மாற்கு – 12
1. பின்பு அவர் உவமைகளாய் அவர்களுக்குச் சொல்லத்தொடங்கினதாவது: ஒரு மனுஷன் எதை உண்டாக்கினான்? ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக் கினான். அதைச் சுற்றிலும் வேலியடைத்து, இரசத்தொட்டியை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, என்ன செய்தான்? தோட்டக்காரருக்கு அதைக் குத்தகை யாக விட்டு, புறத்தேசத்துக்குப் போயிருந்தான்.
2. தோட்டக்காரரிடத்தில் திராட்சத் தோட்டத்துக் கனிகளில் தன் பாகத்தை வாங்கிக்கொண்டுவரும்படி, எப்பொழுது அவர்களிடத்தில் ஒரு ஊழியக்கா ரனை அனுப்பினான்? பருவகாலத்திலே.
3. அவர்கள் அவனைப் பிடித்து, என்ன செய்தார்கள்? அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டார்கள்.
4. பின்பு என்ன செய்தான்? வேறொரு ஊழியக்காரனை அவர்களிடத்தில் அனுப் பினான். அவர்கள் அவனை என்ன செய்தார்கள்? அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள்.
5. மறுபடியும் என்ன செய்தான்? வேறொருவனை அனுப்பினான். அவனை அவர்கள் என்ன செய்தார்கள்? கொலைசெய்தார்கள். மறுபடியும் என்ன செய் தான்? வேறு அநேகரையும் அனுப்பினான். அதற்கு அவர்கள் என்ன செய்தார் கள்? அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள்.
6. கடைசியாக யாரை அனுப்பினான்? அவனுக்குப் பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனுக்கு அஞ்சுவார்களென்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடத்தில் அனுப்பினான்.
7. தோட்டக்காரரோ இவனைக்குறித்து என்ன சொல்லிக்கொண்டார்கள்? இவன் சுதந்தரவாளி, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சுதந்த ரம் நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
8. அவனை என்ன செய்தார்கள்? அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சத் தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள்.
9. அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை மற்றவர்க ளுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா?
10. எந்தக்கல் தலைக்கு மூலைக்கல் ஆயிற்று? வீடு கட்டுகிறவர்கள் ஆகா தென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று;
11. அது யாராலே ஆயிற்று? கர்த்தராலே ஆயிற்று. அது நம்முடைய கண்க ளுக்கு எப்படியிருக்கிறது என்று எழுதியிருக்கிற வாக்கியத்தை நீங்கள் வாசிக் கவில்லையா என்றார்? ஆச்சரியமாயிருக்கிறது.
12. இந்த உவமையை யாரைக்குறிததுச் குறித்துச்சொன்னாரென்று அவர்கள் அறிந்தார்கள்? தங்களைக் குறித்துச் சொன்னாரென்று அறிந்தார்கள். அறிந்து என்ன செய்தார்கள்? அவரைப் பிடிக்க வகைதேடினார்கள். ஆனாலும் யாருக் குப் பயந்து, அவரை விட்டுப் போய்விட்டார்கள்? ஜனத்துக்கு.
13. அவர்கள், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படிக்கு, யாரை அவரிடத்தில் அனுப்பினார்கள்? பரிசேயரிலும் ஏரோதியரிலும் சிலரை.
14. அவர்கள் வந்து: போதகரே, நீர் யாரென்று அறிந்திருக்கிறோம்? சத்தியமுள் ளவரென்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம். நீர் எப்படி தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீர்? முகதாட்சணியம் இல்லாதவராய். யாருக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ? இராயனுக்கு. நாம் என்ன செய்யலாம் என்று கேட்டார் கள்? கொடுக்கலாமோ, கொடுக்கக்கூடாதோ?
15. எதை அவர் அறிந்தார்? அவர்களுடைய மாயத்தை அவர் அறிந்தார். அவர்க ளுடைய மாயத்தை அறிந்து அவர் என்ன சொன்னார்? நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? நான் பார்க்கும்படிக்கு ஒருபணத்தை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றார்.
16. அவர்கள் எதைக் கொண்டுவந்தார்கள்? ஒரு பணத்தை. அப்பொழுது அவர்: எது யாருடையது என்று கேட்டார்? இந்த சுரூபமும் மேலெழுத்தும். அவர்கள் என்ன சொன்னார்கள்? இராயனுடையது என்றார்கள்.
17. அதற்கு இயேசு: என்ன சொன்னார்? இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் எனறார். அவர்கள் அவரைக் குறித்து என்னவானார்கள்? ஆச்சரியப்பட்டார்கள்.
18. உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிறவர்கள் யார்? சதுசேயர். அவரி டத்தில் வந்தது யார்? உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயர்.
19. போதகரே, ஒருவனுடைய சகோதரன் சந்தானமில்லாமல் தன்மனைவியை விட்டு இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை என்ன செய்ய வேண்டும்? விவாகம் பண்ண வேண்டும். விவாகம் பண்ணி என்ன செய்ய வேண்டும்? தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும். என்று; யார் எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே என்றார்கள்? மோசே.
20. இப்படியிருக்க, எத்தனை பேர் சகோதரர் இருந்தார்கள்? ஏழுபேர். யார் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனான்? மூத்த வன்.
21. இரண்டாம் சகோதரன் என்ன செய்தான்? அவளை விவாகம்பண்ணி, அவ னும் சந்தானமில்லாமல் இறந்துபோனான். மூன்றாம் சகோதரனும் என்ன செய்தான்? அப்படியேயானான்.
22. ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, என்ன செய்தார்கள்? சந்தானமில்லா மல் இறந்துபோனார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் என்னஆனாள்? இறந்துபோனாள்.
23. ஆகையால், எதில் அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? உயிர்த்தெழுதலில். ஏழுபேரும் அவளை என்னவாகக் கொண்டிருந்தார்களே என்று கேட்டார்கள்? மனைவியாக.
24. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் எதினாலே தப்பான எண் ணங் கொள்ளுகிறீர்கள்? வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமை யையும் அறியாததினாலல்லவா தப்பான எண்ணங் கொள்ளுகிறீர்கள்.
25. மரித்தோர் உயிரோடெழுந்திருக்கும் போது எவைகள் இல்லை? கொள்வ னையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் யாரைப்போல் இருப்பார்கள்? பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப்போலிருப்பார்கள்.
26. மரித்தோர் எழுந்திருப்பதைப்பற்றி: நீங்கள் எதை வாசிக்கவில்லையா என்றார்? நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாய் இருக்கிறேன் என்று, தேவன் முட்செடியைக்குறித்துச் சொல்லிய இடத்தில், மோசேயின் ஆகமத்தில் அவனுக்குச் சொன்னதை, நீங்கள் வாசிக்கவில்லையா?
27. அவர் மரித்தோருக்குத் தேவனாயிராமல், யாருக்குத் தேவனாயிருக்கிறார்? ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார். ஆகையால் நீங்கள் எப்படிப்பட்ட எண்ணங்கொள்ளுகிறீர்கள் என்றார்? மிகவும் தப்பான.
28. அவர்கள் தர்க்கம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்தான்? வேதபாரகரில் ஒருவன். அவரிடத்தில் வந்து என்ன கேட்டான்? கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான்.
29. இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எது என்றார்? இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
30. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்பு கூருவாயாக என்பதே பிரதான கற்பனை.
31. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை எது என்றார்? உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவைக ளிலும் எது வேறொன்றுமில்லை என்றார்? பெரிய கற்பனை.
32. அதற்கு வேதபாரகன் என்ன சொன்னான்? சரிதான், போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத் தவிர வேறொரு தேவன் இல்லை.
33. இது எவைகளைப் பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான்? முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப்பலத்தோ டும் அவரிடத்தில் அன்புகூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப் பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான்.
34. அவன் விவேகமாய் உத்தரசொன்னதை இயேசு கண்டு நீ எதுக்குத் தூரமா னவனல்ல என்றார்? தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்றார். அதன் பின்பு ஒருவரும் அவரிடத்தில் எதுக்குத் துணியவில்லை? யாதொரு கேள்வியுங் கேட்கத் துணியவில்லை.
35. இயேசு தேவாலயத்திலே உபதேசம் பண்ணுகையில், அவர் யாரென்று எப்படிச் சொல்லுகிறீர்கள் என்றார்? கிறிஸ்து தாவீதின் குமாரனென்று வேத பாரகர் எப்படிச் சொல்லுகிறார்கள்?
36. நான் யாரை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே? உம்முடைய சத்துருக்களை.
37. தாவீதுதானே அவரை யாரென்று சொல்லியிருக்க அவனுக்கு அவர் குமார னாயிருப்பது எப்படி என்றார்? ஆண்டவரென்று சொல்லியிருக்க. அநேக ஜனங் கள் அவருடைய உபதேசத்தை எப்படிக் கேட்டார்கள்? விருப்பத்தோடே கேட் டார்கள்.
38. பின்னும் அவர் உபதேசம்பண்ணுகையில் அவர்களை நோக்கி யாரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என்றார்? நீண்ட அங்கிகளைத் தரித்துக் கொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வந்தனங்களை அடையவும்,
39. ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்து களில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
40. விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்டஜெபம் பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் எதை அடைவார் கள் என்றார்? அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்.
41. இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, எதைப் பார்த்துக் கொண்டிருந்தார்? ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஐசுவரியவான்கள் அநேகர் எவ்வளவு போட்டார் கள்? அதிகமாய்ப் போட்டார்கள்.
42. ஏழையான ஒரு விதவையும் வந்து, எதைப் போட்டாள்? ஒரு துட்டுக்குச் சரியான இரண்டு காசைப் போட்டாள்.
43. அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து சொன்னது என்ன? காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்;
44. அவர்களெல்லாரும் எதிலிருந்து எடுத்துப் போட்டார்கள்? தங்கள் பரிபூரணத் திலிருந்து எடுத்துப்போட்டார்கள். இவளோ எதை எடுத்துப் போட்டுவிட்டாள் என்றார்? தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.
No comments:
Post a Comment