Friday, May 15, 2015

மாற்கு - 1

மாற்கு - 1
1. இது யாருடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்? தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்.
2. இதோ, நான் யாரை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்? என் தூதனை. அவன் உமக்கு முன்னே போய், உமக்கு எதை ஆயத்தம்பண்ணுவான்? வழியை.
3. யாருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்? கர்த்தருக்கு. யாருக்கு பாதைக ளைச் செவ்வைப்பண்ணுங்கள்? கர்த்தருக்கு. எங்கு கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிறது? வனாந்தரத்தில்.
4. யார் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தான்? யோவான்.
5. அப்பொழுது யூதேயா தேசத்தார் அனவைரும் எருசலேம் நகரத்தார் யாவ ரும், அவனிடத்திற்குப்போய், என்ன செய்தார்கள்? தங்கள் பாவங்களை அறிக் கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
6. யோவான் எதைத் தரித்திருந்தான்? ஒட்டகமயிர் உடையைத் தரித்திருந் தான். தன் அரையில் எதைக் கட்டிக்கொண்டிருந்தான்? வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான். அவன் எதைப் புசிக்கிறவனாய் இருந்தான்? வெட்டுக் கிளியையும் காட்டுத்தேனையும் புசிக்கிறவனாயும் இருந்தான்.
7. அவன்: யார் ஒருவர் எனக்குப்பின் வருகிறார் என்றான்? என்னிலும் வல்ல வர் ஒருவர். அவன் எதற்கு நான் பாத்திரன் அல்ல என்றான்? அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல.
8. நான் எதினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்? ஜலத்தினால். அவரோ எதினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கித் தான்? பரிசுத்த ஆவியினால்.
9. அந்த நாட்களில், இயேசு எங்கிருந்து வந்தார்? கலிலேயாவிலுள்ள நாசரேத் தூரிலிருந்து. அவர் யோர்தான் நதியில் யோவானால் என்ன பெற்றார்? ஞானஸ்நானம் பெற்றார்.
10. அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, என்ன கண்டார்? வானம்திறக் கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்.
11. அன்றியும், என்ன என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று? நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன்.
12. உடனே யார் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார்? ஆவியான வர்.
13. அவர் வனாந்தரத்திலே எத்தனை நாள் இருந்தார்? நாற்பதுநாள். யாரால் சோதிக்கப்பட்டார்? சாத்தானால். அங்கே எவைகளின் நடுவிலே சஞ்சரித்துக் கொண்டிருந்தார்? காட்டுமிருகங்களின் நடுவிலே. யாரெல்லாம் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள்? தேவதூதர்கள்.
14. யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, என்ன பிரசங்கித்தார்? தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித் தார்.
15. எது நிறைவேறிற்று? காலம் நிறைவேறிற்று. எது சமீபமாயிற்று? தேவனு டைய ராஜ்யம் சமீபமாயிற்று. எப்படி, எதை விசுவாசியுங்கள் என்றார்? மனந் திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.
16. அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், யாரை எப்படிக் கண்டார்? மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரே யாவும் கடலில் வலைபோட்டுக் கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார்.
17. இயேசு அவர்களை நோக்கி: என்ன சொன்னார்? என்பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
18. உடனே அவர்கள் என்ன செய்தார்கள்? தங்கள் வலைகளை விட்டு, அவருக் குப் பின்சென்றார்கள்.
19. அவர் அவ்விடம் விட்டுச் சற்று அப்புறம் போனபோது, யாரை எப்படிக் கண்டார்? செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவா னும் படவிலே வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருக்கிறதைக் கண்டார்.
20. உடனே அவர்களை என்ன செய்தார்? அழைத்தார். அப்பொழுது அவர்கள் என்ன செய்தார்கள்? தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலியாட்களோடு படவிலே விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
21. பின்பு எங்கே போனார்கள்? கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளில் என்ன செய்தார்? ஜெபஆலயத்திலே பிரவேசித்து, போதகம் பண்ணினார்.
22. அவர் எப்படிப் போதித்தார்? வேதபாரகரைப்போலப் போதியாமல், அதிகார முடையவராய் அவர்களுக்குப் போதித்தார். ஏன் அவருடைய போதகத்தைக் குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்? அவர் வேதபாரகரைப்போலப் போதி யாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்ததால்.
23. அவர்களுடைய ஜெபஆலயத்திலே எப்படிப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான்? அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன்.
24. அவன்: இயேசுவிடம் என்ன கேட்டான்? ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? என்று கேட்டான். உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் யார் என்று சத்தமிட்டான்? தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான்.
25. அதற்கு இயேசு: என்ன என்று அதட்டினார்? நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்.
26. உடனே அந்த அசுத்த ஆவி என்ன செய்தது? அவனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிட்டு, அவனை விட்டுப் போய்விட்டது.
27. எல்லாரும் ஆச்சரியப்பட்டு: ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டது என்ன? இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத் தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக் கொண் டார்கள்.
28. அதுமுதல் எது கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று? அவருடைய கீர்த்தி.
29. உடனே அவர்கள் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, யாருடைய வீட்டில் பிரவேசித்தார்கள்? யாக்கோபோடும் யோவானோடுங்கூட, சீமோன் அந்தி ரேயா என்பவர்களுடைய வீட்டில் பிரவேசித்தார்கள்.
30. அங்கே ஜூரமாய்க் கிடந்தது யார்? சீமோனுடைய மாமி. உடனே அவர்கள் யாரைக்குறித்து அவருக்குச் சொன்னார்கள்? சீமோனுடைய மாமியைக் குறித்து.
31. அவர் என்ன செய்தார்? கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார். உடனே நடந்தது என்ன? உடனே ஜூரம் அவளை விட்டு நீங்கிற்று. அப்பொழுது அவள் என்ன செய்தாள்? அவர்களுக்குப் பணிவிடை செய்தாள்.
32. சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது, யாரையெல்லாம் அவரிடத் தில் கொண்டுவந்தார்கள்? சகல பிணியாளிகளையும், பிசாசுபிடித்தவர்களை யும், அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
33. யாரெல்லாம் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள்? பட்டணத்தார் எல்லாரும்.
34. யாரையெல்லாம் அவர் சொஸ்தமாக்கினார்? பலவிதமான வியாதிகளினா லும் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கினார். எதையெல் லாம் துரத்திவிட்டார்? அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார். அவர் எதுக்கு ஏன் இடங்கொடுக்கவில்லை? அந்த பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை.
35. அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, எங்கே போனார்? வனாந்தரமான ஓரிடத்திற்க்குப்போனார். அங்கே என்ன செய்தார்? அங்கே ஜெபம்பண்ணினார்.
36. யாரெல்லாம் அவரைப் பின்தொடர்ந்து போனார்கள்? சீமோனும் அவனோடே இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோனார்கள்.
37. அவரைக் கண்டபோது: அவரிடம் என்ன சொன்னார்கள்? உம்மை எல்லா ரும் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள்.
38. அவர்களை அவர் நோக்கி: என்ன சொன்னார்? அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம்பண்ண வேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங் கள்; இதற்காகவே புறப்பட்டுவந்தேன் என்று சொன்னார்.
39. கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் என்ன செய்து கொண்டிருந்தார்? அவர்பிரசங்கம் பண்ணிக்கொண்டும், பிசாசகளைத் துரத்திக் கொண்டும் இருந்தார்.
40. அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: என்ன என்று வேண்டிக்கொண்டான்? உமக்குச் சித்தமா னால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான்.
41. இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனதை; தொட்டு: என்ன சொன்னார்? எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்.
42. இப்படி அவர் சொன்னவுடனே, என்ன ஆனது? குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான்.
43. அப்பொழுது அவர் அவனை நோக்கி: என்ன சொன்னார்? நீ இதை ஒருவருக் கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு;
44. ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினி மித்தம், என்ன செய் என்று சொல்லி அனுப்பிவிட்டார்? மோசே கட்டளையிட்டி ருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்.
45. அவனோ புறப்பட்டுப் போய், என்ன செய்தான்? இந்தச் சங்கதி எங்கும் விளங் கும்படியாகப் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் என்ன செய் தார்? வெளியரங்கமாய்ப் பட்டணத்தில் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் என்ன செய்தார்கள்? அவரிடத்திற்கு வந்தார்கள்.

No comments:

Post a Comment