மத்தேயு – 3
1. அந்நாட்களில் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்தது யார்? யோவான்ஸ்நானன்.
2. யோவான்ஸ்நானன் என்னவென்று பிரசங்கம் பண்ணினான்? மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது.
3. யாருக்கு வழியை ஆயத்தப்படுத்த வேண்டும்? கர்த்தருக்கு. யாருக்கு பாதைகளைச் செவ்வைப்பண்ண வேண்டும்? கர்த்தருக்கு. ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் யார்? யோவான்ஸ்நானன். ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்ட வார்த்தை என்ன? கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டு என்கின்ற வார்த்தை.
4. யோவானின் உடை எது? ஒட்டகமயிர். யோவான் தன் அரையில் கட்டிக்கொண்டிருந்தது என்ன? வார்க்கச்சை. யோவானின் ஆகாரம் என்ன? வெட்டுக்கிளி, காட்டுத் தேன்.
5. அப்பொழுது யோவானிடத்திற்கு போனது யார்? எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் யோவானிடத்திற்குப் போனார்கள்.
6. தங்கள் பாவங்களை அறிக்கையிட்டது யார்? எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும். அவர்கள் தங்கள் பாவங்களை யாரிடத்தில் அறிக்கையிட்டார்கள்? யோவானிடத்தில். யோவானால் அவர்கள் பெற்றது என்ன? ஞானஸ்நானம். எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் யோவானிடத்திற்குப் போய் என்ன செய்தார்கள்? தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
7. யோவான்ஸ்நான் யார் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை கண்டான்? பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர். பரிசேயரையும் சதுசேயரையும் யோவான்ஸ்நானன் எப்படி அழைத்தான்? விரியன் பாம்புக் குட்டிகளே என்று அழைத்தான். யோவான்ஸ்நானன் அவர்களிடம் சொன்னது என்ன? வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?
8. எதற்கேற்ற கனிகளைக் கொடுங்கள் என்றான்? மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள் என்றான்.
9. யார் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள் என்றான்? ஆபிரகாம். தேவன் இந்தக் கல்லுகளினாலே யாருக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான்? ஆபிரகாமுக்கு.
10. மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது என்ன? கோடரி. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு எங்கே போடப்படும்? அக்கினியில்.
11. எதற்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன் என்றான்? மனந்திரும்புதலுக்கென்று. எனக்குப்பின் வருகிறவர் எப்படிப்பட்டவர் என்கிறான்? எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார் என்கிறான். யோவான்ஸ்நானன் தன்னை எதற்கு பாத்திரன் அல்ல என்கிறான்? எனக்குப்பின் வருகிறவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல என்கிறான். அவர் எதனால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்? அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
12. அவர் கையில் இருக்கிறது என்ன? தூற்றுக்கூடை. அவர் எதை நன்றாய் விளக்குவார்? களத்தை நன்றாய் விளக்குவார். அவர் எதை களஞ்சியத்தில் சேர்ப்பார்? கோதுமையை களஞ்சியத்தில் சேர்ப்பார். அவர் எதை அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்? பதரை அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்.
13. அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தது யார்? இயேசு.
14. யோவான் யாருக்குத் தடை செய்தான்? இயேசுவுக்குத் தடை செய்தான். யோவான் இயேசுவுக்குத் தடை செய்து அவரிடம் சொன்னது என்ன? நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.
15. இயேசு யோவானுக்குப் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது யோவான் என்ன செய்தான்? அப்பொழுது யோவான் இயேசுவுக்கு இடங்கொடுத்தான். இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தது யார்? யோவான்ஸ்நானன்.
16. இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, அவருக்குத் திறக்கப்பட்டது எது? வானம். எது இறங்கி தம்மேல் வருகிறதைக் கண்டார்? தேவ ஆவி. தேவ ஆவி எதைப்போல இறங்கி தம்மேல் வருகிறதைக் கண்டார்? தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
17. அன்றியும் எதிலிருந்து ஒரு சத்தம் உண்டாகியது? வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானகியது. வானத்திலிருந்து உண்டான சத்தம் உரைத்தது என்ன? இவர் என்னுடைய நேசகுமாரன், இவரின் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
No comments:
Post a Comment