Thursday, July 23, 2015

லூக்கா - 2

லூக்கா - 2
1. அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று யாரால் கட்டளை பிறந்தது? அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.
2. சீரியாநாட்டிலே யார் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று? சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்த போது.
3. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும் படிக்கு எல்லாரும் எங்கள் போனார்கள்? தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். 
4. அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயி ருந்த படியினாலே, குடிமதிப்பெழுதப்படும்படி, போனான்? தனக்கு மனைவி யாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே.
5. யோசேப்பு மரியாளுடன் எந்த ஊருக்குப் போனான்? கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின்  ஊருக்குப் போனான். 
6. அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்கு என்ன நேரிட்டது? பிரச வகாலம் நேரிட்டது. 
7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, எங்கே அவர்களுக்கு இடமில் லாதிருந்த படியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்? சத்திரத்திலே.
8. அப்பொழுது அந்த நாட்டிலே யார் வயல்வெளியில் தங்கினார்கள்? மேய்ப்பர் கள். இராத்திரியிலே என்ன செய்து கொண்டிருந்தார்கள்? தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
9. அவ்வேளையில் யார் அவர்களிடத்தில் வந்து நின்றான்? கர்த்தருடைய தூதன். அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது எது? கர்த்தருடைய மகிமை. அவர்கள் என்ன செய்தார்கள்? மிகவும் பயந்தார்கள்.
10. தேவதூதன் அவர்களை நோக்கி என்ன சொன்னான்? பயப்படாதிருங்கள். எதை அறிவிக்கிறேன் என்றான்? இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோ ஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
11. இன்று யார் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்? கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர்.
12. பிள்ளையைத் துணிகளில் சுற்றி, எங்கே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்? முன்னணையிலே. இதுவே உங்களுக்கு என்ன என்றான்? அடையாளம்.
13. அந்தசஷணமே எது அந்தத் தூதனுடனே தோன்றியது? பரமசேனையின் திரள்.
14. என்ன சொல்லி தேவனைத் துதித்தார்கள்? உன்னதத்திலிருக்கிற தேவ னுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும்  உண் டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். 
15. தேவதூதர்கள் அவர்களை விட்டு எங்கே போனார்கள்? பரலோகத்துக்கு. மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி என்ன சொல்லிக்கொண்டார்கள்? நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப் பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள்.
16. தீவிரமாய் வந்து, என்ன கண்டார்கள்? மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
17. கண்டு, எதைக் குறித்து பிரசித்தம் பண்ணினார்கள்? அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்.
18. மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைக ளைக்குறித்து என்ன செய்தார்கள்? ஆச்சரியப்பட்டார்கள்.
19. மரியாளோ என்ன செய்தாள்? அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத் திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.
20. மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல் லாவற்றிற்காகவும் என்ன செய்து திரும்பிப் போனார்கள்? தேவனை மகிமைப் படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப் போனார்கள். 
21. பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டியது எந்த நாள்? எட்டாம் நாள். அந்த நாளில் பிள்ளைக்கு என்ன என்று பேரிட்டார்கள்? அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள். 
22. எதன்படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது? மோசேயின் நியாயப்பிரமாணத்தின் படியே. 
23. மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி என்ன செய்தார்கள்? முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்த ருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக் கென்று ஒப்புக்கொடுக்கவும்,
24. கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத் தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.
25. அப்பொழுது யார் எருசலேமில் இருந்தான்? சிமியோன் என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன். அவன் எப்படிப்பட்டவனாய் இருந்தான்? அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக் கிறவனாயும் இருந்தான். அவன் மேல் யார் இருந்தார்? பரிசுத்தஆவி இருந்தார்.
26. என்ன என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது? கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று.
27. அவன் ஆவியின் ஏவுதலினால் எங்கே வந்திருந்தான்? தேவாலயத்திற்கு. இயேசு என்னும் பிள்ளைக்காக எதன்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருந்தார்கள்? நியாயப்பிரமாண முறைமையின்படி.
28. அப்பொழுது சிமியோன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, என்ன செய்தான்? தேவனை ஸ்தோத்திரித்தான்.
29. சிமியோன் தேவனை ஸ்தோத்திரித்து ஆண்டவரே, உமது வார்த்தையின் படி உமது அடியேனை இப்பொழுது எப்படி போகவிடுகிறீர்? சமாதானத்தோடே.
30. எதை என் கண்கள் கண்டது என்றான்? புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், 
31. தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின 
32. உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான். 
33. அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யார் ஆச்சரியப்பட்டார் கள்? யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
34. பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரி யாளை நோக்கி: சொன்னது என்ன? இதோ, அநேகருடைய இருதய சிந்தனை கள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக் கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக் கப்பட்டிருக்கிறார். 
35. உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான். 
36. அன்னாள் என்பவள் யார்? ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்பவள் ஒரு தீர்க்கதரிசி. அவள் எப்படிப்பட்டவ ளாய் இருந்தாள்? கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள்.
37. ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள்.
38. அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, யாரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கம் அவரைக்குறித்துப் பேசினாள்? கர்த்த ரைப் புகழ்ந்து.
39. எதை அவர்கள் செய்து முடித்தபின்பு, கலிலேயாநாட்டிலுள்ள தங்கள் ஊரா கிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள்? கர்த்தருடைய நியாயப்பிரமாணத் தின்படி சகலத்தையும்.
40. பிள்ளை வளர்ந்து, எதிலே பெலன் கொண்டது? ஆவியிலே பெலன்கொண் டது. எதினால் நிறைந்தது? ஞானத்தினால் நிறைந்தது. எதுவும் அவர்மேல் இருந்தது? தேவனுடைய கிருபையும்.
41. அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எங்குப் போவார்கள்? எருசலேமுக்குப் போவார்கள். 
42. அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் எதின்படி எருசலேமுக் குப் போனார்கள்? அந்தப் பண்டிகை முறைமையின்படி.
43. பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எங்கே இருந்துவிட்டார்? எருசலேமிலே இருந்துவிட்டார். இது யாருக்குத் தெரி யாதிருந்தது? அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.
44. அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, யாரிடத்தில் அவரைத் தேடினார்கள்? உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.
45. காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எங்கே போனார்கள்? எருசலே முக்குத் திரும்பிப் போனார்கள்.
46. மூன்றுநாளைக்குப் பின்பு, அவரை எங்கே எப்படிக் கண்டார்கள்? அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிற தைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள். 
47. அவர் பேசக்கேட்ட யாவரும் எதைக்குறித்துப் பிரமித்தார்கள்? அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள். 
48. தாய் தகப்பன்மாரும் அவரைக் கண்டு என்ன ஆனார்கள்? ஆச்சரியப்பட்டார் கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி என்ன சொன்னார்? மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்.
49. அதற்கு அவர் சொன்ன மறுஉத்தரவு என்ன? நீங்கள் ஏன் என்னைத் தேடினீர் கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர் களா என்றார். 
50. எதை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை? தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை.
51. பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், என்ன செய்தார்? நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்க திகளையெல்லாம் என்ன செய்து கொண்டாள்? தன் இருதயத்திலே வைத்துக் கொண்டாள். 
52. இயேசுவானவர் எவைகளிளெல்லாம் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்? ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிக மதிகமாய் விருததியடைந்தார்.

No comments:

Post a Comment