மாற்கு – 14
1. இரண்டு நாளைக்குப்பின்பு என்ன பண்டிகை வந்தது? புளிப்பில்லாத அப்பஞ் சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது யாரெல்லாம் அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி வகைதேடினார்கள்? பிரதான ஆசாரியரும் வேதபாரகரும்.
2. ஆகிலும் எதினாலே பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள்? ஜனங்களுக்குள்ளே கலகம் உண்டாகாதபடிக்கு, அப்படிச் செய்யலாகாது என்றார்கள்.
3. அவர் பெத்தானியாவில் யார் வீட்டில் போஜனபந்தி இருந்தார்? குஷ்டரோகி யாயிருந்த சீமோன் வீட்டிலே போஜனபந்தியிருந்தார். அங்கு ஒரு ஸ்திரீ என்ன செய்தாள்? விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக்கொண்டு வந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் சிரசின் மேல் ஊற்றினாள்.
4. அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே என்ன ஆனார்கள்? விசனமடைந்தார்கள். விசனமடைந்து என்னவென்று முறுமுறுத்தார்கள்? இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்?
5. இதை முந்நூறு பணத்துக்கு அதிகமான கிரயத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைக் குறித்து முறுமுறுத்தார்கள்.
6. இயேசு அவர்களை நோக்கி சொன்னது என்ன? அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவு படுத்துகிறீர்கள்? அவள் என்னிடத்தில் என்ன செய்தி ருக்கிறாள்? நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.
7. யார் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்? தரித்திரர். உங்களுக்கு மன துண்டாகும்போதெல்லாம் நீங்கள் யாருக்கு நன்மை செய்யலாம்? தரித்திர ருக்கு. நானோ எப்போது உங்களிடத்தில் இரேன்? எப்போதும்.
8. இவள் எதைச் செய்தாள்? தன்னால் இயன்றதைச் செய்தாள். எதற்கு எத்தன மாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள்? நான் அடக்கம்பண்ணப் படுவதற்கு எத்தனமாக.
9. எது உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்க ளுக்குச் சொல்லுகிறேன் என்றார்? இந்தச் சுவிசேஷம்.
10. அப்பொழுது, யார் அவரைப் பிரதான ஆசாரியருக்குக் காட்டிக்கொடுக்கும் படி அவர்களிடத்திற்குப் போனான்? பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரி யோத்து என்பவன்.
11. அவர்கள் அதைக் கேட்டு, சந்தோஷப்பட்டு, என்னவென்று வாக்குத்தத்தம் பண்ணினார்கள்? அவனுக்குப் பணங்கொடுப்போம் என்று. அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு என்ன பார்த்துக்கொண்டிருந்தான்? தகுந்த சமயம் பார்த் துக்கொண்டிருந்தான்.
12. பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற முதலாம் நாளிலே, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: என்னவென்று கேட்டார்கள்? நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே போய் ஆயத்தம் பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.
13. அவர் தம்முடைய சீஷரில் இரண்டு பேரை நோக்கி நீங்கள் எங்கே போங்கள் என்றார்? நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள். அங்கே யார் பின்னே போங்கள் என்றார்? தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படு வான். அவன் பின்னே போங்கள்.
14. அவன் எந்த வீட்டிற்குள் பிரவேசிக்கிறானோ அந்த வீட்டு எஜமானை நீங்கள் நோக்கி சொல்லவேண்டியது என்ன என்றார்? நான் என் சீஷரோடுகூடப் பஸ் காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கேயென்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள்.
15. அவன் எந்த வீட்டை உங்களுக்குக் காண்பிப்பான் என்றார்? கம்பளம் முதலா னவைகள் விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற விஸ்தாரமான மேல்வீட்ட றையை உங்களுக்குக் காண்பிப்பான். அங்கே என்ன செய்யுங்கள் என்றார்? நமக்காக ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
16. அப்படியே, அவருடைய சீஷர் என்ன செய்தார்கள்? புறப்பட்டு நகரத்தில் போய், தங்களுக்கு அவர் சொன்ன படியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணி னார்கள்.
17. சாயங்காலமானபோது, அவர் யாரோடுகூட அவ்விடத்திற்கு வந்தார்? பன்னிருவரோடுங்கூட.
18. அவர்கள் பந்தியமர்ந்து போஜனம் பண்ணுகையில், இயேசு அவர்களை நோக்கி: யார் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே உங்களுக் குச் சொல்லுகிறேன் என்றார்? என்னுடனே புசிக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்.
19. அப்பொழுது அவர்கள் துக்கமடைந்து சொல்லிக்கொண்டது என்ன? நானோ? நானோ? என்று ஒவ்வொருவரும், அவரிடத்தில் கேட்கத் தொடங்கினார்கள்.
20. அவர் பிரதியுத்தரமாக என்ன சொன்னார்? என்னுடனேகூடத் தாலத்தில் கையிடுகிறவனாகிய பன்னிருவரிலொருவனே அவன் என்று சொன்னார்.
21. மனுஷகுமாரன் எப்படிப் போகிறார்? தம்மைக்குறித்து எழுதியிருக்கிறப டியே போகிறார். ஆகிலும், எந்த மனுஷனுக்கு ஐயோ? எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ!. அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு எப்படியிருக்கும் என்றார்? நலமாயிருக்கும் என்றார்.
22. அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வ தித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து என்ன சொன்னார்? நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.
23. பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை என்ன செய் தார்? அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லாரும் அதிலே என்ன செய்தார் கள்? பானம்பண்ணினார்கள்.
24. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது என்னவாயிருக்கிறது என்றார்? அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்த மாயிருக்கிறது.
25. எதுவரைக்கும் திராட்சப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லை யென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? நான் தேவனு டைய ராஜ்யத்தில் நவமான ரசத்தைப் பானம்பண்ணும் நாள் வரைக்கும்.
26. அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, எங்கே புறப்பட்டுப்போனார் கள்? ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.
27. அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: என்ன என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்? மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிற படி.
28. ஆகிலும் நான் உயிர்த்தெழுந்தபின்பு, உங்களுக்கு முன்னே எங்கேபோ வேன் என்றார்? கலிலேயாவுக்குப் போவேன் என்றார்.
29. அதற்குப் பேதுரு என்ன சொன்னான்? உமதுநிமித்தம் எல்லாரும் இடறல டைந்தாலும், நான் இடறலடையேன் என்றான்.
30. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, எதுக்கு முன்னே, நீ மூன்றுதரம் என்னை மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்? சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்குமுன்னே.
31. அதற்கு அவன் சொன்னது என்ன? நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயி ருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொன்னான். எல்லாரும் என்ன சொன்னார்கள்? அப்படியே சொன்னார்கள்.
32. பின்பு எங்கே வந்தார்கள்? கெத்செமனே எனப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி என்ன சொன்னார்? நான் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொன்னார்.
33. பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக் கொண்டுபோய், என்ன செய்தார்? திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
34. அப்பொழுது அவர் அவர்களிடம் என்ன சொன்னார்? என் ஆத்துமா மரணத் துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங் கள் என்று சொன்னார்.
35. சற்று அப்புறம்போய், என்னவென்று வேண்டிக்கொண்டார்? தரையிலே விழுந்து, அந்த வேளை தம்மைவிட்டு நீங்கிப்போகக்கூடுமானால் அது நீங்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டார்.
36. அப்பா பிதாவே, எல்லாம் யாராலே கூடும்? உம்மாலே கூடும். எதை என்னி டத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்மு டைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார்? இந்தப் பாத்திரத்தை.
37. பின்பு அவர் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, யாரை நோக்கி: நித்திரைபண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக் கக்கூடாதா என்றார்? பேதுருவை நோக்கி.
38. நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு என்ன செய்யுங்கள்? விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி எப்படிப்பட்டது? உற்சாகமுள்ளது. மாம்சமோ எப்படிப்பட்டது? பலவீனமுள்ளது.
39. அவர் மறுபடியும் போய் எதைச் சொல்லி ஜெபமபண்ணினார்? அந்த வார்த் தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.
40. அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் என்ன செய்கிறதைக் கண்டார்? மறுபடி யும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார். எதனால் தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்வது இன்னதென்று அறியாதிருந்தார்கள்? அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தபடியால்.
41. அவர் மூன்றாந்தரம் வந்து என்ன சொன்னார்? இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; போதும், வேளை வந்தது, இதோ, மனுஷகுமாரன் பாவிகளு டைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.
42. என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார்.
43. உடனே, அவர் இப்படிப் பேசுகையில், வந்தது யார்? பன்னிருவரில் ஒருவ னாகிய யூதாஸ் வந்தான். அவனோடேகூட யாரெல்லாம் வந்தார்கள்? பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள், பட்ட யங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.
44. அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: எதை அவர்களுக்குக் குறிப்புச் சொல்லி யிருந்தான்? நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன் தான், அவனைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்குக் குறிப்புச் சொல்லியிருந்தான்.
45. அவன் வந்தவுடனே, அவரண்டையில் சேர்ந்து என்ன செய்தான்? ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.
46. அப்பொழுது அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்மேல் கைபோட்டு, அவரை பிடித்தார்கள்.
47. அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் என்ன செய்தான்? கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான்.
48. இயேசு அவர்களை நோக்கி: எப்படி என்னைப் பிடிக்கவந்தீர்கள் என்றார்? கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளை யும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்;
49. நான் தினந்தோறும் எங்கே உபதேசம்பண்ணிக் கொண்டிருந்தேன் என்றார்? உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக் கொண்டிருந்தேன். அப்பொழுது நீங்கள் என்ன செய்யவில்லை? என்னைப் பிடிக்கவில்லை. ஆனா லும் எவைகள் நிறைவேற வேண்டியதாயிருக்கிறது என்றார்? வேதவாக்கியங் கள் நிறைவேற வேண்டியதாயிருக்கிறது என்றார்.
50. அப்பொழுது எல்லாரும் என்ன செய்தார்கள்? அவரை விட்டு ஓடிப்போனார் கள்.
51. ஒரு வாலிபன் என்ன செய்தான்? ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான். அவனை என்ன செய்தார்கள்? பிடித்தார்கள்.
52. அப்போது அவன் என்ன செய்தான்? தன் துப்பட்டியைப் போட்டு விட்டு, நிர்வாணமாய் அவர்களை விட்டு ஓடிப்போனான்.
53. இயேசுவை அவர்கள் யாரிடத்தில் கொண்டுபோனார்கள்? பிரதான ஆசாரிய னிடத்தில் கொண்டுபோனார்கள். அங்கே யாரெல்லாம் கூடிவந்திருந்தார்கள்? ஆசாரியர் மூப்பர் வேதபாரகர் எல்லாரும் கூடிவந்திருந்தார்கள்.
54. பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்சென்று, என்ன செய்து கொண்டிருந் தான்? பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் வந்து, சேவகரோடேகூட உட்கார்ந்து, நெருப்பண்டையிலே குளிர் காய்ந்துகொண்டிருந்தான்.
55. அப்பொழுது பிரதான ஆசாரியரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாக என்ன தேடினார் கள்? சாட்சி தேடினார்கள். சாட்சி என்ன ஆனது? அகப்படவில்லை.
56. அநேகர் அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சி கள் என்ன ஆயிற்று? ஒவ்வவில்லை.
57. அப்பொழுது சிலர் எழுந்து, என்ன என்று இவன் சொன்னதை நாங்கள் கேட் டோம் என்றார்கள்? கைவேலையாகிய இந்தத் தேவாலயத்தை நான் இடித்துப் போட்டு, கைவேலையல்லாத வேறொன்றை மூன்று நாளைக்குள்ளே கட்டு வேன்.
58. அவருக்கு விரோதமாய் என்ன சொன்னார்கள்? பொய்ச்சாட்சி சொன்னார் கள்.
59. அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி என்ன ஆயிற்று? ஒவ்வாமற் போயிற்று.
60. அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவை நோக்கி என்ன கேட்டான்? இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதைக் குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
61. அவரோ என்ன செய்தார்? ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி என்ன கேட்டான்? நீ ஸ்தோத் தரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான்.
62. அதற்கு இயேசு எதைக் காண்பீர்கள் என்றார்? நான் அவர் தான்; மனுஷகுமா ரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார்.
63. பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, என்ன செய்தான்? தன் வஸ்தி ரங்களைக் கிழித்துக் கொண்டான். தன் வஸ்திரத்தைக் கிழித்துக் கொண்டு எது நமக்கு வேண்டியது என்ன என்றான்? இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டிய தென்ன?
64. எதைக் கேட்டீர்களே என்றான்? தேவதூஷணத்தைக் கேட்டீர்களே என்றான். உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லா ரும் என்ன சொன்னார்கள்? இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள்.
65. அப்பொழுது சிலர் என்ன செய்தார்கள்? அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரைக் குட்டவும், ஞானதிருஷ்டியினாலே பார்த்துச் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள். வேலைக்காரரும் என்ன செய் தார்கள்? அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்.
66. அத்தருணத்திலே பேதுரு கீழே அரமனை முற்றத்திலிருக்கையில் அவனி டத்தில் வந்தது யார்? பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒருத்தி வந்தாள்.
67. பேதுரு என்ன செய்துகொண்டிருந்தான்? குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அவள் அவனை உற்றுப் பார்த்து சொன்னது என்ன? நீயும் நசரேயனாகிய இயேசுவோடே இருந்தாய் என்றாள்.
68. அதற்கு அவன் என்ன செய்தான்? நான் அறியேன்; நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வெளியே வாசல் மண்டபத்துக்குப் போனான். அப்பொழுது எது கூவிற்று? சேவல் கூவிற்று.
69. வேலைக்காரி அவனை மறுபடியும் கண்டு இவன் யார் என்று யாரிடம் சொன்னாள்? இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள்.
70. அவன் மறுபடியும் என்ன செய்தான்? மறுதலித்தான். சற்றுநேரத்துக்குப் பின்பு மறுபடியும் அருகே நிற்கிறவர்கள் பேதுருவைப் பார்த்து சொன்னது என்ன? மெய்யாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள்.
71. அதற்கு அவன் என்ன செய்தான்? நீங்கள் சொல்லுகிற மனுஷனை அறி யேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான்.
72. உடனே சேவல் என்ன செய்தது? இரண்டாந்தரம் கூவிற்று. பேதுரு எதை நினைவு கூர்ந்தான்? சேவல் இரண்டுதரங் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவு கூர்ந்தான். பேதுரு நினைவு கூர்ந்து என்ன செய்தான்? மிகவும் அழுதான்.
No comments:
Post a Comment