Monday, January 26, 2015

மத்தேயு – 5

மத்தேயு – 5
1. இயேசு யாரைக் கண்டு மலையின்மேல் ஏறினார்? இயேசு திரளான ஜனங் களைக் கண்டு மலையின்மேல் ஏறினார். இயேசு உட்கார்ந்தபொழுது அவரிடத் தில் வந்தவர்கள் யார்? அவருடைய சீஷர்கள்.
2. அப்பொழுது இயேசு என்ன செய்தார்? அப்பொழுது இயேசு தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னார்.
3. பரலோகராஜ்யம் யாருடையது?  ஆவியில் எளிமையுள்ளவர்களுடையது.
4. யார் ஆறுதலடைவார்கள்?  துயரப்படுகிறவர்கள் ஆறுதலடைவார்கள்.
5. பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுபவர்கள் யார்? சாந்தகுணமுள்ளவர்கள்.
6. திருப்தியடைபவர்கள் யார்?  நீதியின்மேல்  பசிதாகமுள்ளவர்கள் திருப்தி யடைவார்கள்.
7. இரக்கம் பெறுபவர்கள் யார்?  இரக்கமுள்ளவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
8. தேவனைத் தரிசிப்பவர்கள் யார்?  இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் தேவ னைத் தரிசிப்பார்கள்.
9. தேவனுடைய புத்திரர் என்னப்படுபவர்கள் யார்? சமாதானம் பண்ணுகிற வர்கள்.
10. பரலோகராஜ்யம் யாருடையது?  பரலோகராஜ்யம் நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்களுடையது.
பாக்கியவான்கள் யார்? ஆவியில் எளிமையுள்ளவர்கள், துயரப்படுகிறவர்கள், சாந்தகுணமுள்ளவர்கள், நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள், இரக்கமுள்ளவர் கள், இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள், சமாதானம் பண்ணுகிறவர்கள், நீதியினி மித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். என்னிமித்தம் உங்களை நிந்தித்து துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
11. யார் நிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கிய வான்களாயிருப்பீர்கள்? என்னிமித்தம் (இயேசு)
12. எப்படி களிகூறவேண்டும்? சந்தோஷப்பட்டு களிகூறவேண்டும். எங்கே உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்? பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயி ருக்கும். யாரை அப்படியே துன்பப்படுத்தினார்கள்? உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்கள்.
13. நீங்கள் எதுக்கு உப்பாயிருக்கிறீர்கள்? நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? சாரமாக்கமுடி யாது. சாரமற்ற உப்பு எதற்கு உதவாது? எதற்குமே உதவாது. சாரமற்ற உப்பு என்ன செய்யப்படும்? வெளியே கொட்டப்படும், மனுஷரால் மிதிக்கப்படும்.
14. நீங்கள் எதுக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்? உலகத்துக்கு. எதின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது? மலையின்மேல்.
15. விளக்கைக் கொளுத்தில் எதனால் மூடிவைக்கமாட்டார்கள்? மரக்காலால் மூடிவைக்கமாட்டார்கள். விளக்கைக் கொளுத்தி எதின்மேல் வைப்பார்கள்? விளக்குத் தண்டின்மேல். விளக்கு எப்பொழுது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்? விளக்கைக் கொளுத்தி விளக்குத் தண்டின்மேல் வைக்கும்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
16. உங்கள் வெளிச்சம் மனுஷர் முன்பாக ஏன் பிரகாசிக்க வேண்டும்? பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் மனுஷர் முன்பாக பிரகாசிக்க வேண்டும். மனுஷர் எதைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்க வேண்டும்? மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு.
17. இயேசு எதை அழிக்க வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள் என்கிறார்? நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள் என்கிறார். இயேசு எதை நிறைவேற்ற வந்தேன் என்கிறார்? நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்ற வந்தேன் என்கிறார்.
18. எவையெல்லாம் ஒழிந்து போகும் என்கிறார்? வானமும் பூமியும் ஒழிந்து போகும் என்கிறார். எது ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்? நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறு மளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந் துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்.
19. பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுபவன் யார்? இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரி லும் சிறியவன் என்னப்படுவான். பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படு பவன் யார்?  இந்தக் கற்பனைகளை கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.
20. யாருடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ் யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்கிறார்? வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்கிறார்.
21. எது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்கிறார்?  கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்ட தென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்கிறார்.
22. யார் நியாத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்று இயேசு சொல்லுகிறார்? தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்று இயேசு சொல்லுகிறார். யார் ஆலோசனைச் சங்கத் தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்று இயேசு சொல்லுகிறார்? தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப் பான் என்று சொல்லுகிறார். யார் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான் என்று இயேசு சொல்லுகிறார்? மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏது வாயிருப்பான் என்று சொல்லுகிறார்.
23. எங்கே உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதர னுக்கு குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில்? பலிபீடத்தினி டத்தில். 
24. பலிபீடத்தில் உன் காணிக்கையைச் செலுத்து வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்கு குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், உன் காணிக்கையை எப்படிச் செலுத்த வேண்டும் என்று இயேசு கூருகிறார்? அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து என்று இயேசு கூருகிறார்.
25. நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து என்று ஏன் இயேசு சொல்லுகிறார்?  எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படா மலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து என்று இயேசு சொல்லுகிறார்.
26. நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து, பொருந்தாவிட்டால் என்ன ஆகும் என்று இயேசு சொல்லு கிறார்? பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்கு மட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்று இயேசு செல்லுகிறார்.
27. எது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்கிறார்? விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப் பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்கிறார்.
28. யார் ஒருவன் ஒரு ஸ்திரீயோடு விபசாரஞ்செய்தாயிற்று என்று இயேசு சொல்லுகிறார்? ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருத யத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று என்று இயேசு சொல்லுகிறார்.
29. உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதை என்ன செய் என்கிறார்? அதைப் பிடுங்கி எறிந்து போடு என்கிறார். ஏன் வலது கண்ணைப் பிடுங்கி எறிந்துபோடு என்கிறார்? உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று (வலது கண்) கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும், அதனால் வலது கண்ணைப் பிடுங்கி எறிந்துபோடு என்கிறார்.
30. உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதை என்ன செய் என்கிறார்? அதைத்தறித்து எறிந்துபோடு என்கிறார். ஏன் வலதுகையைத் தறித்து எறிந்துபோடு என்கிறார்? சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவ தைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று (வலது கை) கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும், அதனால் வலதுகையைத் தறித்து எறிந்துபோடு என்கிறார்.
31. தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும், எதை அவளுக்குக் கொடுக் கக்கடவன் என்று உரைக்கப்பட்டது? தள்ளுதற்சீட்டு.
32. தன் மனைவியை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பவன் யார்? வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன்.
33. எது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று சொல்லுகிறார்? அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச் செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று சொல்லு கிறார்.
34. பரிச்சேதம் என்ன பண்ணவேண்டாம் என்று சொல்லுகிறார்? பரிச்சேதம் சத்தியம் பண்ணவேண்டாம் என்று சொல்லுகிறார். ஏன் வானத்தின் பேரில் சத்தியம் பண்ணவேண்டாம்? வானம் தேவனுடைய சிங்காசனமாயிருப்பதால் அதன் பேரில் சத்தியம் பண்ணவேண்டாம் என்கிறார்.
35. ஏன் பூமியின்பேரில் சத்தியம் பண்ணவேண்டாம்? பூமி அவரது பாதபடியா யிருப்பதனால். ஏன் எருசலேமின் பேரில் சத்தியம் பண்ணவேண்டாம்? எருச லேம் மகாராஜாவின் நகரமாயிருப்பதால்.
36. ஏன் சிரசின்பேரில் சத்தியம் பண்ணவேண்டாம்? ஏனெனில் அதின் ஒரு மயி ரையாவது வெண்மையாக்கவும் கருப்பாகவும் கூடாததால்.  
எதன்பேரி லெல்லாம் சத்தியம் பண்ணவேண்டாம் என்கிறார்? வானத்தின் பேரி லும், பூமியின்பேரிலும், எருசலேமின்பேரிலும், உன் சிரசின்பேரிலும் சத்தியம் பண்ணவேண்டாம் என்கிறார்.
ஏன் அவைகளின் பேரில் சத்தியம் பண்ண வேண்டாம் என்கிறார்? வானம் - தேவனுடைய சிங்காசனம், பூமி - அவருடைய பாதபடி, எருசலேம் - மகாராஜா வினுடைய நகரம், உன் சிரசு - அதின் ஒருமயி ரையாவது வெண்மையாக் கவும் கருப்பாக்கவும் உன்னால் கூடாது, அதனால் அவைகளின் பேரில் சத்தி யம் பண்ணவேண்டாம் என்கிறார்.
37. சத்தியம் பண்ணாமல் என்னசெய்ய வேண்டும் என்று சொல்லுகிறார்? உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள் என்கிறார். இதற்கு மிஞ்சினது எதனால் உண்டாயிருக்கும் என்கிறார்? இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும் என்கிறார்.
38. எது உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்;டிருக்கிறீர்கள் என்கிறார்? கண்ணுக் குக் கண், பல்லுக்குப் பல் என்று, உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர் கள் என்கிறார்.
39. இயேசு எதோடு எதிர்த்து நிற்கவேண்டாம் என்கிறார்? தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம் என்கிறார். யாருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு என்கிறார்? ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு என்கிறார்.
40. யாருக்கு உன் அங்கியையும் விட்டுவிடு என்கிறார்? உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு என்கிறார்.
41. யாரோடு இரண்டு மைல் தூரம் போ என்கிறார்? ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ என்கிறார். 
42. யாருக்குக் கொடு என்கிறார்? உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு என்கிறார். யாருக்கு முகங்கோணாதே என்கிறார்? உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே என்கிறார்.
43. யாரை சிநேகித்து யாhரைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
44. இயேசு யாரை சிநேகியுங்கள் என்கிறார்? உங்கள் சத்துருக்களைச் சிநேகி யுங்கள் என்கிறார். இயேசு யாரை ஆசீர்வதியுங்கள் என்கிறார்? இயேசு உங்க ளைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள் என்கிறார். இயேசு யாருக்கு நன்மை செய்யுங்கள் என்கிறார்? உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங் கள் என்கிறார். இயேசு யாருக்காக ஜெபம் பண்ணுங்கள் என்கிறார்? உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள் என்கிறார்.
45. இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் யாராயிருப்பீர்கள் என்கிறார்? புத்திரராயிருப்பீர்கள் என்கிறார். யார்மேல் தமது சூரியனை உதிக்கப்பண்ணுகிறார்? தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணுகிறார். யார்மேல் மழையைப் பெய்யப்பண்ணுகி றார்? நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப் பண்ணுகிறார்.
46. உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்க ளுக்குப் பலன் என்ன? பலன் இல்லை. ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? ஆம்.
47. உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித் துச்  செய்கிறது என்ன? ஒன்றும் இல்லை. ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார் கள் அல்லவா? ஆம்.
48. பூரண சற்குணராயிருக்கிறது யார்? பரலோகத்திலிருக்கிற நம் பிதா. யாரைப்போல நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள் என்கிறார்? பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா.

No comments:

Post a Comment