Thursday, June 4, 2015

மாற்கு – 10

மாற்கு – 10
1. அவர் அவ்விடம் விட்டெழுந்து, யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தேசத்தின் வழியாய் எங்கு வந்தார்? யூதேயாவின் எல்லைகளில் வந்தார். ஜனங்கள் மறுப டியும் என்ன செய்தார்கள்? அவரிடத்தில் கூடிவந்தார்கள். இயேசு என்ன செய் தார்? அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மறுபடியும் அவர்களுக்குப் போத கம்பண்ணினார்.
2. அப்பொழுது பரிசேயர், அவரை என்ன செய்ய வேண்டுமென்று வந்தார்கள்? சோதிக்கவேண்டுமென்று வந்தார்கள். பரிசேயர் அவரிடத்தில் வந்து என்ன கேட்டார்கள்? புருஷனானவன் தன் மனைவியைத் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.
3. இயேசு பிரதியுத்தரமாக என்ன கேட்டார்? மோசே உங்களுக்குக் கட்டளை யிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார்.
4. அதற்கு அவர்கள்: எதை எழுதிக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே உத்தரவுகொடுத்திருக்கிறார் என்றார்கள்? தள்ளுதற்சீட்டை எழுதிக் கொடுத்து.
5. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக:எதினிமித்தம் இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான் என்றார்? உங்கள் இருதயகடினத்தினிமித்தம்.
6. ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை எப்படி உண்டாக்கினார்? ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்.
7. இதினிமித்தம் புருஷனானவன் யாரை விட்டுத் தன் மனைவியோடே இசைந் திருப்பான்? தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்.
8. அவர்கள் இருவரும் எப்படியிருப்பார்கள்? ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ் விதமாய் அவர்கள் இருவராயிராமல் எப்படியிருக்கிறார்கள்? ஒரே மாம்சமாயி ருக்கிறார்கள்.
9. ஆகையால், தேவன் இணைத்ததை யார் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்? மனுஷன்.
10. பின்பு வீட்டிலே அவருடைய சீஷர்கள் அந்தக் காரியத்தைக்குறித்து என்ன செய்தார்கள்? மறுபடியும் அவரிடத்தில் விசாரித்தார்கள்.
11. அப்பொழுது அவர்: எவனாகிலும் தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொ ருத்தியை விவாகம்பண்ணினால், அவன் அவளுக்கு விரோதமாய் என்ன செய் கிறவனாயிருப்பான் என்றார்? விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்றார்.
12. மனைவியும் தன் புருஷனைத் தள்ளிவிட்டு, வேறொருவனை விவாகம் பண்ணினால், அவள் என்ன செய்கிறவளாயிருப்பாள் என்றார்? விபசாரஞ்செய் கிறவளாயிருப்பாள் என்றார்.
13. அப்பொழுது, யாரை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண் டுவந்தார்கள்? சிறு பிள்ளைகளை. கொண்டுவந்தவர்களை யார் அதட்டினார் கள்? சீஷர்கள்.
14. இயேசு அதைக் கண்டு, என்ன அடைந்தார்? விசனமடைந்தார். யார் என்னி டத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள் என்றார்? சிறு பிள்ளைகள். யாரைத் தடைபண்ணாதிருங்கள் என்றார்? சிறுபிள்ளைகளை. தேவனுடைய ராஜ்யம் எப்படிப்பட்டவர்களுடையது என்றார்? சிறு பிள்ளைகளுடையது என்றார்.
15. எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவன் எதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொன்னார்? தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை.
16. இயேசு சிறுபிள்ளைகளை என்ன செய்தார்? அவர்களை அணைத்துக் கொண்டு, அவர்கள் மேல் கைகளை வைத்து, அவர்களை  ஆசீர்வதித்தார்.
17. பின்பு அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, என்ன செய்தான்? அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
18. அதற்கு இயேசு: நீ யாரை நல்லவன் என்று சொல்வானேன்? என்னை (இயே சுவை). யார் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே? தேவன் ஒருவர் தவிர.
19. என்னென்ன கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார்? விபசாரஞ் செய் யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார்.
20. அதற்கு அவன் என்ன சொன்னான்? போதகரே, இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக் கொண்டிருக்கிறேன் என்றான்.
21. இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் என்ன குறைவு உண்டு என்றார்? நீ போய், உனக்கு உண்டானவைகளையெல் லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு. அப்பொழுது எதிலே உனக்குப் பொக்கி ஷம் உண்டாயிருக்கும்? பரலோகத்திலே. பின்பு எதை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார்? சிலுவையை.
22. அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, என்ன செய்தான்? மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான்.
23. அப்பொழுது இயேசு சுற்றிப் பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி: ஐசுவரிய முள்ளவர்கள் எதில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார்? தேவனுடைய ராஜ்யத்தில்.
24. சீஷர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து என்ன ஆனார்கள்? ஆச்சரி யப்பட்டார்கள். இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே, எதின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார்? ஐசுவரியத்தின்மேல்.
25. ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், எது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்? ஒட்டகம்.
26. அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு: என்னவென்று தங்களுக் குள்ளே சொல்லிக்கொண்டார்கள்? அப்படியானால் யார் இரட்சிக்கப்படக் கூடும்.
27. இயேசு அவர்களைப் பார்த்து: யாரால் கூடாதுதான் என்றார்? மனுஷரால் இது கூடாததுதான் என்றார். யாரால் கூடாததல்ல என்றார்? தேவனால் இது கூடாததல்ல என்றார். யாராலே எல்லாம் கூடும் என்றார்? தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
28. அப்பொழுது பேதுரு அவரை நோக்கி என்னவென்று சொல்லத்தொடங்கி னான்? இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான்.
29. அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித் தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்ப னையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங் களையாவது விட்டவன் எவனும்,
30. இப்பொழுது இம்மையிலே, எவைகளை அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? துன்பங்களோடேகூட நூறத்தனை யாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
31. ஆகிலும் முந்தினோர் அநேகர் யாராய் இருப்பார்கள்? பிந்தினோராய் இருப்பார்கள். பிந்தினோர் அநேகர் யாராய் இருப்பார்கள்? முந்தினோராய் இருப்பார்கள்.
32. பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகையில், இயேசு யாருக்கு முன்னே நடந்துபோனார்? சீஷர்களுக்கு முன்னே நடந்துபோனார். சீஷர்கள் எப்படிப் போனார்கள்? அவர்கள் திகைத்து, அவருக்குப் பின்னே, பயத்தோடே போனார்கள். அப்பொழுது அவர் பன்னிருவரையும் அழைத்து, எவைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத்தொடங்கினார்? தமக்குச் சம்பவிக்கப்போகிறவைகளை.
33. இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் யாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படுவார்? பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார். அவர்கள் அவரை எதற்குள்ளாகத் தீர்த்து யாரிடத் தில் ஒப்புக்கொடுப்பார்கள்? மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத் தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்.
34. அவர்கள் அவரை என்ன செய்வார்கள்? பரியாசம் பண்ணி, அவரை வாரி னால் அடித்து, அவர் மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள். ஆகிலும் எப்போது அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்? மூன்றாம் நாளிலே.
35. அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரி டத்தில் வந்து என்ன சொன்னார்கள்? போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப் போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார் கள்.
36. அவர் அவர்களை நோக்கி என்ன கேட்டார்? நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.
37. அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களுக்கு என்ன அருள் செய்ய வேண்டும் என்றார்கள்? எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒரு வன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய் யவேண்டும் என்றார்கள்.
38. இயேசு அவர்களை நோக்கி: எது உங்களுக்குத் தெரியவில்லை என்றார்? நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றார். எதை உங்களால் பெறக் கூடுமா என்றார்? நான் குடிக்கும் பாத்திரத் தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும், உங்க ளால் கூடுமா என்றார்.
39. அதற்கு அவர்கள்: என்ன சொன்னார்கள்? கூடும் என்றார்கள். இயேசு அவர் களை நோக்கி: எதிலே குடிப்பீர்கள் என்றார்? நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங் கள் குடிப்பீர்கள் என்றார். எதைப் பெறுவீர்கள் என்றார்? நான் பெறும் ஸ்நானத் தையும் நீங்கள் பெறுவீர்கள் என்றார்.
40. எதை அருளுவது என் காரியமல்ல என்றார்? ஆனாலும் என் வலதுபாரிசத் திலும் என் இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி  எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
41. மற்றப் பத்துப் பேரும் அதைக்கேட்டு, என்ன ஆனார்கள்? யாக்கோபின் மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள்.
42. அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: எதை நீங்கள் அறிந்தி ருக்கிறீர்கள் என்றார்? புறஜாதியாருக்கு அதிகாரிகளாக எண்ணப்பட்டவர்கள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவன் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந் திருக்கிறீர்கள் என்றார்.
43. உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவ னாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு யாராயிருக்கக்கடவன்? பணி விடைக்காரனாயிருக்கக்கடவன்.
44. உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் யாராயிருக்கக்கடவன்? ஊழியக்காரனாயிருக்கக் கடவன்.
45. அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், எதற்காக வந்தார் என்றார்? ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்மு டைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
46. பின்பு அவர்கள் எங்கே வந்தார்கள்? எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவ ருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவை விட்டுப் புறப்படுகிற போது, யார் வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்? திமே யுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சைகேட்டுக்கொண்டிருந்தான்.
47. அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு என்ன வென்று கூப்பிடத் தொடங்கினான்? இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான்.
48. என்னவென்று அநேகர் அவனை அதட்டினார்கள்? அவன் பேசாதிருக்கும்படி. அவனோ: என்ன என்று, முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான்? தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்.
49. இயேசு நின்று, என்ன சொன்னார்? அவனை அழைத்து வரச் சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து என்ன என்று சொன்னார்கள்? திடன் கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள்.
50. உடனே அவன் என்ன செய்தான்? தன் மேல் வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான்.
51. இயேசு அவனை நோக்கி என்ன கேட்டார்? நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்த குருடன் என்ன சொன் னான்? ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
52. இயேசு அவனை நோக்கி சொன்னது என்ன? நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் என்ன ஆனான்? பார்வையடைந் தான். அவன் பார்வையடைந்து என்ன செய்தான்? வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்.

No comments:

Post a Comment