Thursday, January 22, 2015

மத்தேயு - 2

மத்தேயு – 2.
1. யாருடைய நாட்களில் இயேசு பிறந்தார்?  ஏரோதுராஜாவின் நாட்களில். இயேசு எங்கே பிறந்தார்?  யூதாவிலுள்ள பெத்லகேமில் பிறந்தார். இயேசு பிறந்தபொழுது எருசலேமுக்கு வந்தது யார்?  சாஸ்திரிகள். சாஸ்திரிகள் எங்கிருந்து வந்தார்கள்?  கிழக்கிலிருந்து வந்தார்கள்.
2. இயேசுவை யாருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் என்றார்கள்?  யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் என்றார்கள். யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே என்று கேட்டது யார்?  சாஸ்திரிகள். எங்கே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டோம் என்றார்கள்?  கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டோம் என்றார்கள். சாஸ்திரிகள் எதற்காக வந்தோம் என்றார்கள்?  இயேசுவைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்.
3. சாஸ்திரிகள் சொன்னதைக் கேட்டது யார்?  ஏரோதுராஜாவும், அவனோடேகூட எருசலேம் நகரத்தாரும். இதைக் கேட்டபொழுது அவர்கள் என்ன ஆனார்கள்?  கலங்கினார்கள்.
4. ஏரோதுராஜா யாரைக் கூடிவரச் செய்தான்?  ஏரோதுராஜா பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச் செய்தான். ஏரோதுராஜா அவர்களிடத்தில் என்ன விசாரித்தான்?  கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான்.
5. அதற்கு அவர்கள்: இயேசு எங்கே பிறப்பார் என்றார்கள்?  யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார் என்றார்கள்.
6. யூதேயாவின் பிரபுக்களில் எது சிறியதல்ல?  பெத்லகேம். இஸ்ரவேலை யார் என்கிறார்?  என் ஜனம் என்கிறார். யார் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு வருவார்?  ஏன் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு. தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்ன?  யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது. 
7. அப்பொழுது ஏரோது யாரை இரகசியமாய் அழைத்தான்?  சாஸ்திரிகளை. ஏரோது எதைக்குறித்து சாஸ்திரிகளிடம் திட்டமாய் விசாரித்தான்?  நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து ஏரோது சாஸ்திரிகளிடம் திட்டமாய் விசாரித்தான்.
8. நீங்கள் போய் யாரைக்குறித்து திட்டமாய் விசாரியுங்கள் என்றான்? பிள்ளையைக் (இயேசு) குறித்து. நீங்கள் எதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்?  பிள்ளையைக் (இயேசு) கண்டபின்பு. 
9. யார் சொன்னதை சாஸ்திரிகள் கேட்டுப் போனார்கள்?  ராஜா சொன்னதை சாஸ்திரிகள் கேட்டுப் போனார்கள். எது பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது?  அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம்.
10. சாஸ்திரிகள் எதைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்?   சாஸ்திரிகள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது.
11. சாஸ்திரிகள் எதற்குள் பிரவேசித்தார்கள்?  சாஸ்திரிகள் பிள்ளை இருந்த அந்த வீட்டுக்குள்பிரவேசித்தார்கள். சாஸ்திரிகள் யாரைக் கண்டார்கள்? பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டார்கள். எப்படிப் பணிந்துகொண்டார்கள்?  சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்து கொண்டார்கள். அவர்கள் எதைத் திறந்தார்கள்?  தங்கள் பொக்கிஷங்களைத் திறந்தார்கள். அதற்கு எதைக் காணிக்கையாக வைத்தார்கள்?  பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
12. சாஸ்திரிகள் யாரால் எச்சரிக்கப்பட்டார்கள்?  தேவனால் எச்சரிக்கப்பட்டார்கள். சாஸ்திரிகள் என்னவென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்ட்டார்கள்?  ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டார்கள். சாஸ்திரிகள் எப்படி தங்கள் தேசத்திற்கு திரும்பிப்போனார்கள்?  சாஸ்திரிகள் வேறு வழியாகத் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
13. கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யாருக்குக் காணப்பட்டான்? யோசேப்புக்கு காணப்பட்டான். எப்பொழுது கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டான்?  சாஸ்திரிகள் போனபின்பு. ஏரோது யாரைக் கொலைசெய்யத் தேடுவான்?  பிள்ளையை (இயேசுவை). நீ எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எங்கே ஓடிப்போ என்றான்?  எகிப்து. எது வரைக்கும் அங்கே இரு என்றான்?  நான் உனக்கு சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்கு சொன்னது என்ன?  ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்;  ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்.
14. யோசேப்பு பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டி;க்கொண்டு எங்கே புறப்பட்டுப்போனான்?  எகிப்து. யோசேப்பு எப்பொழுது பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டி;க்கொண்டு எகிப்துக்குப் போனான்?  இரவில்.
15. யோசேப்பு எதுவரை எகிப்திலே இருந்தான்?  ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி நடந்தது என்ன?  எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
16. ஏரோது தான் யாரால் வஞ்சிக்ப்பட்டான்?  சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டான். ஏரோது யாரைக் கொலைசெய்தான்?  இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான். ஏரோது எங்குள்ள ஆண்பிள்ளைகளைக் கொலைசெய்தான்?  பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த ஆண்பிள்ளைகளை. ஏரோது மிகுந்த கோபமடைந்து என்ன செய்தான்?  ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.
17. ராமாவிலே கேட்கப்பட்டது என்ன?  புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது. 
18. எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டு நிறைவேறின வார்த்தை என்ன? ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று, எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்ட வார்த்தை நிறைவேறிற்று.
19. கர்த்தனுடைய தூதன் எங்கே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டான்?  எகிப்திலே. எப்பொழுது கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டான்? ஏரோது இறந்தபின்பு.
20. கர்த்தருடைய தூதன், நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எங்கே போ என்றான்?  இஸ்ரவேல் தேசத்துக்கு. கர்த்தருடைய தூதன் யார் இறந்து போனார்கள் என்றான்?  பிள்ளையின் பிராணணை வாங்கத்தேடினவர்கள். கர்த்தருடைய தூதன் யோசேப்புக்குச் சொப்பனத்தில் சொன்னது என்ன?  நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ; பிள்ளையின் பிராணணை வாங்கத்தேடினவர்கள் இறந்து போனார்கள் என்றான்.
21. யோசேப்பு எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எங்கே போனான்?  இஸ்ரவேல் தேசத்திற்கு வந்தான்.
22. ஏரோதின் பட்டத்துக்கு வந்து யூதேயாவில் அரசாளுகிறது யார் என்று யோசேப்பு கேள்விப்பட்டான்?  அர்கொலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து யூதேயாவில் அரசாளுகிறான் என்று யோசேப்பு கேள்விப்பட்டான். யோசேப்பு ஏன் பயந்தான்?  அர்கொலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். யோசேப்பு யாரால் சொப்பனத்தில் எச்சரிக்கப்பட்டான்?  தேவனால் சொப்பனத்தில் எச்சரிக்கப்பட்டான். யோசேப்பு தேவனால் எச்சரிக்கப்பட்டு எங்கே விலகிப்போனான்?  கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போனான்.
23. யோசேப்பு எந்த ஊரிலே வந்து வாசம்பண்ணினான்?  யோசேப்பு நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். என்னவென்று என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது? நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

No comments:

Post a Comment