Friday, June 5, 2015

மாற்கு – 11

மாற்கு – 11
1. அவர்கள் எதுக்குச் சமீபமாய்ச் சேர்ந்தார்கள்? எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்தார்கள். ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்தபோது, அவர் யாரை நோக்கினார்? தம்முடைய சீஷரில் இரண்டு பேரை நோக்கினார். 
2. எங்கே போங்கள் என்றார்? உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள் என்றார். அதில் பிரவேசித்தவுடனே, எதைக் காண்பீர்கள்? மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண் பீர்கள். அதை என்ன செய்யுங்கள்? அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.
3. ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று ஒருவன் உங்களிடத்தில் கேட்டால் என்னவென்று சொல்லி அனுப்பினார்? இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அதை இவ்விடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
4. அவர்கள் போய், என்ன செய்தார்கள்? வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள்.
5. அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர் என்ன கேட்டார்கள்? நீங்கள் குட்டியை அவிழ்க்கிறது என்னவென்றார்கள்.
6. அதற்கு சீஷர்கள் என்ன சொன்னார்கள்? இயேசு கற்பித்தபடியே அவர்க ளுக்கு உத்தரவு சொன்னார்கள். அப்பொழுது, அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்களைப் போகவிட்டார்கள்.
7. அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து என்ன செய் தார்கள்? அதின்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள். இயேசு என்ன செய்தார்? அவர் அதின்மேல் ஏறிப்போனார்.
8. அநேகர் என்ன செய்தார்கள்? தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார் கள். வேறு சிலர் என்ன செய்தார்கள்? மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.
9. முன்நடப்பாரும் பின்நடப்பாரும் என்னவென்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்? ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;
10. கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
11. அப்பொழுது, இயேசு எருசலேமுக்கு வந்து, என்ன செய்தார்? தேவாலயத் தில் பிரவேசித்து, எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்தார். சாயங்காலமானபோது, இயேசு என்ன செய்தார்? பன்னிருவரோடுங்கூடப் பெத்தானியாவுக்குப் போனார்.
12. மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுவருகையில், அவருக்கு என்ன உண்டாயிற்று? பசியுண்டாயிற்று.
13. அப்பொழுது இயேசு எதைக் கண்டார்? இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டார். அதில் என்ன பார்க்க வந்தார்? ஏதாகிலும் அகப்படுமோ எனறு பார்க்கவந்தார். அதில் எதைத் தவிர வேறொன்றும் காணவில்லை? அத்திப்பழக் காலமாயிராதபடியால்,  அவர் அதினிடத்தில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை.
14. அப்பொழுது இயேசு அதைப் பார்த்து என்ன சொன்னார்? இதுமுதல் ஒருக்கா லும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன் என்றார். அதை யார் கேட்டார்கள்? அவருடைய சீஷர்கள் கேட்டார்கள்.
15. அவர்கள் எங்கே வந்தார்கள்? எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவால யத்தில் பிரவேசித்து, என்ன செய்தார்? ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்தார்.
16. ஒருவனும் தேவாலயத்தின் வழியாக எதைக் கொண்டுபோக விடவில்லை? யாதொரு பண்டத்தையும் கொண்டுபோகவில்லை.
17. என்னுடைய வீடு என்ன என்று எழுதியிருக்கவில்லையா? எல்லா ஜனங்க ளுக்கும் ஜெபவீடு என்னப்படும். நீங்களோ அதை என்னவாக்கினீர்கள் என்று உபதேசித்தார்? கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார்.
18. அதைக் கேட்டது யார்? வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் கேட்டார்கள். அதைக் கேட்டு என்ன செய்தார்கள்? அவரைக் கொலைசெய்ய வகைதேடினார் கள். அவர்கள் எதற்குப் பயந்திருந்தார்கள்? ஆகிலும் ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டபடியினாலே அவருக்குப் பயந்திருந்தார்கள்;.
19. சாயங்காலமானபோது இயேசு என்ன செய்தார்? நகரத்திலிருந்து புறப்பட்டுப் போனார்.
20. மறு நாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, எதைக் கண்டார்கள்? அந்த அத்திமரம்  வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக்  கண்டார் கள்.
21. பேதுரு நினைவுகூர்ந்து, அவரை நோக்கி என்ன சொன்னான்? ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று என்றான்.
22. இயேசு அவர்களை நோக்கி யாரிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார்? தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்.
23. எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து என்ன செய்தால், அவன் சொன்னப டியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? நீ பெயர்ந்து,சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்ன படியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகி றேன்.
24. ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும் போது என்னவென்று விசுவாசியுங்கள்? எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு என்ன ஆகும்? உண்டாகும். 
25. நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொ ருகுறை உண்டாயிருக்குமானால், அதை என்ன செய்யுங்கள்? பரலோகத்திலி ருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.
26. நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், என்ன ஆகும் என்றார்? பரலோகத்திலி ருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார்.
27. அவர்கள் மறுபடியும் எங்கே வந்தார்கள்? எருசலேமுக்கு வந்தார்கள். அவர் தேவாலயத்திலே உலாவிக்கொண்டிருக்கையில், அவரிடத்தில் வந்தது யார்? பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் வந்தார்கள்.
28. பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் வந்து என்ன கேட்டார்கள்? நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இவைக ளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் என்று கேட் டார்கள்.
29. இயேசு பிரதியுத்தரமாக சொன்னது என்ன? நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், நீங்கள் எனக்கு உத்தரவு சொல்லுங்கள், அப்பொ ழுது நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன்.
30. எது தேவனால் உண்டாயிற்றோ, மனுஷரால் உண்டாயிற்றோ, எனக்கு உத்தரவு சொல்லுங்கள் என்றார்? யோவான் கொடுத்த ஸ்நானம்.
31. அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், என்னவென்று கேட்பார்? பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லையென்று கேட்பார்.
32. மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், என்ன செய்ய வேண் டியதாயிருக்கும்? ஜனங்களுக்குப் பயப்படவேண்டியதாயிருக்கும். எல்லாரும் யோவானை என்னவென்று சொல்லுகிறார்களே? மெய்யாகத் தீர்க்கதரிசி யென்று எண்ணுகிறார்களே என்று தங்களுக்குள்ளே ஆலோசனை பண்ணி னார்கள்.
33. இயேசுவுக்கு பிரதியுத்தரமாக அவர்கள் சொன்னது என்ன? எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது இயேசு என்ன சொன்னார்? நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல் லேன் என்றார்.

No comments:

Post a Comment