Wednesday, May 27, 2015

மாற்கு – 7

மாற்கு – 7
1. இயேசுவிடத்தில் யார் கூடிவந்தார்கள்? எருசலேமிலிருந்து வந்த பரிசேய ரும், வேதபாரகரில் சிலரும். 
2. அப்பொழுது அவரடைய சீஷரில் சிலர் என்ன செய்தார்கள்? கழுவாத அசுத்த கைகளாலே போஜனம்பண்ணினார்கள். இதை யார் கண்டு குற்றம்பிடித்தார் கள்? எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரில் சிலரும்.
3. பரிசேயர் முதலிய யூதர் அனைவரும் எதைக் கைக்கொண்டார்கள்? முன் னோர்களின் பாரம்பரியத்தைக் கைக்கொண்டார்கள். அடிக்கடி கைகழுவினா லொழிய என்ன செய்ய மாட்டார்கள்? சாப்பிடமாட்டார்கள்.
4. கடையிலிருந்து வரும்போதும் என்ன செய்யாமல் சாப்பிடமாட்டார்கள்? ஸ்நானம்பண்ணாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும் கிண் ணங்களையும் செப்புக்குடங்களையும் மணைகளையும் கழுவுகிறதுமல்லா மல், வேறு எதைக் கைக்கொண்டுவருவார்கள்? அநேக ஆசாரங்களையும் கைக் கொண்டுவருவார்கள்.
5. அப்பொழுது, அந்தப் பரிசேயரும் வேதபாரகரும் இயேசுவை நோக்கி என்ன கேட்டார்கள்? உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கை கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள்.
6. இயேசு மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா எதை நன்றாய்த் தீர்க்க தரிசனம் சொல்லியிருக்கிறான் என்றார்? இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளி னால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூர மாய் விலகியிருக்கிறது என்றும்,
7. மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து,வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.
8. நீங்கள் எதைத் தள்ளிவிட்டீர்கள்? தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட் டீர்கள். நீங்கள் எதைக் கைக்கொண்டு அநுசரித்து வருகிறீர்கள்? மனுஷரு டைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்துவருகிறீர்கள்.
9. பின்னும் அவர் அவர்களை நோக்கி: எது நன்றாயிருக்கிறது என்றார்? நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்குத் தேவனுடைய கட்டளை களை வியர்த்தமாக்கினது நன்ருயிருகிகிறது.
10. மோசே என்ன சொல்லியிருக்கிறார்? உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிற வன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறார்.
11. நீங்கள் எதினால் கடமை தீர்ந்தது என்று சொல்லுகிறீர்கள்? ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டால் அவனுடைய கடைமை தீர்ந்தது என்று சொல்லுகி றீர்கள்.
12. நீங்கள் எதினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள்? அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்யஒட்டாமல்;
13. நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்கு கிறீர்கள். இதுபோலவே நீங்கள் என்ன செய்கிறீர்கள்? மற்றும் அநேக காரியங் களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.
14. பின்பு அவர் ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: நீங்கள் எல்லாரும் எனக்கு என்ன செய்யுங்கள் என்றார்? செவிகொடுத்து உணருங்கள்.
15. ஒருவனை எது தீட்டுப்படுத்தமாட்டாது? மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது. ஒரு வனை எது தீட்டுப்படுத்தும்? அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்.
16. யார் கேட்கக்கடவன் என்றார்? கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந் தால் கேட்கக்கடவன் என்றார்.
17. அவர் ஜனங்களைவிட்டு வீட்டுக்குள்பிரவேசித்தபோது, அவருடைய சீஷர் கள் எதை அவரிடத்தில் விசாரித்தார்கள்? அவர் சொன்ன உவமையைக் குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள்.
18. அதற்கு அவர் சீஷர்களிடம் கேட்ட கேள்வி என்ன? நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன் றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில் லையா?
19. புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறது எங்கே போகாமல் எங்கே போகிறது? அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது. அதிலி ருந்து எது வழியாய் நீங்கிப் போகும்? எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களை யும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப் போகும்.
20. மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனை என்ன செய்யும்? தீட்டுப்படுத்தும்.
21. மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து புறப்பட்டு வருவது எவைகள்? பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாத கங்களும்,
22. களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகார மும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும், புறப்பட்டுவரும்.
23. பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப் பட்டு என்ன செய்யும்? மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
24. பின்பு, எது கூடாமற்போயிற்று? அவர் எழுந்து அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில் போய், ஒரு வீட்டுக்குள் பிரவே சித்து, ஒருவரும் அதை அறியாதிருக்க விரும்பியும், அவர் மறைவாயிருக்கக் கூடாமற்போயிற்று.
25. இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டது யார்? அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறு பெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ. அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, என்ன செய்தாள்? வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்.
26. அந்த ஸ்திரீ யார்? சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீ. அவள் இயேசுவை என்னவென்று வேண்டிக்கொண்டாள்? தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கெண்டாள்.
27. இயேசு அவளை நோக்கி யார் திருப்தியடையட்டும் என்றார்? முந்திப் பிள் ளைகள் திருப்தியடையட்டும் என்றார். எது நல்லதல்ல என்றார்? பிள்ளைக ளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
28. அதற்கு அவள் சொன்னது என்ன? மெய்தான், ஆண்டவரே, என்றாள். ஆகிலும், எவைகளை நாய் தின்னுமே என்றாள்? மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
29. அப்பொழுது, அவர் எதினிமித்தம் போகலாம் என்றார்? நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம். பிசாசு என்ன ஆயிற்று என்றார்? பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார்.
30. அவள் தன் வீட்டுக்கு வந்தபொழுது, என்ன கண்டாள்? பிசாசு போய்விட்ட தையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள்.
31. மறுபடியும், இயேசு எங்கே வந்தார்? தீருசீதோன் பட்டணங்களின் எல்லை களை விட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாய்க் கலி லேயாக் கடலருகே வந்தார்.
32. அங்கே யாரைக் கொண்டுவந்தார்கள்? கொன்னைவாயுடைய ஒரு செவி டனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர் என்ன செய்ய வேண்டு மென்று வேண்டிக்கொண்டார்கள்? தமது கையை அவன்மேல் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள.
33. அப்பொழுது, அவர் அவனை என்ன செய்தார்? ஜனக்கூட்டத்தை விட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோனார். தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, என்ன செய்தார்? உமிழ்ந்து, அவனுடைய நாவைத் தொட்டு;
34. வானத்தை அண்ணார்ந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார். எப்பத்தா என்றால் என்ன அர்த்தமாம்? அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம்.
35. உடனே அவன் என்ன ஆனான்? அவனுடைய செவிகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாவின் கட்டும் அவிழ்ந்து, அவன் செவ்வையாய்ப் பேசினான்.
36. இயேசு என்னவென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்? அதை ஒருவருக் கும் சொல்லவேண்டாமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஆகிலும் அவர்கள் என்ன செய்தார்கள்? எவ்வளவு அதிகமாய் அவர்களுக்குக் கட்டளை யிட்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் அதைப் பிரசித்தம் பண்ணினார் கள்.
37. அவர்கள் என்ன சொல்லி மேன்மேலும் ஆச்சரியப்பட்டார்கள்? எல்லாவற் றையும் நன்றாய்ச் சொய்தார்; செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும்பண்ணு கிறார் என்று சொல்லி, மேன்மேலும் ஆச்சரியப்பட்டார்கள்.

No comments:

Post a Comment