மத்தேயு – 16
1. பரிசேயரும் சதுசேயரும் இயேசுவினிடத்தில் ஏன் வந்தார்கள்? இயேசு வைச் சோதிக்கும்படி வந்தார்கள். எங்கிருந்து ஓர் அடையாளத்தைத் தங்க ளுக்குக் காண்பிக்க வேண்டும் என்றார்கள்? வானத்திலிருந்து.
2. எதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள்? அஸ்தனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள்.
3. எதினால் இன்றைக்கு காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர் கள்? உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்கு காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். எதை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே என்கிறார்? வானத்தின் தோற்றத்தை. எதை நிதானிக்க உங்களால் கூடாதா என்கிறார்? காலங்களின் அடையாளங் களை.
4. இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் எதைத் தேடுகிறார்கள்? அடையா ளத்தை தேடுகிறார்கள். யாருடைய அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்றார்? யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவ தில்லை என்றார்.
5. அவருடைய சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது, எவைகளைக் கொண்டுவர மறந்துபோனார்கள்? அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.
6. இயேசு எதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்? பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார்.
7. சீஷர்கள் தங்களுக்குள்ளே என்ன யோசனைபண்ணிக்கொண்டார்கள்? தாங்கள் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
8. இயேசு யாருடைய சிந்தனையை அறிந்தார்? சீஷர்களுடைய சிந்தனையை அறிந்தார். எதைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனை பண்ணுகிறதென்ன என்றார்? அற்பவிசுவாசிளே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிற தென்ன என்றார்.
9. ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் என்ன செய்யவில் லையா என்கிறார்? இதை இன்னும் உணரவில்லையா என்கிறார்.
10. ஏழு அப்பங்களை நாலாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும் என்னசெய்யவில்லையா என்கிறார்? நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா என்றார்.
11. பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவுக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்று நான் சொன்னது எதைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்? அப்பத்தைக்குறித்து.
12. அவர் எதற்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென்று சொல்லவில்லை? அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டு மென்று சொல்லவில்லை. யாருடைய உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்து கொண்டார்கள்? பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.
13. பின்பு இயேசு எந்தத் திசைகளில் வந்தார்? பிலிப்புச் செசரியாவின் திசைக ளில் வந்தார். சீஷரை நோக்கி இயேசு என்ன கேட்டார்? மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
14. அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்? சிலர் உம்மை யோவான்ஸ்நா னன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரி சிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
15. அதற்கு இயேசு என்ன சொன்னார்? நீங்கள் என்னை யார் என்று சொல்லுகி றீர்கள் என்று கேட்டார்.
16. சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக சொன்னது என்ன? நீர் ஜீவனுள்ள தேவனு டைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
17. எது இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை? மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. யார் இதை உனக்கு வெளிப்படுத்தினார்? பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். இயேசு சீமோனை நோக்கிச் சொன்னது என்ன? யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்த வில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார் என்றார்.
18. நீ யாராய் இருக்கிறார்? நீ பேதுருவாய் இருக்கிறாய். எதின்மேல் என் சபை யைக் கட்டுவேன்? இந்தக்கல்லின்மேல் (பேதுருவின்மேல்). எது சபையை மேற்கொள்வதில்லை? பாதாளத்தின் வாசல்கள்.
19. எதை நான் உனக்குத் தருவேன்? பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன். எது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்? பூலோ கத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். எது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்? பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்.
20. அப்பொழுது, தாம் யார் என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்மு டைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்? அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்.
21. அதுமுதல் இயேசு, எதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங் கினார்? அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன் றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார்.
22. அப்பொழுது பேதுரு யாரைத் தனியே அழைத்துக்கொண்டு போனான்? இயேசுவை தனியே அழைத்துக்கொண்டு போனான். பேதுரு இயேசுவை என்ன சொல்லி கடிந்துகொள்ளத் தொடங்கினான்? ஆண்டவரே, இது உமக்கு நேரிடக் கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.
23. இயேசு திரும்பிப் பேதுருவைப் பார்த்து என்ன சொன்னார்? எனக்குப் பின் னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவை களைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
24. ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால் என்ன செய்யக்கடவன் என்றார்? அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் என்றார்.
25. யார் தன் ஜீவனை இழந்துபோவான்? தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிற வன் அதை இழந்துபோவான். யார் ஜீவனைக் கண்டடைவான்? என்னிமித்த மாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான்.
26. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், எதை நஷ்டப் படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? தன் ஜீவனை நஷ்டப்படுத்தி னால் அவனுக்கு லாபம் என்ன. மனுஷன் எதற்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
27. மனுஷகுமாரன் எப்படி வருவார்? மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய் வருவார். மனுஷகுமாரன் யாரோடுகூட வருவார்? மனுஷகுமாரன் தம்முடைய தூதரோடுங்கூட வருவார். மனுஷகுமாரன் அப்போழுது, ஒருவனுக்கு எப்படி பலனளிப்பார்? அவனவன் கிரியைக்குத்தக் கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
28. இங்கே நிற்கிறவர்களில் சிலர் யார் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக் குச் சொல்லுகிறேன் என்றார்? இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்ப தில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
No comments:
Post a Comment