மத்தேயு – 4
1. இயேசு யாரால் சோதிக்கப்படுவதற்கு கொண்டுபோகப்பட்டார்? பிசாசி னால். இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு எங்கே கொண்டுபோகப்பட் டார்? வனாந்தரத்திற்கு. இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு யாராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டார்? ஆவியானவராலே.
2. இயேசு எத்தனைநாள் உபவாசமிருந்தார்? இயேசு இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தார். இயேசுவுக்கு எப்பொழுது பசியுண்டாயிற்று? இயேசு இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.
3. அப்பொழுது இயேசுவினிடத்தில் வந்தது யார்? சோதனைக்காரன். சோத னைக்காரன் இயேசுவிடத்தில் வந்து சொன்னது என்ன? நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.
4. அதற்கு இயேசு பிரதியுத்தரமாக சொன்னது என்ன? மனுஷன் அப்பத்தி னாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, எதினாலும் பிழை;ப்பான் என்று எழுதியிருக் கிறதே என்றார்? தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த் தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
5. பிசாசு இயேசுவை எங்கே கொண்டுபோனான்? பரிசுத்த நகரத்திற்குக் கொண்டு போனான். பிசாசு இயேசுவை எதின்மேல் நிறுத்தினான்? தேவால யத்து உப்பரிகையின்மேல் நிறுத்தினான்.
6. நீர் தேவனுடைய குமாரனேயானால் என்ன செய்யும் என்றான்? தாழக்குதி யும் என்றான். ஏன் அப்படிச் சொன்னான்? ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்து கட்டளையிடுவார்: உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியி ருக்கிறது என்று சொன்னான்.
7. யாரைப் பரீட்சை பாராதிருக்க வேண்டும்? உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை. அதற்கு இயேசு சொன்னது என்ன? உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.
8. மறுபடியும் பிசாசு அவரை எங்கே கொண்டுபோனான்? மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோனான். மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், எதை அவருக்குக் காண்பித்தான்? உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்தான்.
9. உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக் குக் காண்பித்து: இயேசுவுக்குச் சொன்னது என்ன? நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.
10. இயேசு பிசாசுக்குச் சொன்னது என்ன? அப்பாலே போ சாத்தானே: உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
11. அப்பொழுது பிசாசு என்ன செய்தான்? அப்பொழுது பிசாசானவன் இயேசுவை விட்டு விலகிப்போனான். உடனே யார் வந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்கள்? தேவதூதர்கள்.
12. யார் காவலில் வைக்பப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் போனார்? யோவான்.
13. இயேசு கலிலேயாவுக்குப் போய் எங்கே வந்து வாசம்பண்ணினார்? நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்றும் நாடுகளின் கல்லைகளிலி ருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார்.
14. புறஜாதியாருடைய கலிலேயாவிலே உள்ள நாடுகள் யாவை? செபுலோன் மற்றும் நப்தலி நாடுகள். செபுலோன் நாடும் நப்தலி நாடும் எங்கே உள்ளன? யோர்தானுக்கு அப்புறத்திலுள்ளது.
15. இருளில் இருக்கும் ஜனங்கள் எதைக் கண்டார்கள்? பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். பெரிய வெளிச்சத்தைக் கண்டவர்கள் யார்? இருளில் இருக்கும் ஜனங்கள். மரண இருளின் திசைகளிலிருக்கிறவர்களுக்கு உதித்தது எது? வெளிச்சம். யாருக்கு வெளிச்சம் உதித்தது? மரண இருளின் திசையிலிருக்கிற வர்களுக்கு.
16. எது நிறைவேறும்படி இப்படி நடந்தது? ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக் கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
17. அதுமுதல் இயேசு என்னவென்று பிரசங்கிக்கத் தொடங்கினார்? மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
18. இயேசு எந்தக் கடலோரமாய் நடந்துபோனார்? கலிலேயா கடலோரமாய் நடந்து போனார். கலிலேயாக் கடலில் வலைபோட்டுக்கொண்டிருந்தது யார்? பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா. இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில் யாரைக் கண்டார்? பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா.
19. என் பின்னே வாருங்கள் உங்களை யாரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்? உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். இயேசு பேதுரு என்னப்பட்ட சீமோனிடமும் அவன் சகோதரனாகிய அந்திரேயாவிட மும் சொன்னது என்ன? என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
20. உடனே அவர்கள் என்ன செய்தார்கள்? உடனே அவர்கள் வலைகளை விட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள்.
21. இயேசு அவ்விடம் விட்டுப் போகையில் வேறு யாரைக் கண்டார்? செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவன் சகோதரன் யோவானையும் கண்டார். யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? தங்கள் தகப்பனாகிய செபெதேயுவின் படவிலிருந்து தங்கள் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தாகள். யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் யாருடனேகூட தங்கள் வலைகளை;ப பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள்? தங்கள் தகப்பன் செபெதேயுவிடனேகூட தங்கள் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். இயேசு யாரைக் கண்டு அழைத்தார்? யாக்கோபையும் அவன் சகோதரன் யோவானையும் கண்டு அழைத்தார்.
22. யாக்கோபும் யோவானும் எவைகளை விட்டார்கள்? அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டார்கள். யாக்கோபும் யோவானும் யாருக்குப் பின்சென்றார்கள்? இயேசுவுக்குப் பின் சென்றார்கள்.
23. பின்பு இயேசு எங்கே சுற்றி நடந்தார்? பின்பு இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்தார். இயேசு எங்கு உபதேசித்தார்? அவர்களுடைய ஜெப ஆலயங் களில் உபதேசித்தார். இயேசு எதைப் பிரசங்கித்தார்? இயேசு ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். இயேசு யாருக்கு எதை நீக்கிச் சொஸ்தமாக் கினார்? இயேசு ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.
24. யாருடைய கீர்த்தி சீர்pயா எங்கும் பிரசித்தமாயிற்று? இயேசுவினுடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது இயேசுவிடம் யாரை யெல்லாம் கொண்டுவந்தார்கள்? அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்த வர்களையும் சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் இயேசுவிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களை என்ன செய்தார்? இயேசு அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
25. எங்கிருந்து திரளான ஜனங்கள் வந்து இயேசுவுக்குப் பின்சென்றார்கள்? கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்து திரளான ஜனங்கள் வந்து, இயேசு வுக்குப் பின்சென்றார்கள்.
No comments:
Post a Comment