Monday, May 18, 2015

மாற்கு - 2

மாற்கு - 2
1. சிலநாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் எங்கே போனார்? கப்பர்நகூமுக்குப் போனார். அவர் வீட்டிலிருக்கிறாரென்று கேள்விப்பட்டது யார்? ஜனங்கள்.
2. உடனே எதுக்கு முன்னும் நிற்க இடம்போதாதபடிக்கு அநேகர் கூடிவந்தார் கள்? வாசலுக்கு. அவர்களுக்கு இயேசு என்ன செய்தார்? வசனத்தைப் போதித் தார்.
3. அப்பொழுது நாலுபேர் யாரைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்? ஒரு திமிர்வாதக்காரனை.
4. எதினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல் போனது? ஜனக்கூட் டத்தினிமித்தம். அதனால் அவர்கள் என்ன செய்தார்கள்? அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக் கையை இறக்கினார்கள்.
5. இயேசு அவர்களிடம் என்ன கண்டார்? விசுவாசத்தைக் கண்டார். இயேசு திமிர்வாதக்காரனை நோக்கி என்ன சொன்னார்? மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
6. அங்கே உட்கார்ந்திருந்தவர்கள் யார்? வேதபாரகரில் சிலர்.
7. வேதபாரகரில் சிலர் தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தது என்ன? இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரே யன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.
8. அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே எதினால் அறிந்தார்? தம்முடைய ஆவியில் அறிந்தார். இயேசு அவர்களை நோக்கி நீங்கள் எதில் இப்படிச் சிந்திக்கிறதென்ன என்றார்? உங்கள் இருதயங் களில்.
9. இயேசு அவர்களிடம் என்ன சொல்லி எது எளிது என்றார்? உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன்படுக்கையை எடுத் துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது?
10. பூமியிலே எதுக்கு மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொன்னார்? பாவங்களை மன்னிக்க. 
11. இயேசு திமிர்வாதக்காரனை நோக்கிச் சொன்னது என்ன? நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல் லுகிறேன் என்றார்.
12. திமிர்வாதக்காரன் உடனே என்ன செய்தான்? அவன் எழுந்து, தன் படுக் கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்கு முன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு என்ன சொல்லி தேவனை மகிமைப்படுத்தினார் கள்? நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
13. அவர் மறுபடியும் புறப்பட்டுக் எங்கே போனார்? கடலருகே போனார். அப்பொ ழுது ஜனங்களெல்லாரும் என்ன செய்தார்கள்? அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களுக்கு என்ன செய்தார்? போதகம்பண்ணினார்.
14. அவர் நடந்துபோகையில், யார் ஆயத்துறையில் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டார்? அல்பேயுவின் குமாரனாகிய லேவி. இயேசு அவனிடம் என்ன சொன் னார்? எனக்குப் பின்சென்றுவா என்றார். அவன் என்ன செய்தான்? அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.
15. அப்பொழுது, யாருடைய வீட்டிலே இயேசு போஜன பந்தியிருந்தார்? அல்பே யுவின் குமாரனாகிய லேவியின் வீட்டில். அங்கு அவரோடுகூட யாரெல்லாம் வந்திருந்தார்கள்? அநேக ஆயக்காரரும் பாவிகளும். இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தவர்கள் யாவர்? அநேக ஆயக்காரரும் பாவிக ளும்.
16. அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதை கண்டது யார்? வேதபாரகரும் பரிசேயரும். வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷரை நோக்கி கேட்டது என்ன? இயேசு ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
17. இயேசு அதைக் கேட்டு யாருக்கேயல்லாமல் யாருக்கு வைத்தியன் வேண்டி யதில்லை என்றார்? பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. யாரையல்ல, யாரையே மனந்திரும் புகிறதற்கு அழைக்க வந்தேன் என்று இயேசு சொன்னார்? நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
18. யார் யாருடைய சீஷர்கள் உபவாசம் பண்ணிவந்தார்கள்? யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம்பண்ணிவந்தார்கள். அவர்கள் அவ ரிடத்தில் வந்து என்ன கேட்டார்கள்? யோவானுடைய சீஷரும் பரிசேயரு டைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக் கிறதென்ன வென்று கேட்டார்கள்.
19. அதற்கு இயேசு: யார் தங்களோடிருக்கையில் யார் உபவாசிக்க மாட்டார் களா என்றார்? மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசிப்பார்களா? என்றார். யார் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே என்றார்? மணவாளன்.
20. எந்த நாட்களிலே அவர்கள் உபவாசிப்பார்கள்? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள்:
21. ஒருவனும் கோடித்துண்டை எதோடுஇணைக்கமாட்டான்? பழைய வஸ்தி ரத்தோடு. இணைத்தால், அதினோடே இணைத்த புதியதுண்டு பழையதை என்ன செய்யும்? அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும்.
22. ஒருவனும் புது திராட்சரசத்தை எதில் வார்த்துவைக்கமாட்டான்? பழந்து ருத்திகளில். வார்த்துவைத்தால், புதுரசம் துருத்திகளை என்ன செய்யும்? கிழித் துப்போடும். இரசம் என்ன ஆகும்? சிந்திப்போகும். துருத்திகள் என்ன ஆகும்? கெட்டுப்போகும். புதுரசத்தை எதில் வார்த்து வைக்க வேண்டும்? புது துருத்தி களில் வார்த்துவைக்கவேண்டும்.
23. பின்பு, அவர் ஓய்வுநாளில் எதின் வழியே போனார்? பயிர் வழியே போனார். அவருடைய சீஷர்கள் கூட நடந்துபோகையில், என்ன செய்தார்கள்? கதிர்க ளைக் கொய்யத் தொடங்கினார்கள்.
24. பரிசேயர் அவரை நோக்கி: என்ன சொன்னார்கள்? இதோ, ஓய்வுநாளில் செய் யத்தகாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றார்கள்.
25. அதற்கு அவர்: எப்போது தாவீது தானும் தன்னோடிருந்தவர்களும் பசியாயி ருந்தார்கள் என்றார்? தாவீதுக்கு உண்டான ஆபத்தில்.
26. தாவீது யார் காலத்தில் செய்ததை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? என்றார்? அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில். அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, என்ன செய்தான் என்றார்? ஆசாரியர்தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தெய்வசமுகத்து அப்பங்களைத் தானும் புசித்துத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்றார்.
27. பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் எதுக்காக உண்டாக்கப்படவில்லை? ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஓய்வுநாள் யாருக்காக உண்டாக் கப்பட்டது? மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது;
28. ஆகையால் மனுஷகுமாரன் எதுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்;? ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.

No comments:

Post a Comment