லூக்கா - 3
1. திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, யூதே யாவுக்கு தேசாதிபதி யார்? பொந்தியு பிலாத்து. காற்பங்கு தேசமாகிய கலிலே யாவுக்கு அதிபதி யார்? ஏரோது. காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதி யார்? பொந்தியு பிலாத்துவின் சகோதர னாகிய பிலிப்பு. காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதி யார்? லிசானியா.
2. அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்த ரத்திலே யாருக்குத் தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று? சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு.
3. யாருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்? கர்த்தருக்கு. யாருக்கு பாதைக ளைச் செவ்வைபண்ணுங்கள்? கர்த்தருக்கு.
4. எவைகளெல்லாம் நிரப்பப்படும்? பள்ளங்களெல்லாம். எவைகள் தாழ்த்தப்ப டும்? சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும். எவைகள் செவ்வையா கும்? கோணலானவைகள் செவ்வையாகும். எவைகள் சமமாகும்? கரடானவை கள் சமமாகும்.
5. யாரெல்லாம் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்? மாம்சமான யாவ ரும். வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று எந்த தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறது? ஏசாயா.
6. அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், எதற்கென்று மனந் திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்? பாவமன் னிப்புக்கென்று.
7. அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படிக்குப் புறப்பட்டுவந்த திர ளான ஜனங்களை நோக்கி: யார் என்று வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார் என்றான்? விரியன்பாம்புக் குட்டிகளே! என்றான்.
8. எதற்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்? மனந்திரும்புதலுக்கு ஏற்ற. யார் எங்க ளுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்? ஆபி ரகாம். யார் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்? தேவன்.
9. இப்பொழுதே எது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது? கோடரி. ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு எதிலே போடப்ப டும் என்றான்? அக்கினியிலே.
10. அப்பொழுது யார் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள்? ஜனங்கள்.
11. அவர்களுக்கு அவன் பிரதியுத்தரமாக: யார் இல்லாதவனுக்குக் கொடுக்கக் கடவன்? இரண்டு அங்கிகளையுடையவன். யாரும் அப்படியே செய்யக்கடவன் என்றான்? ஆகாரத்தை உடையவனும்.
12. ஆயக்காரரும் எதற்காக வந்தார்கள்? ஞானஸ்நானம் பெறவந்தார்கள். ஆயக்காரர் அவனை நோக்கி என்ன கேட்டார்கள்? போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
13. அதற்கு யோவான் சொன்னது என்ன? உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிற தற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.
14. போர்ச்சேவகரும் அவனை நோக்கி என்ன கேட்டார்கள்? நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு யோவான் சொன்னது என்ன? நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டா மலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.
15. யோவானைக்குறித்து: இவன் யார் என்று ஜனங்களெல்லாரும் எண்ணங் கொண்டு, தங்கள் இருதயங்களில் யோசனையாயிருந்தார்கள்? கிறிஸ்துவோ என்று.
16. யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? நான் ஜலத் தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்தஆவியினாலும் அக்கினியினாலும் உங்க ளுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்.
17. தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவி யாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
18. வேறு எவைகளையும் அவன் ஜனங்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்? அநேக புத்திமதிகளையும்.
19. காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது யோவானாலே ஏன் கடிந்து கொள்ளப் பட்டான்? தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தமாக வும், தான் செய்த மற்றப் பொல்லாங்குகளினிமித்தமாகவும் கடிந்துகொள்ளப் பட்டான்.
20. தான் செய்த மற்றெல்லாப் பொல்லாங்குகளும் தவிர, வேறு என்ன செய் தான்? யோவானையும் காவலில் அடைத்துவைத்தான்.
21. ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, யாரும் ஞானஸ்நானம் பெற்றார்? இயேசுவும் ஞானஸ்நானம் பெற்றார். ஜெபம்பண்ணுகையில், எது திறக்கப்பட்டது? வானம் திறக்கப்பட்டது.
22. பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு எதைப்போல அவர்மேல் இறங்கி னார்? புறாவைப்போல. வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி, என்ன வென்று உரைத்தது? நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக் கிறேன் என்று உரைத்தது.
23. அப்பொழுது இயேசு ஏறக்குறைய எத்தனை வயதுள்ளவரானார்? முப்பது வயதுள்ளவரானார். அவர் யாரென்று எண்ணப்பட்டார்? யோசேப்பின் குமார னென்று. அந்த யோசேப்பு யார்? ஏலியின் குமாரன்.
24. ஏலி யார்? ஏலி மாத்தாத்தின் குமாரன். மாத்தாத் யார்? மாத்தாத் லேவியின் குமாரன். லேவி யார்? லேவி மெல்கியின் குமாரன். மெல்கி யார்? மெல்கி யன்னாவின் குமாரன். யன்னா யார்? யன்னா யோசேப்பின் குமாரன்.
25. யோசேப்பு யார்? யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன். மத்தத்தியா யார்? மத்தத்தியா ஆமோசின் குமாரன். ஆமோஸ் யார்? ஆமோஸ் நாகூமின் குமாரன். நாகூம் யார்? நாகூம் எஸ்லியின் குமாரன். எஸ்லி யார்? எஸ்லி நங்காயின் குமாரன்.
26. நங்காய் யார்? நங்காய் மாகாத்தின் குமாரன். மாகாத் யார்? மாகாத் மத்தத் தியாவின் குமாரன். மத்தத்தியா யார்? மத்தத்தியா சேமேயின் குமாரன். சேமேய் யார்? சேமேய் யோசேப்பின் குமாரன். யோசேப்பு யார்? யோசேப்பு யூதாவின் குமாரன். யூதா யார்? யூதா யோவன்னாவின் குமாரன்.
27. யோவன்னா யார்? யோவன்னா ரேசாவின் குமாரன். ரேசா யார்? ரேசா சொரொபாபேலின் குமாரன். சொரொபாபேல் யார்? சொரொபாபேல் சலாத்தி யேலின் குமாரன். சலாத்தியேல் யார்? சலாத்தியேல் நேரியின் குமாரன்.
28. நேரி யார்? நேரி மெல்கியின் குமாரன். மெல்கி யார்? மெல்கி அத்தியின் குமாரன். அத்தி யார்? அத்தி கோசாமின் குமாரன். கோசாம் யார்? கோசாம் எல்மோதாமின் குமாரன். எல்மோதாம் யார்? எல்மோதாம் ஏரின் குமாரன். ஏர் யார்? ஏர் யோசேயின் குமாரன்.
29. யோசே யார்? யோசே எலியேசரின் குமாரன். எலியேசர் யார்? எலியேசர் யோரீமின் குமாரன். யோரீம் யார்? யோரீம் மாத்தாத்தின் குமாரன். மாத்தாத் யார்? மாத்தாத் லேவியின் குமாரன்.
30. லேவி யார்? லேவி சிமியோனின் குமாரன். சிமியோன் யார்? சிமியோன் யூதாவின் குமாரன். யூதா யார்? யூதா யோசேப்பின் குமாரன். யோசேப்பு யார்? யோசேப்பு யோனானின் குமாரன். யோனான் யார்? யோனான் எலியாக் கீமின் குமாரன்.
31. எலியாக்கீம் யார்? எலியாக்கீம் மெலெயாவின் குமாரன். மெலெயா யார்? மெலெயா மயினானின் குமாரன். மயினான் யார்? மயினான் மாத்தாத்தாவின் குமாரன். மாத்தாத்தா யார்? மாத்தாத்தா நாத்தானின் குமாரன். நாத்தான் யார்? நாத்தான் தாவீதின் குமாரன்.
32. தாவீது யார்? தாவீது ஈசாயின் குமாரன். ஈசாய் யார்? ஈசாய் ஓபேதின் குமாரன். ஓபேத் யார்? ஓபேத் போவாசின் குமாரன். போவாஸ் யார்? போவாஸ் சல்மோனின் குமாரன். சல்மோன் யார்? சல்மோன் நகசோனின் குமாரன்.
33. நகசோன் யார்? நகசோன் அம்மினதாபின் குமாரன். அம்மினதாப் யார்? அம்மினதாப் ஆராமின் குமாரன். ஆராம யார்? ஆராம் எஸ்ரோமின் குமாரன். எஸ்ரோம் யார்? எஸ்ரோம் பாரேசின் குமாரன். பாரேஸ் யார்? பாரேஸ் யூதா வின் குமாரன். யூதா யார்? யூதா யாக்கோபின் குமாரன்.
34. யாக்கோபு யார்? யாக்கோபு ஈசாக்கின் குமாரன். ஈசாக்கு யார்? ஈசாக்கு ஆபிர காமின் குமாரன். ஆபிரகாம் யார்? ஆபிரகாம் தேராவின் குமாரன். தேரா யார்? தேரா நாகோரின் குமாரன்.
35. நாகோர் யார்? நாகோர் சேரூக்கின் குமாரன். சேரூக் யார்? சேரூக் ரெகூவின் குமாரன். ரெகூ யார்? ரெகூ பேலேக்கின் குமாரன். பேலேக் யார்? பேலேக் ஏபே ரின் குமாரன். ஏபேர் யார்? ஏபேர் சாலாவின் குமாரன்.
36. சாலா யார்? சாலா காயினானின் குமாரன். காயினான் யார்? காயினான் அர்ப் பகசாத்தின் குமாரன். அர்ப்பகசாத் யார்? அர்ப்பகசாத் சேமின் குமாரன். சேம் யார்? சேம் நோவாவின் குமாரன். நோவா யார்? நோவா லாமேக்கின் குமாரன்.
37. லாமேக்கு யார்? லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன். மெத்தூசலா யார்? மெத்தூசலா ஏனோக்கின் குமாரன். ஏனோக்கு யார்? ஏனோக்கு யாரேதின் குமா ரன். யாரேத் யார்? யாரேத் மகலாலெயேலின் குமாரன். மகலாலெயேல் யார்? மகலாலெயேல் கேனானின் குமாரன். கேனான் யார்? கேனான் ஏனோசின் குமாரன்.
38. ஏனோஸ் யார்? ஏனோஸ் சேத்தின குமாரன். சேத் யார்? சேத் ஆதாமின் குமாரன். ஆதாம் யார்? ஆதாம் தேவனால் உண்டானவன்.
No comments:
Post a Comment