Monday, January 19, 2015

மத்தேயு - அதிகாரம் - 1

மத்தேயு – 1.

1. இது யாருடைய வம்ச வரலாறு? ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு.
2. ஆபிரகாம் யாரைப் பெற்றான்? ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான். ஈசாக்கு யாரைப் பெற்றான்?  ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான். யாக்கோபு யாரைப் பெற்றான்?  யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்.
3. யூதா யாரை தாமாரினிடத்தில் பெற்றான்? யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான். தாமார் யார்?  யூதாவின் மகனாகிய ஏர் என்பவனின் மனைவி (ஆதியாகமம் 38:6). பாரேஸ் யாரைப் பெற்றான்? பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான். எஸ்ரோம் யாரைப் பெற்றான்? எஸ்ரோம் ஆராமைப் பெற்றான். 
4. ஆராம் யாரைப் பெற்றான்?  ஆராம் அம்மினதாபைப் பெற்றான். அம்மினதாப் யாரைப் பெற்றான்?  அம்மினதாப் நகசோனைப் பெற்றான். நகசோன் யாரைப் பெற்றான்?  நகசோன் சல்மோனைப் பெற்றான். 
5. சல்மோன் யாரைப் பெற்றான்?  சல்மோன் போவாசை பெற்றான். சல்மோன் போவாசை யாரிடத்தில் பெற்றான்?  சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான். ராகாப் யார்?  எரிகோவைச் சேர்ந்த ஒரு வேசி (யோசுவா 2:1). போவாஸ் யாரைப் பெற்றான்?  போவாஸ் ஓபேதை பெற்றான். போவாஸ் ஓபேதை யாரிடத்தில் பெற்றான்?  போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான். ரூத் யார்?  மோவாபிய ஸ்திரீ (ரூத் 1:4). ஓபேத் யாரைப் பெற்றான்?   ஓபேத் ஈசாயை பெற்றான்.
6. ஈசாய் யாரைப் பெற்றான்?  ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான். தாவீது ராஜா யாரைப் பெற்றான்? தாவீது ராஜா சாலொமோனைப் பெற்றான். தாவீது ராஜா யாரிடத்தில் சாலொமோனைப் பெற்றான்?  தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்.
7. சாலொமோன் யாரைப் பெற்றான்?  சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான். ரெகொபெயாம் யாரைப் பெற்றான்?  ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான். அபியா யாரைப் பெற்றான்?  அபியா ஆசாவைப் பெற்றான்.
8. ஆசா யாரைப் பெற்றான்?  ஆசா யோசபாத்தைப் பெற்றான். யோசபாத் யாரைப் பெற்றான்?  யோசபாத் யோராமைப் பெற்றான். யோராம் யாரைப் பெற்றான்?   யோராம் உசியாவைப் பெற்றான்.
9. உசியா யாரைப் பெற்றான்?  உசியா யோதாமைப் பெற்றான். யோதாம் யாரைப் பெற்றான்?  யோதாம் ஆகாசைப் பெற்றான். ஆகாஸ் யாரைப் பெற்றான்?  ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்.
10. எசேக்கியா யாரைப் பெற்றான்?  எசேக்கியா மனாசேயைப் பெற்றான். மனாசே யாரைப் பெற்றான்?  மனாசே ஆமோனைப் பெற்றான். ஆமோன் யாரைப் பெற்றான்?  ஆமோன் யோசியாவைப் பெற்றான்.
11. பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா யாரைப் பெற்றான்?  யோசியா எகொனியாவையும் அவன் சகோதரனையும் பெற்றான். எந்தக்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்?  பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.
12. எகொனியா யாரைப் பெற்றான்?  எகொனியா சலாத்தியேலைப் பெற்றான். எப்போது எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்? பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான். சலாத்தியேல் யாரைப் பெற்றான்? சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்.
13. சொரொபாபேல் யாரைப் பெற்றான்?  சொரொபாபேல் அபியூதைப் பெற்றான். அபியூத் யாரைப் பெற்றான்?  அபியூத் எலியாக்கீமைப் பெற்றான். எலியாக்கீம் யாரைப் பெற்றான்?  எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்.
14. ஆசோர் யாரைப் பெற்றான்?  ஆசோர் சாதோக்கைப் பெற்றான். சாதோக்கு யாரைப் பெற்றான்?  சாதோக்கு ஆகீமைப் பெற்றான். ஆகீம் யாரைப் பெற்றான்? ஆகீம் எலியூதைப் பெற்றான்.
15. எலியூத் யாரைப் பெற்றான்?  எலியூத் எலெயாசாரைப் பெற்றான். எலெயாசார் யாரைப் பெற்றான்?  எலெயாசார் மாத்தானைப் பெற்றான். மாத்தான் யாரைப் பெற்றான்?   மாத்தான் யாக்கோபைப் பெற்றான்.
16. யாக்கோபு யாரைப் பெற்றான்?  யாக்கோபு யோசேப்பை பெற்றான். யோசேப்பு யார்?  யோசேப்பு மரியாளுடைய புருஷன். யாரிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்?  மரியாளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
17. இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீது வரைக்கும் எத்தனை தலைமுறைகள்?  பதினாலு தலைமுறைகள். தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் எத்தனை தலைமுறைகள்?  பதினாலு தலைமுறைகள். பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் எத்தனை  தலைமுறைகள்?    பதினாலு தலைமுறைகள்.
18. இயேசுகிறிஸ்துவினுடைய தாயாகிய மரியாள் யாருக்கு நியமிக்கப்பட்டிருந்தாள்?  யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தாள். மரியாள் எப்பொழுது கர்ப்பவதியானாள்?  அவர்கள் கூடிவருமுன்னே மரியாள் கர்ப்பவதியானாள். மரியாள் எதினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது?  மரியாள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
19. நீதிமானாயிருந்தது யார்?  மரியாள் புருஷனாகிய யோசேப்பு. யோசேப்பு மரியாளை என்ன செய்ய மனதில்லாமல் இருந்தான்?  அவமானப்படுத்த மனதில்லாமல் இருந்தான். யோசேப்பு என்ன யோசனையாயிருந்தான்? மரியாளை இரகசியமாய்த் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
20. கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யாருக்கு காணப்பட்டான்? யோசேப்புக்கு காணப்பட்டான். எப்பொழுது கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்கு காணப்பட்டான்?  யோசேப்பு மரியாளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாய் சிந்தித்துக்கொண்டிருக்கையில் கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்கு காணப்பட்டான். கர்த்தருடைய தூதன் யோசேப்பை யார் என்கிறான்?  தாவீதின் குமாரனாகிய யோசேப்பே என்கிறான். கர்த்தருடைய தூதன் யோசேப்பிடம் யாரைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே என்றான்?  உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே என்றான். மரியாளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது எதினால் உண்டானது என்றான்?   பரிசுத்த ஆவியினால் உண்டானது என்றான்.
21. மரியாள் யாரைப் பெறுவாள்? ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு என்ன என்று பேரிடுவாய்?  இயேசு. ஏன் இயேசு என்று பேரிடுவாயாக என்றான்?  ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
22. யார் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது?  தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
23. யார் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்?  ஒரு கன்னிகை. அவருக்கு என்ன என்று பேரிடுவார்கள்?  இம்மானுவேல். இம்மானுவேல் என்பதற்கு என்ன என்று அர்த்தமாம்?  தேவன் நம்மோடிருக்கிறார்.
24. நித்திரைதெளிந்து எழுந்தது யார்?  யோசேப்பு. தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டது யார்?  யோசேப்பு.
25. யார் கட்டளையிட்டபடியே யோசேப்பு தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு அவன் தன் முதற்பேரான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்?  கர்த்தருடைய தூதன். யோசேப்பு எதுவரை மரியாளை அறியாதிருந்தான்?  யோசேப்பு தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்தான். யோசேப்பு தன்முதற்பேறான குமாரனுக்கு என்ன என்று பேரிட்டான்? இயேசு என்று பேரிட்டான்.

No comments:

Post a Comment