Wednesday, January 28, 2015

மத்தேயு – 7

மத்தேயு – 7
1. நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு என்ன செய்யுங்கள்? மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
2. எதன்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்? நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள். எதன்படியே உங்களுக்கும் அளக் கப்படும்? நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
3. நீ உன் கண்ணிலிருக்கிற எதை உணராமல் இருக்கிறாய்? உத்திரத்தை. நீ உன் சகோதரன் கண்ணிலிருக்கிற எதை பார்க்கிறாய்? துரும்பை. நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற எதைப் பார்க்கிறாய்? துரும்பை. உன் கண்ணில் என்ன இருக்கிறது? உத்திரம். உன் சகோதரன் கண்ணில் என்ன இருக்கிறது? துரும்பு. 
4. இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் யாரை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? உன் சகோதரனை நோக்கி.
5. தன் கண்ணில் உத்திரம் இருக்கையில் தன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று சொல்லுகிறவன் யார்? மாயக்காரன். முன்பு என்ன செய்ய வேண்டும்? முன்பு உன் கண்ணிலிருக் கிற உத்திரத்தை எடுத்துப்போடவேண்டும். பின்பு என்ன செய்ய வேண்டும்? பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகை பார்க்க வேண்டும்.
6. பரிசுத்தமானதை எதுக்குக் கொடுக்கக்கூடாது? நாய்களுக்குக் கொடுக்கக் கூடாது. உங்கள் முத்துகளை எதுக்குமுன் போடக்கூடாது? பன்றிகள்முன் போடக்கூடாது. உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போட்டால் என்ன ஆகும்? தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்க ளைப் பீறிப்போடும்.
7. கேட்டால் அப்பொழுது என்ன ஆகும்? உங்களுக்குக் கொடுக்கப்படும். எப் பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்? கேட்கும்போது. தேடுங்கள் அப்பொ ழுது என்ன ஆகும்? கண்டடைவீர்கள். எப்பொழுது கண்டடைவீர்கள்? தேடும் போது. தட்டுங்கள் அப்பொழுது என்ன ஆகும்? திறக்கப்படும். எப்பொழுது உங்க ளுக்குக் திறக்கப்படும்? தட்டும்போது. 
8. யார் பெற்றுக்கொள்ளுகிறான்? கேட்கிறவன். யார் கண்டடைகிறான்? தேடு கிறவன். யாருக்குத் திறக்கப்படும்? தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
9. உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? கொடுக்க மாட்டான்.
10. மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? கொடுக்க மாட் டான்.
11. பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கிறீர்கள்? நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கிறீர்கள். பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு எப்படிப்பட்டவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம்? நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம். பொல்லாதவர் களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்தி ருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு எவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம்.
12. மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவை களை  நீங்களும் யாருக்குச் செய்ய வேண்டும்? மனுஷர் உங்களுக்கு எவைக ளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும். எது நியாயப்பிரமாணமும் தீர்க்க தரிசனங்களுமாம்? மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்: இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.
13. எப்படிப்பட்ட வாசல் வழியாய் உட்பிரவேசிக்க வேண்டும்? இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்க வேண்டும். கேட்டுக்குப் போகிற வாசல் எப்படியிருக்கிறது? கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயி ருக்கிறது. எந்த வாசல் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்? கேட்டுக்குப் போகிற வாசல் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
14. ஜீவனுக்குப் போகிற வாசல் எப்படியிருக்கிறது? ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. எந்த வாசலைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்? ஜீவனுக்குப் போகிற வாசலைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
15. கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எப்படியிருக்க வேண்டும்? எச்சரிக்கையாயி ருக்க வேண்டும். யாருக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்? கள்ளத் தீர்க்க தரிசிகளுக்கு. யார் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்? கள்ளத் தீர்க்கதரிசிகள். யார் உள்ளத்தில் பட்சிக்கிற ஓநாய்கள்? கள்ளத் தீர்க்கதரிசிகள்.
16. தீர்க்க தரிசிகளை எதினாலே அவர்களை அறிவீர்கள்? அவர்களது கனிகளி னாலே. முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையும் பறிக்கிறார்களா? இல்லை.
17. நல்ல மரமெல்லாம் என்ன கனிகளைக் கொடுக்கும்?  நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரமோ என்ன கனிகளைக் கொடுக்கும்?  கெட்ட கனிக ளைக் கொடுக்கும்.
18. நல்ல மரம் என்ன கனிகளைக் கொடுக்கமாட்டாது? கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது. கெட்ட மரம் என்ன கனிகளைக் கொடுக்கமாட்டாது? நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.
19. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, எங்கே போடப்படும்? நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.
20. எதினாலே ஒருவரை அறிவீர்கள்?  அவர்களுடைய கனிகளினாலே அறிவீர்கள்.
21. பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பவன் யார்? பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான். யார் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை? என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை.
22. கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? என்று சொல்லுவது யார்? அநேகர். உமது நாமத்தினாலே பிசாசு களைத் துரத்தினோம் அல்லவா? என்று சொல்லுவது யார்? அநேகர். உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்று சொல்லு வது யார்? அநேகர். அந்நாளில் அநேகர் கர்த்தரை நோக்கி சொல்லுவது என்ன? அந்நாளில் அநேகர் கர்த்தரை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத் தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசு களைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்க ளைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
23. அவர்களை நோக்கி கர்த்தர் அவர்களுக்குச் சொல்லுவேன் சொல்லுவது என்ன? நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக் காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன் என்கிறார். யார் கர்த்தரை விட்டு அகன்று போகவேண்டும்? அக்கிரமச் செய் கைக்காரர்.
24. யாரைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷ னுக்கு ஒப்பிடுவேன் என்கிறார்? நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன் என்கிறார்.
25. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதியும், எது விழவில்லை? கன்மலையின்மேல் கட்டியவீடு. ஏன் அந்த வீடு விழவில்லை? ஏன்னென்றால், அது கன்மலையின்மேல் அஸ்தி பாரம் போடப்பட்டிருந்தது.
26. யார் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான் என்கிறார்?  நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின் மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான் என்கிறார்.
27. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின் மேல் மோதினபோது எது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்? மணலின்மேல் கட்டின வீடு.
28. இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் யாரைப் போல் போதிக்கவில்லை? வேதபாரகரைப்போல் போதிக்கவில்லை. இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் யாரைப் போல் போதித் தார்? அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தார்.
29. ஜனங்கள் எதைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்? ஜனங்கள் இயேசுவினு டைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

No comments:

Post a Comment