Friday, May 29, 2015

மாற்கு – 8

மாற்கு – 8
1. அந்த நாட்களிலே யார் கூடிவந்திருக்கையில், அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாதபோது, இயேசு தம்முடைய சீஷரை அழைத்தார்? திரளான ஜனங்கள்.
2. இயேசு சீஷரை அழைத்து என்ன சொன்னார்? ஜனங்களுக்காகப் பரிதபிக்கி றேன், இவர்கள் இப்பொழுது என்னிடத்தில் தங்கியிருந்த மூன்று நாளாய்ச் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்.
3. இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்தவர்களாகையால், நான் இவர்களைப் பட்டினியாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.
4. அதற்கு அவருடைய சீஷர்கள் இயேசுவிடம் என்ன சொன்னார்கள்? இந்த வனாந்தரத்திலே ஒருவன் எங்கேயிருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை பேர்களைத் திருப்தியாக்கக்கூடும் என்றார்கள்.
5. அதற்கு அவர்: உங்களிடத்தில் எது எத்தனை உண்டு என்று கேட்டார்? அப்பங் கள். அவர்கள் எத்தனை உண்டு என்றார்கள்? ஏழு அப்பங்கள் உண்டு என்றார் கள்.
6. அப்பொழுது அவர் என்ன கட்டளையிட்டார்? ஜனங்களைத் தரையிலே பந்தி யிருக்கக் கட்டளையிட்டார். அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, என்ன செய் தார்? ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி சீஷர்களிடத் தில் கொடுத்தார். சீஷர்கள் என்ன செய்தார்கள்? ஜனங்களுக்குப் பரிமாறினார் கள்.
7. வேறு எவைகளும் அவரிடத்தில் இருந்தது? சில சிறுமீன்களும். அவர் அவை களையும் என்ன செய்தார்? ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறும்படி சொன் னார்.
8. ஜனங்கள் என்ன ஆனார்கள்? சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துணிக்கைகளை என்ன செய்தார்கள்? ஏழு கூடைநிறைய எடுத்தார்கள்.
9. சாப்பிட்டவர்கள் எத்தனை பேராயிருந்தார்கள்? ஏறக்குறைய நாலாயிரம் பேராயிருந்தார்கள். பின்பு அவர் அவர்களை என்ன செய்தார்? அனுப்பிவிட்டார்.
10. உடனே அவர் தம்முடைய சீஷரோடே கூடப் படவில் ஏறி, எங்கே வந்தார் கள்? தல்மனூத்தாவின் எல்லைகளில் வந்தார்கள்.
11. அப்பொழுது பரிசேயர் வந்து என்ன செய்தார்கள்? அவரோடே தர்க்கிக்கத் தொடங்கி, அவரைச் சோதிக்கும்படி, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.
12. அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு சொன்னது என்ன? இந்தச் சந்ததியார் அடையாளம் தேடுகிறதென்ன? இந்தச் சந்ததியாருக்கு ஒரு அடை யாளமும் கொடுக்கப்படு வதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொன்னார்.
13. அவர்களை விட்டு என்ன செய்தார்? மறுபடியும் படவில் ஏறி, அக்கரைக்குப் போனார்.
14. சீஷர்கள் எதைக் கொண்டுவர மறந்துபோனார்கள்? அப்பங்களைக் கொண்டு வர மறந்துபோனார்கள். படவிலே அவர்களிடத்தில் எத்தனை அப்பம் இருந் தது? ஒரு அப்பம்மாத்திரம் இருந்தது.
15. அவர் அவர்களை நோக்கி எதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தார்? நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தார்.
16. அதற்கு அவர்கள் தங்களுக்குள்ளே என்ன யோசனை பண்ணிக்கொண்டார் கள்?  நம்மிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
17. இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி சொன்னது என்ன? உங்களிடத் தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனை பண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா?
18. உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவுகூராமலுமிருக்கிறீர்களா?
19. நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார்? பன்னிரண்டு என்றார்கள்.
20. நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார்? ஏழு என்றார்கள்.
21. அப்படியானால் எது எப்படி என்றார்? நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.
22. பின்பு அவர் எந்த ஊருக்கு வந்தார்? பெத்சாயிதா ஊருக்கு வந்தார். அப்பொ ழுது யாரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்? ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். என்னவென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்? அவனைத் தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.
23. அவர் குருடனை என்ன செய்தார்? குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்தார். பிறகு என்ன கேட்டார்? எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார்.
24. அவன் ஏறிட்டுப் பார்த்து எதைக் காண்கிறேன் என்றான்? நடக்கிற மனு ஷரை மரங்களைப்போலக் காண்கிறேன் என்றான்.
25. பின்பு அவர் மறுபடியும் என்ன செய்தார்? அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப் பார்க்கும்படி செய்தார். அப்பொழுது அவன் என்ன ஆனான்? சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான்.
26. பின்பு அவர் அவனை நோக்கி என்ன சொல்லி அவனை வீட்டிற்கு அனுப்பி விட்டார்? நீ கிராமத்தில் பிரவேசியாமலும், கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும் இரு என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
27. பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் புறப்பட்டு, எங்கே போனார்கள்? பிலிப்புச் செசரியா பட்டணத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி என்ன கேட்டார்? ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
28. அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்? சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
29. அப்பொழுது அவர் அவர்களிடம் என்ன கேட்டார்? நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பேதுரு என்ன சொன்னான்? நீர் கிறிஸ்து என்றான்.
30. அப்பொழுது என்னவென்று கட்டளையிட்டார்? தம்மைக்குறித்து ஒருவருக் கும் சொல்லாதபடிக்கு அவர்களுக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.
31. அல்லாமலும் இயேசு அவர்களுக்கு எதைப் போதிக்கத் தொடங்கினார்? மனு ஷகுமாரன் பல பாடுகள்பட்டு, மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரக ராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றுநாளைக்குப் பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.
32. இந்த வார்த்தையை அவர் எப்படிச் சொன்னார்? தாராளமாகச் சொன்னார். அப்பொழுது பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டு போய் என்ன செய்தான்? அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.
33. அவர் திரும்பித் தம்முடைய சீஷரைப் பார்த்து, பேதுருவை நோக்கி சொன் னது என்ன? எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்கு ஏற்றவைக ளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி, அவனைக் கடிந்து கொண்டார்.
34. பின்பு அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், என்ன செய்ய வேண்டும் என்றார்? அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
35. தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் எதை இழந்துபோவான்? ஜீவனை இழந்துபோவான். என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் எதை இரட்சித்துக்கொள்ளுவான்? ஜீவனை இரட்சித்துக்கொள்ளுவான்.
36. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், எதை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? தன் ஜீவனை.
37. மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? ஒன்றும் இல்லை.
38. ஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக் குறித் தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக் குறித்து யார் எப்போது வெட்கப்படுவார் என்றார்? மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமைபொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும் போது வெட்கப்படுவார் என்றார்.

No comments:

Post a Comment