மாற்கு – 9
1. அன்றியும், அவர் அவர்களை நோக்கி: யார் தேவனுடைய ராஜ்யம் பலத் தோடே வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? இங்கே நிற்கிறவர்களில் சிலர்.
2. ஆறு நாளைக்குப்பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவா னையும் அழைத்து, என்ன செய்தார்? உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்.
3. அவருடைய வஸ்திரம் எப்படிப் பிரகாசித்தது? உறைந்த மழையைப் போல் பூமியிலே எந்த வண்ணானும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது.
4. அப்பொழுது யார் இயேசுவுடனே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப் பட்டார்கள்? மோசேயும் எலியாவும்.
5. அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: எது நல்லது என்றான்? ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது என்றான். எத்தனை கூடாரம் யாருக்கெல்லாம் போடுவோம் என்றான்? உமக்கு ஒரு கூடாரமும், மேசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.
6. எதனால் தான் பேசுகிறது இன்னதென்று அறியாமல் இப்படிச் சொன்னான்? அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால்.
7. அப்பொழுது எது அவர்கள் மேல் நிழலிட்டது? ஒரு மேகம். என்னவென்று மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று? இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண் டாயிற்று.
8. உடனே அவர்கள் சுற்றிலும் பார்த்த போது, யாரைத்தவிர வேறொருவரை யும் காணவில்லை? இயேசு ஒருவரைத்தவிர.
9. அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி என்னவென்று கட்டளையிட்டார்? மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்தி ருக்கும்வரைக்கும், நீங்கள் கண்டவைகளை ஒருவருக்கும் சொல்லவேண் டாம் என்று கட்டளையிட்டார்.
10. எதை என்னவென்று அவர்கள் ஒருவரிடத்தில் ஒருவர் விசாரித்தார்கள்? மரித்தோரிலிருந்து எழுந்திருப்பது என்னவென்று. எதைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டார்கள்? அந்த வார்த்தையை.
11. யார் முந்தி வரவேண்டுமென்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி யென்று அவரிடத்தில் கேட்டார்கள்? எலியா.
12. அவர் பிரதியுத்தரமாக: யார் முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்து வது மெய்தான் என்றார்? எலியா. அல்லாமலும், யார் பல பாடுகள் பட்டு அவம திக்கப்படுவாரென்று, அவரைக் குறித்து எழுதியிருக்கிறதே அது எப்படி என் றார்? மனுஷகுமாரன்.
13. ஆனாலும் யார் வந்தாயிற்று? எலியா. எதன் பிரகாரம் தங்களுக்கு இஷ்டமா னபடி அவனுக்குச் செய்தார்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? அவனைக்குறித்து எழுதியிருக்கிறபிரகாரம்.
14. பின்பு அவர் சீஷரிடத்தில் வந்த போது, எதைக் கண்டார்? அவர்களைச் சுற்றித் திரளான ஜனங்கள் நிற்கிறதையும், அவர்களோடே வேதபாரகர் தர்க்கிக் கிறதையும் கண்டார்.
15. ஜனங்களெல்லாரும் இயேசுவைக் கண்டவுடனே என்ன செய்தார்கள்? மிகவும் ஆச்சரியப்பட்டு, ஓடி வந்து, அவருக்கு வந்தனஞ்செய்தார்கள்.
16. இயேசு வேதபாரகரை நோக்கி என்ன கேட்டார்? நீங்கள் இவர்களோடே என்னத்தைக்குறித்துத் தர்க்கம்பண்ணுகிறீர்கள் என்று கேட்டார்.
17. அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, எது பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன்? ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை.
18. அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை என்ன செய்கிறது? அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக் கடித்து, சோர்ந் துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி யாரிடத்தில் கேட்டேன்? உம்முடைய சீஷரிடத்தில். அவர்களால் என்ன ஆயிற்று என்றான்? கூடாமற் போயிற்று என்றான்.
19. இயேசு சீஷர்களிடம் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்க ளிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றார்.
20. அவனை என்ன செய்தார்கள்? இயேசுவிடத்தில் கொண்டு வந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி என்ன செய்தது? அவனை அலைக்கழித் தது. அவன் என்ன ஆனான்? தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான்.
21. அவர் அவனுடைய தகப்பனை நோக்கி என்ன கேட்டார்? இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவன் சொன் னது என்ன? சிறுவயதுமுதற்கொண்டே உண்டாயிருக்கிறது என்றான்.
22. அவன் இயேசுவிடம் என்னவென்று எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றான்? இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரி லும் தள்ளிற்று. நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றான்.
23. இயேசு அவனை நோக்கி சொன்னது என்ன? நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். யாருக்கு எல்லாம் கூடும்? விசுவாசிக்கிறவனுக்கு.
24. உடனே பிள்ளையின் தகப்பன் என்ன சொல்லி கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்? விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்.
25. அப்பொழுது ஜனங்கள் கூட்டமாகய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி என்ன என்று அதட்டினார்? ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதட்டினார்.
26. அப்பொழுது அசுத்த ஆவி என்ன செய்தது? சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன் எப்படி செத்தவன்போல் கிடந்தான்? அவன் செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போல் கிடந்தான்.
27. இயேசு அவனை என்ன செய்தார்? அவன் கையைப் பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் என்ன செய்தான்? எழுந்திருந்தான்.
28. வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீடர்கள் இயேசுவிடம் என்ன கேட்டார்கள்? அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள்.
29. அதற்கு இயேசு என்ன சொன்னா? இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.
30. பின்பு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, எதைக் கடந்து போனார்கள்? கலிலே யாவைக் கடந்துபோனார்கள். எதை ஒருவரும் அறியாதிருக்க வேண்டுமென்று விரும்பினார்? கலிலேயாவைக் கடந்து போனதை.
31. மனுஷகுமாரன் யார் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்? மனுஷர் கையில். அவர்கள் யாரைக் கொன்றுபோடுவார்கள்? மனுஷகுமாரனை. கொல்லப்பட்டு, எந்த நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார்? மூன்றாம் நாளில். அவர் யாருக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார்? தம்முடைய சீஷர்களுக்கு.
32. அவர்களோ எதை அறிந்துகொள்ளவில்லை? அந்த வார்த்தையை. அதைக் குறித்து அவரிடத்தில் கேட்க என்ன செய்தார்கள்? பயந்தார்கள்.
33. அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்குமபோது, அவர்களை நோக்கி: நீங்கள் வழியிலே எதைக்குறித்து என்ன செய்தீர்கள் என்று கேட்டார்? உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள்.
34. அதற்கு ஏன் அவர்கள் பேசாமல் இருந்தார்கள்? ஏனெனில் அவர்கள் தங்க ளுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம்பண்ணினார்கள்.
35. அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிருவரையும் அழைத்து: எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் யாராயிருக்கக்கடவன் என்று சொன்னார்? எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனு மாயிருக்கக்கடவன் என்று சொன்னார்.
36. யாரை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக் கொண்டார்? ஒரு சிறு பிள்ளையை.
37. இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள் ளுகிறவன் யாரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்? என்னை ஏற்றுக்கொள்ளு கிறான் என்றார். என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, யாரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்? என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகி றான் என்றார்.
38. அப்பொழுது யோவான் இயேசுவை நோக்கி என்ன சொன்னான்? போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத் துகிறதைக் கண்டோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவனானதால், அவனைத் தடுத்தோம் என்றான்.
39. அதற்கு இயேசு: அவனை என்ன செய்ய வேண்டாம் என்றார்? தடுக்க வேண்டாம் என்றார். யார் எளிதாய் என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட் டான் என்றார்? என் நாமத்தினாலே அற்புதஞ் செய்கிறவன்.
40. நமக்கு விரோதமாயிராதவன் எங்கே இருக்கிறான்? நமது பட்சத்திலிருக் கிறான்.
41. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தி னிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் எதை அடையாமல்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகி றேன் என்றார்? தன் பலனை.
42. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவனுக்கு எது நலமாயிருக்கும்? அவனுடைய கழுத்தில் ஏந்திரக் கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
43. உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை என்ன செய்? தறித்துப் போடு. நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், எப்படி ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயி ருக்கும்? ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
44. அங்கே அவர்கள் புழு எப்படி இருக்கும்? சாவாமல் இருக்கும். அவர்கள் அக்கினி எப்படி இருக்கும்? அவியாமல் இருக்கும்.
45. உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை என்ன செய்? தறித்துப் போடு. நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப் பார்க்கிலும், எப்படி ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்? சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயி ருக்கும்.
46. அங்கே அவர்கள் புழு எப்படி இருக்கும்? சாவாமல் இருக்கும். அவர்கள் அக்கினி எப்படி இருக்கும்? அவியாமல் இருக்கும்.
47. உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை என்ன செய்? பிடுங்கிப் போடு. நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப் பார்க்கிலும், எப்படி தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமா யிருக்கும்? ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
48. அங்கே அவர்கள் புழு எப்படி இருக்கும்? சாவாமல் இருக்கும். அவர்கள் அக்கினி எப்படி இருக்கும்? அவியாமல் இருக்கும்.
49. எந்தப் பலியும் எதினால் உப்பிடப்படும்? உப்பினால் உப்பிடப்படும். எந்த மனுஷனும் உதினால் உப்பிடப்படுவான்? அக்கினியினால் உப்பிடப்படுவான்.
50. எது நல்லதுதான்? உப்பு நல்லதுதான். எது சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உப்பு. உங்களுக்குள்ளே எது உடையவர் களாய் இருக்க வேண்டும்? உப்பு உடையவர்களாய் இருக்க வேண்டும். ஒருவ ரோடொருவர் எப்படியும் இருக்க வேண்டும்? சமாதானமுள்ளவர்களாயும் இருக்க வேண்டும்.