மத்தேயு – 27
1. பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் யாருக்கு விரோதமாக ஆலோ சனை பண்ணினார்கள்? இயேசுவுக்கு விரோதமாக. இயேசுவுக்கு விரோதமாக என்னவென்று ஆலோசனை பண்ணினார்கள்? கொலை செய்யும்படி. எப்போது ஆலோசனை பண்ணினார்கள்? விடியற்காலமானபோது.
2. இயேசுவை எப்படிக் கொண்டுபோனார்கள்? இயேசுவைக் கட்டி கொண்டு போனார்கள். அப்போதைய தேசாதிபதி யார்? பொந்தியுபிலாத்து. இயேசுவைக் கட்டி, கொண்டுபோய் யாரிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்? தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.
3. இயேசு மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு மனஸ்தாபப் பட்டது யார்? யூதாஸ். யூதாஸ் அந்த முப்பது வெள்ளிக்காசை யாரிடத்திற்குத் திரும்பக் கொண்டுவந்தான்? ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும் பக் கொண்டுவந்தான்.
4. யூதாஸ் எதனால் பாவஞ்செய்தேன் என்றான்? குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக் கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு ஆசாரிய ரும் மூப்பரும் என்ன சொன்னார்கள்? எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார் கள்.
5. அப்பொழுது யூதாஸ் என்ன செய்தான்? யூதாஸ் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய் நான்றுகொண்டு செத்தான்.
6. அந்த வெள்ளிக்காசை எடுத்தது யார்? பிரதான ஆசாரியர். பிரதான ஆசாரி யர் அந்த வெள்ளிக்காசை எடுத்து என்ன சொன்னார்கள்? இது இரத்தக் கிரயமா னதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் போடலாகாதென்று சொன்னார்கள்.
7. பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை என்ன செய்தார்கள்? ஆலோச னைபண்ணிய பின்பு, அந்நியரை அடக்கம் பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள்.
8. எந்த நிலம் இந்நாள் வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது? இயேசு வைக் காட்டிக் கொடுப்பதற்காக யூதாஸ் வாங்கிய முப்பது வெள்ளிக்காசால் கொண்ட நிலம்.
9. இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவர் யார்? இயேசு. இஸ்ரவேல் புத்திர ரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய வெள்ளிக்காசு எத்தனை? முப்பது வெள்ளிக்காசு.
10. இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள் ளிக்காசை அவர்கள் எடுத்து எதற்காக கொடுத்தார்கள்? கர்த்தர் எனக்குக் கற் பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள். நிறைவேறிய இந்த வார்த்தை எந்த தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது? ஏசாயா.
11. இயேசு யாருக்கு முன்பாக நின்றார்? தேசாதிபதிக்கு முன்பாக நின்றார். நீ யூதருடைய ராஜாவா என்று இயேசுவிடம் கேட்டது யார்? தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்து. அதற்கு இயேசு சொன்னது என்ன? நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
12. இயேசு யாருக்கு, எப்போது மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை? பிரதான ஆசாரியரும் மூப்பரும் இயேசுவின்மேல் குற்றஞ்சாட்டுகையில்.
13. அப்பொழுது பிலாத்து இயேசுவை நோக்கி சொன்னது என்ன? இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான்.
14. தேசாதிபதி எதனால்; மிகவும் ஆச்சரியப்பட்டான்? இயேசு ஒரு வார்த்தை யும் மாறுத்தரமாக ஒன்றும் சொல்லாததால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப் பட்டான்.
15. யாரை ஜனங்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதி பதிக்கு வழக்கமாயிருந்தது? காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுத லையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக் கமாயிருந்தது.
16. அப்பொழுது காவல்பண்ணப்பட்டவர்களில் பேர்போன ஒருவனாயிருந்த வன் யார்? பரபாஸ்.
17. எதினாலே அவரைக் காட்டிக்கொடுத்தார்கள்என்று பிலாத்து அறிந்தான்? பொறாமையினாலே.
18. அவர்கள் கூடியிருக்கையில் தேசாதிபதி அவர்களை நோக்கி கேட்டது என்ன? எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர் கள்? பரபாசையோ? கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ? என்று கேட் டான்.
19. தேசாதிபதி நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனிடத்தில் ஆளனுப்பியது யார்? தேசாதிபதியினுடைய மனைவி. தேசாதிபதியினுடைய மனைவி யாரை ஒன்றும் செய்யவேண்டாம் என்று சொல்லச் சொன்னாள்? அந்த நீதிமானை (இயேசுவை). யார் நிமித்தம் இன்றைக்கு சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள்? இயேசுவினிமித்தம்.
20. பிரதான ஆசாரியரும் மூப்பரும் யாரை விட்டுவிடக் கேட்டுக்கொள்ள ஜனங்களை ஏவிவிட்டார்கள்? பரபாசை. பிரதான ஆசாரியரும் மூப்பரும் யாரை கொலைசெய்விக்க ஜனங்களை ஏவிவிட்டார்கள்? இயேசுவை.
21. தேசாதிபதி ஜனங்களை நோக்கி: எவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான்? பரபாஸ், இயேசு. அதற்கு அவர் கள் யாரை விடுதலையாக்கு வேண்டுமென்றார்கள்? பரபாஸ்.
22. பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், யாரை நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்? கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை. ஜனங்கள் இயேசுவை என்ன செய்ய வேண்டும் என்றார்கள்? இயேசுவைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள்.
23. ஏன் என்ன பொல்லாப்புச் செய்தான் என்று தேசாதிபதி யாரைக்குறித்துச் சொன்னான்? இயேசுவைக்குறித்து. ஜனங்கள் என்னவென்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்? இயேசுவைச் சிலுவையில் அறைய வேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
24. எதினாலே தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டான்? கலகம் அதிகமாகிறதினால். கலகம் அதிகமாகிறதேயல் லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு என்ன செய்தான்? தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைக ளைக் கழுவினான். பிலாத்து கைகளைக் கழுவி என்ன சொன்னான்? இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள் ளுங்கள் என்றான்.
25. அதற்கு ஜனங்கள் சொன்னது என்ன? இயேசுவினுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.
26. அப்பொழுது பிலாத்து யாரை ஜனங்களுக்கு விடுதலையாக்கினான்? பரபாசை. பிலாத்து இயேசுவை எதற்கு ஒப்புக்கொடுத்தான்? இயேசுவை வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
27. அப்பொழுது, தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவை எங்கே கொண்டு போனார்கள்? தேசாதிபதியின் அரமனை. தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவிடத்தில் யாரை கூடிவரச் செய்தார்கள்? போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் இயேசுவிடத்தில் யாரை கூடிவரச் செய்தார்கள்.
28. இயேசுவின் வஸ்திரங்களை என்ன செய்தார்கள்? கழற்றினார்கள். இயேசு வுக்கு எதை உடுத்தினார்கள்? சிவப்பான மேலங்கி.
29. இயேசுவின் சிரசின்மேல் என்ன வைத்தார்கள்? முள்ளுகளால் ஒரு முடியைப்பின்னி, அவர் சிரசின்மேல் வைத்தார்கள். இயேசுவுக்கு முன்பாக என்ன செய்தார்கள்? முழங்காற்படியிட்டார்கள். இயேசுவை என்னவென்று சொல்லி அவரைப் பரியாசம் பண்ணினார்கள்? யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.
30. இயேசுவின்மேல் என்ன செய்தார்கள்? துப்பினார்கள். அந்தக் கோலை எடுத்து என்ன செய்தார்கள்? இயேசுவை சிரசில் அடித்தார்கள்.
31. அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, எதை உடுத்தின மேலங்கியை என்ன செய்தார்கள்? கழற்றினார்கள். அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றிய பிறகு என்ன செய்தார்கள்? அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி னார்கள். இயேசுவை எங்கு கொண்டுபோனார்கள்? இயேசுவைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.
32. போகையில் எந்த ஊரானாகிய ஒரு மனுஷனை அவர்கள் கண்டார்கள்? சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷன். அவர்கள் சிரேனே ஊரானாகிய சீமோனை என்ன செய்தார்கள்? இயேசுவுடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினார்கள்.
33. கபாலஸ்தலம் என்னும் அர்த்தங்கொள்ளும் இடம் எது? கொல்கொதா. அவர்கள் எந்த இடத்துக்கு வந்தார்கள்? கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள் ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தார்கள்.
34. அவர்கள் இயேசுவுக்கு எதைக் குடிக்கக் கொடுத்தார்கள்? கசப்புக்கலந்த காடி. இயேசு கசப்புக்கலந்த காடியை என்ன செய்தார்? ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்.
35. இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு எதின்பேரில் சீட்டுப்போட்டார் கள்? உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள். வஸ்திரத்திற்காகச் சீட்டுப் போட்டு என்ன செய்தார்கள்? இயேசுவுடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என்ன என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும் படி இப்படி நடந்தது? என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போட்டார்கள்.
36. அவர்கள் அங்கே உட்கார்ந்து என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்கள் இயேசுவை காவல் காத்துக் கொண்டிருந்தார்கள்.
37. என்ன என்று எழுதி அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்? இவன் யூதரு டைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள். ஏன் அப்படி எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்? அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.
38. அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டது யார்? கள்ளர். அவரோ டேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டது எத்தனை பேர்? இரண்டு பேர். எப்படி சிலுவைகளில் அறையப்பட்டார்கள்? அவருடைய வலது பக்கத்தில் ஒருவ னும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர் அவரோடே கூடச் சிலுவைகளில் அறையப்பட்டார்கள்.
39. தங்கள் தலைகளைத் துலுக்கியவர்கள் யார்? அந்த வழியாய் நடந்துபோகி றவர்கள்.
40. தேவாலயத்தை இடித்து எத்தனை நாளைக்குள்ளே கட்டுகிறவனே என்றார் கள்? மூன்று நாளைக்குள்ளே. உன்னை நீயே என்ன செய்துகொள் என்றார்கள்? இரட்சித்துக்கொள் என்றார்கள். நீ தேவனுடைய குமாரனானால் என்ன செய் என்றார்கள்? சிலுவையிலிருந்து இறங்கிவா என்றார்கள். அந்த வழியாய் நடந் துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி என்னவென்று இயேசுவைத் தூஷித்தார்கள்? தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்கு ள்ளே கட்டுகிற வனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமார னானால் சிலு வையிலிருந்து இறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள்.
41. அப்படியே பரியாசம் பண்ணியவர்கள் யாவர்? வேதபாரகர், பரிசேயர், மூப்பர்.
42. யாரை ரட்சித்தான் என்றார்கள்? மற்றவனை. எதற்குத் திராணியில்லை என்றார்கள்? தன்னைத் தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை என்றார் கள். இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் என்ன செய்யட்டும் என்றார்கள்? இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும் என்றார்கள். எப்போது இயே சுவை விசவாசிப்போம் என்றார்கள்? இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம் என்றார்கள்.
43. தன்னை யார் என்று சொன்னான் என்றார்கள்? தேவனுடைய குமாரன். யார்மேல் நம்பிக்கையாயிருந்தானே என்றார்கள்? தேவன்மேல். யார் இவன் மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்? தேவன்.
44. அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டது யார்? கள்ளர். அவரோ டேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளர் என்ன செய்தார்கள்? அந்தப் படியே இயேசுவை நிந்தித்தார்கள்.
45. எப்போது பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று? ஆறாம்மணி நேர முதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும்.
46. ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு என்னவென்று கூப்பிட்டார்? ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார். ஏலி!ஏலி! லாமா சபக்தானி என்றால் என்ன அர்த்தமாம்? என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
47. அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது, இவன் யாரைக் கூப்பிடுகிறான் என்றார்கள்? எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
48. உடனே அவர்களில் ஒருவன் ஓடி, எதை எடுத்தான்? கடற்காளானை எடுத் தான். கடற்காளானை எடுத்து, எதில் தோய்த்தான்? காடியில் தோய்த்தான். காடியில் தோய்த்து எதை எதில் மாட்டினான்? ஒரு கோலில் மாட்டினான். கடற் காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி என்ன செய்தான்? இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான்.
49. யார் இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள்? மற்ற வர்கள். என்ன சொன்னார்கள்? பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள்.
50. இயேசு, மறுபடியும் எப்படிக் கூப்பிட்டார்? மகா சத்தமாய்க் கூப்பிட்டார். இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, எதை விட்டார்? ஆவியை விட்டார்.
51. தேவாலயத்தின் திரைச்சீலை என்ன ஆனது? இரண்டாகக் கிழிந்தது. தேவா லயத்தின் திரைச்சீலை எது தொடங்கி எது வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது? மேல் தொடங்கிக் கீழ் வரைக்கும். பூமி என்ன ஆனது? பூமியும் அதிர்ந்தது. கன் மலைகள் என்ன ஆனது? கன்மலைகளும் பிளந்தது.
52. கல்லறைகள் என்ன ஆனது? கல்லறைகளும் திறந்தது. யாருடைய சரீரங் களும் எழுந்திருந்தது? நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
53. இயேசு உயிர்த்தெழுந்தபின்பு பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக் குக் காணப்பட்டவர்கள் யாவர்? நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான் களுடைய சரீரங்களும் எழுந்திருந்து, கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள்.
54. நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல் காத்திருந்த வர்களும், எதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்? பூமியதிர்ச்சியையும் சம்ப வித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்தார்கள். அவர்கள் மிகவும் பயந்து என்ன சொன்னார்கள்? மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.
55. அங்கே தூரத்திலே நின்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள் யாவர்? இயேசு வுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரிகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
56. அவர்களுக்குள்ளே யாரெல்லாரும் இருந்தார்கள்? மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரரு டைய தாயும் இருந்தார்கள்.
57. அரிமத்தியா ஊரானாகிய மனுஷனுடைய பேர் என்ன? யோசேப்பு. அரிமத் தியா ஊரானாகிய யோசேப்பு எப்படிப்பட்டவனாயிருந்தான்? இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்தான்.
58. சாயங்காலமானபோது, யோசேப்பு யாரிடம் போனான்? பிலாத்துவிடம் போனான். யோசேப்பு பிலாத்துவிடம் போய் என்ன கேட்டான்? இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது பிலாத்து என்ன கட்டளையிட்டான்? இயேசுவின் சரீரத்தைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான்.
59. யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்து, எதில் சுற்றினான்? துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றினான்.
60. யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எங்கே வைத்தான்? தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்தான். யோசேப்பு கல்லறையின் வாசலை என்ன செய்தான்? கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப் போனான்.
61. அங்கே கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தவர்கள் யாவர்? மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும்.
62. ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிலாத்துவினிடத்தில் கூடி வந்தது யாவர்? பிரதான ஆசாரியரும் பரிசேயரும்.
63. பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவை எப்படி அழைத்தார்கள்? ஆண்டவனே. பிரதான ஆசாரியரும் பரிசேயரும் இயேசுவை என்னவென்று சொன்னார்கள்? அந்த எத்தன் என்றார்கள். பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவிடம் எது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது என்றார்கள்? ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்றுநாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது என்றார்கள்.
64. இயேசுவினுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து என்ன செய்வார்கள் என்றார்கள்? இயேசுவைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லுவார்கள் என்றார்கள். எந்த எத்தைப் பார்க்கிலும் எந்த எத்து கொடியதாகாதபடி செய்ய வேண்டும் என்றார்கள்? முந்தின எத்தைப் பார்க்கிலும் பிந்தின எத்து கொடியதாகாதபடி செய்ய வேண் டும் என்றார்கள். முந்தின எத்தைப் பார்க்கிலும் பிந்தின எத்து கொடியதாகாத படிக்கும் நீர் என்ன கட்டளையிட வேண்டும் என்றார்கள்? நீர் மூன்று நாள் வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிட வேண்டும் என்றார்கள்.
65. அதற்கு பிலாத்து பிரதான ஆசாரியரிடமும் பரிசேயரிடமும் சொன்னது என்ன? உங்களுக்குக் காவல்சேவகர் உண்டே, போய் உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் என்றான்.
66. பிரதான ஆசாரியரும் பரிசேயரும் என்ன செய்தார்கள்? கல்லுக்கு முத்தி ரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்.
No comments:
Post a Comment