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
15. பேதுரு இயேசுவை நோக்கி கேட்டது என்ன? இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றார்.
16. இயேசு பேதுருவிடம் என்ன கேட்டார்? நீங்களும் இன்னும் உணர்வில்லாத வர்களாயிருக்கிறீர்களா? என்றார்.
17. வாய்க்குள்ளே போகிறதெல்லாம் எங்கே செல்லும்? வாய்க்குள்ளே போகிற தெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோம். இயேசு எதை நீங்கள் இன்னும் அறியவில்லையா என்றார்? வாய்க்குள்ளே போகிறதெல் லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா? என்றார்.
18. வாயிலிருந்து புறப்படுகிறவைகள் எங்கிருந்து புறப்பட்டுவரும்? வாயிலி ருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும். எது மனுஷ னைத் தீட்டுப்படுத்தும்? வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
19. இருதயத்திலிருந்து எவைகள் புறப்பட்டுவரும்? இருதயத்திலிருந்து பொல் லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங் களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.
20. இருதயத்திலிருந்து புறப்பட்டுவருகிறவைகள் மனுஷனைத் தீட்டுப்படுத்து வது ஏன்?  இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங் களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டு வருகிறதினால் அவைகள் மனுஷனைத் தீட்டுப்ப டுத்தும். எது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது? கைகழுவாமல் சாப்பிடுவது மனு ஷனைத் தீட்டுப்படுத்தாது.
21. இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு எங்கே போனார்? தீரு சீதோன் பட்ட ணங்களின் திசைகளுக்குப் போனார்.
22. அங்கு இயேசுவிடம் வந்தது யார்? அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானா னிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்தாள். கானானிய ஸ்திரீ இயேசுவிடம் என்ன சொல்லி கூப்பிட்டாள்? ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங் கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
23. அவளுக்குப் பிரதியுத்தரமாக இயேசு சொன்னது என்ன? அவளுக்குப் பிரதி யுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவரு டைய சீஷர்கள் வந்து இயேசுவிடம் வேண்டிக்கொண்டது என்ன? இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
24. காணாமற்போன ஆடுகள் யார்? இஸ்ரவேல் வீட்டார். இயேசு சீஷர்களிடம் சொன்னது என்ன? காணாமற்;போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத் திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.
25. அப்பொழுது கானானிய ஸ்திரீ என்ன செய்தாள்? அவள் வந்து: ஆண்ட வரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள்.
26. இயேசு கானானிய ஸ்திரீயை நோக்கி சொன்னது என்ன? பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
27. அதற்கு கானானிய ஸ்திரீ சொன்னது என்ன? மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
28. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நே ரமே அவள் மகள் என்ன ஆனாள்? ஆரோக்கியமானாள்.
29. இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு என்ன செய்தார்? இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.
30. அப்பொழுது யாரை திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத் தில் வந்தார்? சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்தார்கள். இயேசு யாரை சொஸ்தப்படுத்தினார்? சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை இயேசு சொஸ்தப்படுத்தினார்.
31. ஜனங்கள் எதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்? ஜனங்கள் ஊமையர் பேசுகி றதையும், ஊனர்சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். ஜனங்கள் ஊமையர் பேசுகிறதையும், ஊனர்சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதை யும், குருடர் பார்க்கிறதையும் கண்டு ஆச்சரியப்பட்டு யாரை மகிமைப்படுத் தினார்கள்? இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
32. இயேசு யாரை அழைத்தார்? இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்தார். இயேசு யாருக்காக பரிதபிக்கிறேன் என்றார்? இயேசு ஜனங்களுக்காக பரிதபிக் கிறேன் என்றார். இயேசு யார் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாது இருக்கிறார்கள் என்றார்? இந்த ஜனங்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாது இருக்கிறார்கள் என்றார். இவர்களை எப்படி அனுப்பிவிட எனக்கு மனதில்லை என்றார்? இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை என்றார். ஏன் இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை என்றார்? வழியில் சோர்ந்து போவார்களே, அதனால் இவர்களை பட்டினியாக அனுப்பிவிட எனக்கு மனதில்லை என்றார்.
33. அதற்கு அவருடைய சீஷர்கள் சொன்னது என்ன? இவ்வளவு திரளான ஜனங்களுக்குத் திருப்தியுண்டாகும்படி வேண்டிய அப்பங்கள் இந்த வனாந்த ரத்திலே நமக்கு எப்படி அகப்படும் என்றார்கள்.
34. அதற்கு இயேசு உங்களிடத்தில் எது எத்தனை உண்டு என்று கேட்டார்? அப்பங்கள். இயேசு, உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்ட தற்கு சீஷர்கள் சொன்னது என்ன? ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.
35. அப்பொழுது இயேசு ஜனங்களுக்கு கட்டளையிட்டது என்ன? இயேசு ஜனங் களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டார்.
36. இயேசு அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து என்ன செய்தார்? இயேசு அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார். சீஷர்கள் என்ன செய்தார்கள்? சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள்.
37. சாப்பிட்டுத் திருப்தியடைந்தவர்கள் யார்? எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தி யடைந்தார்கள். மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத் தார்கள்? மீதியான துணிக்கைகளை ஏழு கூடைநிறைய எடுத்தார்கள்.
38. ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர் எத்தனை பேராயிருந் தார்கள்? ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர் நாலாயிரம் பேராயிருந்தார்கள்.
39. இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு என்ன செய்தார்? அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு, படவில் ஏறி, மக்தலாவின் எல்லைகளில் வந்தார்.

No comments:

Post a Comment