மத்தேயு – 6
1. இயேசு எதற்கு எச்சரிக்கையாயிருங்கள் என்கிறார்? மனுஷர் காணவேண் டுமென்று அவர்களுக்கு முன்பாக தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கை யாயிருங்கள் என்கிறார். இயேசு எப்பொழுது பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை என்கிறார்? மனுஷர் காண வேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தை செய்தால், பரலோ கத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை என்கிறார்.
2. நீ தர்மஞ்செய்யும்போது, எதற்கு உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே என்கிறார்? மனுஷரால் புகழப்படுவதற்கு, உனக்கு முன்பாக தாரை ஊதுவி யாதே என்கிறார். நீ தர்மஞ்செய்யும்போது, யாரைப்போல உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே என்கிறார்? மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே என்கிறார். யார் தர்மம் செய்யும்போது தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்க ளுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்? மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாக தாரை ஊதுவித்தால் அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்.
3. நீ செய்யும் தர்மம் எப்படி இருக்க வேண்டும் என்கிறார்? உன் தர்மம் அந்த ரங்கமாயிருக்க வேண்டும் என்கிறார். நீ தர்மஞ்செய்யும்போது, எப்படிச் செய்ய வேண்டும் என்கிறார்? நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் வலதுகை செய்கி றதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது என்கிறார்.
4. உன் தர்மத்தை உன் பிதா எப்படி பார்க்கிறார்? அந்தரங்கத்தில் பார்க்கிறார். உன் பிதா உனக்கு எப்படி பலனளிப்பார்? உன் பிதா தாமே உனக்கு வெளியரங் கமாய்ப் பலனளிப்பார்.
5. அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது யாரைப்போலிருக்க வேண்டாம் என்கிறார்? மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம் என்கிறார். மாயக்காரர் எங்கே நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்? மாயக்காரர் மனுஷர் காணும் படியாக ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள். யார் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்? மனுஷர் காணும்படியாக ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிற மாயக்காரர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்.
6. நீ ஜெபம்பண்ணும்போது எங்கு ஜெபம் பண்ண வேண்டும்? உன் அறை வீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி ஜெபம் பண்ண வேண்டும். நீ ஜெபம்பண்ணும்போது யாரை நோக்கி ஜெபம் பண்ண வேண்டும்? அந்தரங் கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ண வேண்டும். எப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்? நீ ஜெபம் பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணும்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.
7. நீங்கள் ஜெபம் பண்ணும்போது யாரைப்போல வீண்வார்த்தைகளை அலப்ப வேண்டாம் என்கிறார்? அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்ப வேண்டாம் என்கிறார். அஞ்ஞானிகள் எதனால் தங்கள் ஜெபம் கேட்கப்படு மென்று நினைக்கிறார்கள்? அஞ்ஞானிகள் அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.
8. யாரைப்போல நீங்கள் ஜெபம் செய்யாதிருங்கள் என்கிறார்? அஞ்ஞானிக ளைப் போல நீங்கள் ஜெபம் செய்யாதிருங்கள் என்கிறார். உங்கள் பிதா, உங்க ளுக்கு இன்னது தேவை என்று எப்பொழுது அறிந்திருக்கிறார்? உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
9. யாரை நோக்கி ஜெபம் பண்ண வேண்டும்? பரமண்டலங்களிலிருக்கிற பிதாவை நோக்கி ஜெபம் பண்ண வேண்டும். யாருடைய நாமம் பரிசுத்தப்பட வேண்டும்? பரமண்டலங்களிலிருக்கிற பிதாவின் நாமம் பரிசுத்தப்பட வேண்டும்.
10. யாருடைய ராஜ்யம் வரவேண்டும்? பரமண்டலங்களிலிருக்கிற பிதாவின் ராஜ்யம் வரவேண்டும். பிதாவின் சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல எங்கேயும் செய்யப்பட வேண்டும்? பூமியிலேயும் செய்யப்பட வேண் டும்.
11. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை என்று எங்களுக்குத் தரவேண்டும்? எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தரவேண்டும்.
12. எதைப்போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னிக்க வேண்டும்? எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னிக்க வேண்டும்.
13. எங்களை எதற்குட்படப்பண்ண வேண்டாம்? எங்களைச் சோதனைக்குட் படப் பண்ண வேண்டாம். எதினின்று எங்களை இரட்சிக்க வேண்டும்? தீமையி னின்று எங்களை இரட்சிக்க வேண்டும். என்றென்றைக்கும் உம்முடையவை கள் எவைகள்? ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகள்.
14. யாருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னிப்பார்? மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னிப்பார்.
15. யாருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்? மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.
16. நீங்கள் உபவாசிக்கும்போது, யாரரைப்போல முகவாடலாய் இருக்க வேண்டாம்? மாயக்காரரைப்போல முகவாடலாய் இருக்க வேண்டாம். யார் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்? மாயக்காரர். யார் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்? மாயக்;காரர்.
17. நீங்கள் உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் யாருக்குக் காணப்படக் கூடாது? நீங்கள் உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படக் கூடாது. நீங்கள் உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் யார் காணப் படும்படியாக இருக்க வேண்டும்? அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக இருக்க வேண்டும். நீ உபவாசிக்கும்போது, அந்த உபவா சம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதா வுக்கே காணப்படும்படியாக, என்ன செய்ய வேண்டும்? உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் மகத்தைக் கழுவவேண்டும்.
18. நீ எப்படி உபவாசிக்கும் போது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய் பலனளிப்பார்? நீ உபவாசிக்கும்போது, அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவும்போது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய் பலனளிப்பார்.
19. எங்கே உங்களுக்கு பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க வேண்டாம்? பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம். எங்கே பூச்சியும் துருவும் உங்கள் பொக்கிஷங்களைக் கெடுக்கும்? பூமியிலே பூச்சியும் துருவும் உங்கள் பொக்கிஷங்களைக் கெடுக்கும். எங்கே உங்கள் பொக்கிஷங்களைத் திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்? பூமியிலே உங்கள் பொக்கிஷங்களைத் திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.
20. எங்கே உங்களுக்கு பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க வேண்டும்? பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும். எங்கே பூச்சியாவது துருவாவது உங்கள் பொக்கிஷங்களைக் கெடுக்கிறதும் இல்லை? பரலோகத்திலே பூச்சியாவது துருவாவது உங்கள் பொக்கிஷங் களைக் கெடுக்கிறதும் இல்லை. எங்கே உங்கள் பொக்கிஷங்களைத் திருடரும் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை? பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங் களைத் திருடரும் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.
21. உங்கள் இருதயம் எங்கே இருக்கிறது? உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக் கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கிறது.
22. சரீரத்தின் விளக்காயிருக்கிறது எது? கண். எப்பொழுது உன் சரீரம் முழுவ தும் வெளிச்சமாயிருக்கும்? உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவ தும் வெளிச்சமாயிருக்கும்.
23. எப்பொழுது உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்? உன் கண் கெட்டதா யிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும். எப்பொழுது அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்? உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்.
24. இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய யாரால் கூடாது? இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது. இரண்டு எஜமான் களுக்கு ஊழியஞ் செய்யகிறவன் என்ன செய்வான்? ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்ற வனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ் செய்ய யாரால் கூடாது? தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.
25. என்னவென்று உங்கள் ஜீவனுக்காக கவலைப்படாதிருங்கள்? என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காக கவலைப் படாதிருங்கள். என்னவென்று உங்கள் சரீரத்துக்காக கவலைப்படாதிருங்கள்? என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காக கவலைப்படாதிருங்கள். ஆகாயத்தைப்பார்க்கிலும் எது விசேஷித்தவை? ஜீவன். உடையைப்பார்க்கி லும் எது விசேஷித்தவை? சரீரம்.
26. எவைகளைக் கவனித்துப்பாருங்கள்? ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள். ஆகாயத்துப் பட்சிகள் என்ன செய்கிறதில்லை? ஆகாயத்துப் பட்சி கள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதும் இல்லை. எவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்? ஆகாயத்துப் பட்சிகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார். எவைக ளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள்? ஆகாயத்துப் பட்சிகளைப் பார்க் கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள்.
27. எதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டு வான்? கவலைப்படுகிறதினாலே.
28. எதுக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன. எவைகள் எப்படி வளருகிறதென்று கவனித்துப் பாருங்கள்? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங் கள். காட்டுப் புஷ்பங்கள் என்ன செய்கிறதில்லை? காட்டுப் புஷ்பங்கள் உழைக்கைகிறதுமில்லை, நூற்கிறதுமில்லை.
29. என்றாலும், யார் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப் போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்? சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையி லும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்கிறார்.
30. எதுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தார்? இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தார். இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், யாருக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா என்கிறார்? அற்ப விசுவாசிகளுக்கு.
31. என்ன என்று, கவலைப்படாதிருங்கள் என்கிறார்? என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங் கள் என்கிறார்.
32. இவைகளையெல்லாம் யார் நாடித்தேடுகிறார்கள்? இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள். இவைகளெல்லாம் யாருக்கு வேண்டிய வைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்? உங்களுக்கு வேண்டியவைகள்.
33. முதலாவது எவைகளைத் தேடுங்கள்? முதலாவது தேவனுடைய ராஜ்யத் தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். எப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்? முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை யும் அவருடைய நீதியையும் தேடும் பொழுது இவைகளெல்லாம் உங்களுக் குக்கூடக் கொடுக்கப்படும்.
34. ஆகையால், எதுக்காகக் கவலைப்படாதிருங்கள்? நாளைக்காகக் கவலைப் படாதிருங்கள். நாளையத்தினம் எவைகளுக்காகக் கவலைப்படும்? நாளையத் தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். எதுக்கு அதினதின் பாடு போதும்? அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.
No comments:
Post a Comment