மத்தேயு – 14
1. அக்காலத்தில் காற்பங்கு தேசாதிபதி யார்? ஏதோது. ஏரோது யாருடைய கீர்த்தியைக் கேள்விப்பட்டான்? இயேசுவின் கீர்த்தியைக் கேள்விப்பட்டான்.
2. ஏரோது இயேசுவை யார் என்றான்? இவன் யோவான்ஸ்நானன் என்றான். இவன் எங்கிருந்து எழுந்தான் என்றான்? இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றான். எதனால் இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான்? இவன் யோவான்ஸ்நானன், இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான், ஆகையால் இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான்.
3. ஏரோது யார் நிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்தி ருந்தான்? ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினி மித்தம் யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்.
4. ஏரோது ஏன் தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினி மித்தம் யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்? ஏனெனில்: நீர் அவளை வைத்துக் கொள்வது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான்.
5. ஏரோது யோவானைக் என்னசெய்ய மனதாயிருந்தான்? கொலைசெய்ய மனதாயிருந்தான். ஏரோது ஜனங்களுக்கு பயந்திருக்கக் காரணம் என்ன? ஜனங்கள் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான்.
6. ஏரோதின் ஜென்மநாள் கொண்டாடப்படுகிறபோது, யார் அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள்? ஏரோதியாளின் குமாரத்தி.
7. ஏரோது யாரிடம் நீ எதைக் கேட்டாலும் தருவேன் என்று ஆணையிட்டு வாக்குக் கொடுத்தான்? ஏரோதியாளின் குமாரத்தியிடம். நீ எதைக் கேட்டாலும் தருவேன் என்று ஆணையிட்டு வாக்குக் கொடுக்க காரணம் என்ன? ஏரோதின் ஜென்மநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினதால் நீ எதைக் கேட்டா லும் தருவேன் என்று ஆணையிட்டு வாக்குக் கொடுத்தான்.
8. ஏரோதியாளின் குமாரத்தி யாரால் ஏவப்பட்டாள்? தன் தாயினால் ஏவப்பட் டாள். அவள் தன் தாயினால் ஏவப்பட்டபடியே என்ன கேட்டாள்? யோவான்ஸ் நானனுடைய தலையை இங்கே ஒரு தாலத்திலே எனக்குத் தாரும் என்று கேட்டாள்.
9. ராஜா எதனால் துக்கமடைந்தான்? ஏரோதியாளின் குமாரத்தி யோவான்ஸ் நானனுடைய தலையை இங்கே ஒரு தாலந்தில் எனக்குத் தாரும் என்று கேட்டதினால் ராஜா துக்கமடைந்தான். ஆகிலும் ஏன் யோவான்ஸ்நானனு டைய தலையைக் கொடுக்கக் கட்டளையிட்டான்? ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக் கட்டளை யிட்டான்.
10. ஆள் அனுப்பி, காவற்கூடத்திலே யாரைச் சிரச்சேதம்பண்ணுவித்தான்? யோவானைச் சிரச்சேதம்பண்ணுவித்தான்.
11. யாருடைய சிரசை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்? யோவானுடைய சிரசை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள். அவள் யோவானுடைய சிரசை என்ன செய்தாள்? யோவானுடைய சிரசை தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள்.
12. யார் வந்து யோவானுடைய உடலை எடுத்து அடக்கம்பண்ணினார்கள்? யோவானுடைய சீஷர்கள். பின்பு போய் அந்தச் சங்கதியை யாருக்கு அறிவித் தார்கள்? இயேசுவுக்கு அறிவித்தார்கள்.
13. இயேசு அதைக் கேட்டு என்ன செய்தார்? இயேசு அதைக் கேட்டு, அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே போனார். அதைக் கேள்விப்பட்டது யார்? ஜனங்கள். ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு என்ன செய்தார்கள்? ஜனங்கள் பட்டணங்களிலிருந்து கால்நடையாய் இயேசு வினிடத்திற்குப் போனார்கள்.
14. இயேசு திரளான ஜனங்களைக் கண்டு என்ன செய்தார்? மனதுருகினார். இயேசு யாரைச் சொஸ்தமாக்கினார்? திரளான ஜனங்களில் வியாதியஸ்தர் களாய் இருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்.
15. சாயங்காலமானபோது, இயேசுவிடத்தில் வந்தது யார்? அவருடைய சீஷர் கள். சீஷர்கள் இயேசுவிடத்தில் வந்து சொன்னது என்ன? இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று, ஜனங்கள் கிராமங்களுக்குப் போய்த் தங்களுக்குப் போஜன பதார்த்தங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
16. இயேசு சீஷர்களை நோக்கி சொன்னது என்ன? அவர்கள் போகவேண்டியது இல்லை, நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார்.
17. அதற்கு சீஷர்கள் இங்கே எங்களிடத்தில் எத்தனை அப்பமும் எத்தனை மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள்? ஐந்து அப்பமும் இரண்டு மீன்களும்.
18. இயேசு அவைகளை என்ன செய்யச் சொன்னார்? அவைகளை என்னிடத் தில் கொண்டு வாருங்கள் என்றார்.
19. இயேசு ஜனங்களுக்கு என்ன கட்டளையிட்டார்? இயேசு ஜனங்களை புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டார். இயேசு அந்த ஐந்து அப்பங்க ளையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து என்ன செய்தார்? இயேசு அந்த ஜந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார். சீஷர்கள் என்ன செய்தார்கள்? சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள்.
20. ஜனங்கள் என்னவானார்கள்? ஜனங்கள் எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தி யடைந்தார்கள். மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தார் கள்? மீதியான துணிக்கைகளை பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள்.
21. ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர்கள் எத்தனை பேராயி ருந்தார்கள்? ஐயாயிரம்.
22. இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்களை எங்கே போகும்படி துரிதப்படுத்தினார்? தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.
23. இயேசு ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு என்ன செய்தார்? இயேசு தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார். அதற்குள்ளாகப் படவு எங்கே சேர்ந்தது? அதற்குள்ளாகப் படவு நடுக்கடலிலே சேர்ந்தது.
24. படவு நடுக்கடலிலே என்ன ஆனது? படவு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க் காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது.
25. இயேசு இரவின் நாலாம் ஜாமத்திலே என்ன செய்தார்? இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.
26. சீஷர்கள் கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறி யது ஏன்? இயேசு கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கம டைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள்.
27. சீஷர்கள் பயத்தினால் அலறியதைக்கண்ட இயேசு அவர்களிடம் பேசியது என்ன? திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.
28. பேதுரு இயேசுவை நோக்கி சொன்னது என்ன? ஆண்டவரே, நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான்.
29. அதற்கு இயேசு என்ன சொன்னார்? அதற்கு இயேசு வா என்றார். அப்பொ ழுது பேதுரு என்ன செய்தான்? பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத் தில் போக ஜலத்தின் மேல் நடந்தான்.
30. பேதுரு ஏன் பயந்தான்? காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு பேதுரு பயந் தான். பேதுரு அமிழ்ந்துபோகையில் என்னவென்று கூப்பிட்டான்? ஆண்டவரே என்னை ரட்சியும் என்று கூப்பிட்டான்.
31. உடனே இயேசு என்ன செய்தார்? உடனே இயேசு கையை நீட்டி பேதுருவை பிடித்தார். கையை நீட்டி பேதுருவைப் பிடித்த இயேசு சொன்னது என்ன? அற்ப விசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.
32. காற்று எப்பொழுது அமர்ந்தது? இயேசுவும் பேதுருவும் படவில் ஏறினவு டனே காற்று அமர்ந்தது.
33. அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து என்ன சொன்னார்கள்? மெய்யா கவே நீர் தேவனுடைய குமாரன் என்றார்கள். மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி என்ன செய்தார்கள்? இயேசுவைப் பணிந்துகொண் டார்கள்.
34. பின்பு அவர்கள் கடலைக் கடந்து எங்கே போனார்கள்? கெனேசரேத்து நாட்டில் சேர்ந்தார்கள்.
35. அவ்விடத்து மனுஷர் என்ன செய்தார்கள்? அவ்விடத்து மனுஷர் இயேசுவை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகள் எல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
36. அவ்விடத்து மனுஷர் இயேசுவை வேண்டிக்கொண்டது என்ன? இயேசுவு டைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாக வேண்டுமென்று வேண்டிக் கொண்டார்கள். இயேசுவைத் தொட்ட யாவரும் என்ன ஆனார்கள்? சொஸ்தமானார்கள்.
No comments:
Post a Comment