Wednesday, February 11, 2015

மத்தேயு – 11

மத்தேயு – 11
1. இயேசு யாருக்குக் கட்டளைகொடுத்தார்? இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷாகளுக்கும் கட்டளைகொடுத்தார். யாருடைய பட்டணங்களில் உபதேசிக்க வும் பிரசங்கிக்கவும் அவ்விடம் விட்டுப் போனார்? சீஷர்களுடைய பட்டணங்க ளில்.
2. அத்தருணத்தில் கிறிஸ்துவின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டது யார்? யோவான். யோவான் எங்கிருந்து கிறிஸ்துவின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டன்? காவலிலிருந்து. யோவான் தன் சீஷரில் எத்தனை பேரை அழைத்தார்? இரண்டு பேர்.
3. யோவான் தன் சீஷரில் இரண்டு பேரை அழைத்து யாரிடத்தில் அனுப்பி னான்? கிறிஸ்துவினிடத்தில். என்னவென்று கேட்டும்படி அனுப்பினான்? வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான்.
4. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எதை யோவானிடத்தில் போய் அறிவியுங்கள் என்றார்? நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானி டத்தில் போய் அறிவியுங்கள் என்றார்.
5. யார் பார்வையடைகிறார்கள்? குருடர். யார் நடக்கிறார்கள்? சப்பாணிகள். யார் சுத்தமாகிறார்கள்? குஷ்டரோகிகள். யார் கேட்கிறார்கள்? செவிடர். யார் எழுந்திருக்கிறார்கள்? மரித்தோர். யாருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகி றது? தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.
6. யாரிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்? என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கிய வான் என்றார்.
7. இயேசு யோவானைக் குறித்து சொன்னது என்ன? எதைப் பார்க்க வனாந்த ரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?  
8. எதைப் பார்க்கப்போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? மெல்லிய வஸ்திரந்தரித்திருக்கிறவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அரசர் மாளிகையில் இருக்கிறார்கள்.
9. எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? யாரைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்? தீர்க்கதரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்.
10. இதோ, நான் யாரை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்? என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன். அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்ட வன் யார்? இந்த யோவான்ஸ்நானன்.
11. ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யாரைப்பார்க்கிலும் பெரியவன் ஒரு வனும் எழும்பினதில்லை? யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை. ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயி ருக்கிறவன் யாரிலும் பெரியவனாய் இருக்கிறானென்று உங்களுக்கு மெய்யா கவே சொல்லுகிறேன் என்கிறார்? யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரிய வனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன் என்கி றார்.
12. யார் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படு கிறது? யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பல வந்தம் பண்ணப்படுகிறது. பலவந்தம்பண்ணுகிறவர்கள் எதைப் பிடித்துக்கொள் ளுகிறார்கள்? பரலோகராஜ்யத்தைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.
13. நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யார் வரைக்கும் தீர்க்கதரி சனம் உரைத்ததுண்டு? யோவான் வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு.
14. நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், இவன் யார் என்கிறார்? வருகிற வனாகிய எலியா இவன் (யோவான் ஸ்நானன்) தான்.
15. யார் கேட்கக்கடவன்? கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
16. சந்தைவெளிகளில் உட்கார்ந்து யாரைப் பார்த்துச் சொல்லுகிறார்? தோழரைப் பார்த்து சொல்லுகிறார்.
17. யாருக்காகக் குழல் ஊதினோம்? உங்களுக்காக. நீங்கள் என்ன செய்ய வில்லை? கூத்தாடவில்லை. யாருக்காக புலம்பினோம்? உங்களுக்காக. நீங்கள் என்ன செய்யவில்லை? மாரடிக்கவில்லை. இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன் என்கிறார்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப் பார்த்து: உங்களுக்காக குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை. உங்க ளுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.
18. போஜனபானம் பண்ணாதவனாய் வந்தது யார்? யோவான். அதற்கு அவர் கள் அவனை என்ன சொன்னார்கள்? யோவான் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள்.
19. போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தது யார்? மனுஷகுமாரன். அதற்கு அவர்கள் அவரை என்ன சொன்னார்கள்? இதோ போஜனப்பிரியனும் மதுபானப் பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்றார் கள். நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படுவது எது? ஞானம். ஞானம் யாரால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும்? அதின் பிள்ளைகளால்.
20. இயேசு எவைகளை கடிந்துகொள்ளத் தொடங்கினார்? தமது பலத்த செய் கைகளில், அதிகமானவைகளைச் செய்யக் கண்ட பட்டணங்களை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார். ஏன் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்? அந்த பட்டணங்கள் மனந்திரும்பாமற் போனபடியினால் அவர் அவைகளைக் கடிந்துகொள்ளத் தொடங்கினார்.
21. எதுக்கு ஐயோ என்கிறார்? கோரோசின், பெத்சாயிதா. பலத்த செய்கைகள் செய்யப்பட்டது எதுக்கு? கோரோசினுக்கும் பெத்சாயிதாவுக்கும் பலத்த செய் கைகள் செய்யப்பட்டது. தீருவிலும் சீதோனிலும் பலத்தசெய்கைகள் செய்யப் பட்டிருந்தால் அவர்கள் என்ன செய்திருப்பார்கள்? அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்.
22. நியாயத்தீர்ப்பு நாளிலே எதுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், எதுக்கு நேரிடு வது இலகுவாயிருக்கும்? நியாயத்தீர்ப்புநாளிலே கோரோசினுக்கும் பெத்சாயி தாவுக்கும் நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும்.
23. வானபரியந்தம் உயர்த்தப்பட்டது எது? கப்பர்நகூம். பாதாளபரியந்தம் தாழ்த்தப்படப்போவது எது? கப்பர்நகூம். எதில் செய்யப்பட்ட பலத்த செய்கை கள் எதிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள் வரைக்கும் நிலைத்தி ருக்கும்? கப்பர்நகூமில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும்.
24. நியாயத்தீர்ப்புநாளிலே எதுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், எந்த நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும்? நியாயத்தீர்ப்புநாளிலே கப்பர்நகூமுக்கு நேரி டுவதைப் பார்க்கிலும், சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும்.
25. பிதாவை எதற்கெல்லாம் ஆண்டவர் என்று இயேசு சொல்லுகிறார்? வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவர் என்கிறார். இவைகளை யாருக்கு மறைத்து யாருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் என்கிறார்? இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
26. இப்படிச் செய்வது எதுக்கு பிரியமாயிருந்தது என்று இயேசு சொல்லுகி றார்? ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமா யிருந்தது என்கிறார்.
27. சகலமும் யாரால் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது? பிதாவினால். சகல மும் யாருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது? எனக்கு (இயேசு கிறிஸ்து விற்கு). பிதா தவிர வேறொருவனும் யாரை அறியான்? குமாரனை அறியான். குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கி றாரோ அவனும் தவிர, வேறொருவனும் யாரை அறியான்? பிதாவை அறியான்.
28. நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் என்று யாரை இயேசு அழைக் கிறார்? வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களை இயேசு அழைக்கிறார். வருத்தப் பட்டு பாரஞ்சுமக்கிறவர்களுக்கு என்ன தருவேன் என்கிறார்?இளைப்பாறுதல் தருவேன் என்கிறார்.
29. நான் எப்படி இருக்கிறேன் என்று இயேசு சொல்லுகிறார்? நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன் என்று இயேசு சொல்லுகிறார். எப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்கிறார்? என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்: அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்றார்.
30. எது மெதுவாயிருக்கிறது என்கிறார்? என் நுகம் மெதுவாயிருக்கிறது என்கி றார். எது இலகுவாயிருக்கிறது என்கிறார்? என் சுமை இலகுவாயிருக்கிறது என்கிறார்.

No comments:

Post a Comment