மாற்கு – 13
1. அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது, அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி சொன்னது என்ன? போதகரே, இதோ, இந்தக் கல்லு கள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான்.
2. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பெரிய கட்டடங்களைக் காண்கி றாயே, அது என்ன ஆகும் என்றார்? ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார்.
3. பின்பு, அவர் தேவாலயத்துக்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்தி ருக்கையில், அவரிடத்தில் தனித்து வந்தது யார்? பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடத்தில் தனித்துவந்தார்கள்.
4. அவர்கள் எதை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள்? இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறுங்காலத்துக்கு அடை யாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.
5. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக எதற்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றார்? ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
6. ஏன் அப்படிச் சொன்னார்? ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைக் கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
7. எப்போது கலங்காதேயுங்கள் என்றார்? யுத்தங்களையும் யுத்தங்களின் செய் திகளையும் கேள்விப்படும்போது கலங்காதேயுங்கள். எவைகள் சம்பவிக்க வேண்டியதே? யுத்தங்களும் யுத்தங்களின் செய்திகளும் சம்பவிக்கவேண்டி யதே. ஆனாலும் எது உடனே வராது? முடிவு.
8. எவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்? ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பூமியதிர்ச்சிகளும் பல இடங் களில் உண்டாகும், பஞ்சங்களும் கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேத னைகளுக்கு ஆரம்பம்.
9. நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள், ஏன்? ஏனெனில் உங்களை ஆலோச னைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெபஆலயங்களில் அடிக் கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்களுக்குமுன்பாக நிறுத்தப்படுவீர்கள்.
10. சகல ஜாதிகளுக்கும் எது முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும்? சுவிசேஷம்.
11. அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, எப்படி இருக்க வேண்டும்? நீங்கள் என்ன பேசுவோமென்று முன்னதாகக் கவலைப்ப டாமலும் சிந்தியாமலுமிருக்க வேண்டும். அந்த நாழிகையிலே எதைப் பேச வேண்டும்? உங்களுக்கு எது அருள்செய்யப்படுமோ அதையே பேசவேண்டும். ஏன்? ஏனெனில் பேசுகிறவர்கள் நீங்களல்ல, பரிசுத்த ஆவியே பேசுகிறவர்.
12. அன்றியும் யார் யாரை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்? சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார் கள். பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களை என்ன செய்வார்கள்? கொலைசெய்வார்கள்.
13. எதினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்? என் நாமத்தினிமித்தம். யார் இரட்சிக்கப்படுவான்? முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படு வான்.
14. மேலும் பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து எந்தத் தீர்க்கதரிசி சொல்லியி ருக்கிறான்? தானியேல் தீர்க்கதரிசி. வாசிக்கிறவன் என்ன செய்ய வேண்டும்? சிந்திக்க வேண்டும். அது நிற்கத்தகாத இடத்திலே நீங்கள் அதை நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் எங்கே ஓடிப்போகக்கடவர்கள்? மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.
15. வீட்டின்மேல் இருக்கிறவன் என்ன செய்ய வேண்டும்? தன்வீட்டுக்குள் இறங்காமலும், தன் வீட்டில் எதையாகிலும் எடுத்துக்கொள்ள உள்ளேபோகாம லும் இருக்க வேண்டும்.
16. வயலில் இருக்கிறவன் என்ன செய்ய வேண்டும்? தன் வஸ்திரத்தை எடுப்ப தற்குப் பின்னிட்டுத் திரும்பாதிருக்க வேண்டும்.
17. அந்நாட்களிலே யாருக்கு ஐயோ? கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்க ளுக்கும் ஐயோ!
18. நீங்கள் ஓடிப்போவது எந்தக் காலத்திலே சம்பவியாதபடிக்கு வேண்டிக் கொள்ளுங்கள்? மாரிகாலத்திலே.
19. ஏன்? (அந்நாட்களில் என்ன உண்டாயிருக்கும்?) தேவன் உலகத்தைச் சிருஷ் டித்ததுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாதது மான உபத்திரவம் அந்நாட்களில் உண்டாயிருக்கும்.
20. கர்த்தர் என்ன செய்யாவிட்டால் ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை? அந்நாட்களைக் குறைத்திராவிட்டால் ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை. யார் நிமித்தம் அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்? தாம் தெரிந்து கொண்டவர்களினிமித்தம், அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.
21. அப்பொழுது: கிறிஸ்து எங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்? இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கேயிருக்கி றார் என்று எவனாகிலும் சொன்னால், நம்பாதேயுங்கள்.
22. ஏன்? கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமா னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங் களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
23. நீங்கன் எப்படியிருக்க வேண்டும்? எச்சரிக்கையாயிருக்க வேண்டும். இதோ, எதை முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்? எல்லாவற்றையும்.
24. அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப் பின்பு, சூரியன் என்னவாகும்? அந்தகாரப்படும். சந்திரன் என்ன செய்யும்? ஒளியைக் கொடாதிருக்கும்.
25. வானத்தின் நட்சத்திரங்கள் என்னவாகும்? விழும். வானங்களிலுள்ள சத்து வங்களும் என்ன செய்யப்படும்? அசைக்கப்படும்.
26. அப்பொழுது யார் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின் மேல் வருகிறதைக் காண்பார்கள்? மனுஷகுமாரன்.
27. அப்பொழுது அவர் யாரை அனுப்பி: தாம் தெரிந்துகொண்டவர்களைப் பூமி யின் கடைமுனை முதற்கொண்டு, வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்? தம்முடைய தூதரை அனுப்பி.
28. எதினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்? அத்திமரத்தினால். அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, எது சமீபமாயிற்று என்று அறிவீர்கள்? வசந்தகாலம்.
29. அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, அவர் எங்கே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்? சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.
30. இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே எது ஒழிந்துபோகாதென்று, மெய் யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்? இந்தச் சந்ததி.
31. வானமும் பூமியும் என்னவாகும்? ஒழிந்துபோம். என் வார்த்தைகளோ? ஒழிந்துபோவதில்லை.
32. அந்த நாளையும் அந்த நாழிகையையும் யார் ஒருவர்தவிர மற்றொருவ னும் அறியான்? பிதா. வேறு யாரெல்லாம் அறியார்கள்? பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். வேறு யாரும் அறியார்? குமாரனும் அறியார்.
33. அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் என்ன செய்யுங்கள்? எச்சரிக்கை யாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.
34. ஒரு மனுஷன் தன் வீட்டைவிட்டு, புறத்தேசத்துக்குப் பிரயாணம்போக எத்தனிக்கும்போது, யாருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காக்கிறவனுக்குக் கற்பிப்பான்? தன் ஊழியக்காரருக்கு.
35. அப்படியே நீங்களும் என்ன செய்யுங்கள்? விழித்திருங்கள். ஏன்? ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல்கூவும் நேரத் திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்.
36. நீங்கள் நினையாதவேளையில் அவன் வந்து, உங்களை என்னவென்று கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள்? தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாத படிக்கு விழித்திருங்ள்.
37. நான் உங்களுக்குச் சொல்லுகிறதை யாருக்கெல்லாம் சொல்லுகிறேன்? எல்லாருக்கும் சொல்லுகிறேன். என்னவென்று சொல்லுகிறேன்? விழித்திருங் கள்.