Sunday, May 31, 2015

மாற்கு – 9

மாற்கு – 9
1. அன்றியும், அவர் அவர்களை நோக்கி: யார் தேவனுடைய ராஜ்யம் பலத் தோடே வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? இங்கே நிற்கிறவர்களில் சிலர்.
2. ஆறு நாளைக்குப்பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவா னையும் அழைத்து, என்ன செய்தார்? உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். 
3. அவருடைய வஸ்திரம் எப்படிப் பிரகாசித்தது? உறைந்த மழையைப் போல் பூமியிலே எந்த வண்ணானும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப்  பிரகாசித்தது. 
4. அப்பொழுது யார் இயேசுவுடனே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப் பட்டார்கள்? மோசேயும் எலியாவும்.
5. அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: எது நல்லது என்றான்? ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது என்றான். எத்தனை கூடாரம் யாருக்கெல்லாம் போடுவோம் என்றான்? உமக்கு ஒரு கூடாரமும், மேசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.
6. எதனால் தான் பேசுகிறது இன்னதென்று அறியாமல் இப்படிச் சொன்னான்? அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால்.
7. அப்பொழுது எது அவர்கள் மேல் நிழலிட்டது? ஒரு மேகம். என்னவென்று மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று? இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண் டாயிற்று. 
8. உடனே அவர்கள் சுற்றிலும் பார்த்த போது, யாரைத்தவிர வேறொருவரை யும் காணவில்லை? இயேசு ஒருவரைத்தவிர.
9. அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி என்னவென்று கட்டளையிட்டார்? மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்தி ருக்கும்வரைக்கும், நீங்கள் கண்டவைகளை ஒருவருக்கும் சொல்லவேண் டாம் என்று கட்டளையிட்டார்.
10. எதை என்னவென்று அவர்கள் ஒருவரிடத்தில் ஒருவர் விசாரித்தார்கள்? மரித்தோரிலிருந்து எழுந்திருப்பது என்னவென்று. எதைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டார்கள்? அந்த வார்த்தையை.
11. யார் முந்தி வரவேண்டுமென்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி யென்று அவரிடத்தில் கேட்டார்கள்? எலியா.
12. அவர் பிரதியுத்தரமாக: யார் முந்தி வந்து  எல்லாவற்றையும் சீர்ப்படுத்து வது மெய்தான் என்றார்? எலியா. அல்லாமலும், யார் பல பாடுகள் பட்டு அவம திக்கப்படுவாரென்று, அவரைக் குறித்து எழுதியிருக்கிறதே அது எப்படி என் றார்? மனுஷகுமாரன்.
13. ஆனாலும் யார் வந்தாயிற்று? எலியா. எதன் பிரகாரம் தங்களுக்கு இஷ்டமா னபடி அவனுக்குச் செய்தார்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? அவனைக்குறித்து எழுதியிருக்கிறபிரகாரம்.
14. பின்பு அவர் சீஷரிடத்தில் வந்த போது, எதைக் கண்டார்? அவர்களைச் சுற்றித் திரளான ஜனங்கள் நிற்கிறதையும், அவர்களோடே வேதபாரகர் தர்க்கிக் கிறதையும் கண்டார்.
15. ஜனங்களெல்லாரும் இயேசுவைக் கண்டவுடனே என்ன செய்தார்கள்? மிகவும் ஆச்சரியப்பட்டு, ஓடி வந்து, அவருக்கு வந்தனஞ்செய்தார்கள்.
16. இயேசு வேதபாரகரை நோக்கி என்ன கேட்டார்? நீங்கள் இவர்களோடே என்னத்தைக்குறித்துத் தர்க்கம்பண்ணுகிறீர்கள் என்று கேட்டார்.
17. அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, எது பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன்? ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை.
18. அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை என்ன செய்கிறது? அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக் கடித்து, சோர்ந் துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி யாரிடத்தில் கேட்டேன்? உம்முடைய சீஷரிடத்தில். அவர்களால் என்ன ஆயிற்று என்றான்? கூடாமற் போயிற்று என்றான்.
19. இயேசு சீஷர்களிடம் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்க ளிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றார்.
20. அவனை என்ன செய்தார்கள்? இயேசுவிடத்தில் கொண்டு வந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி என்ன செய்தது? அவனை அலைக்கழித் தது. அவன் என்ன ஆனான்? தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான்.
21. அவர் அவனுடைய தகப்பனை நோக்கி என்ன கேட்டார்? இது இவனுக்கு  உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவன் சொன் னது என்ன? சிறுவயதுமுதற்கொண்டே உண்டாயிருக்கிறது என்றான்.
22. அவன் இயேசுவிடம் என்னவென்று எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றான்? இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரி லும் தள்ளிற்று. நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றான்.
23. இயேசு அவனை நோக்கி சொன்னது என்ன? நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். யாருக்கு எல்லாம் கூடும்? விசுவாசிக்கிறவனுக்கு.
24. உடனே பிள்ளையின் தகப்பன் என்ன சொல்லி கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்? விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்.
25. அப்பொழுது ஜனங்கள் கூட்டமாகய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி என்ன என்று அதட்டினார்? ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதட்டினார்.
26. அப்பொழுது அசுத்த ஆவி என்ன செய்தது? சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன் எப்படி செத்தவன்போல் கிடந்தான்? அவன் செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போல் கிடந்தான்.
27. இயேசு அவனை என்ன செய்தார்? அவன் கையைப் பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் என்ன செய்தான்? எழுந்திருந்தான்.
28. வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீடர்கள் இயேசுவிடம் என்ன கேட்டார்கள்? அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள்.
29. அதற்கு இயேசு என்ன சொன்னா? இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.
30. பின்பு அவ்விடம்  விட்டுப் புறப்பட்டு, எதைக் கடந்து போனார்கள்? கலிலே யாவைக் கடந்துபோனார்கள். எதை ஒருவரும் அறியாதிருக்க வேண்டுமென்று விரும்பினார்? கலிலேயாவைக் கடந்து போனதை.
31. மனுஷகுமாரன் யார் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்? மனுஷர் கையில். அவர்கள் யாரைக் கொன்றுபோடுவார்கள்? மனுஷகுமாரனை. கொல்லப்பட்டு, எந்த நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார்? மூன்றாம் நாளில். அவர் யாருக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார்? தம்முடைய சீஷர்களுக்கு.
32. அவர்களோ எதை அறிந்துகொள்ளவில்லை? அந்த வார்த்தையை. அதைக் குறித்து அவரிடத்தில் கேட்க என்ன செய்தார்கள்? பயந்தார்கள்.
33. அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்குமபோது, அவர்களை நோக்கி: நீங்கள் வழியிலே எதைக்குறித்து என்ன செய்தீர்கள் என்று கேட்டார்? உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள்.
34. அதற்கு ஏன் அவர்கள் பேசாமல் இருந்தார்கள்? ஏனெனில் அவர்கள் தங்க ளுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம்பண்ணினார்கள்.
35. அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிருவரையும் அழைத்து: எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் யாராயிருக்கக்கடவன் என்று சொன்னார்? எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனு மாயிருக்கக்கடவன் என்று சொன்னார்.
36. யாரை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக் கொண்டார்? ஒரு சிறு பிள்ளையை.
37. இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள் ளுகிறவன் யாரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்? என்னை ஏற்றுக்கொள்ளு கிறான் என்றார். என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, யாரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்? என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகி றான் என்றார்.
38. அப்பொழுது யோவான் இயேசுவை நோக்கி என்ன சொன்னான்? போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத் துகிறதைக் கண்டோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவனானதால், அவனைத் தடுத்தோம் என்றான்.
39. அதற்கு இயேசு: அவனை என்ன செய்ய வேண்டாம் என்றார்? தடுக்க வேண்டாம் என்றார். யார் எளிதாய் என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட் டான் என்றார்? என் நாமத்தினாலே அற்புதஞ் செய்கிறவன்.
40. நமக்கு விரோதமாயிராதவன் எங்கே இருக்கிறான்? நமது பட்சத்திலிருக் கிறான்.
41. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தி னிமித்தம்  உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் எதை அடையாமல்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகி றேன் என்றார்? தன் பலனை.
42. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவனுக்கு எது நலமாயிருக்கும்? அவனுடைய கழுத்தில் ஏந்திரக் கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
43. உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை என்ன செய்? தறித்துப் போடு. நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே  போவதைப்பார்க்கிலும், எப்படி ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயி ருக்கும்? ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
44. அங்கே அவர்கள் புழு எப்படி இருக்கும்? சாவாமல் இருக்கும். அவர்கள் அக்கினி எப்படி இருக்கும்? அவியாமல் இருக்கும்.
45. உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை என்ன செய்? தறித்துப் போடு. நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப் பார்க்கிலும், எப்படி ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்? சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயி ருக்கும்.
46. அங்கே அவர்கள் புழு எப்படி இருக்கும்? சாவாமல் இருக்கும். அவர்கள் அக்கினி எப்படி இருக்கும்? அவியாமல் இருக்கும்.
47. உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை என்ன செய்? பிடுங்கிப் போடு. நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப் பார்க்கிலும், எப்படி தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமா யிருக்கும்? ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
48. அங்கே அவர்கள் புழு எப்படி இருக்கும்? சாவாமல் இருக்கும். அவர்கள் அக்கினி எப்படி இருக்கும்? அவியாமல் இருக்கும்.
49. எந்தப் பலியும் எதினால் உப்பிடப்படும்? உப்பினால் உப்பிடப்படும். எந்த மனுஷனும் உதினால் உப்பிடப்படுவான்? அக்கினியினால் உப்பிடப்படுவான்.
50. எது நல்லதுதான்? உப்பு நல்லதுதான். எது சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உப்பு. உங்களுக்குள்ளே எது உடையவர் களாய் இருக்க வேண்டும்? உப்பு உடையவர்களாய் இருக்க வேண்டும். ஒருவ ரோடொருவர் எப்படியும் இருக்க வேண்டும்? சமாதானமுள்ளவர்களாயும் இருக்க வேண்டும். 


Friday, May 29, 2015

மாற்கு – 8

மாற்கு – 8
1. அந்த நாட்களிலே யார் கூடிவந்திருக்கையில், அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாதபோது, இயேசு தம்முடைய சீஷரை அழைத்தார்? திரளான ஜனங்கள்.
2. இயேசு சீஷரை அழைத்து என்ன சொன்னார்? ஜனங்களுக்காகப் பரிதபிக்கி றேன், இவர்கள் இப்பொழுது என்னிடத்தில் தங்கியிருந்த மூன்று நாளாய்ச் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்.
3. இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்தவர்களாகையால், நான் இவர்களைப் பட்டினியாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.
4. அதற்கு அவருடைய சீஷர்கள் இயேசுவிடம் என்ன சொன்னார்கள்? இந்த வனாந்தரத்திலே ஒருவன் எங்கேயிருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை பேர்களைத் திருப்தியாக்கக்கூடும் என்றார்கள்.
5. அதற்கு அவர்: உங்களிடத்தில் எது எத்தனை உண்டு என்று கேட்டார்? அப்பங் கள். அவர்கள் எத்தனை உண்டு என்றார்கள்? ஏழு அப்பங்கள் உண்டு என்றார் கள்.
6. அப்பொழுது அவர் என்ன கட்டளையிட்டார்? ஜனங்களைத் தரையிலே பந்தி யிருக்கக் கட்டளையிட்டார். அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, என்ன செய் தார்? ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி சீஷர்களிடத் தில் கொடுத்தார். சீஷர்கள் என்ன செய்தார்கள்? ஜனங்களுக்குப் பரிமாறினார் கள்.
7. வேறு எவைகளும் அவரிடத்தில் இருந்தது? சில சிறுமீன்களும். அவர் அவை களையும் என்ன செய்தார்? ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறும்படி சொன் னார்.
8. ஜனங்கள் என்ன ஆனார்கள்? சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துணிக்கைகளை என்ன செய்தார்கள்? ஏழு கூடைநிறைய எடுத்தார்கள்.
9. சாப்பிட்டவர்கள் எத்தனை பேராயிருந்தார்கள்? ஏறக்குறைய நாலாயிரம் பேராயிருந்தார்கள். பின்பு அவர் அவர்களை என்ன செய்தார்? அனுப்பிவிட்டார்.
10. உடனே அவர் தம்முடைய சீஷரோடே கூடப் படவில் ஏறி, எங்கே வந்தார் கள்? தல்மனூத்தாவின் எல்லைகளில் வந்தார்கள்.
11. அப்பொழுது பரிசேயர் வந்து என்ன செய்தார்கள்? அவரோடே தர்க்கிக்கத் தொடங்கி, அவரைச் சோதிக்கும்படி, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.
12. அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு சொன்னது என்ன? இந்தச் சந்ததியார் அடையாளம் தேடுகிறதென்ன? இந்தச் சந்ததியாருக்கு ஒரு அடை யாளமும் கொடுக்கப்படு வதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொன்னார்.
13. அவர்களை விட்டு என்ன செய்தார்? மறுபடியும் படவில் ஏறி, அக்கரைக்குப் போனார்.
14. சீஷர்கள் எதைக் கொண்டுவர மறந்துபோனார்கள்? அப்பங்களைக் கொண்டு வர மறந்துபோனார்கள். படவிலே அவர்களிடத்தில் எத்தனை அப்பம் இருந் தது? ஒரு அப்பம்மாத்திரம் இருந்தது.
15. அவர் அவர்களை நோக்கி எதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தார்? நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தார்.
16. அதற்கு அவர்கள் தங்களுக்குள்ளே என்ன யோசனை பண்ணிக்கொண்டார் கள்?  நம்மிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
17. இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி சொன்னது என்ன? உங்களிடத் தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனை பண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா?
18. உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவுகூராமலுமிருக்கிறீர்களா?
19. நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார்? பன்னிரண்டு என்றார்கள்.
20. நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார்? ஏழு என்றார்கள்.
21. அப்படியானால் எது எப்படி என்றார்? நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.
22. பின்பு அவர் எந்த ஊருக்கு வந்தார்? பெத்சாயிதா ஊருக்கு வந்தார். அப்பொ ழுது யாரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்? ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். என்னவென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்? அவனைத் தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.
23. அவர் குருடனை என்ன செய்தார்? குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்தார். பிறகு என்ன கேட்டார்? எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார்.
24. அவன் ஏறிட்டுப் பார்த்து எதைக் காண்கிறேன் என்றான்? நடக்கிற மனு ஷரை மரங்களைப்போலக் காண்கிறேன் என்றான்.
25. பின்பு அவர் மறுபடியும் என்ன செய்தார்? அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப் பார்க்கும்படி செய்தார். அப்பொழுது அவன் என்ன ஆனான்? சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான்.
26. பின்பு அவர் அவனை நோக்கி என்ன சொல்லி அவனை வீட்டிற்கு அனுப்பி விட்டார்? நீ கிராமத்தில் பிரவேசியாமலும், கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும் இரு என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
27. பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் புறப்பட்டு, எங்கே போனார்கள்? பிலிப்புச் செசரியா பட்டணத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி என்ன கேட்டார்? ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
28. அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்? சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
29. அப்பொழுது அவர் அவர்களிடம் என்ன கேட்டார்? நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பேதுரு என்ன சொன்னான்? நீர் கிறிஸ்து என்றான்.
30. அப்பொழுது என்னவென்று கட்டளையிட்டார்? தம்மைக்குறித்து ஒருவருக் கும் சொல்லாதபடிக்கு அவர்களுக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.
31. அல்லாமலும் இயேசு அவர்களுக்கு எதைப் போதிக்கத் தொடங்கினார்? மனு ஷகுமாரன் பல பாடுகள்பட்டு, மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரக ராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றுநாளைக்குப் பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.
32. இந்த வார்த்தையை அவர் எப்படிச் சொன்னார்? தாராளமாகச் சொன்னார். அப்பொழுது பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டு போய் என்ன செய்தான்? அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.
33. அவர் திரும்பித் தம்முடைய சீஷரைப் பார்த்து, பேதுருவை நோக்கி சொன் னது என்ன? எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்கு ஏற்றவைக ளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி, அவனைக் கடிந்து கொண்டார்.
34. பின்பு அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், என்ன செய்ய வேண்டும் என்றார்? அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
35. தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் எதை இழந்துபோவான்? ஜீவனை இழந்துபோவான். என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் எதை இரட்சித்துக்கொள்ளுவான்? ஜீவனை இரட்சித்துக்கொள்ளுவான்.
36. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், எதை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? தன் ஜீவனை.
37. மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? ஒன்றும் இல்லை.
38. ஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக் குறித் தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக் குறித்து யார் எப்போது வெட்கப்படுவார் என்றார்? மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமைபொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும் போது வெட்கப்படுவார் என்றார்.

Wednesday, May 27, 2015

மாற்கு – 7

மாற்கு – 7
1. இயேசுவிடத்தில் யார் கூடிவந்தார்கள்? எருசலேமிலிருந்து வந்த பரிசேய ரும், வேதபாரகரில் சிலரும். 
2. அப்பொழுது அவரடைய சீஷரில் சிலர் என்ன செய்தார்கள்? கழுவாத அசுத்த கைகளாலே போஜனம்பண்ணினார்கள். இதை யார் கண்டு குற்றம்பிடித்தார் கள்? எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரில் சிலரும்.
3. பரிசேயர் முதலிய யூதர் அனைவரும் எதைக் கைக்கொண்டார்கள்? முன் னோர்களின் பாரம்பரியத்தைக் கைக்கொண்டார்கள். அடிக்கடி கைகழுவினா லொழிய என்ன செய்ய மாட்டார்கள்? சாப்பிடமாட்டார்கள்.
4. கடையிலிருந்து வரும்போதும் என்ன செய்யாமல் சாப்பிடமாட்டார்கள்? ஸ்நானம்பண்ணாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும் கிண் ணங்களையும் செப்புக்குடங்களையும் மணைகளையும் கழுவுகிறதுமல்லா மல், வேறு எதைக் கைக்கொண்டுவருவார்கள்? அநேக ஆசாரங்களையும் கைக் கொண்டுவருவார்கள்.
5. அப்பொழுது, அந்தப் பரிசேயரும் வேதபாரகரும் இயேசுவை நோக்கி என்ன கேட்டார்கள்? உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கை கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள்.
6. இயேசு மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா எதை நன்றாய்த் தீர்க்க தரிசனம் சொல்லியிருக்கிறான் என்றார்? இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளி னால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூர மாய் விலகியிருக்கிறது என்றும்,
7. மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து,வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.
8. நீங்கள் எதைத் தள்ளிவிட்டீர்கள்? தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட் டீர்கள். நீங்கள் எதைக் கைக்கொண்டு அநுசரித்து வருகிறீர்கள்? மனுஷரு டைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்துவருகிறீர்கள்.
9. பின்னும் அவர் அவர்களை நோக்கி: எது நன்றாயிருக்கிறது என்றார்? நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்குத் தேவனுடைய கட்டளை களை வியர்த்தமாக்கினது நன்ருயிருகிகிறது.
10. மோசே என்ன சொல்லியிருக்கிறார்? உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிற வன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறார்.
11. நீங்கள் எதினால் கடமை தீர்ந்தது என்று சொல்லுகிறீர்கள்? ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டால் அவனுடைய கடைமை தீர்ந்தது என்று சொல்லுகி றீர்கள்.
12. நீங்கள் எதினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள்? அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்யஒட்டாமல்;
13. நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்கு கிறீர்கள். இதுபோலவே நீங்கள் என்ன செய்கிறீர்கள்? மற்றும் அநேக காரியங் களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.
14. பின்பு அவர் ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: நீங்கள் எல்லாரும் எனக்கு என்ன செய்யுங்கள் என்றார்? செவிகொடுத்து உணருங்கள்.
15. ஒருவனை எது தீட்டுப்படுத்தமாட்டாது? மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது. ஒரு வனை எது தீட்டுப்படுத்தும்? அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்.
16. யார் கேட்கக்கடவன் என்றார்? கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந் தால் கேட்கக்கடவன் என்றார்.
17. அவர் ஜனங்களைவிட்டு வீட்டுக்குள்பிரவேசித்தபோது, அவருடைய சீஷர் கள் எதை அவரிடத்தில் விசாரித்தார்கள்? அவர் சொன்ன உவமையைக் குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள்.
18. அதற்கு அவர் சீஷர்களிடம் கேட்ட கேள்வி என்ன? நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன் றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில் லையா?
19. புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறது எங்கே போகாமல் எங்கே போகிறது? அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது. அதிலி ருந்து எது வழியாய் நீங்கிப் போகும்? எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களை யும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப் போகும்.
20. மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனை என்ன செய்யும்? தீட்டுப்படுத்தும்.
21. மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து புறப்பட்டு வருவது எவைகள்? பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாத கங்களும்,
22. களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகார மும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும், புறப்பட்டுவரும்.
23. பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப் பட்டு என்ன செய்யும்? மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
24. பின்பு, எது கூடாமற்போயிற்று? அவர் எழுந்து அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில் போய், ஒரு வீட்டுக்குள் பிரவே சித்து, ஒருவரும் அதை அறியாதிருக்க விரும்பியும், அவர் மறைவாயிருக்கக் கூடாமற்போயிற்று.
25. இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டது யார்? அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறு பெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ. அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, என்ன செய்தாள்? வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்.
26. அந்த ஸ்திரீ யார்? சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீ. அவள் இயேசுவை என்னவென்று வேண்டிக்கொண்டாள்? தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கெண்டாள்.
27. இயேசு அவளை நோக்கி யார் திருப்தியடையட்டும் என்றார்? முந்திப் பிள் ளைகள் திருப்தியடையட்டும் என்றார். எது நல்லதல்ல என்றார்? பிள்ளைக ளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
28. அதற்கு அவள் சொன்னது என்ன? மெய்தான், ஆண்டவரே, என்றாள். ஆகிலும், எவைகளை நாய் தின்னுமே என்றாள்? மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
29. அப்பொழுது, அவர் எதினிமித்தம் போகலாம் என்றார்? நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம். பிசாசு என்ன ஆயிற்று என்றார்? பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார்.
30. அவள் தன் வீட்டுக்கு வந்தபொழுது, என்ன கண்டாள்? பிசாசு போய்விட்ட தையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள்.
31. மறுபடியும், இயேசு எங்கே வந்தார்? தீருசீதோன் பட்டணங்களின் எல்லை களை விட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாய்க் கலி லேயாக் கடலருகே வந்தார்.
32. அங்கே யாரைக் கொண்டுவந்தார்கள்? கொன்னைவாயுடைய ஒரு செவி டனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர் என்ன செய்ய வேண்டு மென்று வேண்டிக்கொண்டார்கள்? தமது கையை அவன்மேல் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள.
33. அப்பொழுது, அவர் அவனை என்ன செய்தார்? ஜனக்கூட்டத்தை விட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோனார். தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, என்ன செய்தார்? உமிழ்ந்து, அவனுடைய நாவைத் தொட்டு;
34. வானத்தை அண்ணார்ந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார். எப்பத்தா என்றால் என்ன அர்த்தமாம்? அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம்.
35. உடனே அவன் என்ன ஆனான்? அவனுடைய செவிகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாவின் கட்டும் அவிழ்ந்து, அவன் செவ்வையாய்ப் பேசினான்.
36. இயேசு என்னவென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்? அதை ஒருவருக் கும் சொல்லவேண்டாமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஆகிலும் அவர்கள் என்ன செய்தார்கள்? எவ்வளவு அதிகமாய் அவர்களுக்குக் கட்டளை யிட்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் அதைப் பிரசித்தம் பண்ணினார் கள்.
37. அவர்கள் என்ன சொல்லி மேன்மேலும் ஆச்சரியப்பட்டார்கள்? எல்லாவற் றையும் நன்றாய்ச் சொய்தார்; செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும்பண்ணு கிறார் என்று சொல்லி, மேன்மேலும் ஆச்சரியப்பட்டார்கள்.

Tuesday, May 26, 2015

மாற்கு – 6

மாற்கு – 6
1. அவர் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, எங்கே வந்தார்? தாம் வளர்ந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீஷரும் என்ன செய்தார்கள்? அவரோடேகூட வந்தார் கள்.
2. ஓய்வுநாளானபோது, இயேசு என்ன செய்தார்? ஜெபஆலயத்தில் உபதேசம் பண்ணத் தொடங்கினார். யார் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கேயிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது என்றார்கள்? அநேகர்.
3. இவன் யார் அல்லவா? தச்சன் அல்லவா? யாருடைய குமாரன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாருக்குச் சகோதரன் அல்லவா? யாக் கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் எங்கே இருக்கிறார்கள் அல்லாவா? இங்கே நம்மிடத்தில் இருக் கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக் குறித்து என்ன ஆனார்கள்? இடறலடைந்தார்கள்.
4. இயேசு அவர்களை நோக்கி என்ன சொன்னார்? தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனம டையான் என்றார்.
5. அங்கே அவர் என்ன செய்தார்? சில நோயாளிகள்மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினார். வேறு என்ன செய்தார்? வேறாரு அற்புதமும் செய்யவில்லை. 
6. எதைக்குறித்து ஆச்சரியப்பட்டார்? அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார். கிராமங்களிலே சுற்றித்திரிந்து, என்ன செய்தார்? உபதேசம்பண்ணினார்.
7. அவர் பன்னிருவரையும் அழைத்து, எதற்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுத் தார்? அசுத்த ஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
8. வழிக்கு எதை எடுத்துக்கொண்டு போகக் கூடாது என்றார்? பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும், எடுத்துக்கொண்டுபோகக் கூடாது என்றார். எதை மாத்திரம் எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்றார்? ஒரு தடியைமாத்திரம் எடுத்துக்கொண்டுபோக வேண்டும் என்றார். 
9. எதை போட்டுக்கொண்டு போக வேண்டும் என்றார்? பாதரட்சைகளை. எவை களைத் தரியாதிருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்? இரண்டு அங்கிக ளைத் தரியாதிருக்கவும் கட்டளையிட்டார்.
10. பின்பு அவர்களை நோக்கி: நீங்கள் எங்கேயாகிலும் ஒரு வீட்டில் பிரவேசித் தால், என்ன செய்யுங்கள் என்றார்? அவ்விடத்தை விட்டுப் புறப்படுகிற வரைக் கும் அங்கேதானே தங்கியிருங்கள்.
11. எவர்களாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வசனங்களைக் கேளாமலும் இருந்தால், நீங்கள் அவ்விடம் விட்டுப் புறப்படும்போது, என்ன செய்யுங்கள் என்றார்? அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.   நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத் திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் எதுக்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என் றார்? சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவர்களை எவ் வாறு அனுப்பினார்? இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.
12. அவர்கள் புறப்பட்டுப்போய் என்னவென்று பிரசங்கித்தார்கள்? மனந்திரும் புங்கள் என்று பிரசங்கித்தார்கள்.
13. எதைத் துரத்தினார்கள்? அநேகம் பிசாசுகளைத் துரத்தினார்கள். யாரை எப்படி சொஸ்தமாக்கினார்கள்? அநேகம் நோயாளிகளை எண்ணெய் பூசிச்  சொஸ்தமாக்கினார்கள்.
14. அவருடைய பேர் பிரசித்தமானபடியினால், யார் அவரைக்குறித்து கேள்விப் பட்டான்? ஏரோதுராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டான். யார் மரித்தோரி லிருந்து எழுந்தான் என்றான்? யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந் தான் என்றான். ஆகையால் அவனிடத்தில் எது விளங்குகிறது என்றான்? இந்தப் செய்கைகள் விளங்குகிறது என்றான்.
15. சிலர்: அவர் யார் என்றார்கள்? எலியா என்றார்கள். வேறு சிலர்: அவர் யார் என்றார்கள்? ஒரு தீர்க்கதரிசி, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போலி ருக்கிறாரென்று சொன்னார்கள்.
16. ஏரோது அதைக் கேட்டபொழுது சொன்னது என்ன? அவன் நான் சிரச்சேதம் பண்ணின யோவான்தான்; அவன் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றான்.
17. ஏரோது யாரைத் தன் மனைவியாக்கிக் கொண்டான்? தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கிக் கொண்டான்,
18. யோவான் ஏரோதை நோக்கி சொன்னது என்ன? நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று சொன்னான். அதினி மித்தம், ஏரோது செய்தது என்ன? சேவகரை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்.
19. ஏரோதியாளும் யாருக்குச் சதிநினைத்து, அவனைக் கொன்று போட மனதா யிருந்தாள்? யோவானுக்குச் சதிநினைத்து, அவனைக் கொன்றுபோட மனதா யிருந்தாள். ஆகிலும் நடந்தது என்ன? அவளால் கூடாமற்போயிற்று.
20. அதற்குக் காரணம் என்ன? யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவனென்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனை யின்படி அநேக காரியங்களைச் செய்து, விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டு வந்தான்.
21. ஏரோது தன் ஜென்மநாளிலே என்ன செய்தான்? தன்னுடைய பிரபுக்களுக் கும், சேனாதிபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனுஷருக்கும் ஒரு விருந்து பண்ணினான்.
22. சபை நடுவே வந்து நடனம்பண்ணியது யார்? ஏரோதியாளின் குமாரத்தி. ஏரோதியாளின் குமாரத்தி நடனம்பண்ணி என்ன செய்தாள்? ஏரோதுவையும் அவனோடேகூடப் பந்தியிருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொ ழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி சொன்னது என்ன? உனக்கு வேண்டியதை என்னிடத்தில் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொன்னதுமல்லாமல்;
23. நீ என்னிடத்தில் எதைக்கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதைஉனக்குத் தருவேன் என்று அவளுக்கு ஆணையும் இட்டான்.
24. அப்பொழுது, அவள் வெளியே போய், நான் என்ன கேட்கவேண்டும் என்று யாரிடத்தில் கேட்டாள்? தன் தாயினிடத்தில் கேட்டாள். அதற்கு அவள் எதை கேள் என்றாள்? யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள்.
25. உடனே அவள் ராஜாவினிடத்தில் சீக்கிரமாய் வந்து என்ன கேட்டாள்? நீர் இப்பொழுதே ஒரு தாலத்தில் யோவான்ஸ்நானனுடைய தலையை எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள்.
26. அப்பொழுது ராஜா என்ன ஆனான்? மிகுந்த துக்கமடைந்தான்; ஆகிலும், அவளுக்கு அதை ஏன் மறுக்க மனதில்லை? ஆணையினிமித்தமும், கூடப்பந்தி யிருந்தவர்களினிமித்தமும், அவளுக்கு அதை மறுக்க மனதில்லை.
27. உடனே ஏரோது என்ன செய்தான்? அவனுடைய தலையைக் கொண்டுவ ரும்படி சேவகனுக்குக் கட்டளையிட்டு அனுப்பினான்.
28. சேவகன் என்ன செய்தான்? அவன் போய், காவற்கூடத்திலே அவனைச் சிரச்சேதம்பண்ணி, அவன் தலையை ஒரு தாலத்திலே கொண்டு வந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான். அந்தச் சிறு பெண் என்ன செய்தாள்? அதைத் தன் தாயினிடத்தில் கொடுத்தாள்.
29. அவனுடைய சீஷர்கள் அதைக் கேள்விப்பட்டு என்ன செய்தார்கள்? வந்து, அவன் உடலை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
30. அப்பொழுது இயேசுவினிடத்தில் கூடிவந்தது யார்? அப்போஸ்தலர். அப்போஸ்தலர் இயேசுவுக்கு எதை அறிவித்தார்கள்? தாங்கள் செய்தவைகள் உபதேசித்தவைகள் யாவையும் அவருக்கு அறிவித்தார்கள்.
31. அவர் அவர்களை நோக்கி: எங்கே போவோம் வாருங்கள் என்றார்? வனாந் தரமான ஓரிடத்தில் தனித்துச் சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார். ஏன் அப்படிச் சொன்னார்? வருகிறவர்களும் போகிறவர்களும் அநேக ராயிருந்தபடியினால் போஜனம்பண்ணுகிறதற்கும் அவர்களுக்குச் சமயமில் லாதிருந்ததால்.
32. அவர்கள் எப்படி வனாந்தரமான ஓர் இடத்திற்குப் போனார்கள்? தனிமை யாய் ஒரு படவில் ஏறி வனாந்தரமான ஓர் இடத்திற்குப் போனார்கள்.
33. அவர்கள் புறப்பட்டுப் போகிறதை கண்டது யார்? ஜனங்கள். அவரை அறிந்த அநேகர் எங்கிருந்து எங்கே கூடிவந்தார்கள்? சகல பட்டணங்களிலுமிருந்து கால் நடையாய் அவ்விடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்னே அங்கே சேர்ந்து, அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
34. இயேசு கரையில் வந்து, அநேக ஜனங்களைக் கண்டு, என்ன செய்தார்? ஏன்? அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால், அவர்கள் மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.
35. வெகுநேரம் சென்றபின்பு, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்த என்ன சொன்னார்கள்? இது வனாந்தரமான இடம், வெகுநேரமுமாயிற்று,
36. புசிக்கிறதற்கும் இவர்களிடத்தில் ஒன்றுமில்லை. ஆகையால் என்ன செய்ய வேண்டும் என்றார்கள்? இவர்கள் சுற்றியிருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக் கும் போய், தங்களுக்காக அப்பங்களை வாங்கிக்கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
37. அவர் அவர்களை நோக்கி என்ன சொன்னார்? நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள் சொன்னது என்ன? நாங்கள் போய், இருநூறு பணத்துக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குப் புசிக்கும்படி கொடுக்கக்கூடுமோ என்றார்கள்.
38. அதற்கு அவர் உங்களிடத்தில் எத்தனை என்ன உண்டு. போய்ப்பாருங்கள் என்றார்? அப்பங்களுண்டு, போய்ப்பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து சொன்னது என்ன? ஜந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் உண்டு என்றார்கள்.
39. அப்பொழுது எல்லாரையும் என்ன செய்யச்சொல்லி அவர்களுக்குக் கட்ட ளையிட்டார்? பசும்புல்லின்மேல் பந்திபந்தியாக உட்காரவைக்கும்படி அவர்க ளுக்குக் கட்டளையிட்டார்.
40. அப்படியே அவர்கள் எப்படி உட்கார்ந்தார்கள்? வரிசை வரிசையாய், நூறு நூறுபேராகவும் ஜம்பதைம்பதுபேராகவும், உட்கார்ந்தார்கள்.
41. அவர் அந்த ஜந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, என்ன செய்தார்? வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் என்ன செய்தார்கள்? எல்லாருக்கும் பங்கிட் டார்.
42. சாப்பிட்டுத் திருப்தியடைந்தவர்கள் எத்தனை பேர்? எல்லாரும்.
43. மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தார்கள்? பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள்.
44. அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய எத்தனை பேராயிருந்தார்கள்? ஐயாயிரம் பேராயிருந்தார்கள்.
45. அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்களை எங்கே துரிதப்படுத்தினார்? படவில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி, அவர்களைத் துரிதப்படுத்தினார்.
46. அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, எதற்கு ஒரு மலையின் மேல் ஏறி னார்? ஜெபம்பண்ணும்படி.
47. சாயங்காலமானபோது படவு எங்கிருந்தது? நடுக்கடலிலிருந்தது. அவர் எங்கே எப்படி இருந்தார்? கரையிலே தனிமையாயிருந்தார்.
48. இயேசு ஏன் கடலின்மேல் நடந்து அவர்களிடத்தில் வந்தார்? அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டுவலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின் மேல் நடந்து அவர்களிடத்தில் வந்தார். அவர் எப்படிக் காணப்பட்டார்? அவர்க ளைக் கடந்துபோகிறவர்போல் காணப்பட்டார்.
49. அவர் கடலின் மேல் நடக்கிறதை அவாகள் கண்டு, என்ன செய்தார்கள்? ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள்.
50. அவர்களெல்லாரும் அவரைக் கண்டு என்னவானார்கள்? கலக்கமடைந்தார் கள். உடனே அவர் அவர்களோடே பேசி என்ன சொன்னார்? திடன்கொள்ளுங் கள், நான் தான், பயப்படாதிருங்கள் என்று சொன்னார்.
51. இயேசு எதில் ஏறினார்? அவர்கள் இருந்த படவில் ஏறினார். அப்பொழுது காற்று என்ன ஆனது? அமர்ந்தது. அதினால் அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து என்ன ஆனார்கள்? ஆச்சரியப்பட்டார்கள்.
52. அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாயிருந்தபடியினால் எதைக் குறித்து அவர்கள் உணராமற்போனார்கள்? அப்பங்களைக் குறித்து.
53. அவர்கள் கடலைக் கடந்து எங்கு வந்து கரைபிடித்தார்கள்? கெனேசரேத் தென்னும் நாட்டிற்கு வந்து, கரைபிடித்தார்கள்.
54. அவர்கள் படவிலிருந்து இறங்கினவுடனே, அவரை அறிந்தது யார்? ஜனங் கள் அவரை அறிந்தார்கள்.
55. ஜனங்கள் இயேசுவை அறிந்து என்ன செய்தார்கள்? அந்தச் சுற்றுப்புறமெங் கும் ஓடித் திரிந்து, பிணியாளிகளைப் படுக்கைகளில் கிடத்தி, அவர் வந்திருக் கிறாரென்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்து கொண்டுவந்தார்கள.;
56. அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகளில் என்ன என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்? அவைகளின் சந்தைவெளிக ளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகி லும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக் கொண்டார்கள். அவரைத் தொட்ட யாவரும் என்ன ஆனார்கள்? சொஸ்தமா னார்கள்.

Monday, May 25, 2015

மாற்கு – 5

மாற்கு – 5
1. பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள எந்த நாட்டில் வந்தார்கள்? கதரே னருடைய நாட்டில் வந்தார்கள்.
2. அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, யார் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான்? அசுத்த ஆவியுள்ள ஓரு மனுஷன்.
3. அவனுடைய குடியிருப்பு எங்கு இருந்தது? கல்லறைகளிலே இருந்தது. அவ னைச் எதினால் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது? சங்கிலிகளினால்.
4. அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டி ருந்தும், என்ன செய்வான்? சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப் போடுவான். அவனையடக்க யாரால் கூடாதிருந்தது? ஒருவனாலும் கூடாதி ருந்தது.
5. அவன் எப்பொழுது எப்படி தன்னைக் காயப்படுத்திக் கொண்டிருந்தான்? எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான்.
6. அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, என்ன செய்தான்? ஓடிவந்து, அவரைப் பணிந்துகொண்டான்.
7. அவன் இயேசுவிடம் என்ன சொன்னான்? இயேசுவே, உன்னதமான தேவனு டைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாத படிக்குத் தேவன்பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன் னான்.
8. அவன் ஏன் அப்படிச் சொன்னான்? அவர் அவனை நோக்கி: அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார்.அதனால் அப்படிச் சொன்னான்.
9. அப்பொழுது அவர் அவனை நோக்கி என்ன கேட்டார்?உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன் என்ன சொன்னான்? நாங்கள் அநேகராயிருக்கிறபடி யால் என் பேர் லேகியன் என்று சொன்னான்.
10. அவன் இயேசுவிடம் என்ன வேண்டிக் கொண்டான்? தங்களை அந்தத் திசை யிலிருந்து துரத்திவிடாதபடிக்கு அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்.
11. அப்பொழுது, அவ்விடத்தில் மலையருகே எவைகள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தது? அநேகம் பன்றிகள்.
12. அந்தப் பிசாசுகளெல்லாம் அவரை நோக்கி என்னவென்று வேண்டிக்கொண் டன? பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன.
13. இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள் என்ன செய்தன? புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின. அந்தக் கூட்டத்தில் ஏறக்கு றைய எத்தனை பன்றிகள் இருந்தன? இரண்டாயிரம் பன்றிகள். உடனே ஏறக்கு றைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக் கூட்டம் என்ன ஆனது? உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்து மாண்டது.
14. பன்றிகளை மேய்த்தவர்கள் என்ன செய்தார்கள்? ஓடி, இதைப் பட்டணத்தி லும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க் கும்படி வந்தது யார்? ஜனங்கள்.
15. இயேசுவினிடத்தில் வந்து, எதைக் கண்டு பயந்தார்கள்? லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கி றதைக் கண்டு, பயந்தார்கள்.
16. பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் சம்பவித்ததைக் கண்ட வர்களும் என்ன செய்தார்கள்? அவர்களுக்கு விவராமாய்ச் சொன்னார்கள்.
17. அப்பொழுது அவர்கள் என்னவென்று வேண்டிக் கொள்ளத் தொடங்கினார் கள்? தங்கள் எல்லைகளை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள்.
18. அப்படியே அவர் படவில் ஏறுகிறபொழுது, பிசாசு பிடித்திருந்தவன், என்ன வேண்டிக்கொண்டான்? அவரோடேகூட இருக்கும்படி தனக்கு உத்தரவு கொடுக்க அவரை வேண்டிக்கொண்டான்.
19. இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல் சொன்னது என்ன? நீ உன் இனத்தாரி டத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைக ளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார்.
20. அந்தப்படி அவன் போய் என்ன செய்தான்? இயேசு தனக்குச் செய்தவைக ளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம் பண்ணத்தொடங் கினான். எல்லாரும் என்னவானார்கள்? ஆச்சரியப்பட்டார்கள்.
21. இயேசு படவில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்திலிருந்த போது, நடந்தது என்ன? திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
22. அப்பொழுது, யார் வந்து அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்திலே விழுந் தான்? ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன்.
23. யவீரு என்னவென்று இயேசுவை வேண்டிக் கொண்டான்? என் குமாரத்தி மரண அவஸ்தைப் படுகிறாள், அவள் ஆரோக்கியம் அடையும்படிக்கு நீர் வந்து, அவள்மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்.
24. அவர் என்ன செய்தார்? அவனோடேகூடப்போனார். யாரெல்லாம் அவருக் குப்பின் சென்று, அவரை நெருக்கினார்கள்? திரளான ஜனங்கள்.
25. அப்பொழுது இயேசுவைக் கேள்விப்பட்டது யார்? பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ,
26. எதனால் மிகவும் வருத்தப்பட்டாள்? அநேக வைத்தியர்களால். தனக்கு உண் டானவைகளையெல்லாம் என்ன செய்தாள்? செலவழித்தாள். சற்றாகிலும் குணமடையாமல் என்ன செய்தாள்? அதிக வருத்தப்பட்டாள்.
27. இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு என்னவென்று சொல்லிக் கொண் டாள்? நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமா வேன் என்று சொல்லிக் கொண்டாள்.
28. ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, என்ன செய்தாள்? அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்.
29. உடனே நடந்தது என்ன? அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று. அவள் எதை உணர்ந்தாள்? அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள்.
30. உடனே இயேசு எதை அறிந்தார்? தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்தார். ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி என்ன கேட்டார்? என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார்.
31. அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி சொன்னது என்ன? திரளான ஜனங் கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள்.
32. இயேசு எதற்காகச் சுற்றிலும் பார்த்தார்? இதைச் செய்தவளைக் காணும்ப டிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார்.
33. தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் என்ன செய் தாள்? பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள்.
34. அவர் அவளைப் பார்த்து என்ன சொன்னா? மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.
35. அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து என்ன சொன்னார்கள்? உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள்.
36. அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெபஆலயத் தலைவனை நோக்கி சொன்னது என்ன? பயப்படாதே, விசுவாசமுள்ளவனா யிரு என்று சொன்னார்.
37. இயேசு யாரைத் தவிர வேறொருவரும் தம்மோடே வருகிறதற்கு இடங்கொ டுக்கவில்லை? பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர.
38. ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலே வந்து, எதைக் கண்டார்கள்? சந்தடி யையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டுடார்கள்.
39. இயேசு உள்ளே பிரவேசித்து சொன்னது என்ன? நீங்கள் சந்தடிபண்ணி அழுகிறதென்ன? பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.
40. அதற்காக அவரைப் பார்த்து என்ன செய்தார்கள்? நகைத்தார்கள். எல்லாரை யும் அவர் வெளியே போகப்பண்ணி, என்ன செய்தார்? பிள்ளையின் தகப்பனை யும் தாயையும் தம்மோடே வந்தவர்களையும் அழைத்தக்கொண்டு, பிள்ளையி ருந்த இடத்தில் பிரவேசித்தார்.
41. பிள்ளையின் கையைப் பிடித்து என்ன சொன்னார்? தலீத்தாகூமி என்றார். அதற்கு என்ன அர்த்தமாம்? சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல் லுகிறேன் என்று அர்த்தமாம்.
42. உடனே சிறுபெண் என்ன செய்தாள்? எழுந்து நடந்தாள். அவள் எத்தனை வயதுள்ளவளாயிருந்தாள்? அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாயிருந்தாள். அவர்ள் என்ன ஆனார்கள்? அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.
43. இயேசு என்னவென்று உறுதியாகக் கட்டளையிட்டார்? அதை ஒருவருக்கும் அறிவியாதபடி அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார். அவளுக்கு என்ன கொடுக்கும்படி சொன்னார்? ஆகாரம் கொடுக்கும்படி சொன்னார்.

Saturday, May 23, 2015

மாற்கு - 4

மாற்கு - 4
1. அவர் மறுபடியும் எங்கே போதகம்பண்ணத் தொடங்கினார்? கடலோரத்திலே. திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் என்ன செய்தார்? கடலிலே நின்ற ஒரு படவில் ஏறி உட்கார்ந்தார். ஜனங்களெல்லாரும் என்ன செய்தார்கள்? கடற்கரையில் நின்றார்கள்.
2. அவர் அநேக விசேஷங்களை எப்படி அவர்களுக்குப் போதித்தார்? உவமை களாக. 
3. கேளுங்கள், யார் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்? விதைக்கிறவன்.
4. அவன் விதைக்கையில், சில விதை எங்கே விழுந்தது? வழியருகே.எவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது? ஆகாயத்துப் பறவைகள்.
5. சில விதை அதிக எந்த நிலத்தில் விழுந்தது? மண்ணில்லாத கற்பாறை நிலத் தில். அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே என்ன ஆனது? சீக்கிரத்தில் முளைத்தது;
6. வெயில் ஏறினபோதோ, எதனால் உலர்ந்துபோயிற்று? தீய்ந்து போய், வேரில் லாமையால் உலர்ந்துபோயிற்று.
7. சில விதை எந்த இடங்களில் விழுந்தது? முள்ளுள்ள இடங்களில். முள் வளர்ந்து, அது என்ன கொடாதபடி, அதை நெருக்கிப்போட்டது? பலன் கொடாத படி அதை நெருக்கிப்போட்டது.
8. சில விதை எந்த நிலத்தில் விழுந்தது? நல்ல நிலத்தில் விழுந்தது. அது எப்படி பலன் தந்தது? ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது.
9. யார் கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார்? கேட்கிறதற்குக் காதுள்ளவன்.
10. அவர் தனித்திருக்கிறபோது, யாரெல்லாம் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள்? பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்த வர்கள்.
11. அதற்கு அவர்: எதை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது? தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது. புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் எவைகளாகச் சொல்லப்படுகிறது? உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
12. எதற்காக அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்க ளாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்? அவர்கள் குணப் படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது.
13. பின்பு அவர் அவர்களை நோக்கி: எதை நீங்கள் அறியவில்லையா என்றார்? இந்த உவமையை. அறியாவிட்டால் எவைகளையெல்லாம் எப்படி அறிவிர்கள் என்றார்? மற்ற உவமைகளையெல்லாம்.
14. விதைக்கிறவன் எதை விதைக்கிறான்? வசனத்தை விதைக்கிறான்.
15. வசனத்தைக் கேட்டவுடனே யார் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக் கப்பட்ட வசனத்தை எடுத்துப் போடுகிறான்? சாத்தான். இவர்களே யார்?வசனம் விதைக்கப்படுகிற வழியருகானவர்கள்.
16. அப்படியே, எதைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண் டும் நிலைத்திருக்கிறார்கள்? வசனத்தை.
17. எதனால் கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள்? தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால். வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண் டானவுடனே என்னவாகிறார்கள்? இடறலடைகிறார்கள். இவர்களே எந்த நிலத் தில் விதைக்கப்பட்டவர்கள்? கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்.
18. வசனத்தைக் கேட்டும், எதினால் பலனற்றுப்போகிறார்கள்? உலகக்கவலை களும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சை களும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப் போகிறார்கள். வசனத்தை நெருக்கிப்போடுவது எவைகள்? உலகக்கவலைகள், ஐசுவரியத்தின் மயக்கம், மற்றவைகளைப்பற்றி உண்டாகிய இச்சைகள்.
19. இவர்களே எந்த இடங்களில் விதைக்பப்பட்டவர்கள்? முள்ளுள்ள இடங்க ளில் விதைக்கப்பட்டவர்கள்.
20. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் யார்? வசனத்தைக் கேட்டு, ஏற்றுக் கொண்டு, ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும் ஒன்று நூறுமாகப் பலன்கொடுக் கிறார்கள்.
21. பின்னும் அவர் அவர்களை நோக்கி: விளக்கை எதின்மேல் வைக்க வேண் டும்? தண்டின்மேல் வைக்க வேண்டும். எதில் வைக்கக் கூடாது? மரக்காலின் கீழாகிலும், கட்டிலின் கீழாகிலும், வைக்கக் கூடாது.
22. வெளியரங்கமாகாத எதுவுமில்லை? அந்தரங்கமுமில்லை. வெளிக்கு வராத எதுவுமில்லை? மறைபொருளுமில்லை.
23. கேட்கிறதற்கு ஒருவன் எதுவுள்ளவனாய் இருந்தால் கேட்கக்கடவன் என் றார்? காதுள்ளவனாயிருந்தால்.
24. பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் கேட்கிறதை என்ன செய்ய வேண்டும்?  கவனிக்க வேண்டும். எந்த அளவினால் உங்களுக்கு அளக்கப்ப டும்? எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும். கேட்கிற உங்களுக்கு எவ்வளவு கொடுக்கப்படும்? அதிகம் கொடுக்கப்படும்.
25. யாருக்குக் கொடுக்கப்படும்? உள்ளவனெவனே அவனுக்குக் கொடுக்கப்ப டும். யாரிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்? இல்லாதவனெவனே அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
26. பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, எதற்கு ஒப்பாயிருக்கிறது? ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து;
27. இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது.
28. நிலமானது முன்பு எதைக் கொடுக்கும்? முளையைக் கொடுக்கும். நிலமா னது பின்பு எதைக் கொடுக்கும்? கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தை யும் பலனாகத்தானாய்க் கொடுக்கும்.
29. பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, எதற்கு ஆட்களை அனுப்புகி றான் என்றார்? அறுக்கிறதற்கு.
30. பின்னும் அவர் அவர்களை நோக்கி: எதை எதற்கு ஒப்பிடுவோம்? தேவனு டைய ராஜ்யத்தை. அல்லது எதினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்? எந்த உவமையினாலே.
31. தேவனுடைய ராஜ்யம் எதுக்கு ஒப்பாயிருக்கிறது? அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது. அது பூமியில் விதைக்கப்படும்போது எவைகளிலும்  சிறிதா யிருக்கிறது? பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறியதாயிருக்கிறது.
32. விதைக்கப்பட்டபின்போ, அது வளர்ந்து, என்னவாகிறது? சகல  பூண்டுகளி லும் பெரிதாகிறது. எவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார்? ஆகாயத்துப் பறவைகள்.
33. அவர்கள் எதற்குத் தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்? கேட்டறியும் திராணிக்குத் தக்கதாக.
34. எவைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை? உவமை களினாலேயன்றி. அவர் எப்போது தம்முடைய சீஷர்களுக்கு அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்? தம்முடைய சீஷரோடே தனித்தி ருக்கும் போது.
35. அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: எங்கே போவோம் வாருங்கள் என்றார் ? அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்.
36. அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, என்ன செய்தார்கள்? அவர் படவிலி ருந்தபடியே அவரைக் கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் யாரோடே கூட இருந்தது? அவரோடேகூட இருந்தது.
37. அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, என்ன ஆயிற்று? படவு நிரம்பத் தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று.
38. இயேசு என்ன செய்து கொண்டிருந்தார்? கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணiயை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி என்ன சொன்னார்கள்? போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலை யில்லையா என்றார்கள்.
39. அவர் எழுந்து, எதை அதட்டினார்? காற்றை அதட்டினார். கடலைப்பார்த்து என்ன சொன்னார்? இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது என்ன ஆயிற்று? காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
40. அவர் அவர்களை நோக்கி என்ன சொன்னார்? ஏன் இப்படிப் பயப்பிட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.
41. அவர்கள் மிகவும் பயந்து என்னவென்று சொல்லிக்கொண்டார்கள்? இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொ ருவர் சொல்லிக்கொண்டார்கள்.

Tuesday, May 19, 2015

மாற்கு - 3

மாற்கு - 3
1. மறுபடியும் அவர் எங்கு பிரவேசித்தார்? ஜெபஆலயத்தில் பிரவேசித்தார். அங்கே எப்படிப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான்? சூம்பின கையையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.
2. அவர் ஓய்வுநாளில் அவனைச் சொஸ்தமாக்கினால் அவர்பேரில் என்ன செய் யலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்? குற்றஞ்சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.
3. அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: என்ன சொன்னார்? எழுந்து நடுவே நில் என்று சொன்னார்.
4. அவர்களைப் பார்த்து: எது நியாயம் என்றார்? ஓய்வுநாட்களில் நன்மைசெய் வதோ, தீமைசெய்வதோ, ஜீவனைக் காப்பதோ அழிப்பதோ, எது நியாயம் என் றார். அதற்க்கு அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் போசாமலிருந்தார்கள்.
5. அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் என்ன செய்தார்? விசனப் பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்தார். அந்த மனுஷனை நோக்கி அவர் சொன்னது என்ன? உன் கையை நீட்டு என்றார். அவன் என்ன செய்தான்? அவன் கையை நீட்டினான். அவன் கை என்ன ஆயிற்று? மறுகை யைப்போலச் சொஸ்தமாயிற்று.
6. உடனே பரிசேயர் புறப்பட்டுப்போய், என்ன செய்தார்கள்? அவரைக் கொலை செய்யும்படி, அவருக்கு விரோதமாய் ஏரோதியரோடேகூட ஆலோசனைபண் ணினார்கள்.
7. இயேசு தம்முடைய சீஷர்களோடே அவ்விடம்விட்டு, எங்கே போனார்? கட லோரத்துக்குப் போனார்.
8. எங்கிருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள்? கலிலே யாவிலும், யூதோயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும்,  யோர்தா னுக்கு அக்கரையிலுமிருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென் றார்கள். அல்லாமலும் எந்தப் பட்டணங்களின் திசைகளிலுமிருந்து திரளான ஜனங்கள் அவர் செய்த அற்புதங்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, அவரிடத்தில் வந்தார்கள்? தீரு சீதோன்.
9. அவர் அநேகரை என்ன செய்தார்? சொஸ்தமாக்கினார். நோயாளிகளெல்லா ரும் அதை அறிந்து எதற்காக அவரிடத்தில் நெருங்கிவந்தார்கள்? அவரைத் தொடவேண்டுமென்று அவரிடத்தில் நெருங்கி வந்தார்கள்.
10. ஜனங்கள் திரளாயிருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காதபடிக்கு, தமக் காக என்ன செய்ய வேண்டுமென்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்? ஒரு படவை ஆயத்தம்பண்ணவேண்டுமென்று, தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.
11. எவைகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனு டைய குமாரன் என்று சத்தமிட்டன? அசுத்த ஆவிகளும்.
12. என்னவென்று அவைகளுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்? தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி.
13. பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, யாரைத் தம்மிடத்தில் வரவழைத் தார்? தமக்குச் சித்தமானவர்களை. அவர்கள் என்ன செய்தார்கள்? அவரிடத் திற்கு வந்தார்கள்.
14. அப்பொழுது அவர் எத்தனை பேரைத் தெரிந்துகொண்டார்? பன்னிரண்டு பேரை. அவர்களை யாரோடு இருக்க ஏற்படுத்தினார்? தம்மோடுகூட இருக்க ஏற்படுத்தினார். என்ன செய்யும் படியாக அவர்களை அனுப்பினார்? பிரசங்கம் பண்ணும்படியாக. 
15. எதற்கு அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத் தினார்? வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி.
16. அவர்கள் முதலாமவன் பெயர் என்ன? சீமோன். இவனுக்கு என்ன என்று பேரிட்டார்? பேதுரு. 
17. அடுத்த இருவர் பேர் பெயர் என்ன? செபெதேயுவின் குமாரனாகிய யாக் கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான். இவ்விருவருக்கும் என்ன என்று பெயரிட்டார்? இடிமுழக்கமக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர் கேஸ் என்கிற பெயரிட்டார்,
18. அடுத்த எட்டு பேர் பெயர் என்ன? அந்திரேயா, பிலிப்பு, பற்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்போயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனா கிய சீமோன்,
19. பன்னிரண்டாவது பேர் பெயர் என்ன? அவரைக் காட்டிக் கொடுத்த  யூதாஸ் காரியோத்து.
20. பின்பு எங்கே போனார்கள்? வீட்டுக்குப் போனார்கள். அங்கே அவர்கள் எதற்கு சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள்? சாப்பிடுவதற்க்கும் சமயமில்லாதபடிக்கு.
21. அவருடைய இனத்தார் இதைக்கேட்டபோது, என்ன என்று சொன்னார்கள்? அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொன்னார்கள். அவரை என்ன செய்யும் படி வந்தார்கள்? பிடித்துக் கொள்ளும்படி வந்தார்கள்.
22. எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர் இவன் யாரைக் கொண்டிருக்கிறான் என்றார்கள்? பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான். யாராலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்? பிசாசுகளின் தலைவனாலே.
23. அவர்களை அவர் அழைத்து, எப்படி அவர்களுக்குச் சொன்னார்? உவமைக ளாக. யாரை யார் துரத்துவது எப்படி என்றார்? சாத்தான சாத்தான் துரத்துவது எப்படி என்றார்.
24. எந்த ராஜ்யம் நிலைநிற்க மாட்டாது? ஒரு ராஜ்யம் தனக்குத்தானே விரோத மாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்க மாட்டாது.
25. எந்த வீடு நிலைநிற்க மாட்டாது? ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்க மாட்டாது.
26. சாத்தான் யாருக்கு விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நிலைநிற் கமாட்டாமல், அழிந்துபோவான்? தனக்குத்தானே விரோதமாக.
27. யாரை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் அவனுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடைமைகளைக் கொள்ளையிடக்கூடாது? பலவானை. கட்டி னானேயாகில், அவன் வீட்டை என்ன செய்வானா? கொள்ளையிடுவான்.
28. மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: யார் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத்தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்? மனுஷர்கள்.
29. ஒருவன் யாருக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப் பான்? பரிசுத்த ஆவிக்கு. யார் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான்? பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத்தூஷணஞ் சொல்லுகிறவன்.
30. யாரைக் கொண்டிருக்கிறானென்று அவர்கள் சொன்னபடியினாலே அவர் இப்படிச் சொன்னார்? அசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறானென்று.
31. அப்பொழுது யார் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத் தில் ஆள் அனுப்பினார்கள்? அவருடைய சகோதரரும் தாயாரும் வந்து.
32. அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, யார் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்? உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும்.
33. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? என் தாயார் யார்? என் சகோதரர் யார்?
34. தம்மைச் சூழ உட்காந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து சொன்னது என்ன? இதோ, என் தாயும், என்; சகோதரரும் இவர்களே!
35. யாருடைய சித்தத்தின்படி செய்கிறவன் எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்? தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன்.

Monday, May 18, 2015

மாற்கு - 2

மாற்கு - 2
1. சிலநாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் எங்கே போனார்? கப்பர்நகூமுக்குப் போனார். அவர் வீட்டிலிருக்கிறாரென்று கேள்விப்பட்டது யார்? ஜனங்கள்.
2. உடனே எதுக்கு முன்னும் நிற்க இடம்போதாதபடிக்கு அநேகர் கூடிவந்தார் கள்? வாசலுக்கு. அவர்களுக்கு இயேசு என்ன செய்தார்? வசனத்தைப் போதித் தார்.
3. அப்பொழுது நாலுபேர் யாரைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்? ஒரு திமிர்வாதக்காரனை.
4. எதினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல் போனது? ஜனக்கூட் டத்தினிமித்தம். அதனால் அவர்கள் என்ன செய்தார்கள்? அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக் கையை இறக்கினார்கள்.
5. இயேசு அவர்களிடம் என்ன கண்டார்? விசுவாசத்தைக் கண்டார். இயேசு திமிர்வாதக்காரனை நோக்கி என்ன சொன்னார்? மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
6. அங்கே உட்கார்ந்திருந்தவர்கள் யார்? வேதபாரகரில் சிலர்.
7. வேதபாரகரில் சிலர் தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தது என்ன? இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரே யன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.
8. அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே எதினால் அறிந்தார்? தம்முடைய ஆவியில் அறிந்தார். இயேசு அவர்களை நோக்கி நீங்கள் எதில் இப்படிச் சிந்திக்கிறதென்ன என்றார்? உங்கள் இருதயங் களில்.
9. இயேசு அவர்களிடம் என்ன சொல்லி எது எளிது என்றார்? உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன்படுக்கையை எடுத் துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது?
10. பூமியிலே எதுக்கு மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொன்னார்? பாவங்களை மன்னிக்க. 
11. இயேசு திமிர்வாதக்காரனை நோக்கிச் சொன்னது என்ன? நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல் லுகிறேன் என்றார்.
12. திமிர்வாதக்காரன் உடனே என்ன செய்தான்? அவன் எழுந்து, தன் படுக் கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்கு முன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு என்ன சொல்லி தேவனை மகிமைப்படுத்தினார் கள்? நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
13. அவர் மறுபடியும் புறப்பட்டுக் எங்கே போனார்? கடலருகே போனார். அப்பொ ழுது ஜனங்களெல்லாரும் என்ன செய்தார்கள்? அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களுக்கு என்ன செய்தார்? போதகம்பண்ணினார்.
14. அவர் நடந்துபோகையில், யார் ஆயத்துறையில் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டார்? அல்பேயுவின் குமாரனாகிய லேவி. இயேசு அவனிடம் என்ன சொன் னார்? எனக்குப் பின்சென்றுவா என்றார். அவன் என்ன செய்தான்? அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.
15. அப்பொழுது, யாருடைய வீட்டிலே இயேசு போஜன பந்தியிருந்தார்? அல்பே யுவின் குமாரனாகிய லேவியின் வீட்டில். அங்கு அவரோடுகூட யாரெல்லாம் வந்திருந்தார்கள்? அநேக ஆயக்காரரும் பாவிகளும். இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தவர்கள் யாவர்? அநேக ஆயக்காரரும் பாவிக ளும்.
16. அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதை கண்டது யார்? வேதபாரகரும் பரிசேயரும். வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷரை நோக்கி கேட்டது என்ன? இயேசு ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
17. இயேசு அதைக் கேட்டு யாருக்கேயல்லாமல் யாருக்கு வைத்தியன் வேண்டி யதில்லை என்றார்? பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. யாரையல்ல, யாரையே மனந்திரும் புகிறதற்கு அழைக்க வந்தேன் என்று இயேசு சொன்னார்? நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
18. யார் யாருடைய சீஷர்கள் உபவாசம் பண்ணிவந்தார்கள்? யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம்பண்ணிவந்தார்கள். அவர்கள் அவ ரிடத்தில் வந்து என்ன கேட்டார்கள்? யோவானுடைய சீஷரும் பரிசேயரு டைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக் கிறதென்ன வென்று கேட்டார்கள்.
19. அதற்கு இயேசு: யார் தங்களோடிருக்கையில் யார் உபவாசிக்க மாட்டார் களா என்றார்? மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசிப்பார்களா? என்றார். யார் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே என்றார்? மணவாளன்.
20. எந்த நாட்களிலே அவர்கள் உபவாசிப்பார்கள்? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள்:
21. ஒருவனும் கோடித்துண்டை எதோடுஇணைக்கமாட்டான்? பழைய வஸ்தி ரத்தோடு. இணைத்தால், அதினோடே இணைத்த புதியதுண்டு பழையதை என்ன செய்யும்? அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும்.
22. ஒருவனும் புது திராட்சரசத்தை எதில் வார்த்துவைக்கமாட்டான்? பழந்து ருத்திகளில். வார்த்துவைத்தால், புதுரசம் துருத்திகளை என்ன செய்யும்? கிழித் துப்போடும். இரசம் என்ன ஆகும்? சிந்திப்போகும். துருத்திகள் என்ன ஆகும்? கெட்டுப்போகும். புதுரசத்தை எதில் வார்த்து வைக்க வேண்டும்? புது துருத்தி களில் வார்த்துவைக்கவேண்டும்.
23. பின்பு, அவர் ஓய்வுநாளில் எதின் வழியே போனார்? பயிர் வழியே போனார். அவருடைய சீஷர்கள் கூட நடந்துபோகையில், என்ன செய்தார்கள்? கதிர்க ளைக் கொய்யத் தொடங்கினார்கள்.
24. பரிசேயர் அவரை நோக்கி: என்ன சொன்னார்கள்? இதோ, ஓய்வுநாளில் செய் யத்தகாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றார்கள்.
25. அதற்கு அவர்: எப்போது தாவீது தானும் தன்னோடிருந்தவர்களும் பசியாயி ருந்தார்கள் என்றார்? தாவீதுக்கு உண்டான ஆபத்தில்.
26. தாவீது யார் காலத்தில் செய்ததை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? என்றார்? அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில். அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, என்ன செய்தான் என்றார்? ஆசாரியர்தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தெய்வசமுகத்து அப்பங்களைத் தானும் புசித்துத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்றார்.
27. பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் எதுக்காக உண்டாக்கப்படவில்லை? ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஓய்வுநாள் யாருக்காக உண்டாக் கப்பட்டது? மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது;
28. ஆகையால் மனுஷகுமாரன் எதுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்;? ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.

Friday, May 15, 2015

மாற்கு - 1

மாற்கு - 1
1. இது யாருடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்? தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்.
2. இதோ, நான் யாரை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்? என் தூதனை. அவன் உமக்கு முன்னே போய், உமக்கு எதை ஆயத்தம்பண்ணுவான்? வழியை.
3. யாருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்? கர்த்தருக்கு. யாருக்கு பாதைக ளைச் செவ்வைப்பண்ணுங்கள்? கர்த்தருக்கு. எங்கு கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிறது? வனாந்தரத்தில்.
4. யார் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தான்? யோவான்.
5. அப்பொழுது யூதேயா தேசத்தார் அனவைரும் எருசலேம் நகரத்தார் யாவ ரும், அவனிடத்திற்குப்போய், என்ன செய்தார்கள்? தங்கள் பாவங்களை அறிக் கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
6. யோவான் எதைத் தரித்திருந்தான்? ஒட்டகமயிர் உடையைத் தரித்திருந் தான். தன் அரையில் எதைக் கட்டிக்கொண்டிருந்தான்? வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான். அவன் எதைப் புசிக்கிறவனாய் இருந்தான்? வெட்டுக் கிளியையும் காட்டுத்தேனையும் புசிக்கிறவனாயும் இருந்தான்.
7. அவன்: யார் ஒருவர் எனக்குப்பின் வருகிறார் என்றான்? என்னிலும் வல்ல வர் ஒருவர். அவன் எதற்கு நான் பாத்திரன் அல்ல என்றான்? அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல.
8. நான் எதினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்? ஜலத்தினால். அவரோ எதினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கித் தான்? பரிசுத்த ஆவியினால்.
9. அந்த நாட்களில், இயேசு எங்கிருந்து வந்தார்? கலிலேயாவிலுள்ள நாசரேத் தூரிலிருந்து. அவர் யோர்தான் நதியில் யோவானால் என்ன பெற்றார்? ஞானஸ்நானம் பெற்றார்.
10. அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, என்ன கண்டார்? வானம்திறக் கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்.
11. அன்றியும், என்ன என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று? நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன்.
12. உடனே யார் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார்? ஆவியான வர்.
13. அவர் வனாந்தரத்திலே எத்தனை நாள் இருந்தார்? நாற்பதுநாள். யாரால் சோதிக்கப்பட்டார்? சாத்தானால். அங்கே எவைகளின் நடுவிலே சஞ்சரித்துக் கொண்டிருந்தார்? காட்டுமிருகங்களின் நடுவிலே. யாரெல்லாம் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள்? தேவதூதர்கள்.
14. யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, என்ன பிரசங்கித்தார்? தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித் தார்.
15. எது நிறைவேறிற்று? காலம் நிறைவேறிற்று. எது சமீபமாயிற்று? தேவனு டைய ராஜ்யம் சமீபமாயிற்று. எப்படி, எதை விசுவாசியுங்கள் என்றார்? மனந் திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.
16. அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், யாரை எப்படிக் கண்டார்? மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரே யாவும் கடலில் வலைபோட்டுக் கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார்.
17. இயேசு அவர்களை நோக்கி: என்ன சொன்னார்? என்பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
18. உடனே அவர்கள் என்ன செய்தார்கள்? தங்கள் வலைகளை விட்டு, அவருக் குப் பின்சென்றார்கள்.
19. அவர் அவ்விடம் விட்டுச் சற்று அப்புறம் போனபோது, யாரை எப்படிக் கண்டார்? செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவா னும் படவிலே வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருக்கிறதைக் கண்டார்.
20. உடனே அவர்களை என்ன செய்தார்? அழைத்தார். அப்பொழுது அவர்கள் என்ன செய்தார்கள்? தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலியாட்களோடு படவிலே விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
21. பின்பு எங்கே போனார்கள்? கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளில் என்ன செய்தார்? ஜெபஆலயத்திலே பிரவேசித்து, போதகம் பண்ணினார்.
22. அவர் எப்படிப் போதித்தார்? வேதபாரகரைப்போலப் போதியாமல், அதிகார முடையவராய் அவர்களுக்குப் போதித்தார். ஏன் அவருடைய போதகத்தைக் குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்? அவர் வேதபாரகரைப்போலப் போதி யாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்ததால்.
23. அவர்களுடைய ஜெபஆலயத்திலே எப்படிப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான்? அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன்.
24. அவன்: இயேசுவிடம் என்ன கேட்டான்? ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? என்று கேட்டான். உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் யார் என்று சத்தமிட்டான்? தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான்.
25. அதற்கு இயேசு: என்ன என்று அதட்டினார்? நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்.
26. உடனே அந்த அசுத்த ஆவி என்ன செய்தது? அவனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிட்டு, அவனை விட்டுப் போய்விட்டது.
27. எல்லாரும் ஆச்சரியப்பட்டு: ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டது என்ன? இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத் தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக் கொண் டார்கள்.
28. அதுமுதல் எது கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று? அவருடைய கீர்த்தி.
29. உடனே அவர்கள் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, யாருடைய வீட்டில் பிரவேசித்தார்கள்? யாக்கோபோடும் யோவானோடுங்கூட, சீமோன் அந்தி ரேயா என்பவர்களுடைய வீட்டில் பிரவேசித்தார்கள்.
30. அங்கே ஜூரமாய்க் கிடந்தது யார்? சீமோனுடைய மாமி. உடனே அவர்கள் யாரைக்குறித்து அவருக்குச் சொன்னார்கள்? சீமோனுடைய மாமியைக் குறித்து.
31. அவர் என்ன செய்தார்? கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார். உடனே நடந்தது என்ன? உடனே ஜூரம் அவளை விட்டு நீங்கிற்று. அப்பொழுது அவள் என்ன செய்தாள்? அவர்களுக்குப் பணிவிடை செய்தாள்.
32. சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது, யாரையெல்லாம் அவரிடத் தில் கொண்டுவந்தார்கள்? சகல பிணியாளிகளையும், பிசாசுபிடித்தவர்களை யும், அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
33. யாரெல்லாம் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள்? பட்டணத்தார் எல்லாரும்.
34. யாரையெல்லாம் அவர் சொஸ்தமாக்கினார்? பலவிதமான வியாதிகளினா லும் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கினார். எதையெல் லாம் துரத்திவிட்டார்? அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார். அவர் எதுக்கு ஏன் இடங்கொடுக்கவில்லை? அந்த பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை.
35. அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, எங்கே போனார்? வனாந்தரமான ஓரிடத்திற்க்குப்போனார். அங்கே என்ன செய்தார்? அங்கே ஜெபம்பண்ணினார்.
36. யாரெல்லாம் அவரைப் பின்தொடர்ந்து போனார்கள்? சீமோனும் அவனோடே இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோனார்கள்.
37. அவரைக் கண்டபோது: அவரிடம் என்ன சொன்னார்கள்? உம்மை எல்லா ரும் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள்.
38. அவர்களை அவர் நோக்கி: என்ன சொன்னார்? அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம்பண்ண வேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங் கள்; இதற்காகவே புறப்பட்டுவந்தேன் என்று சொன்னார்.
39. கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் என்ன செய்து கொண்டிருந்தார்? அவர்பிரசங்கம் பண்ணிக்கொண்டும், பிசாசகளைத் துரத்திக் கொண்டும் இருந்தார்.
40. அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: என்ன என்று வேண்டிக்கொண்டான்? உமக்குச் சித்தமா னால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான்.
41. இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனதை; தொட்டு: என்ன சொன்னார்? எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்.
42. இப்படி அவர் சொன்னவுடனே, என்ன ஆனது? குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான்.
43. அப்பொழுது அவர் அவனை நோக்கி: என்ன சொன்னார்? நீ இதை ஒருவருக் கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு;
44. ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினி மித்தம், என்ன செய் என்று சொல்லி அனுப்பிவிட்டார்? மோசே கட்டளையிட்டி ருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்.
45. அவனோ புறப்பட்டுப் போய், என்ன செய்தான்? இந்தச் சங்கதி எங்கும் விளங் கும்படியாகப் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் என்ன செய் தார்? வெளியரங்கமாய்ப் பட்டணத்தில் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் என்ன செய்தார்கள்? அவரிடத்திற்கு வந்தார்கள்.

Tuesday, May 12, 2015

மத்தேயு – 28

மத்தேயு – 28
1. ஓய்வுநாள் முடிந்து, எந்த நாள் வந்தது? வாரத்தின் முதலாம் நாள் வந்தது. ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், கல்லறை யைப் பார்க்க வந்தவர்கள் யாவர்? மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள்.
2. அப்பொழுது வானத்திலிருந்து இறங்கிவந்தது யார்? கர்த்தருடைய தூதன். கர்த்தருடைய தூதன் எப்படி வானத்திலிருந்து இறங்கிவந்தான்? பூமி மிகவும் அதிரும்படி வானத்திலிருந்து இறங்கிவந்தான். வானத்திலிருந்து இறங்கிவந்த கர்த்தருடைய தூதன் என்ன செய்தான்? கல்லறையின் வாசலிலிருந்த கல் லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.
3. கர்த்தருடைய தூதன் ரூபம் எதைப்போல இருந்தது? மின்னல்போல இருந்தது. அவனுடைய வஸ்திரம் எப்படி இருந்தது? உறைந்த மழையைப்போ வெண்மையாகவும் இருந்தது.
4. காவலாளர் என்ன ஆனார்கள்? திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள். காவலாளர் எதனால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள்? கர்த்தரு டைய தூதனுக்கு பயந்ததினால்.
5. தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி நீங்கள் என்ன செய்யாதிருங்கள் என் றான்? நீங்கள் பயப்படாதிருங்கள் என்றான். நீங்கள் யாரைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன் என்றான்? சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகி றீர்கள் என்று அறிவேன் என்றான்.
6. இயேசு எங்கே இல்லை என்றான்? இயேசு கல்லறையில் இல்லை என் றான். இயேசு எதன்படியே உயிர்த்தெழுந்தார் என்றான்? இயேசு தாம் சொன்ன படியே உயிர்த்தெழுந்தார் என்றான். எதை வந்து பாருங்கள் என்றான்? கர்த் தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள் என்றான்.
7. சீக்கிரமாய்ப் போய் யாருக்குச் சொல்லுங்கள் என்றான்? இயேசுவின் சீஷர் களுக்குச் சொல்லுங்கள் என்றான். சீஷர்களுக்கு என்னவென்று சொல்லுங்கள் என்றான்? இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று சொல்லுங்கள்என்றான். இயேசு உங்களுக்குமுன்னே எங்கு போகிறார் என்றான்? கலிலேயாவுக்குப் போகிறார் என்றான். இயேசுவை எங்கே காண்பீர்கள் என்றான்? கலிலேயாவில் காண்பீர்கள்.
8. அவர்கள் எப்படி கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டுப் போனார் கள்? அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும். அவர்கள் யாருக்கு அறிவிக்க ஓடினார்கள்? அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.
9. அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, அவர்க ளுக்கு எதிர்ப்பட்டது யார்? இயேசு. அவர்களுக்கு இயேசு எதிர்ப்பட்டு என்ன சொன்னார்? வாழ்க என்றார். அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் கிட்ட வந்து, இயேசுவின் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
10. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி சொன்னது என்ன? பயப்படாதிருங் கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப்போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.
11. அவர்கள் போகையில், நகரத்துக்குள்ளே வந்தவர்கள் யாவர்? காவல்சேவ கரில் சிலர். அவர்கள் போகையில், காவல்சேவகரில் சிலர் நகரத்துக்குள்ளே வந்து யாருக்கு அறிவித்தார்கள்? பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள். அவர்கள் போகையில், காவல்சேவகரில் சிலர் நகரத்துக்குள்ளே வந்து, எதை பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள்? நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள்.
12. பிரதான ஆசாரியரும் காவல்சேவகரில் சிலரும் யாரோடேகூடி வந்து ஆலோசனை பண்ணினார்கள்? மூப்பரோடே கூடிவந்து ஆலோசனை பண்ணி னார்கள். அவர்கள் ஆலோசனை பண்ணி சேவகருக்கு என்ன கொடுத்தார்கள்? வேண்டிய பணத்தைக் கொடுத்தார்கள்.
13. பிரதான ஆசாரியரும் மூப்பரும் அங்கு வந்த காவல்சேவகரில் சிலருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து, என்னவென்று சொல்லுங்கள் என்றார்கள்? நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள், என்று சொல்லுங் கள், என்றார்கள்.
14. இது தேசாதிபதிக்குக் கேள்வியானால், நாங்கள் என்ன செய்வோம் என்றார் கள்? நாங்கள் தேசாதிபதியைச் சம்மதப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.
15. அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு, என்ன செய்தார்கள்? தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யாருக்குள்ளே இந்நாள் வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது? யூதருக்குள்ளே.
16. பதினொரு சீஷர்களும் எங்கே போனார்கள்? கலிலேயாவிலே இயேசு தங்க ளுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.
17. பதினொரு சீஷர்களும் கலிலேயாவிலே யாரைக் கண்டார்கள்? இயேசு வைக் கண்டார்கள். பதினொரு சீஷர்களும் இயேசுவைக் கண்டு என்ன செய் தார்கள்? பணிந்து கொண்டார்கள். சிலர் என்ன செய்தார்கள்? சந்தேகப்பட்டார் கள்.
18. வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் யாருக்குக் கொடுக்கப்பட்டி ருக்கிறது? இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
19. நீங்கள் புறப்பட்டுப்போய், சலக ஜாதிகளையும் யாராக்குங்கள் என்றார்? சீஷராக்குங்கள் என்றார். யாருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நா னங்கொடுங்கள் என்றார்? பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே.
20. எதைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள் என்றார்? நான் உங்களுக்குக்  கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள் என்றார். இயேசு, எப்பொழுது நான் உங்க ளுடனேகூட இருக்கிறேன் என்றார்? இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.