லூக்கா – 8
1. பின்பு, இயேசு பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, என்ன பிரசங்கித்துவந்தார்? தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார். யார் அவரோடேகூட இருந்தார்கள்? பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள்.
2. யாரெல்லாம் அவருடனே இருந்தார்கள்? அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங் கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,
3. ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்து கொண்டு வந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.
4. எங்கிருந்து திரளான ஜனங்கள் அவரிடத்தில் வந்து கூடினார்கள்? சகல பட்டணங்களிலுமிருந்து. அப்போது, அவர் எப்படிச் சொன்னார்? உவமையாகச் சொன்னார்.
5. யார் விதையை விதைக்கப் புறப்பட்டான்? விதைக்கிறவன் ஒருவன். அவன் விதைக்கையில் சில விதை எங்கே விழுந்து மதியுண்டது? வழியருகே விழுந்து மிதியுண்டது. எவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது? ஆகாயத் துப் பறவைகள்.
6. சில விதை எதின்மேல் விழுந்தது? கற்பாறையின்மேல் விழுந்தது. அது முளைத்தபின் எதனால் உலர்ந்துபோயிற்று? அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று.
7. சில விதை எதில் விழுந்தது? முள்ளுள்ள இடங்களில் விழுந்தது. முள் கூட வளர்ந்து, அதை என்ன செய்தது? நெருக்கிப்போட்டது.
8. சில விதை எதில் விழுந்தது? நல்ல நிலத்தில் விழுந்தது. அது முளைத்து, எப்படி பலந் கொடுத்தது என்றார்? ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் என்ன செய்யக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்? கேட்கக்கடவன்.
9. அப்பொழுது அவருடைய சீஷர்கள், அவரிடத்தில் என்ன கேட்டார்கள்? இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
10. அதற்கு அவர்: எவைகளை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது? தேவ னுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை. மற்றவர்களுக்கோ, எதற்காக அவை கள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது? அவர்கள் கண்டும் காணாதவர்களா கவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக.
11. அந்த உவமையின் கருத்தாவது: விதை என்ன? தேவனுடைய வசனம்.
12. வழியருகே விதைக்கப்பட்டவர்கள் யாராய் இருக்கிறார்கள்? வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாத படிக்கு யார் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப் போடுகிறான்? பிசாசானவன்.
13. கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது எப்படி வச னத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்? சந்தோஷத்துடனே. ஆயினும் எதனால் எப்பொழுது பின்வாங்கிப் போகிறார்கள்? தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடி யினாலே, கொஞ்சக் காலமாத்திரம் விசுவாசித்து, சோதனை காலத்தில் பின் வாங்கிப் போகிறார்கள்.
14. முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறார்கள்? வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் எதனால் பலன் கொடாதிருக்கிறார்கள்? கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற் குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன் கொடாதிருக்கிறார்கள்.
15. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் என்ன செய்கிறார்கள்? வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமை யுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
16. ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை என்ன செய்யமாட்டான்? அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான். யார் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்? உள்ளே பிரவேசிக்கிறவர்கள்.
17. வெளியரங்கமாகாத இரகசியம் இருக்கிறதா? இல்லை. அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருள் இருக்கிறதா? இல்லை.
18. ஆதலால் நீங்கள் எதைக்குறித்துக் கவனியுங்கள்? கேட்கிற விதத்தைக் குறித்துக் கவனியுங்கள். யாருக்கக் கொடுக்கப்படும்? உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும். யார் நினைக்கிறதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்? இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
19. அப்பொழுது யார் அவரிடத்தில் வந்தார்கள்? அவருடைய தாயாரும் சகோ தரரும் அவரிடத்தில் வந்தார்கள். எதினாலே அவரண்டையில் அவர்கள் சேரக் கூடாதிருந்தது? ஜனக்கூட்டத்தினாலே.
20. அப்பொழுது: என்ன என்று அவருக்கு அறிவித்தார்கள்? உம்முடைய தாயா ரும் உம்முடைய சகோதரரும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள்.
21. அதற்கு அவர்: யார் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள் என்றார்? தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே.
22. பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் ஏறி: எங்கே போவோம் வாருங்கள் என்றார்? கடலின் அக்கரைக்கு. அப்படியே என்ன செய்தார்கள்? புறப்பட்டுப் போனார்கள்.
23. படவு ஓடுகையில் அவர் என்ன செய்துகொண்டிருந்தார்? நித்திரையாயிருந் தார். அப்பொழுது கடலிலே என்ன உண்டானர்? சுழல்காற்று. அவர்கள் மோசம டையத்தக்கதாய்ப் படவு எதினால் நிறைந்தது? ஜலத்தினால் நிறைந்தது.
24. அவர்கள் அவரிடத்தில் வந்து, என்ன என்று அவரை எழுப்பினார்கள்? ஐயரே, ஐயரே, மடிந்துபோகிறோம் என்று அவரை எழுப்பினார்கள். அவர் எழுந்து, என்ன செய்தார்? காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார். உடனே என்ன ஆயிற்று? அவைகள் நின்று போய், அமைதலுண்டாயிற்று.
25. அவர் அவர்களை நோக்கி: எது எங்கே என்றார்? உங்கள் விசுவாசம். அவர் கள் பயந்து ஆச்சரியப்பட்டு, என்னவென்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டார்கள்? இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல் லிக் கொண்டார்கள்.
26. பின்பு எங்கே போய்ச் சேர்ந்தார்கள்? கலிலேயாவுக்கு எதிரான கதரேனரு டைய நாட்டில் சேர்ந்தார்கள்.
27. அவர் கரையிலிறங்கினபோது, யார் அவருக்கு எதிராக வந்தான்? நெடுநா ளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும், வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனு ஷன் ஒருவன் அவருக்கு எதிராக வந்தான்.
28. அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து, சொன்னது என்ன? இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான்.
29. எதனால் அவன் அப்படிச் சொன்னான்? அந்த அசுத்தஆவி அவனை விட்டுப் போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்தஆவி அவனை என்ன செய்திருந்தது? வெகுகாலமாய் அவனைப்பிடித்தி ருந்தது. அவன் எதினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்? அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந் தும் கட்டுகளை முறித்துப் போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப் பட்டிருந்தான்.
30. இயேசு அவனை நோக்கி என்ன கேட்டார்? உன் பேர் என்னவென்று கேட் டார். அதற்கு அவன் என்ன என்று சொன்னான்? லேகியோன் என்றான். அவன் ஏன் அந்தப் பேரைச் சொன்னான்? அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந் தபடியால் அந்தப் பேரைச் சொன்னான்.
31. என்னவென்று அவைகள் அவரை வேண்டிக்கொண்டன? தங்களைப் பாதா ளத்திலே போகக்கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண் டன.
32. அவ்விடத்தில் எவைகள் கூட்டமாய் மலையிலே மேய்ந்துகொண்டிருந் தது? அநேகம் பன்றிகள். அவைகள் என்ன என்று அவரை வேண்டிக்கொண் டன? அந்தப் பன்றிகளுக்குள்போகும்படி தங்களுக்கு உத்தரவு கொடுக்கவேண் டும் என்று அவரை வேண்டிக்கொண்டன. இயேசு என்ன செய்தார்? அவைக ளுக்கு உத்தரவுகொடுத்தார்.
33. அப்படியே பிசாசுகள் என்ன செய்தன? அந்த மனுஷனைவிட்டு நீங்கி, பன்றி களுக்குள் புகுந்தன. அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் என்ன ஆனது? உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து, மாண்டது.
34. அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, என்ன செய்தார்கள்? ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள்.
35. அப்பொழுது, சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு, இயேசுவி னிடத்தில் வந்து, எதைக் கண்டு பயந்தார்கள்? பிசாசுகள் விட்டுப்போன மனு ஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக் கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
36. எதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள்? பிசாசுகள் பிடித்திருந்தவன் சொஸ்தமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்க ளுக்கு அறிவித்தார்கள்.
37. அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள திரளான ஜனங்கள் எல்லாரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, என்ன என்று அவரை வேண்டிக் கொண்டார்கள்? தங்களை விட்டுப்போகும்படி. அந்தப்படி அவர் என்ன செய் தார்? படவில் ஏறி, திரும்பிப் போனார்.
38. பிசாசுகள் நீங்கின மனுஷன் என்ன உத்தரவு கேட்டான்? அவரோடேகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான்.
39. இயேசு அவனை நோக்கி என்ன சொல்லி, அவனை அனுப்பிவிட்டார்? நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், என்ன செய்தான்? இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான்.
40. இயேசு திரும்பி வந்தபோது ஜனங்களெல்லாரும் என்ன செய்தார்கள்? அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண் டார்கள்.
41. அப்பொழுது யார் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்தான்? ஜெபஆலயத் தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன். பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி என்ன அவஸ்தையாயிருந்தாள்? மரண அவஸ் தையாயிருந்தாள்.
42. என்னவென்று அவரை வேண்டிக்கொண்டான்? தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை என்ன செய்தார்கள்? நெருக்கினார்கள்.
43. அப்பொழுது எத்தனை வருஷமாய் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ, இருந்தாள்? பன்னிரண்டு வருஷமாய்.
44. அவள் இயேசுவுக்குப் பின்னாக வந்து, என்ன செய்தாள்? அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். உடனே என்ன ஆயிற்று? அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று.
45. அப்பொழுது இயேசு: என்ன என்று கேட்டார்? என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எல்லாரும் என்ன சொன்னார்கள்? எங்களுக்குத் தெரியா தென்று. பேதுருவும் அவனுடனே கூட இருந்தவர்களும் என்ன சொன்னார்கள்? ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறார் களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.
46. அதற்கு இயேசு: எதை அறிந்திருக்கிறேன் என்றார்? என்னிலிருந்து வல் லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன். ஆதலால் யார் என்னைத் தொட்ட துண்டு என்றார்? ஒருவர்.
47. அப்பொழுது அந்த ஸ்திரீ என்ன செய்தாள்? தான் மறைந்திருக்கவில்லை யென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்க ளுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.
48. இயேசு அவளைப் பார்த்து என்ன சொன்னார்? மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.
49. அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி என்ன சொன்னான்? உம்மு டைய குமாரத்தி மரித்துப் போனாள், போதகரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றான்.
50. இயேசு அதைக் கேட்டு என்ன சொன்னார்? பயப்படாதே; விசுவாசமுள்ளவ னாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்.
51. அவர் வீட்டில் வந்தபோது, யாரைத் தவிர வேறொருவரையும் உள்ளே வரவொட்டவில்லை? பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும் தவிர.
52. எல்லாரும் அழுது அவளைக்குறித்துத் துக்கங்கொண்டாடுகிறதைக் கண்டு என்ன சொன்னார்? அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, நித்திரை யாயிருக்கிறாள் என்றார்.
53. எதனால் அவரைப் பார்த்து நகைத்தார்கள்? அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
54. எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, என்ன செய்தார்? அவளு டைய கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.
55. அப்பொழுது அவள் உயிர் என்ன ஆனது? திரும்ப வந்தது. உடனே அவள் என்ன ஆனாள்? எழுந்திருந்தாள். இயேசு என்ன கட்டளையிட்டார்? அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார்.
56. யார் ஆச்சரியப்பட்டார்கள்? அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது இயேசு அவர்களுக்கு என்ன கட்டளையிட்டார்? நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
No comments:
Post a Comment