மத்தேயு – 9
1. அப்பொழுது, அவர் படவில் ஏறி, எங்கே வந்தார்? அப்பொழுது, அவர் படவில் ஏறி, இக்கரைப்பட்டுத் தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.
2. அங்கே யாரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்? படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களி டத்தில் என்ன கண்டார்? விசுவாசம். இயேசு திமிர்வாதக்காரனை நோக்கி சொன்னது என்ன? மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப் பட்டது என்றார்.
3. அப்பொழுது வேதபாரகரில் சிலர் என்ன சொல்லிக் கொண்டார்கள்? இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக் கொண்டார்கள்.
4. இயேசு எதை அறிந்தார்? வேதபாரகரின் நினைவுகளை அறிந்தார். நீங்கள் உங்கள் இருதயங்களில் எவைகளைச் சிந்திக்கிறீர்கள்? பொல்லாதவைகள். இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து சொன்னதென்ன? நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?
5. இயேசு அவர்களிடம் எது எளிது என்று கேட்டார்? உன் பாவங்கள் மன்னிக் கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?
6. பூமியிலே பாவங்களை மன்னிக்க யாருக்கு அதிகாரம் உண்டு? மனுஷ குமாரனுக்கு. நீங்கள் எதை அறியவேண்டும் என்று இயேசு சொல்லுகிறார்? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென் பதை நீங்கள் அறியவேண்டும் என்று இயேசு சொல்லுகிறார். இயேசு திமிர் வாதக்காரனை நோக்கி சொல்வது என்ன? நீ எழுந்து, உன் படுக்கையை எடுத் துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.
7. உடனே திமிர்வாதக்காரன் என்ன செய்தான்? உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப் போனான்.
8. இதைக்கண்டு ஜனங்கள் என்ன ஆனார்கள்? ஆச்சரியப்பட்டார்கள். ஜனங் கள் ஆச்சரியப்பட்டு என்ன செய்தார்கள்? மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத் தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
9. இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில் யாரைக் கண்டார்? மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டார். எங்கே கண்டார்? அயத்துறை யில் உட்கார்ந்திருக்கக் கண்டார். இயேசு மத்தேயுவைக் கண்டு அவனிடம் சொன்னது என்ன? எனக்குப் பின்சென்றுவா என்றார். மத்தேயு என்ன செய் தான்? மத்தேயு எழுந்து, இயேசுவுக்குப் பின்சென்றான்.
10. பின்பு இயேசு வீட்டிலே எங்கு இருந்தார்? போஜனபந்தியில் இருந்தார். இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தவர்கள் யார்? அநேக ஆயக்காரரும் பாவிகளும்.
11. பரிசேயர் அதைக் கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி என்ன கேட்டார் கள்? உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகி றது என்னவென்று கேட்டார்கள்.
12. இயேசு அதைக் கேட்டு என்ன சொன்னார்? பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
13. எதின் கருத்து இன்னதென்பதைப் போய் கற்றுக்கொள்ளுங்கள் என்று இயேசு சொன்னார்? பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக் கொள்ளுங்கள் என்றார். யாரை அல்ல, யாரையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்? நீதிமான்களை யல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.
14. அப்பொழுது யோவானுடைய சீஷர் இயேசுவிடத்தில் வந்து அவரிடத்தில் கேட்டது என்ன? நாங்களும் பரிசேயரும் அநேகந்தரம் உபவாசிக்கிறோமே; உம்முடைய சீஷர் உபவாசியாமல் இருக்கிறதென்னவென்று கேட்டார்கள்.
15. அதற்கு இயேசு கேட்ட கேள்வி என்ன? மணவாளன் தங்களோடிருக்கை யில் மணவாளனுடைய தோழர் துயரப்படுவார்களா? இயேசு தம்முடைய சீஷர்கள் எப்பொழுது உபவாசிப்பார்கள் என்றார்? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள். மணவாளன் யார்? இயேசுகிறிஸ்து. மணவாளனுடைய தோழர்கள் யார்? சீஷர்கள்.
16. கோடித்துண்டை பழைய வஸ்திரத்தோடே இணைப்பார்களா? இணைக்க மாட்டார்கள். கோடித்துண்டை பழைய வஸ்திரத்தோடே இணைத்தால் என்ன ஆகும்? அதினோடே இணைத்ததுண்டு வஸ்திரத்தை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும்.
17. புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறது உண்டா? இல்லை. புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைத்தால் என்ன வாகும்? துருத்திகள் கிழிந்துபோம், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம். புது ரசத்தைப் எந்த துருத்திகளில் வார்த்துவைப்பார்கள்? புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைப்பார்கள். புது ரசத்தைப் புது துருத்தி களில் வார்த்துவைத்தால் என்னவாகும்? புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைத்தால் இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்.
18. அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில் வந்தது யார்? தலைவன் ஒருவன். அவன் வந்து என்ன செய்தான்? இயேசுவைப் பணிந்தான். இயேசுவைப் பணிந்து அவரிடம் என்ன சொன்னான்? என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள். ஆகிலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.
19. அப்பொழுது இயேசு என்ன செய்தார்? இயேசு எழுந்து, தம்முடைய சீஷரோ டுகூட அவன் பின்னே போனார்.
20. அப்பொழுது அவர் பின்னாலே வந்தது யார்? பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ.
21. பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஸ்திரீ எண்ணியது என்ன? நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணினாள். எண்ணியவள் என்ன செய்தாள்? அவர் பின் னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்.
22. இயேசு திரும்பி, அவளைப் பார்த்து சொன்னது என்ன? மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்த ஸ்திரீ என்ன ஆனாள்? அந்நேரம் முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.
23. இயேசுவானவர் தலைவனுடைய வீட்டிலே வந்து கண்டது என்ன? தாரை ஊதுகிறவர்களையும், இரைகிற ஜனங்களையும் கண்டார்.
24. இயேசுவானவர் தலைவனுடைய வீட்டிலே வந்து, தாரை ஊதுகிறவர் களையும், இரைகிற ஜனங்களையும் கண்டு சொன்னது என்ன? விலகுங்கள், இந்தச் சிறு பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற் காக அவரைப்பார்த்து என்ன செய்தார்கள்? நகைத்தார்கள்.
25. அப்பொழுது ஜனங்கள் என்ன செய்யப்பட்டார்கள்? ஜனங்கள் வெளியே துரத்தப்பட்டார்கள். ஜனங்கள் வெளியே துரத்தப்பட்ட பின்பு இயேசு என்ன செய்தார்? இயேசு உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார். இயேசு சிறுபெண்ணின் கையைப் பிடித்தவுடன் சிறு பெண் என்ன செய்தாள்? உடனே அவள் எழுந்திருந்தாள்.
26. இந்தச் சங்கதி எங்கே பிரசித்தமாயிற்று? இந்தச் சங்கதி அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று.
27. இயேசு அவ்விடம் விட்டுப் போகையில் அவரை கூப்பிட்டது யார்? இரண்டு குருடர். இரண்டு குருடர் இயேசு பின்னே சென்று என்ன சொல்லி கூப்பிட்டார் கள்? தரீவதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
28. இயேசு வீட்டிற்கு வந்தபின்பு அவரிடத்தில் யார் வந்தார்கள்? அந்த இரண்டு குருடர் இயேசுவிடத்தில் வந்தார்கள். இயேசு அந்தக் குருடர்களை நோக்கி கேட்டது என்ன? இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கி றீர்களா என்று கேட்டார். அதற்கு குருடாகள் என்ன சொன்னார்கள்? ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள்.
29. அப்பொழுது இயேசு என்ன செய்தார்? அந்த இரண்டு குருடர்களுடைய கண்களைத் தொட்டார். இயேசு குருடர்களிடம் சொன்னது என்ன? உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.
30. உடனே குருடர்களுடைய கண்கள் என்ன ஆனது? குருடர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இயேசு குருடர்களுக்கு கண்டிப்பாய் கட்டளையிட்டது என்ன? இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
31. அந்தக் குருடர்கள் என்ன செய்தார்கள்? குருடர்கள் புறப்பட்டு, அத்தேச மெங்கும் இயேசுவினுடைய கீர்த்தியைப் பிரசித்தம் பண்ணினார்கள்.
32. குருடர்கள் புறப்பட்டுப் போகையில், அவரிடத்தில் யாரை கொண்டு வந் தார்கள்? பிசாசுபிடித்த ஊமையான ஒரு மனுஷனை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்.
33. ஊமையன் எப்போது பேசினான்? பிசாசு துரத்தப்பட்ட பின்பு ஊமையன் பேசினான். ஜனங்கள் ஆச்சரியப்பட்டு சொன்னதென்ன? இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள்.
34. பரிசேயர் சொன்னதென்ன? இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுக ளைத் துரத்துகிறான் என்றார்கள்.
35. பின்பு இயேசு எங்கெல்லாம் சுற்றி நடந்தார்? இயேசு சகல பட்டணங்களை யும் கிராமங்களையும் சுற்றி நடந்தார். இயேசு எங்கே உபதேசித்தார்? ஜெப ஆல யங்களில் உபதேசித்தார். இயேசு எதைப் பிரசங்கித்தார்? இயேசு ராஜ்யத்தில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். இயேசு எதை நீக்கி அவர்களை சொஸ்தமாக் கினார்? ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்க ளையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
36. இயேசு யாரைக் கண்டார்? இயேசு திரளான ஜனங்களைக் கண்டார். அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, எதனால் அவர்கள்மேல் மனதுருகி னார்? அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்க ளும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகினார்.
37. இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி சொன்னது என்ன? அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்.
38. ஆதலால், எஜமானிடம் என்னவென்று வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்? அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.
No comments:
Post a Comment