மத்தேயு – 12
1. அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் எதன்வழியே போனார்? பயிர்வ ழியே போனார். யார் பசியாயிருந்தார்கள்? அவருடைய சீஷர்கள். அவரு டைய சீஷர்கள் என்ன செய்தார்கள்? கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார் கள். அவருடைய சீஷர்கள் ஏன் கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார் கள்? பசியாயிருந்ததினால் கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்.
2. பரிசேயர் எதைக்கண்டு, இயேசுவை நோக்கினார்கள்? பரிசேயர், இயேசு வின் சீஷர்கள் கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கியதைக் கண்டு இயே சுவை நோக்கினார்கள். பரிசேயர் இயேசுவிடம் சொன்னது என்ன? இதோ, ஓய் வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார் கள்.
3. இயேசு நீங்கள் எதை செய்யவில்லையா என்கிறார்? தாவீதும் அவனோடி ருந்தவர்களும் பசியாயிருந்த போது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா என்கிறார்.
4. தாவீது யாருடைய வீட்டில் பிரவேசித்தான்? தேவனுடைய வீட்டில் பிரவே சித்தான். யார் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்க ளைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்கள்? ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோ டிருந்தவர்களும் புசித்தார்கள்.
5. அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை என்னவாக்கினாலும், குற்றமில்லாதிருக்கிறார்கள்? தேவாலயத் தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும், குற்றமில்லாதி ருக்கிறார்கள்.
6. தேவாலயத்திலும் பெரியவர் எங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்? தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்.
7. பலியையல்ல எதையே விரும்புகிறேன் என்கிறார்? பலியையல்ல இரக்கத் தையே விரும்புகிறேன் என்கிறார். எப்பொழுது குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்? பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.
8. ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறவர் யார்? மனுஷகுமாரன்.
9. அவர் அவ்விடம் விட்டுப்போய், எங்கே பிரவேசித்தார்? அவர்களுடைய ஜெப ஆலயத்தில் பிரவேசித்தார்.
10. சூம்பின கையையுடைய மனுஷன் எங்கே இருந்தான்? ஜெப ஆலயத்தில். அப்பொழுது இயேசுவின்மேல் குற்றஞ்சாட்டும் படிக்கு என்ன கேட்டார்கள்? ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள்.
11. உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து, அது எந்தநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ? என்றார்? ஓய்வுநாளில்.
12. எதைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவு விசேஷித்திருக்கிறான்? ஆட்டைப்பார்க்கிலும். ஓய்வுநாளிலே நன்மைசெய்வது நியாயமா? நியாயந்தான்.
13. பின்பு இயேசு அந்த மனுஷனை நோக்கி சொன்னது என்ன? உன் கையை நீட்டு என்றார். சூம்பின கையையுடைய மனுஷன் என்ன செய்தான்? அவன் கையை நீட்டினான். அவனுடைய கை என்ன ஆனது? அவன் கை மறுகை யைப்போல் சொஸ்தமாயிற்று.
14. அப்பொழுது பரிசேயர் என்ன செய்தார்கள்? அப்பொழுது, பரிசேயர் வெளியே போய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனை பண்ணினார்கள்.
15. இயேசு எதை அறிந்தார்? பரிசேயர் அவரைக் கொலைசெய்யும்படி அவ ருக்கு விரோதமாய் ஆலோசனை பண்ணியதை அறிந்தார். இயேசு அதை அறிந்து என்ன செய்தார்? அவ்விடம்விட்டு விலகிப்போனார். இயேசுவுக்குப் பின்சென்றது யார்? திரளான ஜனங்கள். யாரையெல்லாம் இயேசு சொஸ்த மாக்கினார்? அவர்களையெல்லாம் அவர் சொஸ்தமாக்கினார்.
16. யாரைப் பிரசித்தம்பண்ணாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்? தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
17. எந்த தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது? ஏசாயா.
18. யார் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன்? நான் (பிதா). யார் ஆத்துமா வுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்? என் (பிதா) ஆத்துமாவுக்கு. யார் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன்? என் (பிதாவின்) ஆவியை. அவர் யாருக்கு நியாயத்தை அறிவிப்பார்? புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்.
19. என்ன செய்ய மாட்டார்? வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரல் இடவுமாட்டார். எதை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை? அவருடைய சத்தத்தை.
20. அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும் என்ன செய்வார்? நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக் காமலும் இருப்பார்.
21. அவருடைய நாமத்தின்மேல் யார் நம்பிக்கையாயிருப்பார்கள்? புறஜாதி யார்.
22. அப்பொழுது அவரிடத்தில் கொண்டுவரப்பட்டது யார்? பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன். இயேசு அவனை என்ன செய்தார்? ஊமையு மானவன் பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார்.
23. ஜனங்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு சொன்னதென்ன? தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள்.
24. பரிசேயர் அதைக்கேட்டு சொன்னதென்ன? இவன் பிசாசுகளின் தலைவ னாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள்.
25. இயேசு யாருடைய சிந்தனைகளை அறிந்தார்? பரிசேயருடைய சிந்தனை களை அறிந்தார். தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்ய மும் என்னவாகும்? பாழாய்ப்போம். தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக் கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் என்னவாகும்? நிலைநிற்கமாட்டாது.
26. யாரை யார் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்கும்? சாத்தானைச் சாத்தான் துரத்தினால். எப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்.
27. நான் யாராலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவை களை யாராலே துரத்துகிறார்கள்? பெயெல்செபூலினாலே. ஆகையால், யார் உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்? உங்கள் பிள்ளைகளே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.
28. நான் யாருடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறார்? நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறார். எதனால் தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறது? நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறது.
29. அன்றியும், யாரை முந்திக் கட்டினாலொழியப் அவனுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும். ஒருவன் எப்பொழுது பலவானுடைய வீட்டைக் கொள்ளையிடலாம்? பலவானை கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.
30. எனக்கு விரோதமாயிருக்கிறவன் யார்? என்னோடே இராதவன். என்னோடே சேர்க்காதவன் என்னவாகிறான்? சிதறடிக்கிறான்.
31. மனுஷருக்கு மன்னிக்கப்படுவது எவைகள்? எந்தப் பாவமும் எந்தச் தூஷ ணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும். மனுஷருக்கு எது மன்னிக்கப்படுவ தில்லை? ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.
32. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படுமா? மன்னிக்கப்படும். எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது அவனுக்கு மன்னிக்கப்படுமா? மன்னிக் கப்படுவதில்லை. ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது எப்பொ ழுது மன்னிக்கப்படுவதில்லை? அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
33. மரம் நல்லதென்றால், அதின் கனி என்னதென்று சொல்லவேண்டும்? அதின் கனியும் நல்லதென்று சொல்லவேண்டும். மரம் கெட்டதென்றால், அதின் கனி என்னதென்று சொல்லவேண்டும்? அதின் கனியும் கெட்டதென்று சொல்லவேண்டும். மரமானது எதினால் அறியப்படும்? மரமானது அதின் கனியினால் அறியப்படும்.
34. விரியன்பாம்புக் குட்டிகளே நீங்கள் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறீர்கள்? பொல்லாதவர்களாயிருக்கிறீர்கள். பொல்லாதவர்கள் எதைப் பேசுவது எப்படி? பொல்லாதவர்கள் நலமானவைகளைப் பேசுவது எப்படி. இருதயத்தின் நிறைவினால் பேசுவது எது? வாய்.
35. நல்ல மனுஷன் எதிலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான்? நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத் துக் காட்டுகிறான். பொல்லாத மனுஷன் எதிலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்? பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலி ருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.
36. மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து எந்த நாளில் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? நியாயத் தீர்ப்பு நாளில்.
37. எதினாலே நீ நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்? உன் வார்த்தைகளினால். எதினாலே நீ குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய்? உன் வார்த்தைகளினால்.
38. அப்பொழுது, போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகி றோம் என்றது யார்? வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர்.
39. இயேசு யார் அடையாளத்தைத் தேடுகிறார்கள் என்கிறார்? இந்தப் பொல் லாத விபசாரச் சந்ததியார். யாருடைய அடையாளமேயன்றி வேறே அடையா ளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று இயேசு சொல்லுகிறார்? யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்.
40. யோனா எத்தனை நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தான்? இரவும் பகலும் மூன்று நாள். யார் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்? மனுஷகுமாரன்.
41. யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பியவர்கள் யார்? நினிவே பட்டணத்தார். இதோ, இங்கே இருக்கிறது யார்? யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே யார் இந்தச் சந்ததியா ரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்? நினிவே பட்ட ணத்தார்.
42. தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து யாருடைய ஞானத் தைக் கேட்க வந்தாள்? சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, இங்கே இருக்கிறது யார்? சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கி றார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே யார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்? தென்தேசத்து ராஜஸ்திரீ.
43. அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்பட்டு எங்கே செய்கிறது? வறண்ட இடங்களில் அலைந்து இளைப்பாறுதல் தேடுகிறது.
44. அசுத்த ஆவி வறண்ட இடங்களில் அலைந்து இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல் எங்கே போகிறது? நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும் பிப்போவேன் என்று சொல்லுகிறது. அங்கே வந்து, அந்த வீடு எப்படி இருக்கக் காண்கிறது? வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக் காண்கிறது.
45. அந்த வீடு வெறுமையாகவும் பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாயும் இருக்கக் கண்டு என்ன செய்கிறது? திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியி ருக்கும். அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை எப்படியிருக்கும்? அதிக கேடுள்ளதாயிருக்கும். அப்படியே யாருக்கு சம்பவிக்கும்? இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும்.
46. இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில அவரிடத்தில் பேசவேண்டு மென்று வெளியே நின்றவர்கள் யார்? இயேசுவுடைய தாயாரும் சகோதரரும்.
47. அப்பொழுது ஒருவன் இயேசுவை நோக்கி சொன்னது என்ன? உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான்.
48. தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு இயேசு பிரதியுத்தரமாக சொன்னது என்ன? என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொன்னார்.
49. இயேசு தம்முடைய கையை யாருக்கு நேராக நீட்டினார்? தமது சீஷர்க ளுக்கு நேராக நீட்டினார். தமது சீஷர்களுக்கு நேராக நீட்டி என்ன சொன்னார்? இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே என்றார்.
50. யாருடைய சித்தத்தின்படி செய்கிறவனே எனக்குச் சகோதரனும் சகோதரி யும் தாயுமாய் இருக்கிறான் என்றார்? பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரி யும் தாயுமாய் இருக்கிறான் என்றார்.