Sunday, February 1, 2015

மத்தேயு – 8

மத்தேயு – 8
1. இயேசு மலையிலிருந்து இறங்கின போது, அவருக்குப்பின் சென்றவர்கள் யார்? திரளான ஜனங்கள். 
2. அப்பொழுது யார் வந்து இயேசுவைப் பணிந்து கொண்டான்? குஷ்டரோகி ஒருவன். குஷ்டரோகி ஆண்டவரைப் பணிந்து அவரிடம் கேட்டது என்ன? ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.
3. இயேசு அவனை என்ன செய்தார்? இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டார். இயேசு தமது கையை நீட்டி குஷ்டரோகியைத் தொட்டு சொன்னது என்ன? எனக்கு சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே என்ன ஆனது?  உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.
4. இயேசு குஷ்டரோகியை நோக்கி, நீ எதற்கு எச்சரிக்கையாயிரு என்றார்? இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு என்றார். ஆயினும், எதைச் செய் என்றார்?  அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக்காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார்.
5. இயேசு கப்பர்நகூமிலே பிரவேசித்தபோது, அவரிடத்தில் வந்தது யார்? நூற்றுக்கு அதிபதி.
6. நூற்றுக்கு அதிபதி இயேசுவிடம் வேண்டிக்கொண்டது என்ன? ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப் படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
7. இயேசு நூற்றுக்கு அதிபதியிடம் சொன்னது என்ன? நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார்.
8. நூற்றுக்கு அதிபதி யாரிடம் நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல என்றான்? இயேசுவிடம். நூற்றுக்கு அதிபதி இயேசுவிடம் எப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்றான்? ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்றான்.
9. நான் எதற்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு? நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு. நான் ஒருவனைப் போ என்றால் அவன் என்ன செய்கிறான்? போகிறான். நான் ஒருவனை வா என்றால் அவன் என்ன செய்கிறான்? வருகிறான். என் வேலைக்காரனை இதைச் செய் என்றால் அவன் என்ன செய்கிறான்? செய்கிறான்.
10. இயேசு இதைக் கேட்டு என்ன ஆனார்? ஆச்சரியப்பட்டார். இயேசு தமக்குப் பின் செல்லுகிறவர்களை நோக்கிச் சொன்னது என்ன? இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
11. அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் யாரோடே பந்தியிருப்பார்கள்? ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்.
12. ராஜ்யத்தின் புத்திரர் எங்கே தள்ளப்படுவார்கள்? ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள். புறம்பான இருளிலே என்ன உண்டா யிருக்கும்? அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
13. பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி சொன்னது என்ன? நீ போக லாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகை யிலே நடந்தது என்ன? அவன் வேலைக்காரன் சொஸ்தமானான் என்றார்.
14. இயேசு யார் வீட்டிற்கு வந்தார்? பேதுரு வீட்டிற்கு வந்தார். இயேசு பேதுரு வீட்டிலே என்ன கண்டார்? பேதுருவின் மாமி ஜுரமாய்க் கிடக்கிறதைக் கண்டார்.
15. இயேசு யார் கையைத் தொட்டார்? பேதுரு மாமியின் கையைத் தொட்டார். இயேசு பேதுரு மாமியின் கையைத் தொட்டவுடனே என்ன ஆயிற்று? ஜுரம் அவளை விட்டு நீங்கிற்று. ஜுரம் நீங்கியவுடன் அவள் என்ன செய்தாள்? அவள் எழுந்திருந்து, அவர்களுக்குப் பணிவிடை செய்தாள்.
16. அஸ்தமனமானபோது, யாரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்? பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். இயேசு எதைத் துரத்தினார்? அந்த ஆவிகளைத் துரத்தினார். இயேசு எதினாலே அந்த ஆவிகளைத் துரத்தினார்? தமது வார்த்தையினாலே துரத்தினார். இயேசு யாரை சொஸ்தமாக்கினார்? பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்.
17. இயேசு யாருடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டார்? நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டார். இயேசு யாருடைய நோய்களைச் சுமந்தார்? நம்முடைய நோய்களைச் சுமந்தார். ஏசாயா தீர்க்கதரிசி உரைத்தது என்ன? அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்.
18. பின்பு, இயேசு எதைக் கண்டு, அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார்? திரளான ஜனங்கள் தம்மைச் சூழ்ந்திருக்கிறதை இயேசு கண்டு, அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார்.
19. அப்பொழுது அவரிடத்தில் வந்தது யார்? வேதபாரகன் ஒருவன். வேதபார கன் ஒருவன் வந்து இயேசுவிடம் சொன்னது என்ன? போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
20. நரிகளுக்கு என்ன உண்டு? குழிகள். ஆகாயத்துப் பறவைகளுக்கு என்ன உண்டு? கூடுகள். யாருக்கு தலைசாய்க்க இடமில்லை என்றார்? மனுஷகுமார னுக்கு. வேதபாரகனுக்கு இயேசு சொன்னது என்ன? நரிகளுக்கு குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்கு கூடுகளுமம் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
21. அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி சொன்னது என்ன? ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
22. அதற்கு இயேசு சீஷனிடம் சொன்னது என்ன? மரித்தோர் தங்கள் மரித் தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.
23. இயேசு படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் என்ன செய்தார்கள்? இயேசு படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள்.
24. அப்பொழுது கடலில் எப்படிப்பட்ட பெருங்காற்று உண்டாயிற்று? அப்பொ ழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று. அப்பொழுது இயேசு என்ன செய்துகொண்டிருந்தார்? அப்பொ ழுது இயேசு நித்திரையாயிருந்தார்.
25. அப்பொழுது சீஷர்கள் என்ன செய்தார்கள்? இயேசுவை எழுப்பினார்கள். சீஷர்கள் இயேசுவை எழுப்பி சொன்னது என்ன? ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள்.
26. இயேசு சீஷாகளைப் பார்த்து சொன்னது என்ன? அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்றார். இயேசு என்ன செய்தார்? காற்றையும் கடலையும் அதட்டினார். இயேசு காற்றையும் கடலையும் அதட்டிய உடனே என்ன ஆயிற்று? மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
27. அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு சொன்னது என்ன? இவர் எப்படிப்பட்ட வரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள். 
28. அவர் அக்கரையிலே எந்த நாட்டிற்கு வந்தார்? கெர்கெசேனர் நாடு. அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, யார் அவருக்கு எதிராக வந்தார்கள்? பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர். பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் எங்கிருந்து புறப்பட்டு வந்தார்கள்? பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு வந்தார்கள். அவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தார்கள்? அவர்கள் மிகவும் கொடியராயிநருந்தார்கள். ஏன் அந்த வழியாக ஒருவனும் நடக்கக் கூடாதி ருந்தது? அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால், அந்த வழியாக ஒருவ னும் நடக்கக்கூடாதிருந்தது.
29. பிரேதக்கல்லறையிலிருந்து புறப்பட்டு வந்த பிசாசு பிடித்திருந்த அந்த இரண்டுபேர் இயேசுவை யார் என்று அழைத்தார்கள்? இயேசுவே, தேவனுடைய குமாரனே என்றார்கள். அவர்கள் இயேசுவை என்னவென்று கேட்டார்கள்? எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள்.
30. அவர்களுக்குக் கொஞ்சதூரத்தில் எவைகள் மேய்ந்து கொண்டிருந்தன? அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன.
31. பிசாசுகள் இயேசுவிடம் என்னவென்று வேண்டிக்கொண்டன? நீர் எங்க ளைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிக்கூட்டத்தில் போகும்படி உத்தரவு கொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன.
32. அதற்கு இயேசு என்ன சொன்னார்? போங்கள் என்றார். பிசாசுகள் என்ன செய்தன? பிசாசுகள் புறப்பட்டு, பன்றிக்கூட்த்தில் போயின. அப்பொழுது பன்றிக்கூட்டமெல்லாம் என்ன ஆயின? பன்றிக்கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, ஜலத்தில் மாண்டுபோயின.
33. பன்றிகளை மேய்த்தவர்கள் என்ன செய்தார்கள்? பன்றிகளை மேய்த்தவர் கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் சங்கதிகள் எல்;லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்குச் சம்பவித்தவைகளையும் அறிவித்தார்கள்.
34. அப்பொழுது அந்தப் பட்டணத்தார் என்ன செய்தார்கள்? அந்தப் பட்டணத் தார் யாவரும் இயேசுவுக்கு எதிர் கொண்டுவந்து, அவரைக் கண்டார்கள். அவர் கள் இயேசுவை என்னவென்று வேண்டிக்கொண்டார்கள்? தங்கள் எல்லைக ளைவிட்டுப் போகும்படி இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.

No comments:

Post a Comment