Tuesday, May 19, 2015

மாற்கு - 3

மாற்கு - 3
1. மறுபடியும் அவர் எங்கு பிரவேசித்தார்? ஜெபஆலயத்தில் பிரவேசித்தார். அங்கே எப்படிப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான்? சூம்பின கையையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.
2. அவர் ஓய்வுநாளில் அவனைச் சொஸ்தமாக்கினால் அவர்பேரில் என்ன செய் யலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்? குற்றஞ்சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.
3. அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: என்ன சொன்னார்? எழுந்து நடுவே நில் என்று சொன்னார்.
4. அவர்களைப் பார்த்து: எது நியாயம் என்றார்? ஓய்வுநாட்களில் நன்மைசெய் வதோ, தீமைசெய்வதோ, ஜீவனைக் காப்பதோ அழிப்பதோ, எது நியாயம் என் றார். அதற்க்கு அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் போசாமலிருந்தார்கள்.
5. அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் என்ன செய்தார்? விசனப் பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்தார். அந்த மனுஷனை நோக்கி அவர் சொன்னது என்ன? உன் கையை நீட்டு என்றார். அவன் என்ன செய்தான்? அவன் கையை நீட்டினான். அவன் கை என்ன ஆயிற்று? மறுகை யைப்போலச் சொஸ்தமாயிற்று.
6. உடனே பரிசேயர் புறப்பட்டுப்போய், என்ன செய்தார்கள்? அவரைக் கொலை செய்யும்படி, அவருக்கு விரோதமாய் ஏரோதியரோடேகூட ஆலோசனைபண் ணினார்கள்.
7. இயேசு தம்முடைய சீஷர்களோடே அவ்விடம்விட்டு, எங்கே போனார்? கட லோரத்துக்குப் போனார்.
8. எங்கிருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள்? கலிலே யாவிலும், யூதோயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும்,  யோர்தா னுக்கு அக்கரையிலுமிருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென் றார்கள். அல்லாமலும் எந்தப் பட்டணங்களின் திசைகளிலுமிருந்து திரளான ஜனங்கள் அவர் செய்த அற்புதங்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, அவரிடத்தில் வந்தார்கள்? தீரு சீதோன்.
9. அவர் அநேகரை என்ன செய்தார்? சொஸ்தமாக்கினார். நோயாளிகளெல்லா ரும் அதை அறிந்து எதற்காக அவரிடத்தில் நெருங்கிவந்தார்கள்? அவரைத் தொடவேண்டுமென்று அவரிடத்தில் நெருங்கி வந்தார்கள்.
10. ஜனங்கள் திரளாயிருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காதபடிக்கு, தமக் காக என்ன செய்ய வேண்டுமென்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்? ஒரு படவை ஆயத்தம்பண்ணவேண்டுமென்று, தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.
11. எவைகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனு டைய குமாரன் என்று சத்தமிட்டன? அசுத்த ஆவிகளும்.
12. என்னவென்று அவைகளுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்? தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி.
13. பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, யாரைத் தம்மிடத்தில் வரவழைத் தார்? தமக்குச் சித்தமானவர்களை. அவர்கள் என்ன செய்தார்கள்? அவரிடத் திற்கு வந்தார்கள்.
14. அப்பொழுது அவர் எத்தனை பேரைத் தெரிந்துகொண்டார்? பன்னிரண்டு பேரை. அவர்களை யாரோடு இருக்க ஏற்படுத்தினார்? தம்மோடுகூட இருக்க ஏற்படுத்தினார். என்ன செய்யும் படியாக அவர்களை அனுப்பினார்? பிரசங்கம் பண்ணும்படியாக. 
15. எதற்கு அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத் தினார்? வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி.
16. அவர்கள் முதலாமவன் பெயர் என்ன? சீமோன். இவனுக்கு என்ன என்று பேரிட்டார்? பேதுரு. 
17. அடுத்த இருவர் பேர் பெயர் என்ன? செபெதேயுவின் குமாரனாகிய யாக் கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான். இவ்விருவருக்கும் என்ன என்று பெயரிட்டார்? இடிமுழக்கமக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர் கேஸ் என்கிற பெயரிட்டார்,
18. அடுத்த எட்டு பேர் பெயர் என்ன? அந்திரேயா, பிலிப்பு, பற்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்போயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனா கிய சீமோன்,
19. பன்னிரண்டாவது பேர் பெயர் என்ன? அவரைக் காட்டிக் கொடுத்த  யூதாஸ் காரியோத்து.
20. பின்பு எங்கே போனார்கள்? வீட்டுக்குப் போனார்கள். அங்கே அவர்கள் எதற்கு சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள்? சாப்பிடுவதற்க்கும் சமயமில்லாதபடிக்கு.
21. அவருடைய இனத்தார் இதைக்கேட்டபோது, என்ன என்று சொன்னார்கள்? அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொன்னார்கள். அவரை என்ன செய்யும் படி வந்தார்கள்? பிடித்துக் கொள்ளும்படி வந்தார்கள்.
22. எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர் இவன் யாரைக் கொண்டிருக்கிறான் என்றார்கள்? பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான். யாராலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்? பிசாசுகளின் தலைவனாலே.
23. அவர்களை அவர் அழைத்து, எப்படி அவர்களுக்குச் சொன்னார்? உவமைக ளாக. யாரை யார் துரத்துவது எப்படி என்றார்? சாத்தான சாத்தான் துரத்துவது எப்படி என்றார்.
24. எந்த ராஜ்யம் நிலைநிற்க மாட்டாது? ஒரு ராஜ்யம் தனக்குத்தானே விரோத மாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்க மாட்டாது.
25. எந்த வீடு நிலைநிற்க மாட்டாது? ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்க மாட்டாது.
26. சாத்தான் யாருக்கு விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நிலைநிற் கமாட்டாமல், அழிந்துபோவான்? தனக்குத்தானே விரோதமாக.
27. யாரை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் அவனுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடைமைகளைக் கொள்ளையிடக்கூடாது? பலவானை. கட்டி னானேயாகில், அவன் வீட்டை என்ன செய்வானா? கொள்ளையிடுவான்.
28. மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: யார் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத்தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்? மனுஷர்கள்.
29. ஒருவன் யாருக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப் பான்? பரிசுத்த ஆவிக்கு. யார் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான்? பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத்தூஷணஞ் சொல்லுகிறவன்.
30. யாரைக் கொண்டிருக்கிறானென்று அவர்கள் சொன்னபடியினாலே அவர் இப்படிச் சொன்னார்? அசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறானென்று.
31. அப்பொழுது யார் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத் தில் ஆள் அனுப்பினார்கள்? அவருடைய சகோதரரும் தாயாரும் வந்து.
32. அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, யார் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்? உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும்.
33. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? என் தாயார் யார்? என் சகோதரர் யார்?
34. தம்மைச் சூழ உட்காந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து சொன்னது என்ன? இதோ, என் தாயும், என்; சகோதரரும் இவர்களே!
35. யாருடைய சித்தத்தின்படி செய்கிறவன் எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்? தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன்.

No comments:

Post a Comment