Monday, May 25, 2015

மாற்கு – 5

மாற்கு – 5
1. பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள எந்த நாட்டில் வந்தார்கள்? கதரே னருடைய நாட்டில் வந்தார்கள்.
2. அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, யார் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான்? அசுத்த ஆவியுள்ள ஓரு மனுஷன்.
3. அவனுடைய குடியிருப்பு எங்கு இருந்தது? கல்லறைகளிலே இருந்தது. அவ னைச் எதினால் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது? சங்கிலிகளினால்.
4. அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டி ருந்தும், என்ன செய்வான்? சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப் போடுவான். அவனையடக்க யாரால் கூடாதிருந்தது? ஒருவனாலும் கூடாதி ருந்தது.
5. அவன் எப்பொழுது எப்படி தன்னைக் காயப்படுத்திக் கொண்டிருந்தான்? எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான்.
6. அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, என்ன செய்தான்? ஓடிவந்து, அவரைப் பணிந்துகொண்டான்.
7. அவன் இயேசுவிடம் என்ன சொன்னான்? இயேசுவே, உன்னதமான தேவனு டைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாத படிக்குத் தேவன்பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன் னான்.
8. அவன் ஏன் அப்படிச் சொன்னான்? அவர் அவனை நோக்கி: அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார்.அதனால் அப்படிச் சொன்னான்.
9. அப்பொழுது அவர் அவனை நோக்கி என்ன கேட்டார்?உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன் என்ன சொன்னான்? நாங்கள் அநேகராயிருக்கிறபடி யால் என் பேர் லேகியன் என்று சொன்னான்.
10. அவன் இயேசுவிடம் என்ன வேண்டிக் கொண்டான்? தங்களை அந்தத் திசை யிலிருந்து துரத்திவிடாதபடிக்கு அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்.
11. அப்பொழுது, அவ்விடத்தில் மலையருகே எவைகள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தது? அநேகம் பன்றிகள்.
12. அந்தப் பிசாசுகளெல்லாம் அவரை நோக்கி என்னவென்று வேண்டிக்கொண் டன? பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன.
13. இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள் என்ன செய்தன? புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின. அந்தக் கூட்டத்தில் ஏறக்கு றைய எத்தனை பன்றிகள் இருந்தன? இரண்டாயிரம் பன்றிகள். உடனே ஏறக்கு றைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக் கூட்டம் என்ன ஆனது? உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்து மாண்டது.
14. பன்றிகளை மேய்த்தவர்கள் என்ன செய்தார்கள்? ஓடி, இதைப் பட்டணத்தி லும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க் கும்படி வந்தது யார்? ஜனங்கள்.
15. இயேசுவினிடத்தில் வந்து, எதைக் கண்டு பயந்தார்கள்? லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கி றதைக் கண்டு, பயந்தார்கள்.
16. பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் சம்பவித்ததைக் கண்ட வர்களும் என்ன செய்தார்கள்? அவர்களுக்கு விவராமாய்ச் சொன்னார்கள்.
17. அப்பொழுது அவர்கள் என்னவென்று வேண்டிக் கொள்ளத் தொடங்கினார் கள்? தங்கள் எல்லைகளை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள்.
18. அப்படியே அவர் படவில் ஏறுகிறபொழுது, பிசாசு பிடித்திருந்தவன், என்ன வேண்டிக்கொண்டான்? அவரோடேகூட இருக்கும்படி தனக்கு உத்தரவு கொடுக்க அவரை வேண்டிக்கொண்டான்.
19. இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல் சொன்னது என்ன? நீ உன் இனத்தாரி டத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைக ளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார்.
20. அந்தப்படி அவன் போய் என்ன செய்தான்? இயேசு தனக்குச் செய்தவைக ளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம் பண்ணத்தொடங் கினான். எல்லாரும் என்னவானார்கள்? ஆச்சரியப்பட்டார்கள்.
21. இயேசு படவில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்திலிருந்த போது, நடந்தது என்ன? திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
22. அப்பொழுது, யார் வந்து அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்திலே விழுந் தான்? ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன்.
23. யவீரு என்னவென்று இயேசுவை வேண்டிக் கொண்டான்? என் குமாரத்தி மரண அவஸ்தைப் படுகிறாள், அவள் ஆரோக்கியம் அடையும்படிக்கு நீர் வந்து, அவள்மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்.
24. அவர் என்ன செய்தார்? அவனோடேகூடப்போனார். யாரெல்லாம் அவருக் குப்பின் சென்று, அவரை நெருக்கினார்கள்? திரளான ஜனங்கள்.
25. அப்பொழுது இயேசுவைக் கேள்விப்பட்டது யார்? பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ,
26. எதனால் மிகவும் வருத்தப்பட்டாள்? அநேக வைத்தியர்களால். தனக்கு உண் டானவைகளையெல்லாம் என்ன செய்தாள்? செலவழித்தாள். சற்றாகிலும் குணமடையாமல் என்ன செய்தாள்? அதிக வருத்தப்பட்டாள்.
27. இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு என்னவென்று சொல்லிக் கொண் டாள்? நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமா வேன் என்று சொல்லிக் கொண்டாள்.
28. ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, என்ன செய்தாள்? அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்.
29. உடனே நடந்தது என்ன? அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று. அவள் எதை உணர்ந்தாள்? அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள்.
30. உடனே இயேசு எதை அறிந்தார்? தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்தார். ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி என்ன கேட்டார்? என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார்.
31. அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி சொன்னது என்ன? திரளான ஜனங் கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள்.
32. இயேசு எதற்காகச் சுற்றிலும் பார்த்தார்? இதைச் செய்தவளைக் காணும்ப டிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார்.
33. தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் என்ன செய் தாள்? பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள்.
34. அவர் அவளைப் பார்த்து என்ன சொன்னா? மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.
35. அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து என்ன சொன்னார்கள்? உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள்.
36. அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெபஆலயத் தலைவனை நோக்கி சொன்னது என்ன? பயப்படாதே, விசுவாசமுள்ளவனா யிரு என்று சொன்னார்.
37. இயேசு யாரைத் தவிர வேறொருவரும் தம்மோடே வருகிறதற்கு இடங்கொ டுக்கவில்லை? பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர.
38. ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலே வந்து, எதைக் கண்டார்கள்? சந்தடி யையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டுடார்கள்.
39. இயேசு உள்ளே பிரவேசித்து சொன்னது என்ன? நீங்கள் சந்தடிபண்ணி அழுகிறதென்ன? பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.
40. அதற்காக அவரைப் பார்த்து என்ன செய்தார்கள்? நகைத்தார்கள். எல்லாரை யும் அவர் வெளியே போகப்பண்ணி, என்ன செய்தார்? பிள்ளையின் தகப்பனை யும் தாயையும் தம்மோடே வந்தவர்களையும் அழைத்தக்கொண்டு, பிள்ளையி ருந்த இடத்தில் பிரவேசித்தார்.
41. பிள்ளையின் கையைப் பிடித்து என்ன சொன்னார்? தலீத்தாகூமி என்றார். அதற்கு என்ன அர்த்தமாம்? சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல் லுகிறேன் என்று அர்த்தமாம்.
42. உடனே சிறுபெண் என்ன செய்தாள்? எழுந்து நடந்தாள். அவள் எத்தனை வயதுள்ளவளாயிருந்தாள்? அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாயிருந்தாள். அவர்ள் என்ன ஆனார்கள்? அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.
43. இயேசு என்னவென்று உறுதியாகக் கட்டளையிட்டார்? அதை ஒருவருக்கும் அறிவியாதபடி அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார். அவளுக்கு என்ன கொடுக்கும்படி சொன்னார்? ஆகாரம் கொடுக்கும்படி சொன்னார்.

No comments:

Post a Comment