Sunday, February 8, 2015

மத்தேயு – 10

மத்தேயு – 10
1. அப்பொழுது, இயேசு யாரை தம்மிடத்தில வரவழைத்தார்? அவர் தம்மு டைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்தார். தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அவர்களுக்கு என்ன அதிகாரங்கொடுத்தார்? அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளை யும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
2. அந்த பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களில் முதல் நான்கு நாமங்கள் யாவை? முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான், 
3. அந்த பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களில் அடுத்த ஆறு நாமங்கள் யாவை? பிலிப்பு, பற்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு, 
4. கடைசி இரண்டு அப்போஸ்தலருடைய நாமங்கள் யாவை? கானானியனா கிய சீமோன், அவரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.
5. இயேசு பன்னிருவரையும் அனுப்புகையில் அவர் கட்டளையிட்டு யார் நாடுகளுக்குப் போகவேண்டாம் என்றார்? புறஜாதியார் நாடுகளுக்கு. எந்த பட்டணங்களில் பிரவேசிக்க வேண்டாம் என்றார்? சமாரியர் பட்டணங்களில்.
6. காணாமற்போன ஆடுகள் யார்? இஸ்ரவேல் வீட்டார்.  எங்கே போங்கள் என்றார்? காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள் என்றார்.
7. போகையில் எது சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள் என்றார்? பரலோக ராஜ்யம்.
8. யாரை சொஸ்தமாக்குங்கள் என்றார்? வியாதியுள்ளவர்களை. யாரை சுத்தம்பண்ணுங்கள் என்றார்? குஷ்டரோகிகளை. யாரை எழுப்புங்கள் என்றார்? மரித்தோரை. எவைகளைத் துரத்துங்கள் என்றார்? பிசாசுகளை. எப்படிப் பெற் றீர்கள் எப்படி கொடுங்கள் என்றார்? இலவசமாய் பெற்றீர்கள் இலவசமாய் கொடுங்கள் என்றார்.
9. உங்கள் கச்சைகளில் எவைகளைத் தேடி வைக்க வேண்டாம்? பொன்னை யாவது வெள்ளியையாவது செம்பையாவது தேடி வைக்க வேண்டாம்.
10. வழிக்காக எவைகளைத் தேடி வைக்க வேண்டாம்? பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்க வேண்டாம். வேலையாள் எதற்குப் பாத்திரனாய் இருக்கிறான்? வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரவானாயிருக்கிறான்.
11. எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, எங்கே  தங்கியிருங்கள் என்றார்? எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரவான் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள் என்றார்.
12. ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது என்ன செய்யுங்கள் என்றார்? ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள் என்றார்.
13. அந்த வீடு பாத்திரமாயிருந்தால் என்ன ஆகும்? நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரும். அந்த வீடு அபாத்திரமாயிருந்தால் என்ன ஆகும்? நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பும்.
14. எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது  விட்டுப் புறப்படும்போது என்ன செய்யுங்கள் என்றார்? உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார். 
15. நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு என்ன நேரிடுவதைப் பார்க் கிலும் எந்த நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரி டுவது இலகுவாயிருக்கும்.
16. நான் உங்களை எப்படி அனுப்புகிறேன் என்கிறார்? ஆடுகளை ஓய்நாய் களுக்குள்ளே அனுப்புகிறதுபோல அனுப்புகிறேன் என்கிறார். எவைகளைப் போல வினாவுள்ளவர்களாய் இருங்கள்? சர்ப்பங்களைப்போல. எவைகளைப் போல கபடற்றவர்களுமாய் இருங்கள்? புறாக்களைப்போல.
17. யாரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்கிறார்? மனுஷரைக்குறித்து. மனுஷர் உங்களை என்ன செய்வார்கள்? உங்களை ஆலோசளைச் சங்கங்க ளுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்.
18. யாருக்கு சாட்சியாக கொண்டுபோகப்படுவீர்கள்? மனுஷருக்கும் புறஜாதி யாருக்கும் சாட்சியாக கொண்டுபோகப்படுவீர்கள். யாரினிமித்தம் கொண்டு போகப்படுவீர்கள்? என்னிமித்தம் (இயேசுவினிமித்தம்) கொண்டுபோகப்படு வீர்கள். யாருக்கு முன்பாக கொண்டுபோகப்படுவீர்கள்? அதிபதிகளுக்கு முன்பாகவும் ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்.
19. உங்களை எப்பொழுது கவலைப்படாதிருங்கள் என்கிறார்? மனுஷர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது கவலைப்படாதிருங்கள் என்கிறார். உங்களை எதற்குக் கவலைப்படாதிருங்கள் என்கிறார்? அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசு வோம் என்றும் கவலைப்படாதிருங்கள் என்கிறார். நீங்கள் பேசவேண்டுவது எப்பொழுது உங்களுக்கு அருளப்படும்? நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.
20. பேசுகிறவர்கள் யார் அல்ல? பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல. உங்களிலி ருந்து பேசுகிறவர் யார்? உங்கள் பிதாவின் ஆவியானவர்.
21. யார் யாரை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்? சகோதரன் தன் சகோதர னையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள். யாருக்கு விரோதமாகப் யார் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள்? பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலை செய் வார்கள். 
22. யார் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்? என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். யார் இரட்சிக்கப் படுவான்? முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கபடுவான்.
23. ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் எங்கே ஓடிப்போங்கள் என்கிறார்? ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத் திற்கு ஓடிப்போங்கள் என்கிறார். எதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்? மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ர வேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்.
24. சீஷன் யாரிலும் மேற்பட்டவனல்ல? சீஷன் தன் போதகனிலும் மேம்பட்ட வனல்ல. வேலைக்காரன் யாரிலும் மேற்பட்டவனல்ல? வேலைக்காரன் தன் எஜமானிலும் மேம்பட்டவனல்ல.
25. சீஷன் யாரைப்போலவும், வேலைக்காரன் யாரைப்போலவும் இருப்பது போதும்? சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப் போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானை யார் என்று சொன்னார்களா னால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா? வீட்டெஜ மானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?
26. யாருக்குப் பயப்படாதிருங்கள் என்கிறார்? அவர்களுக்கு (மனுஷர்களுக்கு). வெளியாக்கப்படாத மறைபொருள் உண்டா? இல்லை. அறியப்படாத இரகசி யம் உண்டா? இல்லை.
27. நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் எதிலே சொல்லுங் கள்? நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள். காதிலே கேட்கிறதை நீங்கள் எதின்மேல் பிரசித்தம்பண்ணுங் கள்? காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள்.
28. நீங்கள் யாருக்கு பயப்பட வேண்டாம்? ஆத்துமாவைக் கொல்ல வல்லவர் களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்கள் யாருக்கு பயப்பட வேண்டும்? ஆத்துமாவையும் சரீரத்தை யும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்பட வேண்டும்.
29. ஒரு காசுக்கு எத்தனை அடைக்கலான் குருவிகள் விற்கிறார்கள்? இரண்டு. ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், எவைகளில் ஒன்றாகிலும் தரை யிலே விழாது? இரண்டு அடைக்கலான் குருவிகளில் ஒன்றாகிலும் தரை யிலே விழாது.
30. உங்களில் எவையெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது? உங்கள் தலையி லுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
31. எதனால் பயப்படாதிருங்கள் என்கிறார்? உங்கள் தலையிலுள்ள மயிரெல் லாம் எண்ணப்பட்டிருக்கிறதனால் பயப்படாதிருங்கள் என்கிறார். எவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்? அநேகம் அடைக்க லான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
32. யாரை பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணு வேன் என்கிறார்? மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன் என்கிறார்.
33. யாரை பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன் என்கிறார்? மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன் என்கிறார்.
34. பூமியின்மேல் எதை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள் என்கிறார்? சமாதானத்தை. பூமியிலே எதை அனுப்பவந்தேன் என்று எண்ணிக்கொள் ளுங்கள் என்கிறார்? சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன் என்று எண்ணிக் கொள்ளுங்கள் என்கிறார்.
35. யாருக்கும் யாருக்கும் பிரிவினை உண்டாக்க வந்தேன் என்கிறார்? மகனுக் கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவி னையுண்டாக்க வந்தேன் என்கிறார்.
36. ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் யார்? ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.
37. யார் எனக்குப் பாத்திரன் அல்ல என்கிறார்? தகப்பனையாவது தாயையா வது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல, மகனை யாவது மகளையாவது என்னிலும் அதிகமாகய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்தி ரன் அல்ல என்கிறார்.
38. யார் எனக்குப் பாத்திரன் அல்ல என்கிறார்? தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
39. தன் ஜீவனைக் காக்கிறவன் எதை இழந்துபோவான்? தன் ஜீவனைக் காக்கி றவன் ஜீவனை இழந்துபோவான். ஜீவனைக் காப்பவன் யார்? இயேசவினிமித் தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை காப்பான்.
40. என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் யார்? உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொண்ளு கிறவன் யார்? என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.
41. தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைகிறவன் யார்? தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான். நீதிமானுக்கேற்ற பலனை அடைகிறவன் யார்? நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக் கேற்ற பலனை அடைவான்.
42. யார் தன் பலனை அடையாமற் போகான் என்று, மெய்யாகவே உங்களுக் குச் சொல்லுகிறேன் என்றார்? சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறி யரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல் லுகிறேன் என்றார்.

No comments:

Post a Comment