Monday, April 6, 2015

மத்தேயு – 17

மத்தேயு – 17
1. எத்தனை நாளைக்குப் பின்பு, இயேசு யாரைக் கூட்டிக்கொண்டு தனித்திருக் கும்படி போனார்? ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபை யும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்தி ருக்கும்படி போனார். எங்கே போனார்? உயர்ந்த மலையின்மேல் போனார்.
2. இயேசு அவர்களுக்கு முன்பாக என்னவானார்? மறுரூபமானார். அவரு டைய முகம் எதைப்போலப் பிரகாசித்தது? சூரியனைப்போல பிரகாசித்தது. அவர் வஸ்திரம் எதைப்போல வெண்மையாயிற்று? வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.
3. அப்பொழுது யாரெல்லாம் இயேசுவோடே பேசுகிறவர்களாக அவர்களுக் குக் காணப்பட்டார்கள்? மோசேயும் எலியாவும் இயேசுவோடே பேசுகிறவர்க ளாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.
4. அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி சொன்னது என்ன? ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும்,மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.
5. பேதுரு பேசுகையில் அவர்கள்மேல் நிழலிட்டது எது? ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. மேகத்திலிருந்து என்ன சத்தம் உண்டா யிற்று? இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
6. சீஷர்கள் அதைக் கேட்டு, என்ன ஆனார்கள்? முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள்.
7. அப்பொழுது இயேசு என்ன செய்தார்? அப்பொழுது, இயேசு வந்து, அவர்க ளைத் தொட்டார். இயேசு அவர்களைத் தொட்டு என்ன சொன்னார்? எழுந்திருங் கள், பயப்படாதேயுங்கள் என்றார்.
8. அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில் என்ன கண்டார்கள்? அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில் இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை.
9. அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி கட்டளையிட்டது என்ன? மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும் வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.
10. அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி என்ன கேட்டார்கள்? அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகி றார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்.
11. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக எது மெய்தான் என்றார்? எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான் என்றார்.
12. ஆனாலும், யார் வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என் றார்? எலியா. யாரை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள் என்றார்? எலியாவை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள் என்றார். இவ்விதமாய் யாரும் அவர்களால் பாடுபடுவார் என்றார்? இவ்வித மாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார்.
13. இயேசு யாரைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொ ழுது அறிந்துகொண்டார்கள்? இயேசு யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்க ளுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.
14. அவர்கள் யாரிடத்தில் வந்தார்கள்? அவர்கள் ஜனங்களிடத்தில் வந்தார்கள். அப்பொழுது ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து என்ன செய்தாய்? ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டான்.
15. அவன் யாருக்கு இரங்கும் என்றான்? ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும் என்றான். தன் மகனைப்பற்றி அவன் இயேசுவிடம் சொன்னது என்ன? அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான் என்றான்.
16. தன் மகனை யாரிடத்தில் கொண்டுவந்தேன் என்றான்? தன் மகனை உம்மு டைய சீஷர்களிடத்தில் கொண்டுவந்தேன் என்றான். அவனைச் சொஸ்தமாக்க யாரால் கூடாமற் போயிற்று என்றான்? அவனைச் சொஸ்தமாக்க உம்முடைய சீஷர்களால் கூடாமற் போயிற்று என்றான்.
17. இயேசு சீஷருக்குப் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவ ரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள். என்றார்.
18. இயேசு எதை அதட்டினார்? இயேசு பிசாசை அதட்டினார். உடனே என்ன ஆனது? உடனே பிசாசு அவனை விட்டுப் புறப்பட்டது. அந்த இளைஞன் என்ன ஆனான்? அந்நேரமே அந்த இணைஞன் சொஸ்தமானான்.
19. அப்பொழுது, சீஷர்கள் யாரிடத்தில் தனித்துவந்தார்கள்? இயேசுவினிடத் தில். எதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று சீஷர்கள் கேட்டார்கள்? பிசாசைத் துரத்திவிட.
20. பிசாசைத் துரத்திவிட ஏன் கூடாமற்போயிற்று என்று இயேசு சொன்னார்? உங்கள்  அவிசுவாசத்தினால்தான் என்றார். எந்த அளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்? கடுகு விதையளவு விசுவா சம். கடுகுவிதை அளவு விசுவாசம் இருந்தால் உங்களால் கூடாத காரியம் என்ன? கடுகுவிதை அளவு விசுவாசம் இருந்தால் உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது.
21. இந்த ஜாதிப் பிசாசு எதினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட் டுப்போகாது? இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது.
22. அவர்கள் எங்கே சஞ்சரித்தார்கள்? கலிலேயாவில் சஞ்சரித்தார்கள். மனுஷ குமாரன் யார் கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுவார்? மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுவார்.
23. அவர்கள் யாரைக் கொலைசெய்வார்கள்? மனுஷகுமாரனைக் கொலை செய்வார்கள். ஆகிலும் எந்த நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார்? ஆகிலும் மூன் றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார். இதை இயேசு சீஷர்களிடம் சொன்ன போது அவர்கள் என்ன ஆனார்கள்? அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.
24. அவர்கள் கப்பர்நகூமில் வந்த போது, பேதுருவினிடத்தில் வந்தது யார்? வரிப்பணம் வாங்குகிறவர்கள். யார் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்? உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள். பேதுரு என்ன சொன்னான்? பேதுரு செலுத்துகிறார் என்றான்.
25. பேதுரு வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி கேட்டது என்ன? சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத் திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.
26. அதற்கு பேதுரு சொன்னது என்ன? அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். யார் தீர்வையையும் வரியையும் செலுத்த வேண்டியதில்லை? பிள்ளைகள்.
27. ஆகிலும் நாம் எதற்காக வரி செலுத்தவேண்டும் என்கிறார்? நாம் அவர்க ளுக்கு இடறலாயிராதபடிக்கு வரி செலுத்தவேண்டும் என்கிறார். நீ கடலுக்குப் போய் என்ன செய் என்றார்? தூண்டில் போடு என்றார். எதைத் திறந்துபார் என் றார்? முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார் என்றார். மீனின் வாயில் எதைக் காண்பாய் என்றார்? ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய் என்றார். வெள்ளிப்பணத்தை என்ன செய் என்றார்? அந்த வெள்ளிப் பணத்தை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் வரி வசூலிப்பவர்களிடத்தில் கொடு என்றார்.

No comments:

Post a Comment