லூக்கா - 7
1. அவர் எதையெல்லாம் ஜனங்களுடைய காதுகள் கேட்கும்படி சொல்லி முடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார்? தம்முடைய வார்த்தைகளை யெல்லாம்.
2. அங்கே யார் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான்? நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன்.
3. அவன் யாரைக்குறித்து கேள்விப்பட்டான்? இயேசுவைக்குறித்து. அப்போது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி யாரை அவரிடத்தில் அனுப்பினான்? யூதருடைய மூப்பரை.
4. அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைக் கருத்தாய் வேண்டிக்கொண்டு சொன்னது என்ன? நீர் இந்தத் தயவுசெய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கி றான்.
5. அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெப ஆலயத்தை யும் கட்டினான் என்றார்கள்.
6. அப்பொழுது இயேசு என்ன செய்தார்? அவர்களுடனேகூடப்போனார். வீட்டுக் குச் சமீபமானபோது, நூற்றுக்கு அதிபதி தன் சிநேகிதரை நோக்கி: நீங்கள் அவரி டத்தில் போய், சொல்லவேண்டியது என்ன என்று சொல்லி அனுப்பினான்? ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவே சிக்க நான் பாத்திரன் அல்ல;
7. நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமா வான்.
8. நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொரு வனை வாவென்றால் வருகிறான்; என் வேலைக்காரனை, இதைச் செய்யென் றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான்.
9. இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி சொன்னது என்ன? இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
10. அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, என்ன கண்டார்கள்? வியாதியாய்க்கிடந்த வேலைக்காரன் சுகமடைந்திருக்கிறதைக் கண்டார்கள்.
11. மறுநாளிலே இயேசு எங்கே போனார்? நாயீன் என்னும் ஊருக்குப் போனார். யாரெல்லாம் அவருடனேகூடப் போனார்கள்? அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள்.
12. அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, யாரை எதற்காகக் கொண்டு வந் தார்கள்? மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டு வந்தார் கள். அவன் தன் தாய்க்கு யாராய் இருந்தான்? ஒரே மகனாயிருந்தான். அவளோ யாராய் இருந்தாள்? கைம்பெண்ணாயிருந்தாள். யார் அவளுடனேகூட வந்தார் கள்? ஊராரில் வெகு ஜனங்கள்.
13. கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி சொன்னது என்ன? அழாதே.
14. கிட்டவந்து, என்ன செய்தார்? பாடையைத் தொட்டார். அதைச் சுமந்தவர்கள் என்ன ஆனார்கள்? நின்றார்கள். அப்பொழுது இயேசு என்ன சொன்னார்? வாலி பனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
15. மரித்தவன் என்ன செய்தான்? எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். இயேசு அவனை என்ன செய்தார்? அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.
16. எல்லாரும் பயமடைந்து என்ன செய்தார்கள்? மகாதீர்க்கதரிசியானவர் நமக் குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
17. இந்தச் செய்தி எங்கெல்லாம் பிரசித்தமாயிற்று? யூதேயா தேசமுழுவதி லும் சுற்றியிருக்கிற திசைகள் யாவற்றிலும் பிரசித்தமாயிற்று.
18. இவைகளையெல்லாம் யார் யாருக்கு அறிவித்தார்கள்? யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் யாரை அழைத் தான்? தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்தான்.
19. யோவான் தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து என்ன சொல்லி அனுப்பி னான்? நீங்கள் இயேசுவினிடத்திற்குப் போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான்.
20. யோவானின் சீஷர்கள் என்ன செய்தார்கள்? அந்தப்படி அவர்கள் அவரிடத் தில் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்க வேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள்.
21. அந்தச் சமயத்திலே இயேசு செய்தது என்ன? நோய்களையும் கொடிய வியா திகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குண மாக்கி, அநேகங் குருடருக்குப் பார்வையளித்தார்.
22. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.
23. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.
24. யோவானுடைய தூதர்கள் போனபின்பு அவர் யோவானைக்குறித்து ஜனங்க ளுக்குச் சொன்னது என்ன? எதைப்பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற் றினால் அசையும் நாணலையோ?
25. அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? அலங்கார வஸ்திரந்தரித்துச் செல்வமாய் வாழ்கிறவர்கள் அரசர் மாளிகைகளிலே இருக்கிறார்கள்.
26. அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
27. இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கி யத்தால் குறிக்கப்பட்டவன் இவன் தான்.
28. ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியதீர்க்கதரிசி ஒருவனுமில்லை; ஆகிலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்க ளுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
29. யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங் களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, என்ன என்று அறிக்கையிட்டார்கள்? தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள்.
30. பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ யோவானாலே எதைப் பெற வில்லை? ஞானஸ்நானம். தங்களுக்குக் கேடுண்டாக எதைத் தள்ளிவிட்டார் கள்? தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.
31. பின்னும் கர்த்தர் சொன்னது என்ன? இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடு வேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாயிருக்கிறார்கள்?
32. இவர்கள் யாருக்கு ஒப்பாயிருக்கிறார்கள்? சந்தை வெளியில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
33. யோவான்ஸ்நானன் எப்படி வந்தான்? யோவான்ஸ்நானன் அப்பம் புசியாத வனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான். அதற்கு நீங்கள் சொன்னது என்ன? அவன் பிசாசுபிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.
34. மனுஷகுமாரன் எப்படி வந்தார்? போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார். அதற்கு நீங்கள் சொன்னது என்ன? இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரிய னுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்.
35. ஆனாலும் ஞானமானது யாரால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்? அதன் பிள்ளைகளெல்லாராலும்.
36. பரிசேயரில் ஒருவன் என்னவென்று அவரை வேண்டிக்கொண்டான்? தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று. அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் என்ன செய்தார்? பிரவேசித்துப் பந்தியிருந்தார்.
37. அப்பொழுது இயேசு பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்தது யார்? அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ. அவள் எதைக் கொண்டு வந்தாள்? ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டு வந்தாள்.
38. அவள் பரிமளதைலத்தைக் கொண்டுவந்து என்ன செய்தாள்? அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்க ளைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவரு டைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
39. அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, தனக்குத்தானே சொல் லிக் கொண்டது என்ன? இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
40. இயேசு சீமோனிடம் சொன்னது என்ன? சீமோனே, உனக்கு நான் ஒரு காரி யம் சொல்லவேண்டும் என்றார். அதற்கு அவன் என்ன சொன்னான்? போதகரே, சொல்லும் என்றான்.
41. அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் எத்தனைபேர் கடன்பட்டிருந்தார்கள்? இரண்டுபேர். ஒருவன் எத்தனை வெள்ளிக்காசும் மற்றவன் எத்தனை வெள் ளிக் காசும் கொடுக்க வேண்டியதாயிருந்தது? ஒருவன் ஐந்நூறு வெள்ளிக் காசும் மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்க வேண்டியதாயிருந்தது.
42. கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் என்ன செய்தான்? கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றபோது சீமோன் சொன்னது என்ன?
43. சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான். அதற்கு இயேசு என்ன சொன்னார்? சரியாய் நிதானித்தாய் என்று சொன்னார்.
44. ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி சொன்னது என்ன? இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்க ளுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என்கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.
45. நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ, நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள்.
46. நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ, என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.
47. ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன் சொன்னது என்ன? இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூரு வான் என்ற சொன்னார்.
48. அவளை நோக்கி இயேசு சொன்னது என்ன? உன் பாவங்கள் மன்னிக்கப்பட் டது என்றார்.
49. அப்பொழுது கூடப் பந்தியிருந்தவர்கள் தங்களுக்குள்ளே என்னவென்று சொல்லிக் கொண்டார்கள்? பாவங்களை மன்னிக்கிற இவன் யார்? என்று தங்களுக்குள்ளே சொல்லிக் கொண்டார்கள்.
50. அவர் ஸ்திரீயை நோக்கி சொன்னது என்ன? உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.
No comments:
Post a Comment