லூக்கா - 5
1. பின்பு இயேசு கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, யார் தேவவசனத் தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள்? திரளான ஜனங்கள்.
2. அப்பொழுது இயேசு கடற்கரையிலே எதைக் கண்டார்? கடற்கறையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? படவுகளை விட்டிறங்கி, வலைகளை அலைசிக்கொண் டிருந்தார்கள்.
3. அப்பொழுது இயேசு என்ன செய்தார்? அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார். அது யாருடையதாய் இருந்தது? சீமோனுடையதாயிருந்தது. அதைக் கரையி லிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, என்ன செய்தார்? ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.
4. அவர் போதகம்பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி என்ன சொன்னார்? ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்.
5. அதற்குச் சீமோன் என்ன சொன்னான்? ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தை யின்படியே வலையைப் போடுகிறேன் என்றான்.
6. அந்தப்படியே அவர்கள் என்ன செய்தார்கள்? வலைகளைப் போட்டு, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்.
7. அப்பொழுது என்னவென்று சைகைகாட்டினார்கள்? மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படிக்குச் சைகைகாட்டினார் கள். அவர்கள் வந்து, என்ன செய்தார்கள்? இரண்டு படவுகளும் அமிழத்தக்க தாக நிரப்பினார்கள்.
8. சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து சொன்னது என்ன? ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போக வேண்டும் என்றான்.
9. அவன் அப்படிச் சொல்லக் காரணம் என்ன? அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப் புண்டானபடியினால் அப்படிச் சொன்னான்.
10. சீமோனுக்குக் கூட்டாளிகள் யார்? செபெதேயுவின் குமாரராகிய யாக்கோ பும் யோவானும். அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்களும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி சொன்னது என்ன? பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்.
11. அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, என்ன செய்தார் கள்? எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
12. பின்பு இயேசு ஒரு பட்டணத்தில் இருக்கையில், இயேசுவைக் கண்டது யார்? குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன். அவன் இயேசுவைக் கண்டு, முகங்குப் புற விழுந்து என்னவென்று வேண்டிக் கொண்டான்? ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண் டிக்கொண்டான்.
13. அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு என்ன சொன்னார்? எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் என்ன ஆயிற்று? அவனை விட்டு நீங்கிற்று.
14. அவர் அவனை நோக்கி கட்டளையிட்டது என்ன? நீ இதை ஒருவருக்கும் சொல்லாமல், போய், உன்னை ஆசாரியனுக்குச் காண்பித்து, நீ சுத்தமானதினி மித்தம், மோசே கட்டளையிட்டபடியே, அவர்களுக்குச் சாட்சியாகப் பலி செலுத்து என்று கட்டளையிட்டார்.
15. அப்படியிருந்தும் எது பரம்பிற்று? அவருடைய கீர்த்தி அதிகமாகப் பரம் பிற்று. திரளான ஜனங்கள் எதற்காகக் கூடிவந்தார்கள்? அவருடைய உபதேசத் தைக் கேட்பதற்கும் அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியமடைவதற் கும் கூடிவந்தார்கள்.
16. அவரோ எங்கே போய் ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்? வனாந்தரத்தில் தனித்துப்போய், ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்.
17. பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக் கொண்டிருக்கிறபோது அங்கே உட் கார்ந்திருந்தவர்கள் யார்? கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்க ளிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாக விளங்கியது எது? கர்த்தருடைய வல்லமை.
18. அப்பொழுது சில மனுஷர் திமிர்வாதக்காரன் ஒருவனை எப்படி கொண்டு வந்தார்கள்? படுக்கையோடே எடுத்துக்கொண்டுவந்தார்கள். திமிர்வாதக்கா ரனை படுக்கையோடே எடுத்துக்கொண்டு வந்து என்னவென்று வகை தேடி னார்கள்? அவனை உள்ளே கொண்டுபோகவும் அவர் முன்பாக வைக்கவும் வகை தேடினார்கள்.
19. ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோகிற தற்கு வகைகாணாமல் என்ன செய்தார்கள்? வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள் வழியாய் ஜனங்களின் மத்தியில் இயேசுவுக்கு முன்பாக அவனைப் படுக்கை யோடே இறக்கினார்கள்.
20. அவர்களுடைய விசுவாசத்தை இயேசு கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி என்ன சொன்னார்? மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
21. அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் யோசனைபண்ணி, சொன்னது என்ன? தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்றார்கள்.
22. இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி சொன்னது என்ன? உங்கள் இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறதென்ன?
23. உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நட வென்று சொல்வதோ, எது எளிது?
24. பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டுமென்று சொன்னார். இயேசு திமிர்வா தக்காரனை நோக்கி சொன்னது என்ன? நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25. உடனே திமிர்வாதக்காரன் என்ன செய்தான்? அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான்.
26. அதினாலே எல்லாரும் என்ன செய்தார்கள்? ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள். அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, சொன்னது என்ன? அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.
27. இவைகளுக்குப் பின்பு, இயேசு புறப்பட்டு, யாரைக் கண்டு எனக்குப் பின் சென்று வா என்றார்? ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேரு டைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார்.
28. ஆயக்காரனாகிய லேவி என்ன செய்தான்? அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான்.
29. அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே என்ன செய்தான்? தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அந்த விருந்தில் பந்தியிருந்தவர்கள் யார்? அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந் தார்கள்.
30. வேதபாரகரும் பரிசேயரும் என்ன செய்தார்கள்? அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள். முறுமுறுத்து என்ன கேட்டார்கள்? நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
31. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? பிணியாளிக ளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டிய தில்லை.
32. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந் தேன் என்றார்.
33. பின்பு அவர்கள் அவரை நோக்கி யார் உபவாசிக்கிறார்கள் என்றார்கள்? யோவானுடைய சீஷர் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம்பண்ணிக்கொண்டு வருகிறார்கள், பரிசேயருடைய சீஷரும் அப்படியே செய்கிறார்கள். யார் போஜ னபானம் பண்ணுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்? உம்முடைய சீஷர் போஜனபானம்பண்ணுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்.
34. அதற்கு அவர்: யார் தங்களோடிருக்கையில் யாரை நீங்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா என்றார்? மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனு டைய தோழர்களை நீங்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா?
35. எப்பொழுது உபவாசிப்பார்கள் என்றார்? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார்.
36. அவர்களுக்கு எதையும் சொன்னார்? ஒரு உவமையையும் சொன்னார். ஒருவனும் எதை எதன்மேல் போட்டு இணைக்கமாட்டான்? புதிய வஸ்திரத் துண்டைப் பழைய வஸ்திரத்தின்மேல் போட்டு இணைக்கமாட்டான். இணைத் தால் என்ன ஆகும்? புதியது பழையதைக் கிழிக்கும். எதுக்கு எது ஒவ்வாது? புதியவஸ்திரத்துண்டு பழைய வஸ்திரத்துக்கு ஒவ்வாது.
37. ஒருவனும் எதைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்? புது திராட்சரசத்தை. வார்த்துவைத்தால் என்ன ஆகும்? புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்.
38. புது ரசத்தை எதில் வார்த்துவைக்க வேண்டும்? புது துருத்திகளில் வார்த்து வைக்கவேண்டும். அப்பொழுது என்ன ஆகும்? இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்.
39. அன்றியும் ஒருவனும் எதைக் குடித்தவுடனே எதை விரும்ப மாட்டான்? பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான். எதுவே நல் லது என்று சொல்லுவான் என்றார்? பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.
No comments:
Post a Comment