Tuesday, July 21, 2015

லூக்கா - 1

லூக்கா - 1
1. பரிசுத்த லூக்கா இந்த நற்செய்தியை யாருக்கு எழுதுகிறார்? மகா கனம் பொருந்திய தேயோப்பிலுவுக்கு. நாங்கள் எப்படி நம்புகிற சங்கதிகள் என்கி றார்? முழுநிச்சயமாய்.
2. எப்படி வசனத்தைப் போதித்தார்கள்? ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத் தைப் போதித்தார்கள். எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்து எது எழுத அநேகம்பேர் ஏற்பட்டனர்? சரித்திரம். 
3. எப்படி விசாரித்தறிந்தார்? ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித் தறிந்தார். எதை நீர் அறிய வேண்டுமென்கிறார்? நானும் உமக்கு உபதேசிக்கப் பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்கிறார். 
4. அவைகளை எப்படி உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று? ஒழுங்காய் உமக்கு எழுதுவது.
5. யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், யார் இருந்தான்? அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்ட ஆசாரி யன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி யார்? ஆரோனுடைய குமாரத்திக ளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து. 
6. அவர்கள் இருவரும் எப்படிப்பட்டவர்களாய் இருந்தார்கள்? கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள். 
7. எதனால் அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது? எலிசபெத்து மலடியாயி ருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது. இருவரும் எப்படி இருந்தார்கள்? வயது சென்றவர்களாயும் இருந்தார்கள்.
8. அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய வகுப்பின் முறைப்படி என்ன செய்து வந்தான்? தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவந்தான்.  
9. அந்தக் காலத்தில் ஆசாரிய ஊழிய முறைமையின்படி அவன் தேவாலயத் துக்குள் பிரவேசித்து என்ன செய்தான்? தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற் றான். 
10. தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் என்ன செய்து கொண் டிருந்தார்கள்? கூட்டமாய் வெளியே ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
11. அப்பொழுது யார் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிச னமானான்? கர்த்தருடைய தூதன் ஒருவன்.
12. சகரியா அவனைக்கண்டு என்ன ஆனான்? கலங்கி, பயமடைந்தான். 
13. தூதன் அவனை நோக்கி என்ன சொன்னான்? சகரியாவே, பயப்படாதே. உன் வேண்டுதல் என்ன செய்யப்பட்டது? கேட்கப்பட்டது. உன் மனைவியாகிய எலி சபெத்து என்ன செய்வாள்? உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள். அவனுக்கு என்ன என்று பேரிடுவாயாக? யோவான்.
14. உனக்கு என்ன உண்டாகும்? சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் என்ன ஆவார்கள்? சந்தோஷப்படுவார்கள்.
15. அவன் கர்த்தருக்கு முன்பாக எப்படியிருப்பான்? பெரியவனாயிருப்பான். எதைக் குடியான்? திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலி ருக்கும்போதே எதினால் நிரப்பப்பட்டிருப்பான்? பரிசுத்த ஆவியினால்.
16. அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை யாரிடத்திற்குத் திருப்புவான்? அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.
17. பிதாக்களுடைய இருதயங்களை யாரிடத்திற்குத் திருப்புவான்? பிள்ளைக ளிடத்திற்கு. கீழ்ப்படியாதவர்களை எதற்குத் திருப்புவான்? நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்புவான். உத்தமமான ஜனத்தை யாருக்கு ஆயத்தப்படுத் தும்படியாக அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்? கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக. 
18. அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி என்ன சொன்னான்? இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயது சென்றவளாயிருக்கிறாளே என்றான்.
19. தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? நான் தேவசந்நி தானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்.
20. இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசு வாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ எப்படி இருப்பாய் என்றான்? நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான். 
21. ஜனங்கள் எதனால் ஆச்சரியப்பட்டார்கள்? ஜனங்கள் சகரியாவுக்குக் காத்தி ருந்து, அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள். 
22. அவன் வெளியே வந்தபோது அவன் என்ன ஆனான்? அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான். அதினாலே அவர்கள் என்னவென்று அறிந்தார்கள்? தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்கு எப்படி இருந்தான்? சைகை காட்டி ஊமையாயிருந்தான்.
23. சகரியா எப்போது வீட்டுக்குப் போனான்? அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டுக்குப் போனான். 
24. அந்நாட்களுக்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து என்னஆனாள்? கர்ப்பவதியானாள். எதற்காக கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்தார் என்றாள்? ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாக. 
25. எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி, எத்தனை மாதம் வெளிப்ப டாதிருந்தாள்? ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தாள்.
26. ஆறாம் மாதத்திலே யார் கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்,
27. தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு   நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட் டான்? காபிரியேல் என்னும் தூதன். அந்தக் கன்னிகையின் பேர் என்ன? மரியாள்.
28. அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து என்ன சொன்னான்? கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக் குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். 
29. அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, என்ன செய் துகொண்டிருந்தாள்? இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
30. தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் என்ன பெற்றாய் என்றான்? கிருபைபெற்றாய்.
31. இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு என்ன என்று பேரிடுவாயாக? இயேசு.
32. அவர் எப்படிப்பட்டவராய் இருப்பார் என்றான்? பெரியவராயிருப்பார், உன்ன தமானவருடைய குமாரன் என்னப்படுவார். கர்த்தராகிய தேவன் எதை அவருக் குக் கொடுப்பார்? அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை.
33. அவர் யாரை என்றென்றைக்கும் அரசாளுவார்? யாக்கோபின் குடும்பத் தாரை. அவருடைய ராஜ்யத்துக்கு என்ன இராது என்றான்? முடிவிராது.
34. அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி சொன்னது என்ன? இது எப்படியா கும்? புருஷனை அறியேனே என்றாள். 
35. தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: எது உன்மேல் வரும்?பரிசுத்த ஆவி. எது உன்மேல் நிழலிடும்? உன்னதமானவருடைய பலம். ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது யார் என்னப்படும்? தேவனுடைய குமாரன்.
36. இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற யார் தன் முதிர்வயதிலே ஒரு புத்திர னைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்? எலிசபெத். மலடியென்னப்பட்ட அவளுக்கு இது எத்தனையாவது மாதம்? ஆறாம் மாதம்.
37. யாராலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான்? தேவனாலே.
38. அதற்கு மரியாள் என்ன சொன்னாள்? இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் என்ன செய்தான்? அவளிடத்திலிருந்து போய்விட்டான்.
39. அந்நாட்களில் மரியாள் எழுந்து, எங்கே போனாள்? மலைநாட்டிலே  யூதாவி லுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போனாள். 
40. யார் வீட்டுக்குள் பிரவேசித்து யாரை வாழ்த்தினாள்? சகரியாவின் வீட்டுக் குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
41. எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, எது துள்ளிற்று? அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று. எலிசபெத்து எதினால் நிரப்பப்பட்டாள்? பரிசுத்த ஆவியினால்.
42. எலிசபெத்து உரத்த சத்தமாய் சொன்னது என்ன? ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. 
43. யார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது? என் ஆண்டவரு டைய தாயார்.
44. இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என்ன ஆயிற்று? என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று. 
45. யார் பாக்கியவதி? விசுவாசித்தவளே பாக்கியவதி. யாராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்? கர்த்தராலே
46. அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா யாரை மகிமைப்படுத்துகிறது என்றாள்? கர்த்தரை மகிமைப்படுத்துகிறது.
47. என் ஆவி யாரில் களிகூருகிறது என்றாள்? என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. 
48. அவர் எதை நோக்கிப் பார்த்தார்? தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார். இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னை யார் என்பார்கள்? பாக்கியவதி என்பார்கள்.
49. யார் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்? வல்லமையுடையவர். அவருடைய நாமம் எப்படிப்பட்டது? பரிசுத்தமுள்ளது.
50. அவருடைய இரக்கம் யாருக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது? அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்கு.
51. கர்த்தர் எதினாலே பராக்கிரமஞ்செய்தார்? தம்முடைய புயத்தினாலே. இருத யசிந்தையில் அகந்தையுள்ளவர்களை என்ன செய்தார்? சிதறடித்தார்.
52. பலவான்களை என்ன செய்தார்? ஆசனங்களிலிருந்து தள்ளினார். தாழ்மை யானவர்களை என்ன செய்தார்? உயர்த்தினார். 
53. பசியுள்ளவர்களை என்ன செய்தார்? நன்மைகளினால் நிரப்பினார். ஐசுவரிய முள்ளவர்களை என்ன செய்தார்? வெறுமையாய் அனுப்பிவிட்டார். 
54. நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்ன செய்தார்? என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்தார். 
55. தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை என்ன செய்தார் என்றாள்? ஆதரித் தார். 
56. மரியாள் ஏறக்குறைய எத்தனை மாதம் அவளுடனே இருந்து, தன் வீட்டுக் குத் திரும்பிப்போனாள்? மூன்றுமாதம். 
57. எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் யாரைப் பெற் றாள்? ஒரு புத்திரனைப் பெற்றாள். 
58. கர்த்தர் அவளிடத்தில் எதை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனேகூடச் சந்தோ ஷப்பட்டார்கள்? தம்முடைய இரக்கத்தை.
59. எட்டாம்நாளிலே பிள்ளைக்கு என்ன பண்ணும்படிக்கு அவர்கள் வந்தார்கள்? விருத்தசேதனம். அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்கு என்ன என்று பேரிடப்போனார்கள்? சகரியா.
60. அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல, அதற்கு என்ன என்று பேரிட வேண் டும் என்றாள்? யோவான். 
61. அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்? உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொன்னார்கள். 
62. அதின் தகப்பனை நோக்கி என்ன என்று சைகையினால் கேட்டார்கள்? இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர்.
63. அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் என்ன என்று எழுதினான்? யோவான். எல்லாரும் என்ன ஆனார்கள்? ஆச்சரியப்பட்டார்கள்.
64. உடனே அவனுடைய வாய் என்ன செய்தது? திறக்கப்பட்டது. அவனுடைய நாவு என்ன செய்தது? கட்டவிழ்க்கப்பட்டது. அவன் என்ன பேசினான்? தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்.
65. அதினால் அவர்களைச்சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் என்ன உண்டா யிற்று? பயமுண்டாயிற்று. மேலும் எங்கெல்லாம் இந்த வர்த்தமானங்களெல் லாம் சொல்லிக்கொள்ளப்பட்டது? யூதேயாவின் மலைநாடெங்கும்.
66. அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே என்ன என்றார்கள்? அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதா யிருக்குமோ என்றார்கள். எது அந்தப் பிள்ளையோடே இருந்தது? கர்த்தரு டைய கரம்.
67. அவனுடைய தகப்பனாகிய சகரியா என்ன ஆனான்? பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனம் சொன்னான்.  
68. சகரியா இயேசுவைக்குறித்து சொன்ன தீர்க்கதரிசனம் என்ன? இஸ்ரவே லின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. 
69. அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்;
70. தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: 
71. உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத் தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று,
72. அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறை வேற்றுவதற்கும்;
73. ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கி னால் தாம் சொன்னபடியே, 
74. தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின் றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும் படிக்கு, 
75. தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக் கொம்பை ஏற்படுத்தினார். 
76. தனது பாலகனைக்குறித்து சொன்ன தீர்க்கதரிசனம் என்ன? நீயோ பால கனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,
77. நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக் குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன் னாக நடந்துபோவாய். 
78. அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச் சம் தரவும், 
79. நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக் கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித் திருக்கிறது என்றான். 
80. அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் எங்கே இருந்தான்? வனாந்தரங்க ளிலே இருந்தான்.

No comments:

Post a Comment