மாற்கு – 16
1. ஓய்வுநாளானபின்பு யாரெல்லாம் அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவை களை வாங்கிக்கொண்டு. வந்தார்கள்? மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்.
2. வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது எங்கே வந்தார்கள்? கல்லறையினிடத்தில் வந்தார்கள்.
3. என்ன என்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டார்கள்? கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான்.
4. அந்தக் கல் எப்படிப்பட்டதாயிருந்தது? மிகவும் பெரிதாயிருந்தது. அவர்கள் ஏறிட்டுப்பார்க்கிறபோது, என்ன கண்டார்கள்? அது தள்ளப்பட்டிருக்கக் கண்டார் கள்.
5. அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, யாரைக் கண்டு பயந்தார்கள்? வெள் ளையங்கி தரித்தவனாய் வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக் கண்டு பயந்தார்கள்.
6. அவன் அவர்களை நோக்கி, என்ன சொன்னான்? பயப்படாதிருங்கள், சிலுவை யில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த் தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.
7. நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய்; உங்க ளுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னப டியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.
8. எதனால் அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடி னார்கள்? நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால். அவர்கள் எதனால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற் போனார்கள்? பயந்திருந்தபடியினால்.
9. வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, யாருக்கு முதன்முதல் தரிசனமானார்? மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.
10. அவளிடத்திலிருந்து அவர் எத்தனை பிசாசுகளைத் துரத்தியிருந்தார்? ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடேகூட இருந்தவர் கள் என்ன செய்து கொண்டிருக்கையில் அவர்களிடத்தில் போய், அந்தச் செய் தியை அறிவித்தாள்? துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில்.
11. அவர் உயிரோடிருக்கிறாரென்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது என்ன செய்யவில்லை? நம்பவில்லை.
12. அதன்பின்பு இயேசு யாருக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்? அவர்களில் இரண்டு பேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூப மாய்த் தரிசனமானார்.
13. அவர்களும் போய், என்ன செய்தார்கள்? அதை மற்றவர்களுக்கு அறிவித் தார்கள். அவர்களையும் அவர்கள் என்ன செய்யவில்லை? நம்பவில்லை.
14. அதன்பின்பு பதினொருவரும் என்ன செய்து கொண்டிருக்கையில் அவர்க ளுக்கு அவர் தரிசனமானார்? போஜனபந்தியிலிருக்கையில். இயேசு எதைக்கு றித்து அவர்களைக் கடிந்து கொண்டார்? உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்ட வர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத் தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்து கொண் டார்.
15. பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ் டிக்கும் எதைப் பிரசங்கியுங்கள் என்றார்? சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் என்றார்.
16. யார் இரட்சிக்கப்படுவான்? விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்ற வன் இரட்சிக்கப்படுவான். யார் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்? விசு வாசியாதவன்.
17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்கள் எவைகள்? என் நாமத்தி னாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
19. இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத் துக் கொள்ளப்பட்டு, எங்கே உட்கார்ந்தார்? தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.
20. அவர்கள் புறப்பட்டுப்போய், என்ன செய்தார்கள்? எங்கும் பிரசங்கம்பண்ணி னார்கள். கர்த்தர் அவர்களுடனேகூட எதை நடப்பித்தார்? கிரியையை நடப்பித் தார். அவர்களால் நடந்த அடையாளங்களினாலே எதை உறுதிப்படுத்தினார்? வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.
No comments:
Post a Comment