மத்தேயு – 26
1. இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லி முடிந்தபின்பு, யாரை நோக்கி பேசினார்? தம்முடைய சீஷரை நோக்கி பேசினார்.
2. இரண்டுநாளைக்குப்பின்பு எது வருமென்று அறிவீர்கள்? என்றார். பஸ்கா பண்டிகை. அப்பொழுது, யார் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக் கப்படுவார் என்றார்? மனுஷகுமாரன்.
3. அப்பொழுது, பிரதான ஆசாரியனாயிருந்தது யார்? காய்பா. பிரதான ஆசாரி யரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும் எங்கே கூடிவந்தார்கள்? காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்தார்கள்.
4. யாரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணி னார்கள்? இயேசுவை. இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும் படி ஆலோசனைபண்ணியவர்கள் யார்? பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும்.
5. எதனால் பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள்? ஜனங்க ளுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்கு.
6. பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்தவன் யார்? சீமோன். இயேசு பெத்தானியாவில் யார் வீட்டில் இருந்தார்? குஷ்டரோகியாயிருந்து சீமோன் வீட்டில் இருந்தார்.
7. விலையேறப்பெற்ற பரிமளதைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றியது யார்? ஒரு ஸ்திரீ.
8. அவருடைய சீஷர்கள் ஸ்திரீயின் செயலைக்கண்டு என்ன அடைந்தார் கள்? விசனமடைந்தார்கள். சீஷர்கள் விசனமடைந்து கேட்ட கேள்வி என்ன? இந்த வீண் செலவு என்னத்திற்கு?
9. அந்தத் தைலத்தை என்ன விலைக்கு விற்றிருக்கலாம் என்றார்கள்? உயர்ந்த விலைக்கு. விற்று யாருக்குக் கொடுத்திருக்கலாமே என்றார்கள்? தரித்திரருக்கு.
10. நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவுபடுத்துகிறீர்கள் என்றது யார்? இயேசு. இயேசு என்னிடத்தில் நற்கிரியையைச் செய்தது யார் என்றார்? இந்த ஸ்திரீ.
11. யார் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்? தரித்திரர். நானோ எப்போது உங்களிடத்தில் இரேன் என்றார்? எப்போதும்.
12. இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது எதற்கு எத்தன மான செய்கையாயிருக்கிறது என்றார்? என்னை அடக்கம் பண்ணுவதற்கு.
13. எங்கு இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே சொல்லப்படும்.
14. அப்பொழுது, பிரதான ஆசாரியரிடத்திற்குப் போனது யார்? பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன்.
15. யூதாஸ்காரியோத்து யாரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன் என்றார்? இயேசுவை. இயேசுவை காட்டிக்கொடுப்பதற்கு என்ன கேட்டான்? நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு என்ன கொடுக்க உடன்பட்டார்கள்? முப்பது வெள்ளிக்காசு.
16. அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்காக என்ன செய்தான்? சமயம் பார்த்துக் கொண்டிருந்தான்.
17. எந்த நாளிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்தார்கள்? புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல் நாளில். சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்;து என்ன கேட்டார்கள்? பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத் தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.
18. யார் வேளை சமீபமாயிருக்கிறது? இயேசுவின் வேளை. யார் வீட்டிலே என் சீஷரோடேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன் என்றார்? நகரத்தில் ஒருவன் வீட் டில். இயேசு சீஷர்களிடம் சொன்னது என்ன? நீங்கள் நகரத்திலே இன்னானிடத் திற்குப் போய்: என் வேளை சமீபமாயிருக்கிறது, உன் வீட்டிலே என் சீஷரோ டேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார்.
19. சீஷர்கள் எப்படி பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்? இயேசு கற்பித்தபடி சீஷர்கள் போய், பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
20. சாயங்காலமானபோது இயேசு என்ன செய்தார்? சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூட இயேசு பந்தியிருந்தார்.
21. அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு என்ன சொன்னார்? உங்களி லொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
22. அப்பொழுது மிகவும் துக்கமடைந்தது யார்? இயேசுவின் சீஷர்கள். அப்பொ ழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, இயேசுவை நோக்கி கேட்டது என்ன? ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கி னார்கள்.
23. இயேசு யார் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்றார்? என்னோடேகூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான் என்றார்.
24. மனுஷகுமாரன் எப்படி போகிறார்? மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார். எந்த மனுஷனுக்கு ஐயோ; எந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்? எந்த மனுஷ னால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.
25. அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி கேட்டது என்ன? ரபீ, நானோ? என்றான். யூதாஸ{க்கு இயேசு சொன்னது என்ன? நீ சொன்னபடி தான் என்றார். இயேசு எதை எடுத்து ஆசீர்வதித்தார்? அப்பத்தை எடுத்து ஆசீர் வதித்தார்.
26. இயேசு அப்பத்தை பிட்டு யாருக்குக் கொடுத்தார்? சீஷர்களுக்குக் கொடுத் தார். இயேசு அப்பத்தைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து என்ன சொன்னார்? நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.
27. பின்பு பாத்திரத்தையும் எடுத்து என்ன செய்தார்? ஸ்தோத்திரம் பண்ணி னார். பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி யாருக்குக் கொடுத்தார்? சீஷர்களுக்குக் கொடுத்தார். நீங்கள் எல்லாரும் எதிலே பானம்பண்ணுங்கள் என்றார்? திராட்சரசத்திலே பானம் பண்ணுங்கள் என்றார்.
28. எது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன் படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது? திராட்சரசம்.
29. இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட எங்கே நான் பானம்பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில் லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்? என் பிதாவின் ராஜ்யத் தில்.
30. அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டை பாடினபின்பு எங்கே புறப்பட்டுப்போனார் கள்? ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.
31. எதை வெட்டுவேன், எவைகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறது? மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதி யிருக்கிறது. எப்பொழுது நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள் என்றார்? இந்த இராத்திரியில். மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல் லாரும் என்ன ஆவீர்கள் என்றார்? என்னிமித்தம் இடறலடைவீர்கள் என்றார்.
32. ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே எங்கே போவேன் என்றார்? கலிலேயாவுக்குப் போவேன் என்றார்.
33. பேதுரு இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக சொன்னது என்ன? உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன் என்றார்.
34. இயேசு பேதுருவை நோக்கி இந்த இராத்திரியிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை எத்தனை தரம் மறுதலிப்பாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்? மூன்று தரம்.
35. நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை என்ன செய்ய மாட்டேன் என்றான்? மறுதலிக்க மாட்டேன் என்றான். சீஷர்கள் எல்லாரும் என்ன சொன்னார்கள்? சீஷர்கள் எல்லாரும் அப்படியே சொன்னார்கள்.
36. இயேசு அவர்களோடே எந்த இடத்திற்கு வந்தார்கள்? கெத்சமனே என்னப் பட்ட இடத்திற்கு வந்தார். இயேசு சீஷர்களை நோக்கி எதுவரை நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொன்னார்? நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமள வும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொன்னார்.
37. இயேசு யாரைக் கூட்டிக்கொண்டுபோய் துக்கமடையவும் வியாகுலப்பட வும் தொடங்கினார்? பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
38. இயேசு, என் ஆத்துமா எதற்க்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது என் றார்? மரணத்துக்கேதுவான துக்கம். நீங்கள் இங்கே தங்கி, என்ன செய்யுங்கள் என்றார்? என்னோடேகூட விழித்திருங்கள் என்றார். யாரிடம் என்னோடேகூட விழித்திருங்கள் என்றார்? பேதுருவிடமும் செபதேயுவின் குமாரர் இருவரிட மும்.
39. இயேசு சற்று அப்புறம்போய், என்ன செய்தார்? முகங்குப்புற விழுந்து ஜெபம்பண்ணினார். இயேசு முகங்குப்புற விழுந்து என்னவென்று ஜெபம்பண் ணினார்? என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத் தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
40. பின்பு அவர் சீஷர்களிடத்தில் வந்து என்ன கண்டார்? சீஷர்கள் நித்திரை பண்ணுகிறதைக் கண்டார். சீஷர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேது ருவை நோக்கி கேட்டது என்ன? நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா என்று கேட்டார்.
41. நீங்கள் சோதனைக்குட்படாதபடி என்ன செய்ய வேண்டும்? விழித்திருந்து ஜெபம் பண்ணவேண்டும். நீங்கள் எதற்காக விழித்திருந்து ஜெபம் பண்ண வேண்டும்? சோதனைக்குட்படாதபடி விழித்திருந்து ஜெபம் பண்ண வேண்டும். ஆவி எப்படிப்பட்டது? ஆவி உற்சாகமுள்ளது. மாம்சம் எப்படிப்பட்டது? மாம்சம் பலவீனமுள்ளது.
42. இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், யாருடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்? பிதாவினுடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார். இயேசு மறுபடியும் இரண்டாந்தரம் போய் என்ன செய்தார்? என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னை விட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
43. இயேசு திரும்ப வந்தபோது, என்ன கண்டார்? அவருடைய சீஷர்கள் மறுபடி யும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார். சீஷர்களுடைய கண்கள் எப்படி இருந் தது? மிகவும் நித்திரைமயக்கம் அடைந்திருந்தது.
44. இயேசு மறுபடியும் அவர்களை விட்டுப்போய், மூன்றாந்தரமும் என்ன செய்தார்? அந்த வார்த்தைகளையே சொல்லி, ஜெபம் பண்ணினார்.
45. பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து என்ன செய்யுங்கள் என் றார்? இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள் என்றார். யார் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கபடுகிற வேளை வந்தது? மனுஷகுமாரன்.
46. யார் வந்துவிட்டான் என்றார்? என்னைக் (இயேசுவை) காட்டிக்கொடுக்கிற வன். இயேசு யாரை எழுந்திருங்கள், போவோம் என்றார்? பேதுருவையும் செபதேயுவின் குமாரர் இருவரையும்.
47. இயேசு இப்படிப் பேசுகையில், வந்தது யார்? பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ். யூதாஸோடு கூட வந்தது யார்? பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள். வந்தவர்கள் எவைகளைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள்? பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.
48. இயேசுவைக் காட்டிக்கொடுக்கிறவன் அவர்களுக்கு என்ன அடையாளம் சொல்லியிருந்தான்? நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லி யிருந்தான்.
49. உடனே இயேசுவினிடத்தில் வந்தது யார்? யூதாஸ். யூதாஸ் இயேசுவி னிடத்தில் வந்து என்ன செய்தான்? ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.
50. இயேசு யூதாஸை நோக்கி என்ன கேட்டார்? சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது அவர்கள் கிட்டவந்து என்ன செய்தார் கள்? இயேசுவின்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.
51. அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் என்ன செய்தான்? கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்கார னைக் காதற வெட்டினான்.
52. இயேசு அவனை நோக்கி உன் பட்டயத்தை என்ன செய் என்றார்? உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு என்றார். பட்டயத்தை எடுக்கிற யாவரும் என்ன ஆவார்கள் என்றார்? பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத் தால் மடிந்து போவார்கள் என்றார்.
53. நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் எத்தனைக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா என்றார்? பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்.
54. எப்படிச் செய்வேனானால், எது எப்படி நிறைவேறும் என்றார்? இவ்வித மாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்.
55. யாரைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளை யும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள் என்றார்? கள்ளனைப் பிடிக் கப் புறப்படுகிறதுபோல். நான் தினந்தோறும் எங்கு உபதேசம்பண்ணிக் கொண் டிருந்தேன் என்றார்? உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தேன் என்றார். எப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்க வில்லையே என்றார்? நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தபோது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே என்றார்.
56. ஆகிலும் எது நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார்? தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல் லாம் சம்பவிக்கிறது என்றார். சீஷர்களெல்லாம் அப்பொழுது என்ன செய்தார் கள்? இயேசுவை விட்டு ஓடிப்போனார்கள்.
57. இயேசுவைப் பிடித்தவர்கள் இயேசுவை யாரிடம் கொண்டுபோனார்கள்? பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள். பிரதான ஆசாரியனாகிய காய்பாவிடம் கூடிவந்திருந்தவர்கள் யார்? வேதபார கரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள்.
58. பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்சென்று எதுவரை வந்தான்? பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்தான். பேதுரு எது உள்ளே பிரவே சித்தான்? பிரதான ஆசாரியனுடைய அரமனை உள்ளே பிரவேசித்தான். பேதுரு எதற்காக சேவகரோடே உட்கார்ந்தான்? முடிவைப் பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான்.
59. பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் எதைத் தேடினார் கள்? பொய்ச்சாட்சி தேடினார்கள். யாருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்? இயேசுவுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள். எதற் காக இயேசுவுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்? இயேசுவைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்.
60. யார் ஒருவரும் அகப்படவில்லை? பொய்ச்சாட்சி ஒருவரும் அகப்பட வில்லை. யாருடைய சாட்சி ஒவ்வவில்லை? அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஓவ்வவில்லை. கடைசியில் எத்தனை பொய்ச் சாட்சிகள் வந்தது? இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்தது.
61. கடைசியில் வந்த இரண்டு பொய்ச்சாட்சிகள் என்னென்ன? தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்றுநாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள்.
62. அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, இயேசுவை நோக்கி சொன் னது என்ன? இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறதைக்குறி;த்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.
63. இயேசு என்ன சொன்னார்? இயேசுவோ பேசாமலிருந்தார். நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா என்று கேட்டது யார்? பிரதான ஆசாரியன். யாரி டம் கேட்டான்? இயேசுவிடம் கேட்டான். பிரதான ஆசாரியன், நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா என்று எங்களுக்குச் சொல்லும்படி யார் பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்? ஜீவனுள்ள தேவன்பேரில்.
64. அதற்கு இயேசு சொன்னது என்ன? நீர் சொன்னபடிதான் என்றார். அன்றியும் மனுஷகுமாரன் எங்கு வீற்றிருப்பதை இதுமுதல் காண்பீர்கள் என்றார்? சர்வ வல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதை இதுமுதல் காண்பீர்கள் என்றார். மனுஷகுமாரன் எதன்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்கள் என்றார்? வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்கள் என்றார்.
65. அப்பொழுது பிரதான ஆசாரியன் என்ன செய்தான்? தன் வஸ்திரத்தைக் கிழித்துக் கொண்டான். பிரதான ஆசாரியன் இயேசு என்ன சொன்னான் என்றான்? தேவதூஷனம் சொன்னான் என்றான். இனி எது நமக்கு வேண்டிய தென்ன என்றான்? சாட்சிகள். இவன் தூஷணத்தை இப்பொழுது என்ன செய்தீர் கள் என்றான்? கேட்டீர்களே என்றான்.
66. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்று கேட்டது யார்? பிரதான ஆசாரியன். உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்று பிரதான ஆசாரி யன் கேட்டதற்கு அவர்கள் சொன்னது என்ன? மரணத்துக்குப் பாத்திரனாயிருக் கிறான் என்றார்கள்.
67. அப்பொழுது அவர்கள் இயேசுவை என்ன செய்தார்கள்? இயேசுவுடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள், சிலர் அவரைக் கன்னத்தில் அறைந் தார்கள்.
68. எதை ஞானதிருஷ்டியினால் சொல்லும் என்றார்கள்? உம்மை அடித்தவன் யார் என்று ஞானதிருஷ்டியினால் சொல்லும் என்றார்கள்.
69. அத்தருணத்தில் வெளியே வந்து அரமனை முற்றத்தில் உட்கார்ந்திருந்த வன் யார்? பேதுரு. அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி யாரிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடேகூட இருந்தாய் என்றாள்? பேதுருவிடத் தில்.
70. அதற்கு பேதுரு சொன்னது என்ன? நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று, எல்லாருக்கும் முன்பாக மறுதலித்தான்.
71. பேதுரு எங்கே போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடேகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக் குச் சொன்னாள்? பேதுரு வாசல் மண்டபத்திற்குப் போனபொழுது.
72. அதற்கு பேதுரு சொன்னது என்ன? அந்த மனுஷனை நான் அறியேன் என்று ஆணையிட்டு, மறுபடியும் மறுதலித்தான்.
73. சற்றுநேரத்துக்குப்பின்பு யார் பேதுருவினிடத்தில் வந்து: மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார் கள்? அங்கே நின்றவர்கள்.
74. அதற்கு பேதுரு சொன்னது என்ன? அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். பேதுரு மூன்றாம் தரம் அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் பண்ண வும் தொடங்கிய உடனே என்ன நடந்தது? உடனே சேவல் கூவிற்று.
75. அப்பொழுது பேதுரு எதை நினைத்துக்கொண்டான்? சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துக்கொண்டான். பேதுரு இயேசு சொன்னதை நினைத்துக்கொண்டு என்ன செய்தான்? வெளியே போய், மனங்கசந்து அழுதான்.
No comments:
Post a Comment