மாற்கு - 4
1. அவர் மறுபடியும் எங்கே போதகம்பண்ணத் தொடங்கினார்? கடலோரத்திலே. திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் என்ன செய்தார்? கடலிலே நின்ற ஒரு படவில் ஏறி உட்கார்ந்தார். ஜனங்களெல்லாரும் என்ன செய்தார்கள்? கடற்கரையில் நின்றார்கள்.
2. அவர் அநேக விசேஷங்களை எப்படி அவர்களுக்குப் போதித்தார்? உவமை களாக.
3. கேளுங்கள், யார் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்? விதைக்கிறவன்.
4. அவன் விதைக்கையில், சில விதை எங்கே விழுந்தது? வழியருகே.எவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது? ஆகாயத்துப் பறவைகள்.
5. சில விதை அதிக எந்த நிலத்தில் விழுந்தது? மண்ணில்லாத கற்பாறை நிலத் தில். அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே என்ன ஆனது? சீக்கிரத்தில் முளைத்தது;
6. வெயில் ஏறினபோதோ, எதனால் உலர்ந்துபோயிற்று? தீய்ந்து போய், வேரில் லாமையால் உலர்ந்துபோயிற்று.
7. சில விதை எந்த இடங்களில் விழுந்தது? முள்ளுள்ள இடங்களில். முள் வளர்ந்து, அது என்ன கொடாதபடி, அதை நெருக்கிப்போட்டது? பலன் கொடாத படி அதை நெருக்கிப்போட்டது.
8. சில விதை எந்த நிலத்தில் விழுந்தது? நல்ல நிலத்தில் விழுந்தது. அது எப்படி பலன் தந்தது? ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது.
9. யார் கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார்? கேட்கிறதற்குக் காதுள்ளவன்.
10. அவர் தனித்திருக்கிறபோது, யாரெல்லாம் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள்? பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்த வர்கள்.
11. அதற்கு அவர்: எதை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது? தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது. புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் எவைகளாகச் சொல்லப்படுகிறது? உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
12. எதற்காக அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்க ளாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்? அவர்கள் குணப் படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது.
13. பின்பு அவர் அவர்களை நோக்கி: எதை நீங்கள் அறியவில்லையா என்றார்? இந்த உவமையை. அறியாவிட்டால் எவைகளையெல்லாம் எப்படி அறிவிர்கள் என்றார்? மற்ற உவமைகளையெல்லாம்.
14. விதைக்கிறவன் எதை விதைக்கிறான்? வசனத்தை விதைக்கிறான்.
15. வசனத்தைக் கேட்டவுடனே யார் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக் கப்பட்ட வசனத்தை எடுத்துப் போடுகிறான்? சாத்தான். இவர்களே யார்?வசனம் விதைக்கப்படுகிற வழியருகானவர்கள்.
16. அப்படியே, எதைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண் டும் நிலைத்திருக்கிறார்கள்? வசனத்தை.
17. எதனால் கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள்? தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால். வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண் டானவுடனே என்னவாகிறார்கள்? இடறலடைகிறார்கள். இவர்களே எந்த நிலத் தில் விதைக்கப்பட்டவர்கள்? கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்.
18. வசனத்தைக் கேட்டும், எதினால் பலனற்றுப்போகிறார்கள்? உலகக்கவலை களும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சை களும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப் போகிறார்கள். வசனத்தை நெருக்கிப்போடுவது எவைகள்? உலகக்கவலைகள், ஐசுவரியத்தின் மயக்கம், மற்றவைகளைப்பற்றி உண்டாகிய இச்சைகள்.
19. இவர்களே எந்த இடங்களில் விதைக்பப்பட்டவர்கள்? முள்ளுள்ள இடங்க ளில் விதைக்கப்பட்டவர்கள்.
20. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் யார்? வசனத்தைக் கேட்டு, ஏற்றுக் கொண்டு, ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும் ஒன்று நூறுமாகப் பலன்கொடுக் கிறார்கள்.
21. பின்னும் அவர் அவர்களை நோக்கி: விளக்கை எதின்மேல் வைக்க வேண் டும்? தண்டின்மேல் வைக்க வேண்டும். எதில் வைக்கக் கூடாது? மரக்காலின் கீழாகிலும், கட்டிலின் கீழாகிலும், வைக்கக் கூடாது.
22. வெளியரங்கமாகாத எதுவுமில்லை? அந்தரங்கமுமில்லை. வெளிக்கு வராத எதுவுமில்லை? மறைபொருளுமில்லை.
23. கேட்கிறதற்கு ஒருவன் எதுவுள்ளவனாய் இருந்தால் கேட்கக்கடவன் என் றார்? காதுள்ளவனாயிருந்தால்.
24. பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் கேட்கிறதை என்ன செய்ய வேண்டும்? கவனிக்க வேண்டும். எந்த அளவினால் உங்களுக்கு அளக்கப்ப டும்? எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும். கேட்கிற உங்களுக்கு எவ்வளவு கொடுக்கப்படும்? அதிகம் கொடுக்கப்படும்.
25. யாருக்குக் கொடுக்கப்படும்? உள்ளவனெவனே அவனுக்குக் கொடுக்கப்ப டும். யாரிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்? இல்லாதவனெவனே அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
26. பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, எதற்கு ஒப்பாயிருக்கிறது? ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து;
27. இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது.
28. நிலமானது முன்பு எதைக் கொடுக்கும்? முளையைக் கொடுக்கும். நிலமா னது பின்பு எதைக் கொடுக்கும்? கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தை யும் பலனாகத்தானாய்க் கொடுக்கும்.
29. பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, எதற்கு ஆட்களை அனுப்புகி றான் என்றார்? அறுக்கிறதற்கு.
30. பின்னும் அவர் அவர்களை நோக்கி: எதை எதற்கு ஒப்பிடுவோம்? தேவனு டைய ராஜ்யத்தை. அல்லது எதினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்? எந்த உவமையினாலே.
31. தேவனுடைய ராஜ்யம் எதுக்கு ஒப்பாயிருக்கிறது? அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது. அது பூமியில் விதைக்கப்படும்போது எவைகளிலும் சிறிதா யிருக்கிறது? பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறியதாயிருக்கிறது.
32. விதைக்கப்பட்டபின்போ, அது வளர்ந்து, என்னவாகிறது? சகல பூண்டுகளி லும் பெரிதாகிறது. எவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார்? ஆகாயத்துப் பறவைகள்.
33. அவர்கள் எதற்குத் தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்? கேட்டறியும் திராணிக்குத் தக்கதாக.
34. எவைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை? உவமை களினாலேயன்றி. அவர் எப்போது தம்முடைய சீஷர்களுக்கு அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்? தம்முடைய சீஷரோடே தனித்தி ருக்கும் போது.
35. அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: எங்கே போவோம் வாருங்கள் என்றார் ? அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்.
36. அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, என்ன செய்தார்கள்? அவர் படவிலி ருந்தபடியே அவரைக் கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் யாரோடே கூட இருந்தது? அவரோடேகூட இருந்தது.
37. அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, என்ன ஆயிற்று? படவு நிரம்பத் தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று.
38. இயேசு என்ன செய்து கொண்டிருந்தார்? கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணiயை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி என்ன சொன்னார்கள்? போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலை யில்லையா என்றார்கள்.
39. அவர் எழுந்து, எதை அதட்டினார்? காற்றை அதட்டினார். கடலைப்பார்த்து என்ன சொன்னார்? இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது என்ன ஆயிற்று? காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
40. அவர் அவர்களை நோக்கி என்ன சொன்னார்? ஏன் இப்படிப் பயப்பிட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார்.
41. அவர்கள் மிகவும் பயந்து என்னவென்று சொல்லிக்கொண்டார்கள்? இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொ ருவர் சொல்லிக்கொண்டார்கள்.
No comments:
Post a Comment