Wednesday, July 29, 2015

லூக்கா - 4

லூக்கா - 4
1. இயேசு எதினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பினார்? பரிசுத்த ஆவியினாலே. யாராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்? ஆவியானவராலே.
2. எத்தனைநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார்? நாற்பதுநாள். அந்த நாட்களில் அவர் என்ன புசியாதிருந்தார்? ஒன்றும் புசியாதிருந்தார். அந்த நாட்கள் முடிந்த பின்பு அவருக்கு என்ன உண்டாயிற்று? பசியுண்டாயிற்று.
3. அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் யாரேயானால் இந்தக் கல் அப்பமா கும்படி சொல்லும் என்றான்? தேவனுடைய குமாரனேயானால்.
4. அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, வேறு எதி னாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்? தேவனுடைய ஒவ் வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.
5. பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், எவைகளை ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்தான்? உலகத்தின் சகல ராஜ்யங்க ளையும்.
6. இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள எவைகளை உமக்குத் தருவேன்? அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும். இவைகள் யாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது? எனக்கு (பிசாசுக்கு). யாருக்கு இவைகளைக் கொடுக் கிறேன்? எனக்கு இஷ்டமானவனுக்கு.
7. நீர் என்ன செய்தால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்? என்னைப் பணிந்துகொண்டால்.
8. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, யாரு ஒருவருக்கே ஆராதனை செய் என்று எழுதியிருக்கிறதே என்றார்? உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக.
9. அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், எதின்மேல் அவரை நிறுத்தினான்? தேவாலயத்து உப்பரிகையின்மேல். நீர் தேவனுடைய குமாரனேயானால், என்ன செய்யும் என்றான்? இங்கேயிருந்து தாழக்குதியும்.
10. ஏன் அப்படிச் சொன்னான்? ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்மு டைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும், 
11. உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக் கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான். 
12. அதற்கு இயேசு: யாரை பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கி றதே என்றார்? உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக.
13. பிசாசானவன் சோதனையெல்லாம் முடிந்தபின்பு, என்ன செய்தான்? சில காலம் அவரை விட்டு விலகிப்போனான்.
14. பின்பு இயேசு யாருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார்? ஆவியானவருடைய பலத்தினாலே. அவருடைய கீர்த்தி எங்கே பரம்பிற்று? சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று. 
15. அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் என்ன செய்தார்? உபதேசித்தார். யாரால் புகழப்பட்டார்? எல்லாராலும் புகழப்பட்டார்.
16. தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத் தின்படியே என்ன செய்தார்? ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார். 
17. அப்பொழுது என்ன புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது? ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம். அவர் புஸ்தகத்தை என்ன செய்தார்? விரித்தார். 
18. அவர் புஸ்தகத்தை விரித்து எதைக்கண்டு வாசித்தார்? கர்த்தருடைய ஆவி யானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குண மாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வை யையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,
19. கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு வாசித்தார். 
20. வாசித்து, என்ன செய்தார்? புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத் தில் கொடுத்து, உட்கார்ந்தார். யாருடைய கண்கள் அவர்மேல் நோக்கமாயிருந் தது? ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும்.
21. அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி சொன்னது என்ன? உங் கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார். 
22. எல்லாரும் அவருக்கு என்ன கொடுத்தார்கள்? நற்சாட்சி கொடுத்தார்கள். அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து என்ன செய்தார்கள்? ஆச்சரியப்பட்டார்கள். ஆச்சரியப்பட்டு என்ன சொன்னார் கள்? இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள். 
23. அவர் அவர்களை நோக்கி சொன்ன பழமொழி என்ன? வைத்தியனே, உன் னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொன்னார். எதை உன் ஊராகிய இவ்விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடன் சொல்லுவீர்கள் என்பது நிச்சயம் என்றார்? நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமூரில் உன் னால் செய்யப்பட்ட கிரியைகள் எவைகளோ அவைகளை உன் ஊராகிய இவ் விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடன் சொல்லுவீர்கள் என்பது நிச்சயம். 
24. ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் எங்கே அங்கீகரிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? தன் ஊரிலே அங்கீகரிக் கப்படமாட்டான். 
25. அன்றியும் எலியாவின் நாட்களிலே எத்தனை வருஷம் எத்தனை மாதம் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தது? மூன்று வருஷமும் ஆறுமாதமும். அப்போது, இஸ்ரவேலருக்குள் யார் இருந்தார்கள்? அநேகம் விதவைகள் இருந்தார்கள்.
26. ஆயினும் எலியா யாரிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத் தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை? சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரி லிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொ ருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. 
27. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே யார் இருந்தார்கள்? அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள். ஆயினும் யாரே யல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத் தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? சீரியா தேசத்தானா கிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்பட வில்லை.
28. ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும், இவைகளைக் கேட்டபொழுது, என்ன ஆனார்கள்? கோபமூண்டார்கள். 
29. எழுந்திருந்து, அவரை என்ன செய்தார்கள்? ஊருக்குப் புறம்பே தள்ளி, தங் கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டு போனார்கள்.
30. அவரோ என்ன செய்தார்? அவர்கள் நடுவினின்று கடந்துபோய்விட்டார். 
31. பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, என்ன செய்தார்? ஓய்வுநாட்களில் ஜனங்களுக்குப் போதகம் பண்ணினார். 
32. அவர்கள் எதைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்? அவருடைய வசனம் அதி காரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
33. ஜெபஆலயத்திலே யார் ஒருவன் இருந்தான்? அசுத்த ஆவிபிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான். 
34. அவன் என்ன சொல்லி உரத்தசத்தமிட்டான்? ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்த சத்தமிட்டான்.
35. அதற்கு இயேசு என்ன சொன்னார்? நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று அதை அதட்டினார். அப்பொழுது பிசாசு அவனை என்ன செய்தது? ஜனங்களின் நடுவே விழத்தள்ளி, அவனுக்க ஒரு சேதமுஞ்செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது.
36. எல்லாரும் ஆச்சரியப்பட்டு என்னவென்று ஒருவரோடொருவர் பேசிக் கொண்டார்கள்? இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமை யோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப் போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். 
37. அவருடைய கீர்த்தி எங்கெல்லாம் பிரசித்தமாயிற்று? சுற்றிலுமிருந்த நாடுக ளிலுள்ள இடங்களிலெல்லாம் பிரசித்தமாயிற்று. 
38. பின்பு அவர் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, யார் வீட்டில் பிரவேசித் தார்? சீமோன் வீட்டில். சீமோனுடைய மாமி எப்படி இருந்தாள்? கடும் ஜூர மாய்க் கிடந்தாள். அவளுக்காக யாரை வேண்டிக்கொண்டார்கள்? இயேசுவை.
39. அவர் அவளிடத்தில் குனிந்துநின்று, என்னவென்று கட்டளையிட்டார்? ஜூரம் நீங்கும்படி கட்டளையிட்டார். ஜூரம் என்ன ஆனது? அது அவளை விட்டு நீங்கிற்று. உடனே அவள் என்ன செய்தாள்? எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தாள்.
40. சூரியன் அஸ்தமித்தபோது, ஜனங்களெல்லாரும் யாரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்? தங்களுக்குள்ளே பலபல வியாதிகளால் வருத்தப்பட்ட வர்களை. அவர்கள் ஒவ்வொருவரையும் அவர் என்ன செய்தார்? ஒவ்வொரு வர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களைச் சொஸ்தமாக் கினார். 
41. பிசாசுகளும் என்னவென்று சத்தமிட்டு, என்ன செய்தது? நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது. அவரை யார் என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேச வொட்டாமல் அதட்டினார்? கிறிஸ்து.
42. உதயமானபோது, அவர் புறப்பட்டு, எங்கே போனார்? வனாந்தரமான ஓரிடத் திற்குப் போனார். திரளான ஜனங்கள் அவரைத் தேடி, அவரிடத்தில் வந்து, அவரை என்ன செய்தார்கள்? தங்களை விட்டுப் போகாதபடிக்கு அவரை நிறுத் திக்கொண்டார்கள்.
43. அவரோ அவர்களை நோக்கி நான் எதற்காக அனுப்பப்பட்டேன் என்றார்? நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார். 
44. அந்தப்படியே எங்கே பிரசங்கம் பண்ணிக்கொண்டுவந்தார்? கலிலேயா நாட்டிலுள்ள ஜெபஆலயங்களில்.

No comments:

Post a Comment