Sunday, August 2, 2015

லூக்கா - 6

லூக்கா - 6
1. இயேசு எப்போது பயிர்வழியே நடந்து போனார்? பஸ்காபண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, அவர் பயிர் வழியே நடந்து போனார். அப்போது, அவருடைய சீஷர்கள் என்ன செய்தார்கள்? கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித்தின்றார்கள். 
2. பரிசேயரில் சிலர் அவர்களை நோக்கி என்ன கேட்டார்கள்? ஓய்வுநாளில் செய்யத்தகாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
3. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக என்ன சொன்னார்? தாவீதும் அவ னோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில் லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்மாத்திரமே தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைக் கேட்டு வாங்கி, 
4. தான் புசித்ததுமன்றி, தன்னுடனே கூட இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சொன்னார்.
5. மேலும் யார் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்? மனுஷ குமாரன்.
6. வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்து என்ன செய் தார்? உபதேசித்தார். அங்கே இருந்தது யார்? சூம்பின வலதுகையையுடைய ஒரு மனுஷன் இருந்தான். 
7. அப்பொழுது யார் அவரிடத்தில் குற்றம் பிடிக்கும்படி, ஓய்வுநாளில் சொஸ்த மாக்குவாரோ என்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்? வேதபாரகரும் பரிசேயரும்.
8. அவர்களுடைய சிந்தனைகளை அறிந்தது யார்? இயேசு. அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி என்ன சொன்னார்? நீ எழுந்து, நடுவே நில் என்றார். அவன் என்ன செய்தான்? எழுந்து நின்றான்.
9. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி என்ன கேட்டார்? நான் உங்களிடத் தில் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய் வதோ, ஜீவனைக்காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்று கேட்டார்.
10. அவர்களெல்லாரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனுஷனை நோக்கி என்ன சொன்னார்? உன் கையை நீட்டு என்றார். அவன் என்ன செய்தான்? அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை என்ன ஆயிற்று? மறு கையைப்போலச் சொஸ்தமாயிற்று.
11. அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்களோ மூர்க்கவெறிகொண்டு, இயே சுவை என்ன செய்யலாமென்று ஒருவரோடொருவர் ஆலோசித்தார்கள். 
12. அந்நாட்களிலே, அவர் எதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார்? ஜெபம் பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறினார். மலையின்மேல் ஏறி என்ன செய் தார்? இராமுழுவதும் தேவனை நோக்கி: ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
13. பொழுது விடிந்தபோது, அவர் என்ன செய்தார்? அவர் தம்முடைய சீஷர் களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்து கொண்டார். அந்த பன்னிரண்டு பேருக்கு என்ன என்று பேரிட்டார்? அவர்களுக்கு அப்போஸ் தலர் என்று பேரிட்டார்.
14. அவர்கள் யார்? பேதுரு என்று தாம் பேரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு,
15. மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன், 
16. யாக்கோபின் சகோதரனாகிய  யூதா,  துரோகியான  யூதாஸ்காரியோத்து  என்பவர்களே. 
17. பின்பு அவர் அவர்களுடனேகூட என்ன செய்தார்? இறங்கி, சமனான ஒரு இடத்திலே நின்றார். அங்கே இருந்தது யார்? அவருடைய சீஷரில் அநேகம் பேரும், யூதேயா தேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும், எருசலேம்  நகரத்தி லிருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்திலிருந்தும் வந்த வர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள். எதற்காக வந்திருந்தார்கள்? அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும், தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும் வந்திருந்தார்கள்.
18. வேறு யாரெல்லாம் வந்து ஆரோக்கியமடைந்தார்கள்? அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள். 
19. அவரிடத்திலிருந்து எது புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கினது? வல்லமை.  அதனாலே, ஜனங்கள் யாவரும் என்ன செய்தார்கள்? அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள்.
20. அப்பொழுது அவர் யாரை நோக்கிப் பார்த்தார்? தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்தார். தரித்திரராகிய நீங்கள் யார்? தரித்திரராகிய நீங்கள் பாக்கிய வான்கள். தேவனுடைய ராஜ்யம் யாருடையது? தரித்திரராகிய (பாக்கியவான் கள்) உங்களுடையது.
21. இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் யார்? பாக்கியவான்கள். பசியாயிருக் கிற நீங்கள் என்ன ஆவீர்கள்? திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங் கள் யார்? பாக்கியவான்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் இனி என்ன செய்வீர் கள்? இனி நகைப்பீர்கள்.
22. மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளி விடும்போது நீங்கள் யாராயிருப்பீர்கள்? பாக்கியவான்களாயிருப்பீர்கள். 
23. அந்நாளிலே நீங்கள் என்ன செய்யுங்கள்? சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள். பரலோகத்தில் உங்கள் பலன் எப்படியிருக்கும்? மிகுதியாயிருக்கும். அவர்களு டைய பிதாக்கள் யாருக்கும் அப்படியே செய்தார்கள்? தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.
24. யாருக்கு ஐயோ? ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ. எதை நீங்கள் அடைந்து தீர்ந்தது? உங்கள் ஆறுதலை நீங்கள் அடைந்து தீர்ந்தது.
25. யாருக்கு ஐயோ? திருப்தியுள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு ஐயோ. இனி எப்படி இருப்பீர்கள்? பசியாயிருப்பீர்கள். யாருக்கு ஐயோ? இப்பொழுது நகைக் கிற உங்களுக்கு ஐயோ. இனி என்ன செய்வீர்கள்? இனி துக்கப்பட்டு அழுவீர் கள்.
26. எல்லா மனுஷரும் உங்களைக்குறித்து எப்படிப் பேசும்போது உங்களுக்கு ஐயோ? புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ. அவர்கள் பிதாக்கள் யாருக்கும் அப்படியே செய்தார்கள்? கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.
27. யாருக்கு நான் சொல்லுகிறேன்? எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன். யாரைச் சிநேகியுங்கள்? உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள். யாருக்கு நன்மை செய்யுங்கள்? உங்களைப் பகைக்கிறவர்க ளுக்கு நன்மைசெய்யுங்கள்.
28. யாரை ஆசீர்வதியுங்கள்? உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள். யாருக்காக ஜெபமபண்ணுங்கள்? உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்.
29. உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு என்ன செய்? மறு கன்னத்தை யும் கொடு. உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு என்ன செய்? உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே.
30. உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் என்ன செய்? கொடு. உன்னுடையதை எடுத்துக் கொள்ளுகிறவனிடத்தில் என்ன செய்? அதைத் திரும்பக் கேளாதே.
31. ஒருவனுக்கு நீங்கள் எப்படிச் செய்யுங்கள்? மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக் குச் செய்யுங்கள். 
32. யாரையே நீங்கள் சிநேகித்தால் உங்களுக்கு பலன் என்ன? உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் யாரைச் சிநேகிக்கிறார்களே? தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே. 
33. யாருக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்குப் பலன் என்ன? உங்க ளுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? யாரும் அப்படிச் செய்கிறார்களே? பாவிகளும் அப்படிச் செய்கி றார்களே. 
34. என்னவென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பக் கொடுப்பார்களென்று. திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படி யாக.   யார் யாருக்குக் கடன் கொடுக்கிறார்களே? பாவிகளும் பாவிகளுக்குக் கடன்கொடுக்கிறார்களே. 
35. உங்கள் சத்துருக்களுக்கு என்ன செய்யுங்கள்? உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள். அப்பொழுது உங்கள் பலன் எப்படியிருக்கும்? மிகுதியாயிருக்கும். யாருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்?  உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளா யிருப்பீர்கள். நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிற வர் யார்? உன்னதமானவர்.
36. ஆகையால் யாரைப்போல நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்? உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல.
37. யாரைக் குற்றவாளிகளென்று  தீர்க்காதிருங்கள்? மற்றவர்களை. எப்பொ ழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்? மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருக்கும் போது. யாரை ஆக்கினைக்குள்ளாகும் படி தீர்க்காதிருங்கள்? மற்றவர்களை. எப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள் ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்? மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கா திருக்கும் போது. யாரை விடுதலைபண்ணுங்கள்? மற்றவர்களை. எப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்? மற்றவர்களை நீங்கள் விடுதலை பண்ணும் போது.
38. எப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்? கொடுங்கள், அப்பொழுது உங்க ளுக்கும் கொடுக்கப்படும். எப்படி உங்கள் மடியிலே போடுவார்கள்? அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள். எந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்? நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.
39. பின்னும் அவர் எதை அவர்களுக்குச் சொன்னார்? ஒரு உவமையை அவர் களுக்குச் சொன்னார். யாருக்கு யார் வழிகாட்டக்கூடுமோ? குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் எதில் விழுவார்கள் அல்லவா? பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?
40. சீஷன் யாருக்கு மேற்பட்டவனல்ல? தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல. தேறினவன் எவனும் யாரைப் போலிருப்பான்? தன் குருவைப்போலிருப்பான்.
41. நீ எதை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிற தென்ன? உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல்.
42. அல்லது நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோத ரனை நோக்கி எதைச் சொல்லுவதெப்படி? சகோதரனே, நான் உன் கண்ணிலி ருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்கா ரனே! முன்பு எதை எடுத்துப்போடு? உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத் துப்போடு. பின்பு எதை எடுத்துப்போட வகைபார்ப்பாய்? உன் சகோதரன் கண் ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய். 
43. நல்ல மரமானது எதைக் கெடாது? கெட்ட கனிகொடாது. கெட்ட மரமானது எதைக் கொடாது? நல்ல கனிகொடாது. 
44. அந்தந்த மரம் எதினால் அறியப்படும்? அதனதன் கனியினால் அறியப்படும். முட்செடிகளில் எதைப் பறிக்கிறதுமில்லை? அத்திப்பழங்களைப் பறிக்கிறது மில்லை. நெருஞ்சிச் செடியில் எதைப் பறிக்கிறதுமில்லை? திராட்சப்பழங்க ளைப் பறிக்கிறதுமில்லை.
45. நல்ல மனுஷன் எதிலிருந்து எதை எடுத்துக் காட்டுகிறான்? தன் இருதயமா கிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான். பொல்லாத மனுஷன் எதிலிருந்து எதை எடுத்துக்காட்டுகிறான்? தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக் காட்டுகிறான். இருதயத்தின் நிறைவினால் எது பேசும்? அவனவன் வாய் பேசும்.
46. என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், எதின்படி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன? நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற் போகிறதென்ன? 
47. என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கி றவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குச் காண்பிப்பேன்? 
48. ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டு கிற மனுஷனுக்கு  ஒப்பாயிருக்கிறான். பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை என்ன செய்யக் கூடாமற்போயிற்று? அசைக் கக் கூடாமற்போயிற்று. ஏன்? ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபா ரம் போடப்பட்டிருந்தது.
49. என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ யாருக்கு ஒப்பாயிருக்கிறான்? அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவ னுக்கு ஒப்பாயிருக்கிறான். நீரோட்டம் அதின்மேல் மோதினவுடனே அது என்ன ஆனது? விழுந்தது. விழுந்து என்ன ஆனது என்றார்? முழுவதும் அழிந் தது என்றார்.

No comments:

Post a Comment