Tuesday, May 26, 2015

மாற்கு – 6

மாற்கு – 6
1. அவர் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, எங்கே வந்தார்? தாம் வளர்ந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீஷரும் என்ன செய்தார்கள்? அவரோடேகூட வந்தார் கள்.
2. ஓய்வுநாளானபோது, இயேசு என்ன செய்தார்? ஜெபஆலயத்தில் உபதேசம் பண்ணத் தொடங்கினார். யார் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கேயிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது என்றார்கள்? அநேகர்.
3. இவன் யார் அல்லவா? தச்சன் அல்லவா? யாருடைய குமாரன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாருக்குச் சகோதரன் அல்லவா? யாக் கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் எங்கே இருக்கிறார்கள் அல்லாவா? இங்கே நம்மிடத்தில் இருக் கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக் குறித்து என்ன ஆனார்கள்? இடறலடைந்தார்கள்.
4. இயேசு அவர்களை நோக்கி என்ன சொன்னார்? தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனம டையான் என்றார்.
5. அங்கே அவர் என்ன செய்தார்? சில நோயாளிகள்மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினார். வேறு என்ன செய்தார்? வேறாரு அற்புதமும் செய்யவில்லை. 
6. எதைக்குறித்து ஆச்சரியப்பட்டார்? அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார். கிராமங்களிலே சுற்றித்திரிந்து, என்ன செய்தார்? உபதேசம்பண்ணினார்.
7. அவர் பன்னிருவரையும் அழைத்து, எதற்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுத் தார்? அசுத்த ஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
8. வழிக்கு எதை எடுத்துக்கொண்டு போகக் கூடாது என்றார்? பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும், எடுத்துக்கொண்டுபோகக் கூடாது என்றார். எதை மாத்திரம் எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்றார்? ஒரு தடியைமாத்திரம் எடுத்துக்கொண்டுபோக வேண்டும் என்றார். 
9. எதை போட்டுக்கொண்டு போக வேண்டும் என்றார்? பாதரட்சைகளை. எவை களைத் தரியாதிருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்? இரண்டு அங்கிக ளைத் தரியாதிருக்கவும் கட்டளையிட்டார்.
10. பின்பு அவர்களை நோக்கி: நீங்கள் எங்கேயாகிலும் ஒரு வீட்டில் பிரவேசித் தால், என்ன செய்யுங்கள் என்றார்? அவ்விடத்தை விட்டுப் புறப்படுகிற வரைக் கும் அங்கேதானே தங்கியிருங்கள்.
11. எவர்களாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வசனங்களைக் கேளாமலும் இருந்தால், நீங்கள் அவ்விடம் விட்டுப் புறப்படும்போது, என்ன செய்யுங்கள் என்றார்? அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.   நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத் திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் எதுக்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என் றார்? சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவர்களை எவ் வாறு அனுப்பினார்? இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.
12. அவர்கள் புறப்பட்டுப்போய் என்னவென்று பிரசங்கித்தார்கள்? மனந்திரும் புங்கள் என்று பிரசங்கித்தார்கள்.
13. எதைத் துரத்தினார்கள்? அநேகம் பிசாசுகளைத் துரத்தினார்கள். யாரை எப்படி சொஸ்தமாக்கினார்கள்? அநேகம் நோயாளிகளை எண்ணெய் பூசிச்  சொஸ்தமாக்கினார்கள்.
14. அவருடைய பேர் பிரசித்தமானபடியினால், யார் அவரைக்குறித்து கேள்விப் பட்டான்? ஏரோதுராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டான். யார் மரித்தோரி லிருந்து எழுந்தான் என்றான்? யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந் தான் என்றான். ஆகையால் அவனிடத்தில் எது விளங்குகிறது என்றான்? இந்தப் செய்கைகள் விளங்குகிறது என்றான்.
15. சிலர்: அவர் யார் என்றார்கள்? எலியா என்றார்கள். வேறு சிலர்: அவர் யார் என்றார்கள்? ஒரு தீர்க்கதரிசி, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போலி ருக்கிறாரென்று சொன்னார்கள்.
16. ஏரோது அதைக் கேட்டபொழுது சொன்னது என்ன? அவன் நான் சிரச்சேதம் பண்ணின யோவான்தான்; அவன் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றான்.
17. ஏரோது யாரைத் தன் மனைவியாக்கிக் கொண்டான்? தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கிக் கொண்டான்,
18. யோவான் ஏரோதை நோக்கி சொன்னது என்ன? நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று சொன்னான். அதினி மித்தம், ஏரோது செய்தது என்ன? சேவகரை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்.
19. ஏரோதியாளும் யாருக்குச் சதிநினைத்து, அவனைக் கொன்று போட மனதா யிருந்தாள்? யோவானுக்குச் சதிநினைத்து, அவனைக் கொன்றுபோட மனதா யிருந்தாள். ஆகிலும் நடந்தது என்ன? அவளால் கூடாமற்போயிற்று.
20. அதற்குக் காரணம் என்ன? யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவனென்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனை யின்படி அநேக காரியங்களைச் செய்து, விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டு வந்தான்.
21. ஏரோது தன் ஜென்மநாளிலே என்ன செய்தான்? தன்னுடைய பிரபுக்களுக் கும், சேனாதிபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனுஷருக்கும் ஒரு விருந்து பண்ணினான்.
22. சபை நடுவே வந்து நடனம்பண்ணியது யார்? ஏரோதியாளின் குமாரத்தி. ஏரோதியாளின் குமாரத்தி நடனம்பண்ணி என்ன செய்தாள்? ஏரோதுவையும் அவனோடேகூடப் பந்தியிருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொ ழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி சொன்னது என்ன? உனக்கு வேண்டியதை என்னிடத்தில் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொன்னதுமல்லாமல்;
23. நீ என்னிடத்தில் எதைக்கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதைஉனக்குத் தருவேன் என்று அவளுக்கு ஆணையும் இட்டான்.
24. அப்பொழுது, அவள் வெளியே போய், நான் என்ன கேட்கவேண்டும் என்று யாரிடத்தில் கேட்டாள்? தன் தாயினிடத்தில் கேட்டாள். அதற்கு அவள் எதை கேள் என்றாள்? யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள்.
25. உடனே அவள் ராஜாவினிடத்தில் சீக்கிரமாய் வந்து என்ன கேட்டாள்? நீர் இப்பொழுதே ஒரு தாலத்தில் யோவான்ஸ்நானனுடைய தலையை எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள்.
26. அப்பொழுது ராஜா என்ன ஆனான்? மிகுந்த துக்கமடைந்தான்; ஆகிலும், அவளுக்கு அதை ஏன் மறுக்க மனதில்லை? ஆணையினிமித்தமும், கூடப்பந்தி யிருந்தவர்களினிமித்தமும், அவளுக்கு அதை மறுக்க மனதில்லை.
27. உடனே ஏரோது என்ன செய்தான்? அவனுடைய தலையைக் கொண்டுவ ரும்படி சேவகனுக்குக் கட்டளையிட்டு அனுப்பினான்.
28. சேவகன் என்ன செய்தான்? அவன் போய், காவற்கூடத்திலே அவனைச் சிரச்சேதம்பண்ணி, அவன் தலையை ஒரு தாலத்திலே கொண்டு வந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான். அந்தச் சிறு பெண் என்ன செய்தாள்? அதைத் தன் தாயினிடத்தில் கொடுத்தாள்.
29. அவனுடைய சீஷர்கள் அதைக் கேள்விப்பட்டு என்ன செய்தார்கள்? வந்து, அவன் உடலை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
30. அப்பொழுது இயேசுவினிடத்தில் கூடிவந்தது யார்? அப்போஸ்தலர். அப்போஸ்தலர் இயேசுவுக்கு எதை அறிவித்தார்கள்? தாங்கள் செய்தவைகள் உபதேசித்தவைகள் யாவையும் அவருக்கு அறிவித்தார்கள்.
31. அவர் அவர்களை நோக்கி: எங்கே போவோம் வாருங்கள் என்றார்? வனாந் தரமான ஓரிடத்தில் தனித்துச் சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார். ஏன் அப்படிச் சொன்னார்? வருகிறவர்களும் போகிறவர்களும் அநேக ராயிருந்தபடியினால் போஜனம்பண்ணுகிறதற்கும் அவர்களுக்குச் சமயமில் லாதிருந்ததால்.
32. அவர்கள் எப்படி வனாந்தரமான ஓர் இடத்திற்குப் போனார்கள்? தனிமை யாய் ஒரு படவில் ஏறி வனாந்தரமான ஓர் இடத்திற்குப் போனார்கள்.
33. அவர்கள் புறப்பட்டுப் போகிறதை கண்டது யார்? ஜனங்கள். அவரை அறிந்த அநேகர் எங்கிருந்து எங்கே கூடிவந்தார்கள்? சகல பட்டணங்களிலுமிருந்து கால் நடையாய் அவ்விடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்னே அங்கே சேர்ந்து, அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
34. இயேசு கரையில் வந்து, அநேக ஜனங்களைக் கண்டு, என்ன செய்தார்? ஏன்? அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால், அவர்கள் மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.
35. வெகுநேரம் சென்றபின்பு, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்த என்ன சொன்னார்கள்? இது வனாந்தரமான இடம், வெகுநேரமுமாயிற்று,
36. புசிக்கிறதற்கும் இவர்களிடத்தில் ஒன்றுமில்லை. ஆகையால் என்ன செய்ய வேண்டும் என்றார்கள்? இவர்கள் சுற்றியிருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக் கும் போய், தங்களுக்காக அப்பங்களை வாங்கிக்கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
37. அவர் அவர்களை நோக்கி என்ன சொன்னார்? நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள் சொன்னது என்ன? நாங்கள் போய், இருநூறு பணத்துக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குப் புசிக்கும்படி கொடுக்கக்கூடுமோ என்றார்கள்.
38. அதற்கு அவர் உங்களிடத்தில் எத்தனை என்ன உண்டு. போய்ப்பாருங்கள் என்றார்? அப்பங்களுண்டு, போய்ப்பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து சொன்னது என்ன? ஜந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் உண்டு என்றார்கள்.
39. அப்பொழுது எல்லாரையும் என்ன செய்யச்சொல்லி அவர்களுக்குக் கட்ட ளையிட்டார்? பசும்புல்லின்மேல் பந்திபந்தியாக உட்காரவைக்கும்படி அவர்க ளுக்குக் கட்டளையிட்டார்.
40. அப்படியே அவர்கள் எப்படி உட்கார்ந்தார்கள்? வரிசை வரிசையாய், நூறு நூறுபேராகவும் ஜம்பதைம்பதுபேராகவும், உட்கார்ந்தார்கள்.
41. அவர் அந்த ஜந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, என்ன செய்தார்? வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் என்ன செய்தார்கள்? எல்லாருக்கும் பங்கிட் டார்.
42. சாப்பிட்டுத் திருப்தியடைந்தவர்கள் எத்தனை பேர்? எல்லாரும்.
43. மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தார்கள்? பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள்.
44. அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய எத்தனை பேராயிருந்தார்கள்? ஐயாயிரம் பேராயிருந்தார்கள்.
45. அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்களை எங்கே துரிதப்படுத்தினார்? படவில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி, அவர்களைத் துரிதப்படுத்தினார்.
46. அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, எதற்கு ஒரு மலையின் மேல் ஏறி னார்? ஜெபம்பண்ணும்படி.
47. சாயங்காலமானபோது படவு எங்கிருந்தது? நடுக்கடலிலிருந்தது. அவர் எங்கே எப்படி இருந்தார்? கரையிலே தனிமையாயிருந்தார்.
48. இயேசு ஏன் கடலின்மேல் நடந்து அவர்களிடத்தில் வந்தார்? அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டுவலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின் மேல் நடந்து அவர்களிடத்தில் வந்தார். அவர் எப்படிக் காணப்பட்டார்? அவர்க ளைக் கடந்துபோகிறவர்போல் காணப்பட்டார்.
49. அவர் கடலின் மேல் நடக்கிறதை அவாகள் கண்டு, என்ன செய்தார்கள்? ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள்.
50. அவர்களெல்லாரும் அவரைக் கண்டு என்னவானார்கள்? கலக்கமடைந்தார் கள். உடனே அவர் அவர்களோடே பேசி என்ன சொன்னார்? திடன்கொள்ளுங் கள், நான் தான், பயப்படாதிருங்கள் என்று சொன்னார்.
51. இயேசு எதில் ஏறினார்? அவர்கள் இருந்த படவில் ஏறினார். அப்பொழுது காற்று என்ன ஆனது? அமர்ந்தது. அதினால் அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து என்ன ஆனார்கள்? ஆச்சரியப்பட்டார்கள்.
52. அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாயிருந்தபடியினால் எதைக் குறித்து அவர்கள் உணராமற்போனார்கள்? அப்பங்களைக் குறித்து.
53. அவர்கள் கடலைக் கடந்து எங்கு வந்து கரைபிடித்தார்கள்? கெனேசரேத் தென்னும் நாட்டிற்கு வந்து, கரைபிடித்தார்கள்.
54. அவர்கள் படவிலிருந்து இறங்கினவுடனே, அவரை அறிந்தது யார்? ஜனங் கள் அவரை அறிந்தார்கள்.
55. ஜனங்கள் இயேசுவை அறிந்து என்ன செய்தார்கள்? அந்தச் சுற்றுப்புறமெங் கும் ஓடித் திரிந்து, பிணியாளிகளைப் படுக்கைகளில் கிடத்தி, அவர் வந்திருக் கிறாரென்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்து கொண்டுவந்தார்கள.;
56. அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகளில் என்ன என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்? அவைகளின் சந்தைவெளிக ளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகி லும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக் கொண்டார்கள். அவரைத் தொட்ட யாவரும் என்ன ஆனார்கள்? சொஸ்தமா னார்கள்.

No comments:

Post a Comment