மத்தேயு – 28
1. ஓய்வுநாள் முடிந்து, எந்த நாள் வந்தது? வாரத்தின் முதலாம் நாள் வந்தது. ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், கல்லறை யைப் பார்க்க வந்தவர்கள் யாவர்? மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள்.
2. அப்பொழுது வானத்திலிருந்து இறங்கிவந்தது யார்? கர்த்தருடைய தூதன். கர்த்தருடைய தூதன் எப்படி வானத்திலிருந்து இறங்கிவந்தான்? பூமி மிகவும் அதிரும்படி வானத்திலிருந்து இறங்கிவந்தான். வானத்திலிருந்து இறங்கிவந்த கர்த்தருடைய தூதன் என்ன செய்தான்? கல்லறையின் வாசலிலிருந்த கல் லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.
3. கர்த்தருடைய தூதன் ரூபம் எதைப்போல இருந்தது? மின்னல்போல இருந்தது. அவனுடைய வஸ்திரம் எப்படி இருந்தது? உறைந்த மழையைப்போ வெண்மையாகவும் இருந்தது.
4. காவலாளர் என்ன ஆனார்கள்? திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள். காவலாளர் எதனால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள்? கர்த்தரு டைய தூதனுக்கு பயந்ததினால்.
5. தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி நீங்கள் என்ன செய்யாதிருங்கள் என் றான்? நீங்கள் பயப்படாதிருங்கள் என்றான். நீங்கள் யாரைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன் என்றான்? சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகி றீர்கள் என்று அறிவேன் என்றான்.
6. இயேசு எங்கே இல்லை என்றான்? இயேசு கல்லறையில் இல்லை என் றான். இயேசு எதன்படியே உயிர்த்தெழுந்தார் என்றான்? இயேசு தாம் சொன்ன படியே உயிர்த்தெழுந்தார் என்றான். எதை வந்து பாருங்கள் என்றான்? கர்த் தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள் என்றான்.
7. சீக்கிரமாய்ப் போய் யாருக்குச் சொல்லுங்கள் என்றான்? இயேசுவின் சீஷர் களுக்குச் சொல்லுங்கள் என்றான். சீஷர்களுக்கு என்னவென்று சொல்லுங்கள் என்றான்? இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று சொல்லுங்கள்என்றான். இயேசு உங்களுக்குமுன்னே எங்கு போகிறார் என்றான்? கலிலேயாவுக்குப் போகிறார் என்றான். இயேசுவை எங்கே காண்பீர்கள் என்றான்? கலிலேயாவில் காண்பீர்கள்.
8. அவர்கள் எப்படி கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டுப் போனார் கள்? அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும். அவர்கள் யாருக்கு அறிவிக்க ஓடினார்கள்? அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.
9. அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, அவர்க ளுக்கு எதிர்ப்பட்டது யார்? இயேசு. அவர்களுக்கு இயேசு எதிர்ப்பட்டு என்ன சொன்னார்? வாழ்க என்றார். அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் கிட்ட வந்து, இயேசுவின் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
10. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி சொன்னது என்ன? பயப்படாதிருங் கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப்போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.
11. அவர்கள் போகையில், நகரத்துக்குள்ளே வந்தவர்கள் யாவர்? காவல்சேவ கரில் சிலர். அவர்கள் போகையில், காவல்சேவகரில் சிலர் நகரத்துக்குள்ளே வந்து யாருக்கு அறிவித்தார்கள்? பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள். அவர்கள் போகையில், காவல்சேவகரில் சிலர் நகரத்துக்குள்ளே வந்து, எதை பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள்? நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள்.
12. பிரதான ஆசாரியரும் காவல்சேவகரில் சிலரும் யாரோடேகூடி வந்து ஆலோசனை பண்ணினார்கள்? மூப்பரோடே கூடிவந்து ஆலோசனை பண்ணி னார்கள். அவர்கள் ஆலோசனை பண்ணி சேவகருக்கு என்ன கொடுத்தார்கள்? வேண்டிய பணத்தைக் கொடுத்தார்கள்.
13. பிரதான ஆசாரியரும் மூப்பரும் அங்கு வந்த காவல்சேவகரில் சிலருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து, என்னவென்று சொல்லுங்கள் என்றார்கள்? நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள், என்று சொல்லுங் கள், என்றார்கள்.
14. இது தேசாதிபதிக்குக் கேள்வியானால், நாங்கள் என்ன செய்வோம் என்றார் கள்? நாங்கள் தேசாதிபதியைச் சம்மதப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.
15. அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு, என்ன செய்தார்கள்? தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யாருக்குள்ளே இந்நாள் வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது? யூதருக்குள்ளே.
16. பதினொரு சீஷர்களும் எங்கே போனார்கள்? கலிலேயாவிலே இயேசு தங்க ளுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.
17. பதினொரு சீஷர்களும் கலிலேயாவிலே யாரைக் கண்டார்கள்? இயேசு வைக் கண்டார்கள். பதினொரு சீஷர்களும் இயேசுவைக் கண்டு என்ன செய் தார்கள்? பணிந்து கொண்டார்கள். சிலர் என்ன செய்தார்கள்? சந்தேகப்பட்டார் கள்.
18. வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் யாருக்குக் கொடுக்கப்பட்டி ருக்கிறது? இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
19. நீங்கள் புறப்பட்டுப்போய், சலக ஜாதிகளையும் யாராக்குங்கள் என்றார்? சீஷராக்குங்கள் என்றார். யாருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நா னங்கொடுங்கள் என்றார்? பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே.
20. எதைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள் என்றார்? நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள் என்றார். இயேசு, எப்பொழுது நான் உங்க ளுடனேகூட இருக்கிறேன் என்றார்? இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment